18 Nov 2015

பார்சல்,,,,,

பின்கட்டியகைகளில்வலதுகையிலிருந்தவயர்க்கூடையைஇடது கை தொட்ட
போது யாரோ முன் பின் அறிமுகமில்லாதவர் தொட்டது போலவே இருந்தது

இருக்கட்டுமேவிட்றா டேய் என்ன இப்ப அதனால் குறைந்து போனது என்கிற மனோ நிலையும் பேச்சும் எண்ணமுமே இவனை தாக்காட்டிநிற்க வைத்ததாக அந்தஇடத்தில்/அதுமட்டுமில்லை.நிற்றலும்,நிற்க வைத்தலும்,நிலைநிறுத்தலு மாக அவ்விடமும் சூழலும் இவனை அங்கீகரித்ததாக.அல்லது இவன் அந்த சூழலுக்கு உட்பட்டு பராக்குப்பார்த்துக்கொண்டும்சூழலில் இயைந்துமாய் ஆகிப் போனவனாக,,,/

மண்ணும் கல்லும் மனிதர்களுமாய் கலந்து காட்சிப்பட்ட தார்ரோடு தன்னின் இரண்டு பக்கமுமாய் நின்ற கடைகளையும் வீடுகளையும் காம்ளெக்ஸ்களை யுமாய்விடாப்பிடியாய்காட்சிப்படுத்துகிறஇரவுவேலையின் 7.30மணிக்கு இவன் போய்நிற்கிறான்.நம்பிகடையின்முன்பாக/

தன்னன்னன்ன, தானனானே,தானனேதானனா,,,,,,,,எனஆரம்பிக்கிற நம்பியின் பாடல்கள் பெரும் பாலுமாய் ரசனை சுமந்தே இருந்திருக்கிறது. மயக்கமா, கலக்கமா,,,,,,என ஆரம்பித்து ஏதாவது ஒரு டப்பாங்குத்தில் முடிக்கிற அவர் இடையில்இளையராஜாக்களையும்,ஏ,ஆர்ரகுமான்களையும்வைரமுத்துக்களை யும்,முத்துக்குமார்களையுமாய் வந்து போக வைப்பார் இசையாய்,பாடல் வரிக ளாய்/

மெல்லிய காற்று ஓசையாய் உருவெடுத்து பெரும் மன ஆக்ரமிப்பு செய்வது போல இருக்கும்.அவர்பேச்சு.

பாட்டு,ரசனை,சினிமா காதல் ,இலக்கியம்,நாடகம்,படைப்பு என இருக்கிற அவரின்மன சூழ் உலகை யாரிடமும் எப்பொழுதும் வெளிப்படுத்திக் கொண்ட தில்லை.அவருடனாய் நெருங்கிப்பழகிய சில பேருகுத்தான் தெரியும்,அப்படி அவருள்ளாய் ஒளிந்து கிடக்கிற விஷயங்கள்.

கேட்டால் சொல்வார், ரொம்பவுமே சாதரணமாக,அதனால் என்ன இப்பொழுது ,சட்டைக்காலரை தூக்கிவிட்டுக் கொண்டோ அல்லது கையை உயர்த்தி நான் இருக்கிறேன்எனமுன்வரிசையில்போய்நிற்பதுஎன்வழக்கமல்ல.எனது ஆசையு மல்ல,இருக்கிறேன் அல்லது திரிகிறேன் என்னை அடையாளப்படுத்துவது என்னின்செயல்களேதவிர்த்துஎனதுவெளித்தோற்றம்அல்ல.என்னைப்பொறுத்த வரை படோடோபங்களும், அலப்பரைகளும் என் குணத்திற்கு ஒவ்வாதவை. அலர்ஜி தருபவை.

சொன்னார்கள்பலரும்கூட.இவ்வளவையும்உள் வைத்துக்கொண்டு ஏன் இப்படி அடையாளமற்றுஅலைகிறாய்என/

சொன்னஅவர்களிடம்இருக்கிறேன்,இருந்துவிட்டுத்தான்ப்போகிறேனேஅப்படியே அதனால்என்னஇப்பொழுதுஎன,,,,,அதனால்ஒன்றும்பெரியதான்பாதிப்புஇல்லை
 
யே,அப்பாவியாகவும்இளிச்சவாயனாகவும்ஒருவன்இருப்பதினால்அதுஎனக்குத் தானேநஷ்டமாய்இருக்கலாம்தவிரஅவர்களுக்குஒன்றும்பெரியஅளவிலாய் நஷ்டம்வந்துவிடப்போவதில்லை.இருந்துவிட்டுப்போகட்டும்அவர்கள்அப்படியே யாகவும் நான் இப்படியேயாகவும் என்பார்.

