16 Jan 2017

சொவரொட்டி,,,,,,,/

ஆள்க நிக்குறாங்க சீக்கிரம் போயி குட்டிகளப்புடிச்சிட்டு வாங்க, என்கிற பேச் சைஎதிர்கொண்டவனாய்த்தான் கறிக்கடை முன் போய் நிற்கிறான், சொன்னது கடைக்காரர் பாண்டியன்,கேட்டது இவனாய் ஆகிப்போகிறான்,

பாண்டியன் மிகவும் அப்பாவியான தோற்றம் கொண்ட மனிதர்,பழகுவதற்கு இனிமையானவர்,அன்பு காட்டி நிற்கக்கூடியவர்,என்ன பாண்டியண்ணே,எப்படி இருக்கீங்கஎன்றால்நல்லாயிருக்கேன் சார் என தவறாமல் சிரிக்கிறவர், இவன் வேலை பார்க்கிற நிறுவனத்திற்கு வேலையாய் வருகிற போது ஏற்பட்ட பழக்கம்,இப்போது கொஞ்சம் கிளை விட்டு நிற்கிறது.

பொதுவாகவே இவன் பேச்சில் யாரிடமும் ஒட்டிக் கொள்வது போல அல்லது ஒட்ட வைத்துக்கொள்வது போல ஒரு பழக்கம் இருந்தது,அது தானாக கை வரப்பெற்றதா இல்லை பழக்கத்தில் வந்ததா தெரியவில்லை.அது போலவே பாண்டியண்ணனும்,பேச்சின்ஒட்டுதலில்பழக்கத்தின்நெசவில்என்ன பாண்டிய ண்ணே கடை யேவாரமெல்லாம் எப்பிடியிருக்கு என்பது தாண்டி கேட்டதில் லை. அவரும் அது தாண்டி சொன்னதில்லை.நல்லாயிருக்கீங்களா என்பதற்கு அடுத்தபடியானசொல் அம்பு அல்லது அல்லது பேச்சரவணைப்பு என்று சொல் லலாம்.

ஒரு வெயில் நாள் பொழுதின் முன் மதிய நேரமாக அலுவலகத்திற்கு வந்தி ருந்தபாண்டியண்ணனை நீண்ட நேரமாக கவனிக்கவில்லை இவனும்.என்ன வேலையாக வந்தாரோ,எப்பொழுது வந்தாரோ,வந்த வேலையை யாரிடமும் சொன்னாரோ என்னவோ தெரியவில்லை.நல்ல பசி வேளை வேறு,என்ன ஏது என்று கேட்டான்,

சார் ஒரு நகைய திருப்பி அது கூட சேத்து கையில உள்ள பொருளைக் காண்பித்து இதையும் சேத்து வைக்க வந்தேன்,ஒங்களப்பாத்தேன் ஆளக் காங்கல,சரி ஏதாவது வேலையா இருப்பீங்கன்னு நெனைச்சிக்கிட்டேன் என்று சொன்னவர் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தார்,என்ன ஏது என்று கேட்காமலேயே அது ஒண்ணும் இல்ல சார்,என்னதான் பழகுனாலும் வச்சா லும் சொந்தம்ன்னாலும் கூட தனக்குன்னு வரும்போது காலடியில போட்டு மிதிச்சி காலி பண்ற மனநிலை வந்துரும்.போல இருக்கு சார்.

ஒண்ணும் இல்ல சார்,சொந்தக்காரப்பைய ஒருத்தன் பொண்டாட்டி வழியா சொந்தம்,உருப்படியில்லாம திரிஞ்சான்.நல்லா படிச்ச பையந்தான்,+2 முடிச்சி காலேஜ்லகாலடிஎடுத்துஒருவருஷம் ஒழுங்காத்தான் படிச்சான்.மறு வருஷம் சேர்வார் சேர்க்கையில கெட்டு சீரழிஞ்சி தூர்ந்து போனான்.நல்லா நீட்டா திரிஞ்சிக்கிட்டிருந்தவன் நடவடிக்கையில தீடீர்ன்னு ஏற்பட்ட மாறுதலு எங்களுக்கு சந்தேகத்த உண்டு பண்ணீருச்சி,

போட்டுருக்குற சட்டை கசங்காம பாத்துக்கிறவன் பேண்டு கலருக்கு ஏத்தா ப் புல சட்டை போட்டுக்கிறவன் திடீர்ன்னு ஷேவிங்க் பண்ணாம போட்டுருக்குற துணி மணிமேல அக்கறை இல்லாம திரிஞ்சத என்ன ஏதுன்னு போயிப்பாத்து அவதானிக்கிறதுக்குள்ள பையன் ரொம்பவே தூர்ந்து போயிருந்தான் தூர்ந்து/

சரி என்ன செய்யலாம் அடுத்துங்குறதுக்குள்ள பையன் ரொம்ப தூரம் போயிட் டான்,கொஞ்சவயசுவேறயா,காலேஜ்ல,ஒயின்ஷாப்புல,போறவாறயெடத்துல,,,,,,  இவ்வளவு எதுக்கு முடிவெட்டுற கடையில ,கூட சண்டை,ஒரு தடவ இவன் சொல்லாம மீசைய எடுத்துட்டான்னுசொல்லிகடைநடை வாசல்ல இருந்த கண்ணாடிய ஒடைச்சிப் போட்டான்.கடைக்காரரு வந்து ஒரே புகாரு ஒங்க மொகத்துக்குத் தான் பாக்குறேன்,இல்லைன்னா அன்னைக்கே ஆள உண்டு இல்லைன்னு பண்ணீருப்பேன் என்றார்,

என்ன செய்ய பின்ன,,,,,,,,நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டுட்டு ஒடைஞ்சி போன கண்ணாடிக்குரிய பணத்தக்குடுத்துட்டு ரெண்டு பேருமா போயி அப்பிடியே கடையில சாப்புட்டு வந்தோம்.

இது போலதான் அவன் நஷ்டம் ஏற்படுத்துன யெடத்துலயெல்லாம் போயி பணத்தாலயும் பழக்க வழக்கத்தாலயும் சரிக்கட்டி சொல்லி நெரப்பீட்டு வந்தேன்.

சரி இவன இப்பிடியேவிட்டாலாயக்குப்படாதுன்னு அமுக்கிப்பிடிச்சி ஒக்கார வச்சி யேவாரத்தப்பழகிக்கடா ஏதோகடவுள்புண்ணியத்துல நான் சம்பாரிச்சி வச்சிருக்குற ஆள்க ஒனக்கும் அறிமுகம் ஆயிக்கிருவாங்கடா,நீயும் ஒரு ஆளாயிருவடான்னு சொன்னதுக்கெல்லாம் சரி சரின்னு தலையாட்டிக்கிட்டு திடீர்ன்னு ஒரு நா விடியல்ல வந்து ஓங்கடைக்குப்பக்கத்துலயே யெடம் பாத்து எனக்கு தனியா கடை வச்சிக்குடு நான் யாரு கிட்டயும் கைநீட்டி வேலபாக்கப்பொறந்தவன் கெடையாது,நான் நல்லாயிருக்கணூன்னு நெனைச் சிங்கின்னா எனக்கு இன்னும் ஒரு வாரத்துல கடை வச்சி குடுங்க,,,,,,,,சொல் லீட்டு அப்பிடி யே வாசல்லயே சரிஞ்சி விழுந்துட்டான்.

அந்நேரம் அந்த கருமத்தப் எங்க போயி குடிச்சான்னு தெரியல,வந்திருந்தான் தலை நெறைஞ்ச போதை யோட/

நாங்கல்லாம்இப்பஎன்னகுடியாமயாஇருக்கோம்.ஏதோவிருந்துக்கும் மருந்துக் குன்னா பரவாயில்ல,நெதம் விடிஞ்தெஞ்சிரிச்சி இதே வேலையா திரிஞ்சா எப்பிடி,,,,,,?சொல்லிப்பாத்தோம்கேக்கல,என்னசெய்ய,அவனுக்கு தனியா கடை வச்சிக்குடுப்போம்ன்னு முடிவாகிப்போச்சி,அதுக்குத்தான் இந்தா இந்த நகைய வைக்க வந்துருக்கேன்.

நாங்க நெனைச்சது வேற நடந்தது வேற அவன கொஞ்ச நா கைக்குள்ள வைச்சிக்கிட்டே அவனுக்கும் தொழில்ன்னா என்னான்னுதெரிஞ்ச பொறகு தனியாகடை போட்டு குடுக்கலாம்ன்னு முடிவு பண்ணுனம்.இப்ப அது அப்பிடி யே மாறி தலை கீழா வந்து நிக்குது. அவனுக்குன்னு இப்ப தனியா கடை வச்சி ஒண்ணும்ஆகப்போறதில்ல.அத அவன் ஒழுங்கா நடத்தபோறதுமில்ல, நல்லா தெரியுது,தெரிஞ்சே குழிக்குள குதிச்ச கதையா ஆகிப்போச்சி, என்றார்.

அவரை சாமாதனம் சொல்லி அனுப்பி வைத்து விட்டு சாப்பிடுவதற்குள் பசி ஆறிப்போனது.அல்லது மறந்து போனது. இதுதான் பாண்டியனைப்பற்றிய இவனது எண்ணம் அல்லது இவனில் அவர் உருக்கொண்டிருந்த விதம்.

அவரது கடைக்குப்போகிற போதெல்லாம் அல்லது அவரை பார்க்கிற கண தோறுமாய் இந்நினைவுகள் இவனில்முளைவிடாமல் இல்லை,இவனில் இப்ப டியெல்லாம் உருக்கொண்டிருந்த பாண்டியண்ணனிடம் இவன்எப்படி உருக் கொண்டிருக்கிறான் என அவரிடம் கேட்டால்தான் தெரியும்.
அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து கடைக்கு வரவேண்டும் என நினைத்திருந்தான்.முடியவில்லை,

தீபாவளியன்று நான்குமணிக்கெல்லாம் கறி எடுக்கப்போயிருந்தான்,இவன் வீட்டிலிருந்து கிளம்பி கறிக்கடைக்கு செல்கிற வரை பகல் போலத்தான் இருந்தது.

தெருவிலிருக்கிற டீக்கடைகள் நைட் டிபன் சென்டர் எல்லாமும் திறந்திருந் தது.அது மட்டும் இல்லை.ஒன்றிரண்டு பலசரக்குக்கடைகள் கூட திறந்திரு ந்தது,

அப்படித்திறந்திருந்த எல்லாக்கடைகளின் முன்பும் அதை ஒட்டியும் கம்புகள் ஊணி ட்யூப் லைட்கள் எரிந்தது.அப்படி எரிந்த ட்யூப் லைட்டுக்களில் சுற்றிப் பறந்த கொசுக்களும் ஈக்களும் கறிக்கடை முன்பாய் பறந்து கொண்டிருந்தன.

அதைக்கடந்து போய்க்கொண்டிருந்த பொழுது டீக்கடையில் நின்று கொண்டி ருந்த நண்பர் ஒருவர் நேத்து நைட்டு 9.30 மணிக்கெல்லாம் கறி எடுத்தாச்சி, கோழிதான் எடுத்தேன்,வீட்டிக்காரிக்கு கோழிக்கறிவைக்கிறதுன்னா கொஞ்சம் நல்லா வரும்.ஒன்பது மணிக்கெல்லாம் இங்க கறி போட ஆரம்பிச்சிட்டாங்க ,சரி எடுத்து வச்சிருவம் காலகாலத்துல, காலையில வெள்ளன எந்திரிக்க முடியுமா என்னன்னு தெரியல,அதான்நேத்தேஎடுத்து வச்சிட்டேன்,அந்நேரமே வாய் நிக்க மாட்டாம கொஞ்சம் கொழம்பு வச்சி தோசைக்கு தொட்டுக்கிட்டு சாப்புட்டாச்சி,அதான் இன்னைக்கி காணுமோ காணாதோன்னு ஒரு அரைக் கிலோ எடுத்துட்டுப்போவன்னு வந்தேன்.

பெரியமகன்வர்ரேன்னுசொல்லீருக்கான்,தஞ்சாவூர்லபேங்குலவேலைபாக்குறான். பஸ்டாண்டுல வந்து யெறங்குன ஒடனே போன் பண்றேன்னு சொல்லீரு க்கான்,அதான் ரெடியா வந்து நிக்குறேன்.இந்தா டீ சாப்புட்டு வரணும் நீங்க வாங்குற கடையிலதான் நானும் வாங்குவேன்.இந்தா கால் மணி இல்ல அரை மணிநேரத்துலபண்ணீருவான்.கடையில போயி கறிக்குச்சொல்லீட்டு அவனப் போயி கூட்டீட்டு வரணும் என சொல்லிவிட்டுக் கிளம்பினார்.அவர் சென்ற பிறகு அவர் பேசி விட்டுச்சென்ற பேச்சின் நூற்பு இவனை ஆட்க் கொண்ட தாக,,/

பையன் தஞ்சாவூர்ல வேலை பாக்குறான்.வாரத்துக்கு ஒரு தடவை இல்ல ரெண்டு வாரத்துக்கு ஒருதடவை வருவான்.அவன் குடும்பம் இங்க இருக்கு ,எங்க தெருவுக்கு அடுத்ததெருவுலதான் இருக்கு.ரெண்டு பசங்க இருக்காங்க, பெரியவன் எட்டாவது படிக்கிறான்,சின்னவன் நாலாவது படிக்கிறான்.மகன் தஞ்சாவூர்லயிருந்துராத்திரி பதினோரு மணிக்கு வருவான். மறுநாஞாயித்துக் கெழம நடு ராத்திரி ரெண்டு ரெண்டரை மணிக்கு வீட்ட விட்டு கெளம்பீருவா ன்.

குடும்பத்த கூட்டிக்கொண்டு போய் அங்க வச்சிக்கடான்னு சொன்னாலும் மாட்டேங்குறான்,இன்னும் கொஞ்ச நாளையில ட்ரான்ஸ்பர் ஆகி வந்துருவே ன்னு சொல்றான்.சரின்னு விட்டாச்சு,அதுக்கு மேல பெரிசா நானும் ஒன்னும் சொல்றதில்ல.என்றவர் ஏங் பையனும் கறிக்கடை பாண்டி சொந்தக்காரரும் ஒண்ணா[ப்படிச்சவுங்கதான்.இவன்இப்பிடிபோயிட்டான்,அவன்அப்பிடிஆகிட்டான், சரிஅவனவன் நேரக்கூறுன்னு போக வேண்டியதுதான்,எனச்சொன்ன அவர் ஏங் மகன் ஊருக்கு வர்ற போதெல்லாம் பாண்டி சொந்தக்காரன் கையில தான் கறி வாங்குறான் என்றார்.

நேற்றுஇரவு தூங்குவதற்கு 12.30 ஒருமணிஆகிப்போனது,பின்மூன்று மணிக்கு வந்து விட்ட விழிப்பை தள்ளிப்போட்டு விட்டு தன்னையறியாமல் தூங்கும் போது மணி எத்தனை இருக்கும் எனத் தெரியவில்லை. அசந்து விட்டான், எழுந்திருக்கும்போதுமணிஆறுஆகியிருந்தது, இந்நேரம்போனால் கடையில் கூட்டம் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை.

மனைவிகூடச்சொன்னாள்.நீங்கதான நாலு மணிக்கெல்லாம்எந்திரிச்சி கடைக் குப் போற ஆளா என,,,,,,,,/

சரி போகலாம் என்ன இப்பொழுது அதற்கு என்ன கொஞ்சம் அசந்து விட் டேன்,சரிவிடுஎன்றவாறு முகத்தை கழுவி விட்டு வந்து சட்டையை போட்டுக் கொண்டு கிளம்பினான்,

வீட்டில் சற்றே மங்கலாக எரிந்து கொண்டிருந்த ட்யூப் லைட்,திறந்திருந்த ஜன்னல் வழியே வந்த தெரு விளக்கு வெளிச்சம் வீட்டிற்குள் பாரபட்சமில் லாமல் பறந்து திரிந்த கொசுக்கள் காறி படம் போட்டு சுவரில் சிரித்துக் கொ ண்டிருந்ததினசரிகாலண்டர்,அமைதியாய்ப்இருந்தகிச்சன்,பெட்ரூமில்தூங்கிக் கொண்டிருந்த இரண்டாவது மகள்.ஷோக்கேஸ் அருகில் வைக்கப் பட்டிருந்த ஊதுவத்திஸ்டாண்ட்டீவி கொடியில் தொங்கிக்கொண்டிருந்த துணிகள்,,,,,, என எல்லாவற்றையும் பார்த்தவனாய் கிளம்புகிறான்,

என்ன என்னமோ இப்பத்தான் வீட்டை புதுசா பாக்குற மாதிரி பாக்குறீங்க, என்றவாறு காசை கொடுத்தனுப்பிய மனைவியின் அருகாமை என்கிற கூட்டி சைவில் கிளம்புகிறான்.

இவன்எதிர்பார்த்துப்போனஅளவிற்கெல்லாம்கூட்டம் இல்லை கடையில், இவன் நினைத்திருந்தான் எப்படியும் தீபாவளி அன்று இருந்ததைப்போல இருக்கும் என,,/

தீபாவளிக்கு முதல் நாள் இரவே மெயின் ரோட்டில் நெடுக ட்யூப் லைட் கட்டி கடையைதிறந்து விட்டிருந்தார்கள்,முதல் நாள் இரவு பத்து பதினோரு மணிக் கெல்லாம் ஆடு உரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இவன் பாண்டியனை இரண்டு நாட்களுக்கு பஜாரில் வைத்துப்பார்த்த பொழுது சொல்லி வைத்திருந்தான்.நாளைக்கு கறிஎடுக்க வருவேன் கொஞ்சம் பார்த்துப் போட்டு விடுங்கள் என,,,/

கறிக்கடைக்காரர்தெளிவாகசொல்லிவிட்டார்,அண்ணேவாங்கண்ணேநாளைக்கு நீங்க வர்ற நேரம் என்ன இருக்கோ அதுதான் ,நாளைக்கு திருநா கூட்டமா இருக்கும் கடையில ,நாங்க எத ஞாபகம் வச்சிட்டு யாருக்குன்னு போடுறது சொல்லுங்க,இப்ப நீங்க சொன்னது பூரா அப்பிடியே மறந்து போகும்,நாளைக்கு வாங்க நீங்க என்ன முடியுமோ ,முடிஞ்ச அளவுக்கு நல்லதா போட்டுத் தர்றோம் என்றார்.

அவரதுபேச்சைக்கேட்டுக்கொள்ளலாம்.நம்பிஏற்றுக்கொள்ளலாம்,ஆனால்,,,,,,,,,,,,,,

இதற்கு ஆத்தமாட்டாமல்தான் பேசாமல் கோழிக்கறி எடுத்து விட்டுவிட்டுப் போய் விடுகிறார்கள்.

