7 Jul 2014

காய்கறி,,,,,,,,

  
நேற்றிரவே நினைத்து முடியாமல் போய்விட்டதை வாங்க இப்பொழுது வந்து கொண்டிருக்கிறேன். நான் வைத்திருந்த பையில் சின்னவெங்காயம் ரெண்டுகிலோவும்,பெரியவெங்காயம்ஒருகிலோவும்,பின்தேங்காயுமாய் இருந்தது.
 
இவையெல்லாம் பையில் இடம் பிடித்தது போக வாங்கும் காய்கறியை எங்கு வைப்பது என்கிற யோசனையிலும்,உங்கள் கடையில் இருக்கிற வெங்காயம், தேங்காயை வேறொரு கடையில் வாங்கியது குறித்து உங்களுக்கு ஏதேனும் வருத்தமும்,மனத்தாங்கலும் வந்து விடுமோ என்கிற  பீதியினாலும் உங்க ளது கடை முன் நின்று பார்த்த நான் அப்படியே வாங்காமல் கிளம்பி வந்து விடுகிறேன்.
 
தக்காளி 1கிலோ,பீட்ரூட் அரைக் கிலோ,முட்டைக்கோஸ் சின்னதாக ஒன்று உருளைக்கிழங்குஅரைக்கிலோஇப்படிமொத்தமாக மூன்று நான்கு நாட்க ளுக்கு காணுகிற மாதிரி வாங்குகிறதுதான் எப்பவும் நடப்பது. அன் றைக் கும் கூட அப்படியே வாங்கி நீங்கள் தரும் கேரி பேக்கில் போட்டுக்கொண்டு வந்திருக்கலாம்தான்.பணம்மெல்லாம் இருந்தது.செலவழிக்க மனமும் இருந் தது. “இன்னும் எத்தனைய தூக்கிக்கிட்டு என்கிற சின்னதான மனச் சோம் பலும்,தட்டிக்கழித்தலும் ஒன்று சேர வந்து விடுகிறேன்.
 
 நானும் எனது மகனும்தான் வந்தோம்.சின்னவன் ஏழு படிக்கிறான்.நன்றாக என இல்லை,பரவாயில்லாமல் படிப்பான்.இங்குள்ள ..........பள்ளியில்தான் படிக்கிறான்.அவனது பள்ளியில் நடக்கவிருக்கிற அறிவியல் கண்காட்சியில் இவனும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை வக்கப் போகிறான்.அதற்கான பொருள் வாங்க என்னோடு வந்தான்.பேட்டரி,வயர்,வயர் சுற்றுகிற டேப் என நிறைய வாங்கினான்.
 
நேற்று சனிக் கிழமை.அவனுக்கு பள்ளி விடுமுறை.எனக்கு அரைநாள்தான் அலுவகம்.முடிந்து வீட்டிற்கு வந்ததும் சின்னதாக ஒரு யோசனை.அப்படியே டீ சாப்பிட்டுஉட்கார்ந்தால் தொலைக்காட்சி,மனைவியுடன்அரட்டை,சினிமா,
கொஞ்சமாய் அரசியல்,சொந்தபந்தம்,அக்கம்பக்கம்,அதுஇது என தன்வசத் திற்குவருகிற பேச்சுக்களை தங்களுக்குத் தோதாக பேசிவிட்டு அமர்ந்து விடக்கூடும்.இதைதவிர்க்க வேண்டுமென்றால் பேசாமல் பஜாருக் குப் போய் விடலாம்.தோழர் தங்கப்பாண்டிகடையில் டீசாப்பிட்டுவிட்டு அங்கு வேறு யாரேனும்தோழர்கள்வந்தால்முகம்பார்த்துசிரித்துவிட்டுவரலாம். 
 
அந்தசிரிப்பிற்கும் பேச்சிற்கும் பின்னால்ஏதாவதுஇருக்கலாம்அல்லதுஒன்று மற்றுகூடப்போய்விடலாம்.இருந்தாலும்அதைவிடமனமில்லாமல்தொடர்பவனா கவும்,கடைபிடிப்பவனாகவும்நேரம்வாய்க்கிறபோதெல்லாம்சென்றுவிடுகிறேன்.
 
அம்மாதிரியானசெல்லுதல்களின்செலுத்துதல்களேஇப்பொழுதும்உந்தித்தள்ள வந்துகொண்டிருக்கிறேன்பஜார்நோக்கி.
 
முழங்கால்வரைதொங்கியசாம்பல்கலர்பெர்முடாஸ்,டிசைன்போட்டகுட்டைசட் டை போட்டிருந்தான்.
 
அப்படியே கிளம்பி வருகிறேன் என்றான்.நாந்தான் “வேண்டாம் கறுப்புக்கலர் பேண்ட்போட்டுக் கொண்டு முடிந்தால் சட்டையையும் மாற்றிக் கொண்டு வா”என்றேன்.பேண்ட்மாற்றசம்மதித்தவன்சட்டையைமாற்றசம்மதிக்கவில்லை.
  
“இருக்கட்டும்நன்றாகவே இருக்கிறது”எனஎல்லோரும்சொல்கிறார்கள் என்கி றான்.யாரந்த எல்லோரும் எனக் கேட்டதற்கு அவனது டாக்டர் அக்காவை கை காண்பிக்கிறான்.அவள் மேல் அவனுக்குமட்டும் அல்ல,எங்கள் எல்லோ ருக்குமே தனிபிரியம் இருந்ததுண்டு.சரி அவனது இஷ்டமும்,டாக்டரின் சொல்லும் ஒன்று சேர அவன் அதையே போட்டுக் கொண்டான்.
 
பணம் எடுத்துக் கொடுத்த மனைவியை ஏறிடுகிறேன்.2500 ரூபாயையும் அன்பையும் சேர்த்து கொடுத்தாள்.எமெல்சன் பெயிண்ட் இருபது லிட்டர் வாங்க வேண்டும்.நாளை மறு நாள் பெயிண்ட் அடிக்க வருகிறேன் எனச் சொன்ன பெயிண்டரை நம்பிமட்டுமல்ல.சுவர்கள் ரொம்பவும் வெளுத்துப் போன தாலும் அங்கங்கே பெயர்ந்து உருவங்கள் காட்டுவதானாலும், இந்த வருடம் கண்டிப்பாக பெயிண்ட் அடித்து விட வேண்டும் என்கிற முடிவி னாலும்/   
         
போனவாரம் பெயிண்டரைக் கூப்பிட்டு யோசனைகேட்டதில் வீட்டின் உள்பு றம் அடித்து விடலாம்.வெளிப்புறம் நன்றாக இருக்கிறது அதற்கேற்றாற்ப் போ ல பொருள் வாங்கிக் கொள்ளுங்கள் என பொருட்களின் பட்டியலை சொன் னார். அந்த பொருட்களடங்கிய பட்டியலுடனும்,மனைவி கொடுத்த ரூபாயு டனுமாய் நான்.
 
மஞ்சள் கலரில் பூப்போட்ட சேலைகட்டியிருந்தாள்.பெரிது,பெரிதாக பூத்தி ருந்த பூக்கள் பார்க்க அழகாயிருந்தது.உடல் முழுக்க பூக்களும்,முந்தியில் வேறு மாடர்ன்டிசைனுமாகஇருந்தது.கறுப்புக்கலர்ஜாக்கெட் அணிந்திருந் தாள்.
 
தலையைபடிய  வாரி நெற்றிக்கு இட்டிருந்தாள்.பெரும்பாலும் வீட்டிலிருக்கி ற நேரங்களில் நைட்டி உடுத்துவதை மட்டுமே வாடிக்கையாக கொண்ட பெண்களுக்குமத்தியில்இவள்மட்டும்எப்படிஇந்நேரம்?பெரும்பாலும்அப்படித் தான் இருக்கிறாள். 
 
“போதும் என்னையவே பாத்தது,பணத்த புடிங்க”என கையில்திணித்த நேரத் தில் பார்வை ஷெல்பின் மீது படிந்தது.
 
ஏதோ நிறைய படிக்கிறவன் மாதிரி தோற்றம் தருகிற விதமாய் ஷெல்பில் அடுக்கப் பட்டிருக்கும் புத்தகங்கள்,தினசரி பேப்பர்,டீவிடி ப்ளேயர் ,பிள்ளை யார் பொம்மை மண்ணால் செய்யப்பட்டிருந்த அலங்காரவிளக்கு என அடுக் கிற்கு ஒன்றாய்இருந்த ஷெல்பின் ஒரு மூலையில் மகாகவியின் போட்டோ வும்,அதற்கு கீழாய் காற்றில் லேசாய் ஆடிக் கொண்டிருந்த பேப்பரும்/
                ஷெல்ப்,ஷெல்பினருகேஇருந்ததொலைக்காட்சி,தொலைக்காட்சிஅமர்ந்திருந்த
மேஜை,அதனருகே இருந்த தையல் மிஷின், மிஷினின் அருகாய் இழுத்த நேர்கோடாய்இரண்டுப்ளாஸ்டிக் சேர்கள்,இரண்டு வயர் சேர்கள்,ஒரு இரும்புச் சேர் என ஒழுங்கற்று வரிசை காட்டி நின்றது.
 
திறந்திருந்த ஜன்னலின் வழியாக வீட்டின் பக்கவாட்டு வெற்றிடமும்,அதில் நின்ற வேப்பமரமும்,பன்னீர் மரமும் தெரிந்தது.நல்ல வேலையாக பன்னீர் மரத்தில் புழு வைக்கவில்லை இந்த வருடம்.இல்லையென்றால் வருடா, வருடம் இந்த கம்பளிப்புளுக்களோடு பெரிய அக்கப்போர் அல்லது பொ ழையாட்டு.
 
வேப்பமரத்தின்ஒருகிளையில்ஒரு குருவிஉட்கார்ந்திருந்தது.ஒருசாண்நீளம் தான்இருக்கும்.சின்னத்தலையும்,சின்னஉடலும்,பெரியவாலுடனுமாய் இருந் தது. கரிச்சான் குஞ்சு என்கிறாள் என் மனைவி.
 
தான் மட்டும் வந்து உட்கார்ந்திருக்கிறதா அல்லது வேறு மாவட்டத்திலி ருந்து ஜோடி பறந்து வர காத்திருக்கிறதா?எதாயிருந்தாலும் மூணாம் பேருக் குக் கேட்காமல்  செல்போனில் பேசி தூதனுப்பிவிடும் போல.அப்படிப் பேசும் வித்தையைஎப்படியாரிடம்கற்றதுஎனத் தெரியவில்லை.
 
பேசுகிறது,பாடுகிறது,கத்துகிறது எல்லாம் முடித்துவிட்டு தனியாக ஓரமாய்ப் போய் அழுதும் விடுகிறது.காற்றின் திசையில் மிதந்து செல்லும் அதனின் பேச்சிற்கும்,பாட்டிற்கும்.கத்தலுக்கும் சம்பந்தப்பட்டவேறு மாவட்டத்துப் பறவை மனம் சாய்க்கும் என்கிற நம்பிக்கையோடு பார்வையைவீட்டினுள் திருப்பி கதவு படுக்கையறை,சமையலறை என பார்த்தவனாய் கழிவறை நோக்கி விரைகிறேன். வீட்டை விட்டு வெளியே போனால் ஒண்ணுக்கிருக்க எங்கும் இடம் தேடி அலையமுடியாது.
 
சிக்கனமாகக் கட்டியதால் குளியலறையும்,கழிவறையும் சேர்ந்தே இருந்தது. கையைகழுவிவிட்டு தண்ணீர் குடித்து விட்டு நிமிர்கையில்தான் கவனிக் கிறேன்.ஜார் பொருத்துமிடத்தில் வாயோரம் பிளந்திருந்த மிக்ஸியை மின் வயரை ஒட்டும் கறுப்பு டேப்பினால் ஒட்டி வைத்திருந்தாள் மனைவி.அடுத்த மாதம் பாத்திரச் சீட்டு முடிகிறது.கூடக் கொஞ்சம் ரூபாய் போட்டு புது மிக்ஸி எடுத்துக் கொள்ளலாம்.அந்நேரம் ஏதாவது “எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்” இருந்தால் இன்னும் கொஞ்சம் வசதி.
 
ஃபேண்ட் மாற்றிக் கொண்ட மகன் அவசரப்படுத்த மனைவியிடம் சொல்லி விட்டு இருவருமாய் கிளம்புகிறோம்.நல்ல கலராப் பாத்து வாங்கிக்கங்க,நம்ம ஒட்டியிருக்குற டைல்ஸீக்குபொருத்தமா என்கிறாள்.
 
வீட்டிலிருந்து கிளம்பி வீதியடைந்து,சாலைமிதித்து சென்றால் வருகிற கடை கள்,ஆஸ்பத்திரி,போஸ்ட்ஆபீஸ் என பின்னோக்கி நகர்கிற கட்டிடங்களை தள்ளிவிட்டுவிரைகிறோம்.இதில்ஒயின்ஷாப்பும், ஆஸ்பத்திரியும்,
 
மருந்துக்கடையும்,தங்கும் விடுதியும் அருகருகே அமைந்திருந்தது தற்செ யல் ஒற்றுமையா?அல்லது...,,,,,.....,,,,,,,,தெரியவில்லை.
 
முதலில் அருப்புக்கோட்டை ரோடு வழியாகப் போய் பாலத்திலேறி கருமாதி மடம் முக்கில் தோழர் கடையில் டீக் குடித்துவிட்டு,காய்கறி வெங்காயம் எல்லாம் வாங்கிக் கொண்டு கடைசியாக பெயிண்ட் வாங்க வேண்டும் என்பதாகத் திட்டம்.
 
அதற்கு முன்பாக பெட்ரோல் போட வேண்டும். பெட்ரோல் போட்டுவிட்டு வரும்போது சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்து ஏறிய வண்டி சிதறி யிருந்த பொடிப்பொடி கற்களின் மீது ஏறி பஞ்சராகி நின்றது.
 
பஞ்சரான வண்டியை உருட்டிக் கொண்டு ஒரம் கட்டி நிறுத்துவதற்குள் ரோட்டின் பார்வை என்னை பிடுங்கித்தின்றது.நல்ல வேளை வண்டி பஞ்சரான இடத்திலிருந்து கூப்பிடுதூரத்தில் ஒர்க் ஷாப் இருந்தது.எல்லாம் முடிந்து டீசாப்பிட்டுவிட்டு பஜார் கூட்டத்தை பிளந்து உங்களது கடை முன் நிற்கையில் இரவு மணி ஏழு.
 
இன்று சனிக்கிழமையாதலால் பஜாரில்கூட்டம் அதிகமாகவே இருந்தது.
டீக்கடையிலிருந்து டாஸ்மாக் வரை அதனுடைய நீட்சி தெரிந்தது. நிமிந் தாள் கந்தசாமி, சித்தாள் செல்லம்மா,பெயிண்டர் தனபாலு... ..........,,, இப்படி யான எல்லோருக்குமேஇன்றுவாரச்சம்பளம்கையிலேறி தின்பண்டங்களாய், சாரயமாய்,டீயாய்,புரோட்டா சால்னாவாய் கரைந்து கொண்டிருக்கிற பொ ழுது அதை கடந்து நான் உங்களது கடைக்கு வந்து கொண்டிருக்கிறேன். கட்டம் போட்டகைலி,பூப்போட்டசேலை,பழதாகிப்போன சைக்கிள், கறுப் பிலும்,பச்சையிலும்,ஊதாவிலுமாய் ஊர்ந்த இருசக்கரவாகனங்கள்,கார்கள்,
ஆட்டோக்கள்,மனிதர்கள் பஜாரின் இரு சாரியிலுமாய் கடைகள் எல்லாம் எல்லாம் தென்படுகிறது. 
 
அப்படியெல்லாம் தென்பட்ட எல்லாம் தாண்டி உங்களது கடை முன் நின்ற போது வட்டமான தட்டுகளில் தெரிந்த காய்கறிகளுக்கு மத்தியில் வளர்த் தியாய் நீங்கள்.காய்கறிகளைபெறக்கிக்கொண்டுஇரண்டுமூன்று பேர்.
 
நின்றோம்,பார்த்தோம்,போய்விட்டோம்எனதுமகன் கூடக் கேட்டான். “என்ன ப்பா காய்கறி வாங்கலையா”என?வாங்கிக் கொள்ளலாம் என வந்த நான் இதோ உங்களது கடை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன் இப்பொழுது.              
கடையை மூடி விடாதீர்கள் விலையை கொஞ்சம் குறைத்துக் கொடுங்கள் தயவு செய்து/      

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் கூடவே வந்தது போல் இருந்தது ஐயா...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் திண்டுகல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
மற்றபடி ஐயா எனக்கூப்பிடும்
அளவு நான் வயதானவனில்லை.
சின்னப்பபையன்தான்.

Tamizhmuhil Prakasam said...

தான் மட்டும் வந்து உட்கார்ந்திருக்கிறதா அல்லது வேறு மாவட்டத்திலி ருந்து ஜோடி பறந்து வர காத்திருக்கிறதா?எதாயிருந்தாலும் மூணாம் பேருக் குக் கேட்காமல் செல்போனில் பேசி தூதனுப்பிவிடும் போல.அப்படிப் பேசும் வித்தையைஎப்படியாரிடம்கற்றதுஎனத் தெரியவில்லை.

இவ்வரிகள் மிக அருமை ஐயா.

பகிர்வுக்கு நன்றிகள்.

'பரிவை' சே.குமார் said...

மிகவும் அருமை...
இது மீள் பதிவா... இதே சாயலில் முன்னொரு பதிவு வாசித்த அனுபவம்...
அருமை அண்ணா...

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் எழுத்தே அலாதிதான்
தம 2

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தமிழ் மிகில் பிரகாசம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு கரந்தை ஜெயக்குமார் சார்/