28 Mar 2021

நுண்மி,,,

 ______________||||🍂🍂🍂🍂



தீ நுண்மி காலத்தின் இரண்டாவது அலை தீவிரப்பட்டிருக்கிறது என

அறிவுறுத்த வந்தவர்கள் அலுவலகங்களில் நுழைந்தார்கள்.

அங்கிருந்த ஊழியர்களையும்,

அதிகாரிக்ளையும் முகக்கவசம் அணிய வலியுறுத்தியும்,கவனத்தின்இருப்பு  

பன் மடங்காவது அவசியம் எனவுமாய் வலியுறுத்தியும்,சற்றே 

கூர்மை காட்டியுமாய் சென்றார்கள். சாலையோரக்கடைகளிலும்,

பேருந்து நிலையத்திலுமாய்

இன்னும்,இன்னுமான இடங்களிலும்

தென்பட்ட முதியவர்கள்,பெண்கள் குழந்தைகள் மற்றும் இவர்களுடன் கைகோர்க்கும்,ஊனமுற்றோர் ஆதரவற்றோர்

சாலையோர வாசிகள் என அனைவரிடமும் அபதாரமும்

கண்டிப்புமாய் சென்றவர்கள்

பேருந்தேறுகையில்

யாசித்து எதிர் பட்ட திருநங்கைக்கு 

ரூபாய் பத்து கொடுத்து விட்டு அவளிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்.


                              __________||||🍂🍂🍂🍂

No comments: