1 Aug 2014

பஞ்சாரம்,,,,,

               
எத்தனைசொல்லியும்எந்த மாற்றமுமில்லை.உடும்பை ஞாபகப்படுத் திய அவளது பிடிவாதம்.”
 தனியாக போக வேண்டுமாம்.”நான்,தம்பி,அம்மா,நாட்டாமை மாமா எல்லோரதுபேச்சையும்கடலில்கரைத்தபெருங்காயமாக்கி விட்டாள். காது வளர்த்த கிழவி,பிடிவாதத்தையும் சேர்த்து வளர்த்து வைத்தி ருந்தாள்.
நாற்பதை தாண்டி முப்பது வருடங்கள் ஆகிறது.அம்மாவை பெற்ற வள்,நல்ல திடசாலி.மனதளவில்உள்ளதிடம் இப்பொழுது எங்களை போட்டுப்பார்க்கிறது.
”பரஸ்பரம் மனிதர்களை மனிதர்கள் பரிட்சிப்பது மனித நாகரீகம் வளர்ந்தகாலம்தொட்டேஉண்டுபோலும்.”அதற்காகஇப்படியா? இரண் டாவது நாளாய் இன்றும் சொல்லிப்பார்க்கிறோம்.............. ம்ஹூம்,,,, நார்உறிக்கமுடியவில்லை.
சொற்களாலும் பேச்சுக்களாலும் உடைக்க முடியவில்லை.இறுகி கெட்டிதட்டி வைரம் பாய்ந்த கல் மரம் போல நிற்கிறாள்.
இப்பொழுது மட்டும் என இல்லை ,தாத்தாவை கைபிடித்த சிறிது நாட்களிலிருந்தே அப்படி ஆகிப்போனாள்.கல்யாணமான நான்கை ந்து வருடங்களிலேயே ஏதோ பெயர் தெரியாத நோயில் படுத்தவர் தானாம்தாத்தா.எழுந்திருக்கையில் பார்வை இல்லை.
நன்றாக இருந்தவரையில் அவரும் பாட்டியை ராசாத்தியாய்த்தான் வைத்துபார்த்துள்ளார்.கைக்கும்,வாய்க்கும்காணாதபற்றாக்குறை வாழ்க்கையிலும் பாட்டியை மனம் நோக விட்டதில்லையாம்.
 கூலிக்காரன்பொண்டாட்டியாகஇருந்தபோதும்கூடசோறு,தண்ணி,
சேலை,துணிமணி,நல்லது,பொல்லதுஎனபாட்டிக்குஎதிலும்குறை வைத்ததில்லையாம்.அவரிடம்பிடித்துப்போனஅந்தகுணம்தான் பார்வைபோன போதுகூட அவரை மணம் நோகாமல் பார்த்துக் கொள் ளச் செய்திருக்கிறது.
பார்வை போன கணவனோடும்,இரண்டு பிள்ளைகளோடும், வாழ்க் கை அவளை நிராதரவாய் விட்ட போதும் கூட தோற்று ஒதுங்கி விட வில்லை. எதிர்த்து நின்று சமாளித்து போராடி ஜெயித்தாள். உழைப்பி ன்நுனியைப்பற்றிக்கொண்டு வாழ்க்கையின் மேலேறி வந்த வைராக் கியக்காரிஉடம்பிலும்,மனசிலுமாய்ஏற்பட்டசிராய்ப்புகளுடன்இப்போ து கரையோர ஆலமரமாய் நிற்கிறாள்.
மண்பிளந்து,துளிர்த்து,வளர்ந்து,கிளைபரப்பிபரந்து நிற்கும் மரத்தைப் பற்றி விழுதுளிடம் சொன்னால்?,,,,,,,,,,யாருக்காவதுவேறு யோசனை தெரிந்தால்சொல்லுங்கள்எனக்கூடகேட்டுப்பார்த்தேன்.யாரும்சொல்கிற வழியைக்காணோம்.
“வேலியிலபோறதஎடுத்து..........எனஒதுங்கிக்கொண்டார்கள்.இது கிராமம்.
இல்லையானால் இந்நேரம் பேப்பரில் விளம்பரம் தந்து கூட கேட்டி ருக்கலாம் யோசனைகளை.
ஆனால் பாட்டி தனது இரண்டு பெண் பிள்ளைகளை கல்யாணம் செய் து கொடுத்தபோது யாரிடமும் யோசனை கேட்கவில்லை.
வெளியில் சொந்தபந்தங்களைக்கூடகலந்து கொள்ள வில்லையாம். தாத்தாவின் பார்வைபோனபோதுஒற்றையாய்நின்றுதேம்பியவளை தோள் தட்டி தேற்றக்கூட ஆள் இல்லை என்கிற கோபமும் வைரக் கியமும்/
இரண்டு பெண்களையும் உள்ளூரில்தான் திருமணம் செய்து கொடுத் தாள்.அண்ணன் தம்பிக்கு அக்காள் தங்கை.ஒரே நாளில் கல்யாணம். கோவிலில் கல்யாணம்,சாவடியில் சாப்பாடு.
 கல்யாணத்தில் சாப்பிட்டவர்களை விட மொய் எழுதியவர்கள்தான் அதிகமாம்.ஊரேஆச்சரியப்பட்டுப்போனதாம்.”ஒடம்பொறப்புகளுக்கு,
ஒடம்பொறப்பாப்பாத்துமுடிச்சிவச்சுட்ட.ஓன்நல்லகொணத்துக்குதான் இந்தமாதிரிமருமக்க மாருக அமைஞ்சிருக்காங்க நல்ல இருக்கட்டும் தாயி”.
எல்லோருடைய வாழ்த்துக்கள்படி இரு மகள்களும் நன்றாக வாழ்ந் தார்கள்.பாட்டியை தன்னுடன்வந்து இருக்கும் படி இரு மகள்களிடமி ருந்து வற்புறுத்துதல்கள் அவ்வப்போது/
“இல்ல தாயி இப்பயே ஒக்காந்து தின்னா ஒடம்புல ஒட்டாது.”  நாசுக் காக மறுத்து விடுவாள்.
அப்போதெல்லாம்பெற்றோருக்குபிள்ளையாக வளர்ந்ததை விட பாட் டிக்குபேரனாய்த்தான்வளர்ந்திருக்கிறேன்.அந்தஅபிமானமும்,மரியா தையும் இப்போது நினைத்தவைகளைக் கூட பேச விடாமல் செய்கி றது. அப்போதெல்லாம் பாட்டியின்தினங்கள் எனக்கு அத்துபடி.” அப்ப யெல்லாம் கூலிக்கு காயி புடுங்கப்போவம்,காலையில வெள்ளன எந்திருச்சி கஞ்சி வாளியோட போறவதான்,மசங்கவுதான் வீடு வரு வேன்.ஒங்க தாத்தாவுக்கு பார்வதான் இல்லையே ஒழிய புத்திக் கூர்மகூடுதலு.வீட்டுல புள்ளைகள குளுப்பாட்டுரது லயிருந்து,கஞ்சி காச்சுற வரைக்கும் அவுங்கதான்”
.
“மசமசன்னுஇருட்டுலபோறவுங்க,பொல்லுன்னுவிடியறதுக்குள்ள காயப்பெறக்கிஏறுவெயிலுக்குமுன்னாலடவுன்லகொண்ணாந்து
சேக்கணும்.இப்பத்தானபஸ்சு,ட்ராக்டருங்க,அப்பயெல்லாம்தலைச்
சொமதான்.கருவக்காட்டுகுறுக்குப்பாதையிலவுழுந்துபோவம்.ஓடை, ஒடப்பு,பள்ளம்,மேடுன்னு ஆறு கல்லு தொலவும் ஒரே ஓட்டமும் நடையும்தான்.என்னோடநாலஞ்ச்சுபேரு,அவுகளுக்குள்ள போட்டி”. “தொங்கு,தொங்குன்னு ஓடுவம்.வண்டியில பூட்டுன மாடுமாதிரி. ஒண்ணு க்கு ரெண்டுக்கெல்லாம்கூட ரெண்டாம்பட்சமாத் தான்ஆகிப் போகும்.நடந்த நடைக்கும்,செமந்த செமைக்கும் கூலி கட்டு படியாக துன்னு சொல்லி மொதலாளி மாருககிட்ட துட்டவாங்கு றதுக்குள்ள தொண்டத்தண்ணி வத்திப்போகும்.”
“கூலிக்காரன்பொழப்புஎன்னைக்கும்தொன்னாந்தபொழப்புதான”.இப்பத் தானஊங்குறதுக்குள்ளடவுன்லபோயிநிக்குறீங்க.எங்ககாலத்துலயெல்
லாம் டவுனுக்குப்போறது பெரிய சங்கதி”
.அதுலயும் நாங்க நித்தம் டவுனுக்குப்போயி வருவமா?காயி பெற க்குறயெடத்துல,ஊருக்குள்ள,க்கடகண்ணியில்பாதிநாடவுனப்பத்திதா பேச்சு.”அவுங்களுக்குஎன்னதெரியும் கண்ணுல சேனை கட்டுன எங்க பாடு,”இதுக்காவே எதையாவது சாக்கு வச்சி வீட்டு வாசல்ல வந்து காத்துக்கெடப்பாங்கன்னா பாரேன்.
இன்னும் நிறைய சொல்வாள்.”ஒழப்புல நெறைய சந்தோசம் இருக் குடா,” “என்னைய கேட்ட காடு கரைகள்ல வேலை செய்யும் போதே உசிரு போயிரனும்டா.”      
 அப்படியெல்லாம் ஓடியாடி உழைத்தவள் தாத்தா இறந்த போது நாள் கணக்கில்வீட்டுக்குள்ளேயேமுடங்கிப்போனாளாம்.யார்என்னசொல்லியும் கேட்கவில்லையாம்.
தாத்தாவின்நினைப்பிலேயேஊன்உருகிக்கிடந்தவளின்முன்வாடிக்
களைத்துஉருக்குலைந்துபோனபிள்ளைகளின்முகம்தெரிந்தபோதுதான் சமாதானமானாளாம்.
உழைப்பையே மூலதனமாய்க்கொண்டு வாழ்க்கை விளக்கெரிய தன் னையே திரியாயும்,எண்ணையாயும் எரியவிட்டவள்.கன்னத்து தசை கெல்லாம் ஒட்டிப்போய் லேசான நடுக்கத்துடன் உட்கார்ந்திருந்தாள்.
 முன்னே அவள் வயசு பெண்களெல்லாம் சொல்வார்களாம்.”என்ன மாயம்டியம்மாஇது,செஞ்சுவச்சசெல கணக்க அப்பிடியே இருக்கயே, தங்கபஸ்பம் எதுவும் சாப்புடுறயா”?
அவள்தான் இன்று உருக்குலைந்து கிடக்கிறாள்.ஊர் தூங்கி விட்ட இரவின் அமைதி.லேசாய் திறந்திருந்த கதவின் வழியாக பனிப் புகை யாய் உள்ளே நுழைந்த குளிர் காற்று உடம்பைக்குத்த பேசிக் கொண் டிருந்தோம்.
நான் சொல்ல,தம்பி பேச,அம்மா மெளனமாய் இருக்க நாட்டாமை மா மா எடுத்துச்சொல்லிக்கொண்டிருக்க.........எதற்கும் அசைந்து கொடு க்கிற மாதிரி இல்லை.   எல்லோருடைய பார்வையும் பாட்டியை நோக்கியே/
    அவள்சொல்லப்போகும்காரணப்பேச்சைஎதிர்பார்த்தேன்.மெளனமாய்
நீண்டகணங்களில் ஏதேதோ............./
பாட்டியின்பிடிவாதம்,அம்மாவின்நிலை,தம்பியின் அவசரம், நாட்டா மை மாமாவினது பேச்சுக்கள்,ஊரில் உள்ள மனைவி மக்களது நினைப்பு,ஆபீஸ்எல்லாம்கண்முன்னேவிரிந்து சுருங்கியது. கூடவே  பக்கத்து வீட்டு பாட்டி சொன்னதும்..........
“தம்பி அவ ஒக்காந்துக்கிட்டுஇருக்கா,நீங்க ஓடிக்கிட்டு இருக்கீங்க, ஏணி கூட இல்ல,பாலம் கட்னாலும் கதை ஆகாது.அந்த அளவு அவ பழுத்து நிக்குறா,நீங்க பிஞ்சுக/,அது கழுத அது கழுத எங்க கூடயே வருசம் பூராம் காட்டுல கெடந்து ஒழலும்,சமயத்துல எங்களாலயே அதும் புத்திய புரிஞ்சிக்க முடியாது.”
“ஆதியிலயிருந்தே அதுக்குன்னு சில பழக்க வழக்கங்க,எங்க கூட காடு கரைகள்ல திரியிற அந்த நாள்கள்லயும் கூட வாரா வாரம் சுத்தமா தல முழுகி,வீடு வாசல் கழுவி விட்டு சுத்தபத்தமா இருப்பா/”
     “செவ்வா,வெள்ளிதவறாமஊதுவத்தியும்,சாம்புராணிபொகையுமாவீடு மணக்கும்.
நாங்க கூட கேலி பேசி சிரிப்போம்,ஐயமாரு வீட்டுல பொறக்க வேண் டியவ தப்பி இங்க வந்து பொறந்துட்ட யேன்னு.சிரிச்சுக்குவா,அவ தலைமுழுகுற அன்னைக்கு சாத்துன கதவ தெறக்க மாட்டா,மறுநா பூராம் காடுகள்ல வேலைத்தளங்கல இதுதான் பேச்சு.”என்னடி ஓன்புருசன் சிக்கெடுக்கும் போது தலையில காக்காப்பொண்ண வச்சு தேச்சு விட்டுட்டாரா?தலையில மின் வெட்டுது என்போம். சொன்ன துதான் தாம்சம் தலைய அள்ளி முடிஞ்சு வண்டு கட்டிக்கிருவா (துணியை சுற்றிக் கட்டிகொள்ளுதல்)”
