26 Oct 2011

தூவானம்,,,,,,,,,


            
  மழை நின்ற பின்னும் இலைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் நீர் துளிகளைப்
போல கடை விட்டு  வந்த பின்பும் அகலாத நினைவுகளில் இருந்த அவரிடம்
இப்பொழுதுதான் பார்த்தேன்,உங்களை இடது கையில் சிகரெட்டுடன்போய்க்
கொண்டிருந்தீர்கள் அதனால்தான் கூப்பிடவில்லை,நானும் வரவில்லை முடி வெட்டிக்கொள்ள/என நான் சொன்ன சலூன்கடைக்காரர் தெளிந்து காணப்பட்டார்.
     வெள்ளை வேஷ்டி ,வெள்ளை சட்டை,கையில் வாட்ச்,காலில் புது செருப்பு
எனஅணிந்திருந்தஅவர் மெலிதாய்சிரித்தார்,முன்புபோல் வாங்க,,, உக்காருங்க,,,
நல்லா இருக்கீங்களா,,,,,,? என்கிற நல விசாரிப்புகளெல்லாம் இல்லை இப்போது அவரிடம்.
   பார்வையில்விட்டேத்திபேச்சுஒட்டுதலற்றதன்மை, நடவடிக்கையில் இறுக்கம்.
அவரையும்கடையையும் மாறி,மாறிப்பார்க்கிறேன்.முடிவெட்டிக்கொள்ள ஆட்கள் உட்காரும் நாற்காலி மாறியிருந்தது.
     நாற்காலியின் முன்பிருந்த காண்ணாடியில் எந்த மாற்றமும் இல்லை.ஆனால் கண்ணாடியைச்சுற்றிஅலங்காரவேலைப்பாடுகள்நிறைந்து தெரிந்தது.
    கண்ணாடிக்கு முன் உள்ள மைக்கா ஒட்டப்பட்டிருந்த மேடையில் லோசன்,பவுடர்,சேவிங்க்ரீம்,சீப்புஎனநிறைந்துகாணப்பட்டது.      
    நாற்காலிக்கும்,கண்ணாடிக்கும் இடையிலிருந்த இடைவெளியிலும் சுற்றிலும் தரைநிறைந்து  முடிசிதறிக்கிடந்தது.
   கடையின் இடது மூலையில் இருந்த அட்டைபெட்டியில் கூட்டி அள்ளிய முடி நிறைந்து காணப்பட்டது.
    நான் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து திரும்பிப்பார்க்கிறேன் கடைக்காரரை.
    இப்பொழுது வலது கையில் வைத்திருந்த சிகரெட்டின் நுனியில் நின்றிருந்த சாம்பலை தட்டி விட்டுக்கொண்டிருந்தார்.எதிர்த்தாற்ப்போல் இருந்த டீக்கடையில் டீக்கு ஆர்டர் செய்து விட்டு கடையின் கதவில் ஒற்றை கால் தாங்கி தோள் சாய்த்து நின்றார்.
    கிட்டத்தட்ட பத்து நிமிட நேரத்திற்கும் அதிகமாய் உட்கார்ந்திருந்த நான் “நேரமாகும்ன்னா,அப்பறம் வேணா வரட்டுமா”என கேட்ட நேரத்தில் எனசட்டென  பதில் வருகிறது. “அது உங்களது இஷ்டம்” என/
    எழுந்து போய் விடலாமா என யோசித்த  நேரத்தில் கடை வைத்த புதிதில் அவர் ஆட்களைப் பிடிக்க அவர் அலைந்த அலைச்சல் நினைவுக்கு வர அப்படியே அமர்ந்து விடுகிறேன்.

  

6 comments:

Anonymous said...

எழுந்து போய் விடலாமா என யோசித்த நேரத்தில் கடை வைத்த புதிதில் அவர் ஆட்களைப் பிடிக்க அவர் அலைந்த அலைச்சல் நினைவுக்கு வர அப்படியே அமர்ந்து விடுகிறேன்.//

யதார்த்தம்..


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்நிறைந்த
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் ரெவெரி சார்.யாதார்த்தங்கள் சுடும் வாழ்க்கையில் சலூன் கடைக்காரர் ஒரு சின்ன உருவகம்தான்.
தங்களுக்கும் தங்கலது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

கிட்டத்தட்ட பத்து நிமிட நேரத்திற்கும் அதிகமாய் உட்கார்ந்திருந்த நான் “நேரமாகும்ன்னா,அப்பறம் வேணா வரட்டுமா”என கேட்ட நேரத்தில் எனசட்டென பதில் வருகிறது. “அது உங்களது இஷ்டம்” என/
எழுந்து போய் விடலாமா என யோசித்த நேரத்தில் கடை வைத்த புதிதில் அவர் ஆட்களைப் பிடிக்க அவர் அலைந்த அலைச்சல் நினைவுக்கு வர அப்படியே அமர்ந்து விடுகிறேன்.//

மனிதர்களின் குணங்களை பிரதிபலிக்கிறது... நீங்கள் நீங்களாவே இருங்கள் நல்லவர்கள் உங்களை சூழும் நாள் வரும்...

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் சார்.நலம்தானா?உங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக நன்றி.

vimalanperali said...

வணக்கம் மாய உலகம் சார்.நாம் நாமாக இருந்தாலும் புற உலகம் நம்மை அப்படி இருக்க விடுவதில்லை என்பதுதானே பிரதான விஷயமாக இருக்கிறது இங்கே/ சூழ்நிலைகளுக்கு உட்பட்டவன்தானே மனிதன்/

cheena (சீனா) said...

அன்பின் விமலன் - மனிதர்கள் மாறுகிறார்கள் - என்ன செய்வது ? தொழில் துவங்கும் போது படுக் சிரமத்தை மறந்து விடுகிறார்கள். நல்லதொரு அனுபவக் கதை - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா