7 Nov 2011

முறுக்குக்கயிறு,,,,,,,,




தொடர்பறுந்த பேச்சாகவே
இருக்கிறது உங்களது.
வார்த்தைகள் கோர்வையாய்
கேட்கவில்லை என
நான் சொன்னதும்
பரவாயில்லை நாளை பேசுகிறேன்,
தற்பொழுதுபொழுது பயணத்தில்
இருக்கிறேன் என
தொலைபேசியை துண்டித்தவர்
இரண்டு நாட்களாகியும்
பேசவில்லை.
அவரை நான் முன்பின்
பார்த்ததில்லை.
இதுநாள் வரை அவரிடம்
எதுவும் பேசியதில்லை.
அவர்சொல்லி எதுவும் கேட்டதில்லை.
அவர் யார்,எவர்,எந்த ஊர்
எதுவும் அறிந்தவனாய் இல்லை.
ஆனாலும்,,,,,,,,,,
அவரது குரலின் ஈர்ப்பிலும்,
ஒட்டுதலிலும் கவரப்பட்டவனாய்
அவருக்கு போன் பண்ணுகிறேன்.
தொடர்பிலக்கிற்கு
வெளியே இருப்பதாய் பதில் வருகிறது.
தொடர்பிலக்கிற்கு
வெளியே இருப்பவர்கள்
எப்போதுமே
மனம் பிடித்தவர்களாயும்,
நெருங்கி மனம் தொடுபவர்களாயும்/

5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வித்தியாசமான சிந்தனை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முகம் அறியாத நபர்களையும் ஈர்க்கும் தங்கள் பக்குவம் கவிதையில் மிளிர்கிறது..

Anonymous said...

தொடர்பிலக்கிற்கு
வெளியே இருப்பவர்கள்
எப்போதுமே
மனம் பிடித்தவர்களாயும்,
நெருங்கி மனம் தொடுபவர்களாயும்...

நீங்களும்...உங்கள் கவிதையும் கூட...

vimalanperali said...

வணக்கம் கவிதை வீதி செளந்தர் சார்.நலம்தானே?
நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரெவெரி சார்.நலம்தானே?நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/