5 Aug 2014

விளைச்சல்.,,,,,,,,


தமிழ் கூறும் நல்லுலகில் இப்படியானதொரு பாக்கியம் எத்தனை பேருக்கு கைவாய்க்கவும், கைவரப்பெறவும் பெற்றிருக்கிறது எனத் தெரியவில்லை.

கனத்தமனதுடனும்உன்மத்தநிலையுடனுமாய்கடந்த5.8.14அன்றுபின் சிவப்புச் சாயம் பூசிக்கொண்ட வீட்டின் படிக்கட்டில் அமர்ந்திருக்கிறேன்.பெரிதாய் ஏதும்படிக்காத,உருப்படியாய்ஏதும் எழுதிவிடாத பொழுதன்றின் கனத்துடன்/

விட்டில்கள் பரந்தமர்ந்த மரங்கள்மென்காற்றின் ஓசையுடன் சிலிர்த்தெழுந் தும்,சலசலத்துமாய் அசைவு காட்டிய போது சற்றே மென்மையாய் சப்த மிடசெல்போன்எனதுநண்பரும்,தோழருமான நாவலாசிரியர் திரு.பாண்டியக் கண்ணன் அவர்களை அறிமுகம் செய்து விட்டுச்செல்கிறது.

செல் போனுக்குள்ளாய் இருந்து பேசிய பாண்டியக் கண்ணன் அவர்களின் பேச்சுஇப்படியாய் சொல்லிவிட்டுச் செல்கிறது. ”வெளிவந்து விட்டது எனது இரண்டாவது நாவல்.”மழைப்பாறை”முதல் பிரதி உங்களிடம் தர இதோ விரைந்து வந்து கொண்டிருக்கிறேன் தங்களின் இருப்பிடம் தேடி.சற்றே பெரிய மனது பண்ணி பூங்கா அருகில் நில்லுங்கள்”, எனவுமாய் பணித்து விட்டுசொல்றது அவரது குரல்.

சரிதோழர்,தோழர்களும்,நண்பர்களும்நாவலாசிரியர்களும்பணிக்கிற வேலை யை மறுக்க முடியுமா என்ன?சிறிது நேரத்தில் அவர் சொன்ன குறிப்பிட்ட இடம்சென்றுஒரு சிலநிமிடங்கள்காத்திருந்துவிட்டுஅவர் அங்கு வரவுமாய் புத்தகம் வாங்கி வருகிறேன்,கண்கள் பனிக்கவும் மனம் சிலிர்க்கவுமாய்/

”மழைப் பாறை”என நாவலின் தலைப்பு தாங்கிய புத்தகத்தின் அட்டையில் ஒருவயது முதிர்ந்த,பட்டைகள் விரிந்த மரத்தின் பின்னாலிருந்துதன்முகம் காட்டுகிற சிறுவனின் படமும்,மரத்திற்கு கீழாக விளைந்து நிற்கிற சப்பாத் திக் கள்ளிச்செடிகளும்,பச்சைப்பரப்புமாய் தன்னை காட்சிப்படுத்திக் கொள்கி றவெளியும் புத்தகத்தின் உள் செல்ல முன் அனுமதி வழங்குகிறது தாராள மனதுடன்.

புத்தகம் வாங்கி கொண்டு வழக்கம் போல் சிறிது நேரம் பேசிக் கொண்டி ருந்து விட்டு வரும்போதுதான் எதிர்ப்பட்ட நண்பர் ஒருவர் சொல்கிறார். எத்தனை பேருக்கு இப்படியானதொரு பாக்கியம் கைவரப் பெறவும், வாய்க் கவும்பெற்றிருக்கிறது சொல்லுங்கள்,தமிழ் கூறும் நல்லுலகம்அந்த பாக்கிய த்தை தங்களுக்கு அளித்திருக்கிறது.லேசில் எல்லோருக்குமாய் வாய்க்காத து இந்தசெயல்,தொடரட்டும் உங்கள் இருவரது அன்பும், நட்பும், தோழமை யும்,வாஞ்சையும்,,,,,,என சொல்லிச்சென்ற நண்பரின் பேச்சு இந்த நிமிடங் களில் மட்டுமல்ல,நாங்கள் இருவரும் இப்புவியில் நிலைத்திருக்கும் காலம் வரை சத்தியமும் சாத்தியமும்தான் என்கிற நினைப்புடன் ரத்தமும் சதையுமாய் அப்பொழுதான் ஜனித்த ஒரு குழந்தையை இரு கையும் தாங்கி வாங்கி உச்சி முகர்வது போல வாஞ்சையுடன் பார்த்து விட்டு மழைப்பாறை நாவலை வாசிக்க சித்தம் கொள்கிறேன்.


என் போல் இப்பதிவை படிக்கும் அனைவரும் மழைப்பாறை நாவலை வாங்கிபடிக்கஆயத்தப்பட்டால் சந்தோஷம் கொள்ளும் தமிழ் கூறும் நல்லு லகமும்,வி்ளிம்பு நிலை மக்களின் வாழ்நிலை உலகமும். எனச் சொல்லி முடிக்கலாம் இந்தக்கணத்தில் அன்பும்,நட்பும், தோழைமையும் வாஞ்சையு மாய்./    

8 comments:

Yarlpavanan said...

சிறந்த அறிமுகம்
தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் காசி ராஜன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

பாண்டியக் கண்ணன் அவர்களுக்க வாழ்த்துக்கள்
அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் நண்பரே
அறிமுகம் செய்தமைக்கு நன்றி

Kasthuri Rengan said...

வாழ்த்துக்கள்
மழை பொழியட்டும்
முகநூலில் பகிர்ந்திருக்கிறேன் https://www.facebook.com/malartharu

Geetha said...

வாழ்த்துகள்...அவசியம் நனைகின்றேன் மழைப்பாறையில்....

vimalanperali said...

வணக்கம் மது அவர்களே/
நன்றி வருகைக்கும்,பகிர்விற்குமாய்/

vimalanperali said...

வணக்கம் கீதா அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

MTM FAHATH said...

வாழ்த்துகள்