இருபது நாட்களில் 60 ற்க்கும்மேற்பட்ட மனிதர்களை படிப்பதை மேலாக நினைப்பவன் நான்,அந்த 60 ற்கும் மேலானவர்களின் குடும்பம்,அவர்களின் சுகம் துக்கம் கல்யாணம் இழவு படிப்பு வேலை சம்பாத்தியம் இத்தியாதி, இத்தியாதி எனப்பார்த்து படிக்க வேண்டும் என நினைப்பவன் நான்.என்கிற ரகம் இவன்.

திடுக்கிட்டுதிரும்பியபோதுபதறாதீர்கள்தங்களதுஉடலில்இருக்கிற நான் தான் ஒன்றினைத்தொட்டு இன்னொன்றை உணர்ந்து கொள்கிறேன். இருக்கட் டுமே என்ன கெட்டுப்போனது இப்பொழுது,அதனால்,,,?இடது செய்வது வலதிற்கும் வலது செய்வது இடதிற்கும் தெரியாதா என்ன,முழு நீளமாய் ஓடிக்கனன்ற உடலில்இரண்டும்இணையாகநிற்பதுதானே?ஒரேநிறமும்ஒரேதோல்போர்த்தி யும்இளசுஇளசாய் முளைத்துக்கிடந்த மென் மயிர்முடிகள் அனைத்தும் ஒன்று பட்டுத் தெரிவதுதானேபின்என்ன,,,? ரொம்பவும்தானாய்,,,,,,/ என இடது கை தொட்ட வயர்க்கூடையை பின்னா லிருந்து முன்னால் எடுத்து வைத்துக் கொண்டேகடைக்காரரிடம் ஆர்டர்சொன்னபோதுகடைதீயாய் இயங்கிக் கொண் டிருந்தது.

அலுவலகத்திலிருந்துவரும்பொழுதேகொஞ்சம்தாமதமாகத்தான் வந்தான். இளையவள் வேண்டும் எனச்சொல்லியிருந்த ஒரு குயர் நோட்டை வாங்கிக் கொண்டும் காய்கறி வாங்கிக்கொண்டுமாய்/

கடைக்காரர்தான் கேட்டார்,என்ன சார்,போன வாரம் ஞாயித்துக்கெழம ஆளக் காணம்.எனக்கேட்டபோதுஎப்படிவரஇப்பக்கூடபழகுனபழக்கம்கெட்டுப்போயிரக் கூடாதுங்குறதுக்காகவந்துருக்கேனே தவுர காய்கறி மட்டும் வாங்க வரல,காயி வாங்க கால் மணி நேரம் ஆனா கருவேப்பிலை மல்லிக்காக கால்மணி நிக்க வேண்டியிருக்குஇல்லையின்னா கொறைஞ்சது ஒருநாலைஞ்சுதடவையாவது கேக்க வேண்டியிருக்கு சேன்னு ஆகிப்போகுது,,,,எதுக்கு,பேசாமஇதுக்கு வேற கடைக்கு போயிறலாமான்னு நெனைக்க வேண்டியிருக்கு,என்றபோது கடைக் காரர் சொல்கிறார்,

என்னசெய்யசார்,நான்தனியாகடை வச்சிருந்தப்பகூட ஏங்கிட்ட காய்கற் வாங்க வர்றவுங்களுக்குஒழுங்காகாயிகொடுக்கமுடிஞ்சிச்சிச்சி,இப்பஇவங்ககூடசேந்த துலஇருந்துஒண்ணும்சொந்தமாயோசிக்கக்கூடமுடியல என்றார்.பஜாரில் ஆக்ர மிப்புஅகற்றப்படுகிறவரைதனியாகத்தான்கடைவைத்திருந்தார்,அண்ணனின்
கடையிலிருந்துசரக்குஎடுத்துவருவார்அன்றாடம்.இவ்வளவுசரக்கு இத்தனை
கிலோஎன்பதுகணக்குஎன்பார்,விற்றதில்லாபமும்சம்பளமும்இவருக்குஎன்பார்,

அப்பொழுதுஅவரது அண்ணனின் கடையில் இருக்கிற கூட்டத்தை விட இவர் கடையில்தான் அதிகமாய் கூட்டம் இருக்கும்.கொஞ்சம் நயந்தவர் கொஞ்சம் நீக்குப் போக்காய் போகிறவர்,அந்த நயந்தலும் நீக்குப்போகும் அவரது அண்ண னுக்கும், அண்ணன் மனைவிக்குமாய் பிடிக்கவில்லை.வியாபாரத்தில் என்ன நயந்து போக வேண்டியிருக்கிறது,வருகிறவர் போகிறவரிடம் கறார் தவிர்த்து வேறு எதுவும் காட்டக்கூடாது என்பது அவர்களது கொள்கை.ஆனால் அது அவருக்கு ஒத்து வரவில்லை.ஆனாலும் என்ன செய்ய தனியே போய்கடை வைக்கலாம் என்றால் அதற்காக கடை அட்வான்ஸ் வியாபாரம் இப்படி ஏகப் பட்டதுகள்இருக்கிறதுஎன்கிறார்,அதனாலேயேஅவர்களிடம்கொஞ்சம்நைச்சிய
மாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது,பிடிக்காத பிசாசுடன் குடும்பம் நடத்த வேண்டியிருப்பது போல் என்றார்,

இப்பொழுதுஆக்ரமிப்பில்அவரதுகடை அகற்றப்பட்டபின் அண்ணன் கடைக்குப் பக்கத்திலியேகடைவைக்கவேண்டியஅவசியம்வந்துவிடுகிறது.அதுதான் சார் இப்படியாகிப் போகிறது.அவர்கள்கருவேப்பிலைஎல்லாம் கொடுக்க வேண்டாம் என்கிறார்கள். நான் வருகிறவர்களிடம் இப்படியாய் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்இருக்கிறேன்,இதுகூட நீங்கள் தெரிந்தவர் என்பதால் சொல்கிறேன், இல்லையானால்அது கூட சொல்லமாட்டேன்.என்கிற அவரின் பேச்சை சுமந்து கொண்டிருந்தநாட்களில்தற்செயலாய்டீக்கடையில் தென்பட்ட அவரது அண்ணன் சொன்னார்.

இப்பசொல்வான் சார் எல்லாம், ஏஞ்சொல்ல மாட்டான்,கழுத அப்படியே போகு துன்னு எப்படின்னும் விட்டிருந்தா தெரியும் சார் இன்னைக்கி அவன் பொழப்பு என்னன்னு,,,,கஞ்சாக்குடிச்சிக்கிட்டுவிருதாவவீதியிலதிரிஞ்சிக்கிட்டுஇருந்தவ னுக்குகடைபுடிச்சிக்குடுத்து உக்காரவச்சி அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சி அவன ஆளாக்கி பொத்தி பாதுகாத்து வர்றோம்ல,அதுனால இவன்,,,,,,என நல்லகெட்டவார்த்தையாய்தேர்ந்தெடுத்துவைதார் காறித்துப்பிய வா றே/

வியாபாரத்துலகொஞ்சம்கறார்காமி,கருவேப்பிலைமல்லிகூடகாசுக்குக்குடு
ன்னுசொல்லுறதுஎதுக்குன்னாஇவனாட்டம்யேவாரத்துலவாரியெரச்சிக்கிட்டு போயிட்டான்னாநாங்கஎன்னத்தமிச்சம்கொண்டுபோயிபொழைக்க சொல்லுங் க அதுனாலத்தான்அவன்ட்ட அந்தகறார் காண்பிக்கிறதுக்குக்காரணம்,நீங்க கூடபோன மாசம்கறிவேப்பில்லைமல்லிகுடுக்கலைன்னுவாங்குன காய்கறிக ள திருப்பிக் குடுத்துட்டுப்போனதா சொன்னாங்க,நான் கூட ஒங்க நெலை மையில இருந்தா இப்பிடித்தான் செஞ்சிருப்பேன்.என்ன செய்ய அதுக்கப்புறம் இன்னைக்குத்தான் ஒங்களப்பாக்குறேன்,அதுவும் சம்பந்தமில்லாம டீக்கடை யில வச்சி.காயி வாங்குற விஷயத்துலநானோ,அவனோஏதும்ஒங்கமனம் கோணும்படிநடந்துருந்தாநான்வருத்தம்தெரிவிச்சிக்கிறேன்அவன்சார்என்பார்,  நீங்கஎப்பயும்போலகடைக்கு வரணும்என்றஅண்ணனின்வார்த்தையைத் தட்ட மாட்டாமல்இவன்இப்பொழுது அந்தக் கடையில்தான் போய் காய்கறி வாங்கு கிறான்.

உண்மையிலுமே அப்படித்தான் கடையின் நுழைவாயிலை ஒட்டி வலது புறமி ருந்தஅடுப்பில்தீ கனன்று எரிந்து கொண்டிருக்கதீயின் நாவுகளும் கனன்று கொண்டிருந்த கங்கின் சூடும் கனன்று தெரிந்த வட்டமான இரும்புக்கல்லை சுட்டுக்கொண்டிருந்தவேளைஅதுதோசையையும்ஆம்லேட்டையும்,புரோட்டா வையும் மாறி மாறி சுட்டெடுத்து வெளித்தந்து கொண்டிருந்தது.இவன் போய் நின்றஇரவின்எட்டுமணிக்கு/

மாஸ்டரின் உதவியாளர் எனஒருவர்இருக்கிறார் பாருங்கள் அவர் இவனுக்கு மிகவும்தெரிந்தவர் என நினைப்பு.அது உண்மையா,பொய்யா தெரியவில்லை. ஆனால்இவன்உட்படஎல்லோரும்நம்பிக்கிடக்கிறார்கள்.அதைஇவனும்ஆமோ

திக்கதெரிந்துகொண்டான்,இருக்கட்டும்இருக்கட்டும்எனஇவன்கடைக்குவருகிற நேரங்களிலெல்லாம் அவர்தான் இவனுக்காய் பார்சல் கட்டுகிறவராய் ஆகிப் போகிறார்.

இவன் போகிறநேரங்கள் பெரும்பாலுமாய் கூட்டம் இல்லாத நேரங்களாகவே இருந்திருக்கின்றன.சனிக்கிழமைதவிர்த்து.சனிக்கிழமைவாரத்தின்இறுதிநாள், வாரச்சம்பளக்காரர்களுக்குகொண்டாட்டநாள்.அந்தக்கொண்டாட்டம் மற்ற, மற்ற கடைகளில்தெரிவது போலவே இந்தக்கடைகளிலும் தெரியும், பார்சல் வாங்கிச் செல்லும்உருக்களில்.

அது போலானநாட்களில்பெரும்பாலுமாய் இவன் போனதில்லை,அப்படியே போனாலும் கூட மாஸ்டரின்உதவியாளரிடம்தேவையைச் சொல்லிவிட்டு அரைமணி கழித்துப்போவான்.சமயத்தில் ஒரு மணி நேரம் கூட ஆகிப் போவ துண்டு.அப்படியாய் போல் அல்லாமல் இன்று கொஞ்சம் தாமதித்துப் போக லாம்என போனான்தான்,ஆனாலும் கூட்டம்,கடையின் முன்னாய் நின்றிருந்த பெண்கள் நான்கைந்து பேர் எனக்குமுதல்,எனக்கு முதல் என கை நீட்டிக் கொண்டும்அவசரப்பட்டுக்கொண்டுமிருந்தார்கள்.

மாஸ்டரின்உதவியாளர் இன்று லீவுஎனச்சொன்னார்கள். ஏதோ ஒரு வேலை யாய்மதுரைவரைபோயிருக்கிறாராம்.மதுரைஎனஅவர் சொன்னதும்தான் ஞாப கம்வருகிறது,

என்னசார் வாழ்க்கை,கடையில வேலை பாக்குறோம், ஓரளவுக்கு சம்பாதிக்கி றோம்.என்னபிரயோஜனம்சொல்லுங்க,பையனுக்குபோனமாசம்கைஒடைஞ்சி மதுரையில வச்சி ஆபரேஷன்,லீவு கேட்டா குடுக்க மாட்டேன்னுட்டாரு கடை ஓனரு,என்ன செய்ய சார்,அந்த நேரமே கடைய விட்டு நின்னுறலாம்ன்னு ஒருநெனைப்புதான், ஏதோ ஒண்ணுக்காக ஏதோ ஒண்ணு தின்ன பொழப்பு/ நான் போக முடியல,ஏங் பொண்டாட்டி நார வசவு வையிறா பின்ன, மாமியா ரவும்,பொண்டாட்டியவும் பக்கத்துல இருக்கச் சொல்லீட்டு நான் கடையில வேலை பாத்துக்கிட்டு இருந்தென்.பைனுக்கு அங்க ஆபரேசன்நடந்துக்கிட்டு இருந்தநேரம் நான் இங்க புரோட்டாவுக்கு மாவு பெசைஞ்சிக்கிட்டு இருந்தேன். என்னசெய்யஅப்படியேசெத்துப்போகலாம்ன்னுஇருந்துச்சி, வெளி வந்த மன
வேகாளம்எல்லாம் கண்ணீரா கறைஞ்சி போச்சி,என அவர் அன்று சொன்னது இன்று ஏனோ ஞாபகம் வந்த தாக/

இவனும்மதுரைக்குப்போகவேண்டும்எனரொம்பநாளாய்நினைத்துக்கொண்டிரு
க்கிறான்.நடக்கவில்லை. மீனாட்சியம்மன்கோவிலுக்குஅல்லது ஏதாவது ஒரு இடத்திற்குபோகலாம் என்பதாய் ஆசை,ம்ஹீம் நடக்கிறதாய் தெரியவில்லை, ஏதாவது ஒரு காரணம் கற்பித்துக்கொண்டு லீவு போடுகிற நாட்களில் வேறு வேலைகள்ஒன்றுமுளைத்துப்போகிறதுஇயல்பாகவே/

அந்தவேலையில் கவனம் குவியும் போது நினைத்து வைத்திருந்தது எல்லாம் அவுட் ஆகிப் போகிறது. பிறகு வேலைகள், வேலைகள், வேலைகள்,,,,,,,,,என மட்டுமேசுற்றிவரமுடிகிறதுமூளையால்,வேறுஒன்றுமற்று/

அப்படியாய்மாஸ்டரின்உதவியாளருக்குநிகழ்ந்தநாட்களும்,கணங்களும்உண்டாஎனத்தெரியவில்லை,கேட்கவேண்டும்,மாஸ்டரின்உதவியாளரிடம்/

ரொம்பவும் பசிக்குதா சீக்கிரம் வாங்கி வர வேண்டுமா எனஇளையமகனிடம் கேட்டுக்கொண்டுதான்வந்தான்.அவளும்இல்லைஅப்படியெல்லாம்நிதானமாக வா அப்பா என அவள் எடுத்துக்கொடுத்த மஞ்சளும் சிவப்பும் வெள்ளையு மான கலவையில் பின்னப்பட்டிருந்த வயர்களைக்கொண்டு பின்னி கூடை அழகா கவே தெரிந்தது.

அந்தக்கூடைதான் பார்க்கவும்,கோர்க்கவும்,சேர்க்கவும் என வீட்டில் இருக்கிற ஒன்றாய் ஆகித்தெரிந்தது.ஒரு தோசை ஆறு வாட்டுப்புரோட்டாக்கள் என்பது மூன்றுபேருக்கும்போதுமானதாய்இருந்தது.

அடிக்கடிஎனஇல்லை.மாதத்தின்சிலநாட்களில்வீட்டுவேலைஒழியாதபொழுது உடல்அயற்சிமிகவுமாய்இருக்கிறநேரங்களில்இதுபோலாய்கடையில்வாங்கிக் கொள்வதுதான்.

