4 Aug 2011

ஞாபக மறதி,,,,,,,,


   


பேருந்தின் ஒலியையும்,
நடத்துனர் டிக்கெட்
கேட்ட சப்தத்தையும்
தவிர வேறொன்றுமில்லை.
கலர்,கலராக
துணி போர்த்தியிருந்த
இருக்கைகள் மனிதர்களையும்,
அவர்கள் சுமந்த எண்ணங்களையும்,
உடைமைகளையும் சுமந்தபடி/
அதிகாலை நேரமாகையால்
அனேகமாக
அனைவரும் உறங்கி விட்டிருந்தனர்.
பேருந்து உமிழ்ந்த
விளக்கு வெளிச்சசத்தில்
சாலையின் தெளிவும்,
அதிகாலையின் சுகந்தமும்/
பேருந்தினுள் ஒலித்த பாடல்கள்
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு நினைவுகளை
சுமந்து வந்து என்னில் தந்தபடி/
பயணம் சுமந்த சமகாலத்தைய,
பழைய காலத்தைய
நினைவுகளையும்
நினைவிகளை சுமந்த
பயணத்தையும்,,,,,,
அசைபோட்டவாறே 
பயணித்துக் கொண்டிருக்கையில்தான்
எனது மனைவியிடமிருந்து
போன் வந்தது,
பஸ் ஏறிவிட்டீர்களா என/
பஸ் மட்டும் ஏறவில்லை அன்பே
சந்தோசமாகவும்
பயணித்துக்கொண்டிருக்கிறேன்
என சொல்ல வந்த நான்
தூக்கத்திலிருந்து படக்கென
விழித்துக்கொண்ட
அருகாமை இருக்கை
குழந்தையை பார்த்தவாறு
மெய் மறந்தவனாய் நிற்கிறேன்/

1 comment:

vidivelli said...

பஸ் மட்டும் ஏறவில்லை அன்பே
சந்தோசமாகவும்
பயணித்துக்கொண்டிருக்கிறேன்
என சொல்ல வந்த நான்
தூக்கத்திலிருந்து படக்கென
விழித்துக்கொண்ட
அருகாமை இருக்கை
குழந்தையை பார்த்தவாறு
மெய் மறந்தவனாய் நிற்கிறேன்/


நல்ல கவிதை...
வாழ்த்துக்கள்..