  “இப்ப என்னய்யா நீங்க பாட்டிய பாக்குறீங்க.அவ ஒரு முனி மாதிரி வாழ்ந்தாயா,அவ/ஒங்கதாத்தாவுக்குபார்வபோனப்பயெல்லாம்அவ செத்துப்போவான்னுதான்நெனைச்சோம்நாங்கெல்லாம்.நோக்காட்டுக்கு தப்புன பயிர் மாதிரி ரோசத்தோட உசும்பி பொழச்சுக் காட்டுனா. ஊருசனம் அவள பேசாத பேச்சு இல்ல,அப்பிடி பேசுச்சி,பேச்சு மட்டு மா..........?/”
“எல்லாத்துக்கும் வளைஞ்சு,நெளிஞ்சு கரட்டுக்காடு வேலாமரம் மாதிரி தாங்கி எந்திரிச்சு நின்னா,இப்ப ஒங்களப்பாத்து கொஞ்சம் அலுப்பு ஆத்திக்கிட்டு கெடக்கா/”
“அவஇன்னைக்கும்அடுப்பாங்காரையிலவேலைசெஞ்சான்னாபாத்துக் கிட்டே இருக்கலாம்.அடுப்பு வேலை செய்யும் போது ஒரு துண்டா வது வேணும் அவளுக்கு ஒடம்பச்சுத்திகட்டிக்கிறதுக்கு.அவ்வளவு நறுவிசு,சாப்பாட்ட பொங்குன கையோட வீட்டுக்கு வெளியில காக்காயிக்கு கொஞ்சம் சோறு வைக்காம ஒங்க தாத்தாவுக்குக்கூட சோறு எடுத்து வச்சதில்லை அவ/”
 “ஒங்க தாத்தாகூட கேலியா சொல்லுவாரு. “ஏம்மா நம்ம பொழப்பே தொன்னாந்த பொழப்பு.இதுல அதுகளுக்கு வேறயாக்கும்?/
“தொன்னாந்த சீவங்களுக்கு தொன்னாந்தவுகதான ஆதரவு”அப்பிடீ ன்னுவா ஒங்க பாட்டி.
  “ஒங்க தாத்தா யெறப்புக்குப்பின்னாடி அந்த மனுசர நெனைச்சு அந்த மனுசர நெனைச்சு அப்பிடி உருகிபோனா,மாத்தைக்கி ஒரு நா ஒங்க தாத்தாவநெனைச்சு வெரதம்இருக்குறதோட மட்டுமில்லாம, அக்கம், ப க்கத்து வீட்டு புள்ளைங்க ரெண்டு பேருக்காவது அவ வீட்டுல வச்சி நெல்லுச்சோறு  போடுவா.அப்பேர்பட்ட சீவன் அது.இன்னமும் அது மனசு பூராம் தாத்தாதாம்பா/
  பக்கத்துவீட்டு பாட்டி பேசிய பேச்சில் சின்னதாய் ஒரு பொறிதட்டல்.
“அம்மா அந்த மந்த  வீட்ட சுத்தம் பண்ணிக்குடுத்துரு,பாட்டி கொஞ்ச நாளு அங்க போயி யெளப்பாறிட்டு வரட்டும்”
நீண்ட மெளனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நானும் எல்லோ ருமாய் எழுந்தோம்.
பாட்டியின் முகத்தில் சந்தோச ரேகை/

6 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா.

நன்றாக உள்ளது கதை ... பகிர்வுக்கு நன்றி
என்பக்கம்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

படியுங்கள் இணையுங்கள்
தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html

”தளிர் சுரேஷ்” said...

அருமை! இது மீள்பதிவா? ஏற்கனவே படித்த மாதிரி தோன்றுகிறது!

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்
.நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கு/
இது மீள் பதிவல்ல,
பழைய பதிவுதான்,
ஓரு சின்ன ஞாபக மூட்டல்.
அவ்வளவே/

வலிப்போக்கன் said...

பிடிவாத்திற்கு உடும்பை உதாரணம் காட்டியது சிறப்பு.....