28 Mar 2021

பகிர்பொழுதாய்,,,

 ___________||||🍂🍂🍂🍂



இலையுதிர்ந்த மர நிழலில் நிற்கிறான்.

சிறிது கழித்து தேநீர் கடையோரமாய்!

பின் பிராய்லர் கடையருகிலும்,

பூக்கடையோரமாயும் நிலைகொள்கிறான்.

வழக்கம் போல் தனது இயக்கத்தை அணிந்து கொண்ட 

சாலையோர கடைவாசிகளும்,

கூடவே சாலைவாசிகளில் சிலரும் அவனை அறிந்தவர்களாகவே,,,!

அவனின் தோற்றம் கண்டும்,

அவனை நனைத்த கூச்சம் கண்டுமாய்

யாரும் அவனை தள்ளிப்போ என்றோ ஒதுக்கி வைத்தோ பார்த்து விடவில்லை.

அவனுக்கு வணக்கம் சொல்கிறார்கள்.

அவனைப்பார்த்து சிரிக்கிறார்கள்.

நலம் விசாரிக்கிறார்கள்.

இன்னும் சிலரானால் கைப்பிடித்துக்குலுக்குகிறார்கள்.

நோயுற்றவனின் இரவைப்போலவும்,

வேலையற்றவனின் பகலைப்போலவுமான நேரத்தின்

நீளத்தை ஒப்புக்கொண்டவனாய்

தெரு முனையிலிருந்த பெட்டிக்கடை முன் நின்று தேவையானது கேட்கிறான்.

இவனை ஏறிட்ட கடைக்காரர் 

முகமன் கூறி சிரித்தவறாய்

அவன் கேட்டதைத்தருகிறார்.

கவனமாய் பொருளுக்கான 

விலை சொல்லிவிட்டு 

இப்பொழுது இல்லையானால் பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்கிறார்.

கடைக்காரரின் சொல்லை ஏற்க மறுத்தவனாய் பையின் அடியாளத்தில் துழாவி பணத்தைக்கொடுக்கிறான்.

ஆயினும் கடைக்கு வருவதற்கு முன்னாயும் கடை விட்டகழும் பொழுதும்

அவன் அணிந்தது கொண்ட கூச்சம் அவனை விட்டகலாமலேயே,,,,!


                              ___________|||👥👥👥👥

No comments: