20 Mar 2014

தகிக்கும் கேள்வி நெருப்போடு பயணமாகிற தோழன். ( விமலன் என்கிற மூர்த்தி)

தமுஎச வின் பேனர்களை பார்க்கிற பொழுதெல்லாம் தொண்டைக்கு ள் ஒரு உருவமில்லாத உருண்டை உருளும்.ஒரு கடைக்கோடி கிரா மத்தில்பிறந்து தெருப்புழுதியில் வளர்ந்து,தெருவிளக்கில் படித்து வங்கி ஊழியனாகிற வரை எனக்கொரு பாத்திரம் இருந்தது .எப்பொ ழுது தோழர் பீகேவைச்சந்தித்தேனோ அப்போதிலிருந்து ஒரு இயக்க த்தின் பிரதிநிதியாக மாறிப்போனேன். பிரதிநியாக மட்டும்.

எண்பத்தி ஐந்தாம் வருடம் சாத்தூருக்கு திரும்பிவந்தபோது.ஒரு மொய் நண்பர்கள்களுக்குள் தள்ளிவிடப்பட்டேன். அந்தக்கூட்டத்துக் கு ள் தான் என் தோழன் மாது இருந்தான்.அவன்கூடவே மூர்த்தியும் இருந்தான்.ஒரு அழுக்கேறிய நான்குமுழ வேஷ்டியோடு வந்து என் கையைப்பற்றிக் கொண்டான் மூர்த்தி.அவனும்கூட என்னைப் போல வே  ஒரு கருசக்காட்டுப் புழுதிக்குள் கிடந்து வந்து இந்த நட்பு இனிப் பு க் குள் திகட்ட திகட்டவாழ்ந்து பிரமித்தவன்.

42 பி என் எஃப் தெருவில் அந்த பிஜிபிஇஏ சங்க அலுவலகம் இருந்த து.அங்கு ஒரே அறையில் கிடந்த நாங்கள் எதாவது எழுதிக் குமிக்க முயற்சிசெய்து கொண்டிருந்த போது, அவன் மட்டும் மூன்று பத்தி மாடியில் இருக்கும் சமயற்கட்டில் ஏதாவது வரைந்து கொண்டிருப் பான்.அண்ணன் ஜீவா அதைப்பார்த்து விட்டு ’மூமா (அப்போது அது தான் அவனது செல்லப்பேர்) என்ன வரிஞ்சிருக்கியோ அதோட பெயரைக் கீழே எழுந்திரு” என்பார் .அவனும் சேர்ந்து சிரிப்பான்.ஒரு கடைநிலை ஊழியன் மேல் குவிகிற இந்த அதிகாரப் படிநிலையின் ஆதிக்கம் கொடூரமானது.அதை தகர்க்கிற பெருஞ்சம்மட்டியாய் பீகே இருப்பார்,அவரது நீளமான கை தோளில் விழுகிற போது கோடுகள் துவங்கி இடியாத பெருஞ்சுவர்கள்வரை இற்று இடிந்து போகும். அவ ரது பேச்சை விடவும் காந்தத்தன்மை கொண்டது அவர் சகதோழர்கள் மீது காட்டுகிற பிரியம்.சாத்தூர் வீதிகளில் ஆறடி உயரத்தில் நடந்து போக அருகே நடப் பது எங்களுக்கு பெருமிதமான பயணமாகும்.

அந்தக்காலங்களில்தான் நாங்கள் பெரும்பசியோடு புத்தகங்கள் படித் துக் கொண்டிருந்தோம்.பீகே தான் ஒவ்வொரு புத்தகமாய் கொண்டு வந்து கொட்டுவார் நானும் மாதுவும் போட்டிபோட்டு இரவுகளில் படிப்போம். அப்போது எங்கள் வயதொத்த ஊழியர்கள் அலுவலர் ஆவதற்கும்,சிஏஐஐபி படிப்பதற்கும் மெனெக்கெட்டுக்கொண்டிக்க நாங்கள்இலக்கியப்புத்தகங்களைக் கிறுக்குப் பிடித்துபடித்துக் கொண் டிருந்தோம்.நானெப்படிமாதுவைஅகலக்கண்ணால்பார்த்துக்கொண்டி ருந்தேனோஅதைப்போலவே மூர்த்தி எங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போதெல்லாம்நாங்கள்அவனைப்பகடிசெய்வதி லேயே குறியாக இருந்தோம்.அவன் சைன்ஸ் ஜாதாவுக்கு பேர்கொ டுத்து அவர்களோடு ஒரு காவி வேட்டியைக் கட்டிக் கொண்டு அலைந்தான்.ஒருதீவிரஅறிவொளி இயக்கத்தொண்டனாய்த் திரும்பி வந்த அவனுக்குள் பெரு நெருப்பு குடிகொண்டு இருந்தது.அத்தோடு
கூடவே ஒருகாதலும் அவனுக்கிருந்தது.

தொழிற்சங்கத்தில் ஒரு தலைமுறை போய் இன்னொன்று உருவெ டுத்தபோது மூர்த்தியும் எங்களோடு செயற்குழு உறுப்பினரானா ன்.விடிகிற வரை நடக்கிற செயற்குழுக்கூட்டத்தில் முதன்முதலில் அவனைத்தான் பேய் பிடித்துஆட்டும். அப்புறம் என்னை.எங்களை உசுப்பிவிடுவதிலே குறியாய் இருப்பார் தோழர் சோலை மாணிக் கம்.அங்கேயும் கூட பெரிய இலக்கு ஏதும் இல்லாத ஒரு பிரதிநிதி யாக இருந்தான்.நான் கூட சிலநேரத்தில் சபலப்பட்டு இருந்தேன். அவனுக்கு பதவிமோகம் துளியும் கிடையாது.எல்லா சங்கப் பொதுக் குழுவிலும் அவனுக்குத்தான் கொடிக்கம்பம் தயாரிக்கிற ,தியாகிகள் ஸ்தூபி தயாரித்து சிகப்பு பேப்பர் ஒட்டுகிறவேலைகாத்திருக்கும். ஆனால் அந்த கொடியை மடக்கிகட்டிவைக்கத் திணறு வான். அப்போது அவனுக்கு நானும் நாசரும் கூட இருக்கவேண்டும். கொடி யேற்றிக்கொடுத்துவிட்டு நான் நாசர் மூர்த்தி மூவரும் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கடைசிப்பெஞ்ச் கோஷ்டியாகி விடுவோம்.ஆதலினாலே இந்த இருபத்தைந்து வருட தொழிற்சங்க பதிவுகளில் எங்கள் புகைப் படம் எதாவது கூட்டத்துக்குள் கரைந்து போயிருக்கும்.

அதுபோலவே தமுஎசவிலும் எங்களோடு பயணித்தவன் மூர்த்தி. இங்கேயும் கூட பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் இலக்கிய புல்ல ரிப்பில் அலைபவர் கள்நாங்கள்.எண்பதுகளில் என்னையும் அவனை யும் தான் குற்றாலம் சிறு கதை பட்டறைக்கு அனுப்பி வைத்தா ர்கள்.அங்கிருந்து வந்து ஒரு வரிகூட என்னால் எழுத முடியவில் லை.ஆனால் மூர்த்தி எழுதி எழுதிக்குமித்து விட்டான்.அதை
முதலி ல் என்னிடம் மட்டும்தான் காட்டுவான்.அவனது கையெழுத்து காற்றுக்கு வளைந்த நானற்கூட்டம் போல் நீண்டு வளைந்து இருக்கும்.எழுதிக்கட்டாககட்டிஎன்னிடம்அனுப்பிவிடுவான்.படித்தது படிக்காதது என அவனது கையெழுத்துப்பிரதிகள் அலமாரியில் கணிசமான இடத்தை அடைத்து இன்னும் கிடக்கிறது. மாது ராஜ குமாரன் என்கிற சிறுகதைத்தொகுப்பு போட்டு,சில கட்டுரைத் தொகுதி வெளியிட்ட பிறகு நானும் தக்கி முக்கி எழுதி ஒரு தொகுப்பு போட்டேன்.அதே வேகத்தில் அடுத்து மூர்த்தியின் முதல் தொகுப்பு வந்தது.நான் எப்படி மாது மட்டும் தான் எனக்கு முன்னுரை எழுத வேண்டும் என்கிற உறுதியில் இருந்தேனோ அதேபோல எனக்கு முன்னுரை எழுதுகிற வாய்ப்பைக்கொடுத்தது மூர்த்தி.

என்பதுகள் தொடங்கி இன்று வரை ரெண்டு முறையாவது அது என்ன இது என்ன என்று அவன் கேட்கிற கேள்விகளில்தான் அந்த பெரு நெருப்பு குடி கொண்டிருந்தது.எனக்குத்தெரிந்து ஆங்கிலப்பு புத்தகத்தை கையில் தொடாமல் எழுத்தில் ஜெயித்த எங்கள் அன்புத் தோழர் மேலாண்மையை மாதிரியே மூர்த்தியும். ஒரு சின்ன துணுக்குகூடஆங்கிலத்தில்படித்திருக்கவாய்ப்பில்லாதவன் மூர்த்தி. நானும்கூடத்தான்.ஆனால் எனக்கு பாடப்புத்தகம் வழியே ஆங்கிலம் அறிமுகமாகி இருந்தது.கல்லூரியில் லே மிசரபிள் போன்ற நான் டிடெய்ல் புத்தகங்தொட்டிருக்கிறேன் அப்படி வாய்ப்பில்லாத அனுப வப் படிப்பை மட்டும் கைப்பற்றி நண்பர்களை அருகிருந்து நோக்கி எழுதியவன் தோழன் மூர்த்தி.

மூர்த்தியின்எழுத்தைப்பேச,சிலாகிக்கவேண்டியதைவிடவும்.அவனைச்
சிலாகிப்பதேபெருங்கடமை.பெரியகல்விப்பின்புலம்,எழுத்துப்பின்புல ம்  இல்லாததோழமை யும் நட்பும் துணைகொண்டு எழுதிகிற மூர்த்தி சிலாகிக்கப்படவேண்டியவர்(ன்).

14.3.14 ல் விருதுநகரில் நடந்த அந்த விழாவில் பங்கேற்க முடியாத தடைகளை இந்த வரிகள் சரிசெய்யும்.எங்கள் பிரியத்தோழர் முத்துக் குமாருக்காகவாவது அதில்கலந்திருக்கவேண்டும்.எங்களைப் போல வே அவரும் எளிய தோழர். மூர்த்தியைப்புரிந்து கொண்டு சரியாக விழா எடுத்த அவர்,அங்கே போகமுடியாத என்னையும் புரிந்து கொள் வார்.

( திரு காமராஜ் அவர்கள் தன்னுடைய அடர்கருப்பு http://skaamaraj.blogspot.in வலைத்தளத்தில் என் பூப்பதெல்லாம் நூல் வெளியான மறுதினத்தில் எழுதிய பதிவு/)

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திரு காமராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

குலவுசனப்பிரியன் said...

//மூர்த்தியின்எழுத்தைப்பேச,சிலாகிக்கவேண்டியதைவிடவும்.அவனைச்
சிலாகிப்பதேபெருங்கடமை.// காமராஜ் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள்.

arasan said...

என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் சார் ...

vimalanperali said...

வணக்கம் குலவுசனப்பிரியன் சார்.
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாக/

vimalanperali said...

வணக்கம் அரசன் சே சார்.
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

கரந்தை ஜெயக்குமார் said...

காமராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே

vimalanperali said...

வணக்கம் சார்,நன்றி வாழ்த்திற்கு.
காமராஜ் அவர்களிடமும் சொல்லி விடுகிறேன்.
வாழ்த்துக்களை.

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

vimalanperali said...

நன்றி வாழ்த்திற்கு/

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள்.