அங்கும் கூட்டமான கூட்டம் இல்லை.

இவன் வீட்டிலிருந்து வருகிற வழி தோறும் கிட்டத்தட்ட பத்துக்கடைகள் வரை முளைத்திருந்தது.அங்கெல்லாம் கறி எப்படிஇருக்கும் எனத்தெரியவில்லை.

ஆனால் அங்கெல்லாம் வாங்காமல் எப்பொழுதும் வாடிக்கையாய் வாங்குற கடையில் போய் நின்றான்,கூட்டம் அவ்வளவாக இல்லாத போதும் கூட ஒரு மணி நேரம் வரை காத்து நிற்க வேண்டியிருந்தது. 

இந்த ஒரு மணி நேர இடைவெளியில் டீ சாப்பிட்டுவிட்டு வந்து விடலாம். எனத் திரும்பிப்பார்த்த பொழுது தூரங்களில்தான் கடை தெரிந்தது.

சரி வேண்டாம் இப்போதைக்கு வேண்டாம் டீ,கறி எடுத்துகொண்டு போய் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்கிற முடிவில் கடைவிட்டு நகராமல் நிற்கிறான்.

அப்பொழுதான் வயதான அம்மா ஒருவர் கால் கிலோ கறி வேண்டி நின்று கொண்டிருந்தார்,கடைக்காரர் சப்தம் போட்டுக்கொண்டிருந்தார்,இந்தக் கூட்ட த்துல வந்து கால்கிலோ கறி வேணும்ண்ணா எங்க போக சொல்லுங்க, ஒரு கிலோரெண்டுகிலோகேக்குறவுங்களுக்கேபோட்டுக்குடுக்க முடியல. இதுல,,,,,,

நேற்றைக்கு முன் தினம் பொங்கலுக்கு சாமான் வாங்க பஜார் சென்றிருந்த பொழுதுஇவனதுநண்பர்கனகராஜனைப் பார்த்தான்,காய்கறியெல்லாம் வாங்கி விட்டான்,மிச்ச சாமான்கள் வாங்க வேண்டும்,பை காணவில்லை, இன்னும் கண்ணுப்பூழைச்செடி,பனங்கெழங்கு மற்றமற்றதெல்லாம் வாங்க வேண்டும், அதற்காக பை ஒன்று வாங்க வேண்டும் இப்போதைக்கு என்கிற முடிவுடன் பஜாரில் சென்று வாங்கிய காய்கறியை வைத்து விட்டு பை விற்கிற கடை யை நோக்கி சென்று கொண்டிருக்கும் போதுதான் நண்பர் கனகராஜன் எதிர்ப் பட் டார், 

பேசிக்கொண்டிருந்தார்கள்,சிறிதுநேரம்,பொங்கல்,அதற்காகவாங்கியசாமான்கள் அதன் விலை வளர்ந்து நிற்கிற பிள்ளைகளின் படிப்பு,,,,இத்தியாதி இத்தியாதி எனப்பேசிக்கொண்டிருக்கையில்தான்மிகவும் குறை பட்டுக்கொண்டார் நண்பர் கனகராஜன்,

மொதப்பையனுக்குகல்யாணம்முடிஞ்சாச்சி,இன்னும்ஒரு பையன் இருக்கான், அவனுக்கு இன்னும் ஒரு வேலை அமையல, அமைஞ் சிருச்சின்னா அவனுக் கொரு கல்யாணத்தப் பண்ணி வச்சிட்டு நிம்மதியா ரிட் டையர் ஆயிறலாம். என்றவனிடம் இவன் சொன்னான்,விடுங்க ராஜீ, நீங்களாவாது ஒரு பையனு க்கு கல்யாணத்த முடிச்சிட்டீங்க,பேரன்பேத்தி எடுத்துட்டீங்க,,,, என்னையச் சொல்லுங்கஇனிமேதான்இங்கஎல்லாம்,,,,,,கிட்டத்தட்டஒங்க வயசுதான் எனக் கும்,,,,, என்கிற பேச்சினூடாக சரி பொங்கலுக்கு கறி எங்க சொல்லீருக்குறீங்க ,நான் என்னோட சொந்த கிராமத்துலயே சொல்லீட்டேன் என்றார், 

இவன்நான்உள்ளூரில்தான்சொல்லியிருக்கிறேன்,வேறெங்கும்போய்எடுக்கும் முடிவு இல்லை இப்போதைக்கு என்றான்,சரிதான் அந்த முடிவு என்றவனாய் கிளம்பிவந்துவிட்டான்,பஜாரிலிருந்தும் கனகராஜனின் பேச்சிடை கட்டுமான த்திலிருந்தும்/

கனராஜன் கிளம்பிப்போகும் ப,மாஞ்சாது பார்த்தான் அவரை,அவர் சரக்கு வாங்கிய பையிலிருந்து நீட்டிக்கொண்டிருந்த கண்ணுப் பூழைச்செடிகளின் காய்ந்த பூக்களும்,மஞ்சள் கிழங்குச்செடியின் இலையும் மஞ்சள் கிழங்கும் கண் சிமிட்டி சிரித்தன,

அது ஏனோ இப்பொழுது ஞாபகம் வர வாங்கிய கறிக்கு ரூபாயை கொடுத்து விட்டுக் கிளம்புகிறான்.

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது நடக்கட்டும்...

கரந்தை ஜெயக்குமார் said...

நல்லதே நடக்கட்டும் நண்பரே

Unknown said...

MK CINEMA இது நமது சேனல் இதை SUBSCRIBE மற்றும் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.

மேலும் பலதரப்பட்ட சுய தொழில் இலவச பயிற்சி வகுப்புகளை இங்கு அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

நீங்கள் நமது சேனலை இது போன்று லைக் ஷேர் செய்தால் மேலும் மேலும் நாங்கள் விடீயோக்கள் போடுவதற்கு எங்களை ஊக்கப்படுத்தி. மேலும் எங்களை சிறப்பாக விடீயோக்கள் பதிவிடுவதற்கு உதவும் நண்பர்களே ..

நிறை மற்றும் குறைகள் இருப்பின் கமெண்ட் இல் தெரியப்படுத்துங்கள்.உங்களது கமெண்ட்கள் வரவேற்கப்படுகிறது .

வாழ்க தமிழ் வளர்க தமிழ் .

வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்

நமது MK சினிமா பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யுங்கள்.

https://www.facebook.com/Mkcinema-298392973889075/app/212104595551052/

vimalanperali said...

வணக்கம் திண்டுகல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி தகவலுக்கு,,,/

Unknown said...

How To use Hangout Video calls free

Google Hangout பயன்படுத்துவது எப்படி ?

https://www.youtube.com/watch?v=aor8wBEWypc

Unknown said...

வீட்டில் இருந்து கொண்டு ஆபிஸில் உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்துவது எப்படி ?

https://www.youtube.com/watch?v=kRQRe6NTD84

Unknown said...

அந்த காலம் முதல் இன்று வரை நமக்கு பிடித்த பாடல்களை ஆண்ட்ராய்டு மொபைலில் டவுன்லோட் செய்வது எப்படி ?


https://www.youtube.com/watch?v=0lgJhG36peg

Unknown said...

தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU

Unknown said...

Facebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி?

https://www.youtube.com/watch?v=w_3MUp-bkjM

Unknown said...

ஒரு App Download செய்து 10 மேற்பட்ட App-களை பயன்படுத்துவது எப்படி ?

https://www.youtube.com/watch?v=oaQUWzIbZpo

Unknown said...

ஒரு App Download செய்து 10 மேற்பட்ட App-களை பயன்படுத்துவது எப்படி ?

https://www.youtube.com/watch?v=oaQUWzIbZpo