6 Nov 2011

இருக்கை,,,,,,



  
மர ஸ்டூலின் மீது இருந்த
ப்ரவ்ன் கவரின் ஓரத்தில்
தெரிந்த உருவம்
என்னைப்பார்த்து சிரித்ததாய் ,
நலம் விசாரித்ததாய்,
நட்பு பாராட்டியதாய்,
கனிவு ததும்பி பார்த்ததாய்
தெரிந்தது எனக்கு/
பூப்பூக்கும்
மெல்லிய ஓசையையும்,
மொட்டவிழும் மென் நேரமும்,
அதிகாலை சேவலின்
கணம் மிகுந்த கூவலும்,
கூதல் பறவைகளின்
ஓசையற்ற பறத்தலும்
ஒரு சேர தோன்றி
மறையச் செய்த உருவம்
என் மனதுக்குப் பிடித்ததாகவே
இருந்தது எப்போதும்.

No comments: