16 Dec 2011

பிறிதொன்று,,,,,,,


                                  


       ஒரு வாரம் முழுவதுமாகிப்போகிறது.வீட்டில் பெயிண்ட் அடித்து முடிக்க.வீடு இப்போது புது பொலிவு கொள்கிறது.
      பச்சை,சிவப்பு,மஞ்சள்,ஆரஞ்சு,ஊதா இன்னும் இன்னுமான பல நிறங்களில் யோசித்தபோதும் ,பார்த்த போதும் வீட்டார் அனைவருக்கும்,சின்ன மகன் உட்பட பிடித்த கலர் அதுவேயாகிப்போனது.
     ஐஸ் க்ரீம் நிறத்தில் இருந்த லைட்கலர் மெல்லிய உடை உடுத்தியது போல நன்றாக இருக்கும் பெயிண்ட் அடித்து முடித்த பின்பு என பேசிக்கொண்டோம் .
     வீட்டில் எல்லோருடைய விருப்பமும் எனது விருப்பமும் அதுவேயாகிப்போனபின் அந்தக்கலரையேதேர்ந்தெடுத்துவாங்குவதென முடிவாகிப்போகிறது.
      சிலநேரங்களில்முடிவுகளேவிருப்பங்களாயும்,விருப்பங்களே முடிவுகளாயும்
ஆகிப்போகிறஅல்லது ஆக்கி வைக்கப்படுகிற கொடுமை நிகழ்ந்து விடுவதும் உண்டு.
     அது  காலம் காலமாக இருக்கிற நீள் நிகழ்வின் இயல்பாக/
     நாங்கள் கஷ்டப்பட்டு மூளையை கசக்கிப் பிழிந்து(?) யோசித்த கலரையே வாங்கி வந்தேன்.ஷேட் கார்டில் அதற்குப்பெயர் என்னவோ போட்டிருந்தது.இப்பொழுது ஞாபகமில்லை.
    அந்த கலரை தேர்ந்தெடுக்கும் போது  அது மாதிரியே தோற்றமளிக்கக்கூடிய இன்னொன்றும் இருக்க இரண்டில் எதை எடுப்பது என்கிற உயர் குழப்பத்திலும்,எதன் பக்கம் சாய்வது என்கிற முடிவெடுக்க முடியா தன்மையினாலும் இரண்டு கலரிலும் ஒவ்வொரு கிலோ என சாம்பிளுக்கொன்றாய் வாங்கி வந்தேன்.
    வாங்கி வந்த கையோடு வீட்டின் வராண்டா சுவரிலும்,ஹால் சுவரிலுமாய் அடித்துப்பார்க்கிறேன்.நான் அடித்துக்கொண்டிருக்கையிலேயே பிரஸ்ஸை இடையில் வாங்கி சின்ன மகன் அடிக்கிறான்.
    அவன்அடித்ததும்நன்றாகவேஇருந்தது.பூவொன்று நகர்ந்து,நகர்ந்து,,,,,,,,,,,,,,,,,
நர்த்தனமாடினால்எப்படி இருக்கும்?அது போலிருந்தது அவனது அங்க அசைவுகள்.
    மேலிருந்து,கீழும்,கீழிருந்துமேலுமாகவும்,பக்கவாட்டிலுமய்தீற்றிய பட்டை பிரஷ்ஷின் வர்ணம் நன்றாகயிருந்தது.
    பார்க்க ஆ,,,,சூப்பர்.பிரஸிலிருந்து வழிந்த வர்ணத்தை வைத்து ஒரு உருவம் வரைந்து விட்டான்.
     அவன் ஒரு உருவனாகவே பல நேரங்களில் காணப்படுகிறான்.கை,கால் முளைத்த மென் சிற்பம் ஒன்று அசைந்து,அசைந்து நடம் புரிந்தால் எப்படியிருக்கும் என்பது போலிருந்த அவனது அசைவை தாண்டி முடித்து விட்ட அன்றைய நாளின் நகர்விலிருந்து சரியாக ஆறு மாதங்கள் கழித்து பெயிண்ட் அடிக்க அரம்பித்தோம்.
    வீட்டின் உள்ளே மட்டும் போதும் என முடிவெடுத்து ஆரம்பித்த வேலை  திருவாளர் பெயிண்டரின் வற்புறுத்துத்தலால்  வீட்டிற்கு வெளியிலும் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்க்குட்பட்டுப்போனது.
    நகரின் பெரிய கடை ஒன்றில் வாங்கிய பெயிண்ட்,பிரஷ் இத்தியாதி,இத்தியாதியான சமாச்சாரங்களுடன் ஆரம்பித்த வேலை முடிய ஒரு வாரம் ஆகிப்போகிறது.
    உள்ளேயும்,வெளியேயும் கலர், வெள்ளை,பார்டர் என மாற்றி,மாற்றி அடிக்கப்பட்டிருந்த கலரையும் புதுக்கோலம் பூண்டிருந்த வீட்டையும் பார்த்த ஓரிவர் “நன்றாகயிருத்தது கலர், கலர் கண்னை உறுத்தாமல்இப்படித்தான் இருக்கவேண்டும்”  எனவும் மாறி,மாறி சொன்னார்கள்.
    அந்த புகழின் மயக்கத்திலும்,வீடு புது பொலிவு பெற்று விட்ட திருப்தியிலும் இன்னும் நான்கைந்து வருடங்களுக்கு கவலையில்லை எனகிற மனோநிலையிலுமாய் இருக்கும் போதுதான் அந்த வழியாக வீட்டை அண்ணாந்து பார்த்தவாறேசென்ற பக்கத்துத்தெரு பெண் ஒருவர் ரொம்ப நேரம் பேசிவிட்டு செல்லும் போது கூறினார்.
    “வீட்டுக்குள்ளவேலைக்கு ஆட்களவுடும்போது யாரு என்னன்னு பாத்துவுடனும்க்கா,
நம்ம என்னத்தக்கண்டோம் என்ன ஜாதி ஆட்களோ என்னன்னு,என/
    அவர் போன பிறகுதான் நினைக்கிறேன் புதுக்கோலம் பூண்டிருந்த வீட்டை அண்ணாந்து பார்த்தவாறு/
    வீட்டிற்கு பெயிண்ட் அடிக்காமலேயே விட்டிருக்கலாம் எனவும், இந்தமாதிரி புகழின் மயக்கத்திலுமாய் இருந்திருக்க வேண்டாம் என/   

4 comments:

குடிமகன் said...

உங்கள் சங்கடம்.. உண்மைதான்.. அது(சாதி).. நம்மை விட்டு எங்கும் செல்லாது... அதை ஒழிக்க கல்வியால் கூட முடியவில்லை என்றெண்ணும் போது வருத்தம் தான்.. மிச்சம்

-தோழன் மபா, தமிழன் வீதி said...

ஜாதி இன்னும் நமது தெரு புழுதிகளில் சிதறித்தான் கிடக்கிறது தோழர். பெரும்பாலான நேரங்களில் வீட்டு பெண்கள்தான் அதை தூக்கி சுமக்கின்றனர். இன்னும் எத்தனை நூற்றண்டுகள் இப்படியோ.... தெரியவில்லை?!. நல்ல அனுபவ பதிவு!.

vimalanperali said...

வணக்கம் குடிமகன் சார்.நலம்தானே?நம்மை விட்டு என்னும் செல்லாத சாதி இருப்பதென்பது ஒருபக்கம் இருந்தாலும் கூட,,,,
இப்படி பேதம் பார்ப்பதென்பது இந்த நூற்றாண்டிலும் கூட இப்படி விரவிக்கிடக்கிறது என்பது மிகவும் வருத்தம் தரக்கூடியதாய்/

vimalanperali said...

வணக்கம் தமிழ் வீதி தோழர்.நலம்தானே?
இன்றைய சமுகவெளியிலும் பொது வெளியெலும் நமது பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்றான போது கூட மனதால் கூட நினைக்கக்கூசுகிற விஷயங்களில் ஒன்றாய் இது இருக்கிறது என்பதுதான் மிகவும் வருத்தம் அளிக்கக்கூடியதாய்/