ஊர்ந்து சென்ற எறும்புகள்,
மலர்ந்து நின்ற பூக்கள், அசைவுற்றுத் தெரிந்த மனிதம்,,,,,,
எய்யப்பட்ட அம்புகள்,,,
மலர்ந்து நின்ற பூக்கள், அசைவுற்றுத் தெரிந்த மனிதம்,,,,,,
எய்யப்பட்ட அம்புகள்,,,
*********
எறும்புகளின் அசைவுகளும்
பூக்களின் மலர்தலும் மனிதங்களின் அசைவுகளும் எய்யப்பட்ட அம்புகளும் இலைக்கை நோக்கியாய்,,,,/
**********
நோக்கிய இலக்குகளின்
பயணங்கள் சீர் கொண்டும் சீர் படுத்தப்பட்டுமாய்,,,/
**********
சீர் கொண்டு செல்கிற
சாலைகளின் பயணங்கள் நேர் கொண்டு செல்வதாகவே சொல்கின்றன,,,,,,
**********
சொல்லி விட்ட எல்லாமும்
கேட்டுவிட்ட எல்லாமையும் விட வலிமை பாய்ச்சிய தோற்றம் கொண்டதாய்,,,/
*********
பூண்டு விட தோற்றத்தின்
மெய்மையும் பொய்மையும் வெளிச்சம் பட்டுப்போன பின்னாய் வெளுத்தும் ,செல்லரித்துமாய்,,,
**********
செல்லரித்த சொல்லும்
சொற்கட்டும் எப்பொழுதும் எதன் முன்னும் தன் உயர்த்தி நிற்க முடியாததாகவே,,,/
***********
தன் உயர்த்தி நிற்க
பலமில்லாதது நிலை கொள்ளா ஆட்டம் காட்டி,,,/
************
நிலை கொள்ளா ஆட்டங்களில்
நின்றாடும் மனிதம் தோற்றும் ஜெயித்துமாய் ஆடும் பரமபத ஆட்டங்கள்,,/
**********
நின்று விடா பரம பதங்களில்
மேலேறியும் கீழிறங்கியுமாய் நெளிகிற பாம்புகளின் வித்தைகள் கண் முன்னே படம் விரித்தாய்,,/
**********
விரித்த படங்களின்
வீர்யங்கள் திரும்புகிற திசையின் வீச்சில் நிலை கொண்டும்,இலக்கிட்டுமாய்,,/
***********
இலக்கிட்ட மனிதம் வாழ்வியல்
நோக்கி எரிகிற அம்பு திசை தப்பியும் நேராயும்,,/
**********
நேரிட்டது எதுவும்
சரி என்பதல்ல,
குறுக்கிட்டது எதுவும் தவறானதென்பதல்ல,,,/
என விதையிட்டுச் செல்வதாய்செல்வதாய் வாழ்க்கை,,,
குறுக்கிட்டது எதுவும் தவறானதென்பதல்ல,,,/
என விதையிட்டுச் செல்வதாய்செல்வதாய் வாழ்க்கை,,,
6 comments:
அருமை அருமை சகோ! அனைத்தும் ரசித்தோம்...
சிறந்த கவிதை சிறந்த கருத்து
எண்ணங்கள் வலுவானது
அருமையான வரிகள்
அன்பும் நன்றியும்,,,,/
நன்றி கருத்துரைக்கு,/
வணக்கம் சார்,
நன்றி அன்பிற்கும் ஆதரவிற்குமாய்,,,,/
Post a Comment