சைக்கிளை கைக்குள்ளாய் மடக்கி வைத்துக்கொள்ள முடிந்தால்,,,,,,,? தெரிய வில்லை அப்படியாய் வைத்துக்கொள்ள முடியுமா இல்லையா என ,இவன் அறிந்தவரை இப்பொழுது கடைகளில் இருக்கிற சைக்கிளைஅப்படியெல்லாம் மடக்கிவைத்துக்கொள்ளவாய்ப்புகளேஇல்லை.சைக்கிளின்பின்மட்கார்டில்எழுதுகிற நம்பர் கூட நன்றாக இருக்க வேண்டும் என ஊரிலேயே சிறந்த ஓவியர் யார் எனப்பார்த்துஅழைத்துவந்தார்ராதாகிருஷ்ணன்நம்பி/

நம்பி கடைஎன்றுதான் சொன்னார்கள் அதை அவர்கடைவைத்தபுதிதில்/ நம்பி கடையில் நம்பி சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கும்போய்வரலாம்என்பதே வரலாறாகிப்போனது.

இவனதுதம்பியின்மாமனார்வயதிருக்கும்ஐம்பதிற்கும்மேல்எனச்சொன்னார்கள்.உசிலம்பட்டியிலிருந்துமதுரைவரைசைக்கிளில்போய்வருவார்.தவிரஇவன்உசில ம்பட்டியில்வசித்தபோதுரிட்டையர்ட்மிலிட்டரிக்காரர்ஒருவர்உசிலம்பட்டியிலி ருந்துவிருதுநகர்வரைக்கும் சைக்கிளில் போய் சரக்கு வாங்கி வருவார் அவர் வைத்திருந்த பெட்டிக் கடைக்கு/ ஒரு குவிண்டால் அரிசி மூட்டையை சைக் கிளில் பின்கேரியரில்வைத்துக் கொண்டு அவர் அசையாமல் வருவதைப் பார்ப்ப வர்கள்மூக்கில்மீதுவிரல் வைக்காமல் இருக்க மாட்டார்கள்.

கேரியர்இல்லாதசைக்கிள்கள்பத்தாவதுஇருந்ததுநம்பிகடையில்,அப்பொழுதெ ல்லாம் பச்சைக்கலரில் சைக்கிள்களைப்பார்ப்பது அரிது, கறுப்புக் கலர்தான். கறுப்புக்கலரில்பின்மட்கார்டில்நம்பரும்கடைப்பெயருமாய்எழுதியிருக்கஅதை அவர் கடையில் நிறுத்தி வைத்திருக்கிற அழகே தனி/

கடை வைக்க இடம் முடிவாகி வாடகை அட்வான்ஸ் ஸ்பேர்பார்ட்ஸ் இத்தி யாதி இத்தியாதி என யோசித்த வேளை கடையின் பெயர் தாங்கி ஒரு போர்ட் வைக்கவேண்டும்வித்தியாசமாகவும்,மார்டனாகவும்எனயோசித்ததன்விளைவு கடையைத்திறக்கஅவரதுஏரியாவில்குடியிருந்த சைக்கிள்க்கடை தொழிலாளி ஒருவரையும்,கடைக்கு போர்ட் எழுத நல்ல ஆர்ட்டிஸ்ட் ஒருவ ரையுமாய் கூட்டிவந்தார்.கடையைத்திறந்த கூலித்தொழிலாளி இனிம நான் இங்கயே வேலைபாத்துக்குறேன்எனநம்பியிடம்சொன்னபோதுஇல்லண்ணே வேணாம் ன்,முதலில் வேலை பார்த்த இடத்திற்கு நாம் செய்கிற துரோகமாகிப்போகும் அது,இதை நான் ஒரு முதலாளியாகச்சொல்லவில்லை. தங்களின் நலம் விரும்பியாய்ச்சொல்கிறேன்.எனக்கூடவைத்துக்கொள்ளுங்களேன்எனநம்பி சொன்னபோதுஅந்தவார்த்தைகளைஅவரால்தட்டமுடியவில்லை.

இளவட்டங்கள் எல்லோரையும்போலசங்கரண்ணனுக்கும் நம்பி கடையில் சைக்கிள்எடுத்துச் சுத்தப்பிடித்திருக்கிறது.எப்பொழுதாவது ஒருமுறை அத்தை வீட்டிற்கு போகிறவன் எதிர்த்த வீட்டில் இருந்த அவளைப்பார்த்து மையல்க் கொண்ட நாட்களில்சைக்கிளில்மையிட்டாம் பட்டி வரைக்கும் போய் வருகிற பழக்கம் கொண்டவனாக இருந்தான்.

அதென்ன மையிட்டாம்பட்டி,இல்லை அப்படி ஒரு தூரக்கணக்கு வைத்திருந் தான்,கிழக்கே அந்த ஊர் எல்லை, மேற்கே ஒரு எல்லை,ஊர் வடக்கே ஒரு ஊர் எல்லை, தெற்கே ஒரு ஊர் எல்லை என/

சைக்கிள் மிதிப்பது உடலுக்கு நல்லது எனகணக்கு வைத்து அப்படியாய் போ வந்து கொண்டிருந்த நாட்களில் சங்கரண்ணனுக்கு ஏற்பட்ட மன மையல் அவரைஅடிக்கடிஅவரதுஅத்தைவீட்டில்கொண்டுபோய்நிறுத்தியது,தற்செயலாய் எதிர் வீட்டுப்பெண்செய்கிறசெய்கைகூடஇவன்மனதில்புயலையும் அவள் மீது மையலையும்உருவாக்கியது.உண்மைதான்,அப்படியானநாட்களில்சங்கரண்ண ன்என்ஜிஓகாலனியில்இருக்கிறஅத்தையின்வீட்டிற்குச்செல்லநம்பியண்ணன் கடைசைக்கிள்தான்கைகொடுத்ததுஇவனுக்குத்தெரிந்துசங்கரண்ணனுக்குகாதல் வாகனமாய்பயன்பட நம்பி கடையின் சைக்கிள்இருந்ததுபோலவே பலருக்கும் அதுஇருந்தது,பின்கேரியர் இல்லாததால் முன்னால் வைத்துக் கூட்டிப் போனா ர்கள்காதலிகளைபையன்கள்,இப்படியெல்லாமாசெய்வார்கள்பைன்கள்,பிள்ளை களும் இப்படியெல்லாமா போவார்கள் அவர்களை நம்பி என அவரவர் வீடுக ளில் வம்பு முளைத்துக் கிடந்த நாட்களில் நம்பிகடையின் சைக்கிள் இதற்கா கவேபயன்படுகிறது என போலீஸ்வரைக்குமாய் பிரச்சனை போக சமாளித்துப் பார்த்த நம்பி புது சைக்கிள்களைவிற்றுவிட்டுவெறுமனேரிப்பேர் கடைமட்டு மாய் மாற்றிக் கொண்டார்.

சரிஅதனால்என்ன,எனவருமானம் கொஞ்சம் கம்மி நிம்மதி கொஞ்சம் நிறைய என இருந்த நாட்களில் அவரது நம்பியண்ணனின்அப்பாவுக்குஇருந்த ஆஸ்த் துமாநம்பியண்ணனுக்குள்ளுமாய்முளைவிடஆரம்பித்திருந்தது.

இனிமேலுமாய் முடியாது,சைக்கிள்கடையைகட்டிஇழுக்க என நம்பியண்ணன் ஹோட்டலாய் மாற்றி நடத்திக் கொண்டிருக்கிற இடத்தில்தான் இவன் வந்த நின்றிருந்தான் பார்சல் வாங்க/

பின்கட்டியகைகளில்வலதுகையிலிருந்தவயர்க்கூடையைஇடது கை தொட்ட போது யாரோ முன் பின் அறிமுகமில்லாதவர் தொட்டது போலவே இருந்தது.

7 comments:

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

அற்புதமான விளக்கம்... வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

வசப்பட்ட எழுத்து அண்ணா...
அருமை.
எங்க பக்கமெல்லாம் வாங்க... இப்படி எழுத்துக்காரர்கள் வந்து சொன்னால்தானே நாங்களெல்லாம் மெருகேற முடியும்... அடிக்கடி இல்லை என்றாலும் முடியும் போது வாருங்கள் அண்ணா...

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் எங்கும் (வலைத்தளம்) செல்வதில்லை... அவசியம் இல்லை தான்... ஆனால் நம்ம மக்கள் இருக்கிறார்களே.... நீங்கள் ஓட்டும் அளிப்பதில்லை... (கைபேசியில் தொடர்பு கொள்ளவும்)

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/