24 Jan 2012

ஒட்டுவாரொட்டி,,,,,,,,


                                  
              

     பழக்கங்களின் விளிம்புகளில் வந்து தோள் சேர்ந்து தெரிகிற மனிதர்கள் பற்றியான பார்வை அவரது பின்புலத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது,அவர் எவ்வளவு நல்லவராகவும்,திறமையானவராகவும் ,உண்மையானவராகவும் இருந்த போது கூட/
    வாங்கியவாழைப்பழத்தில்ஒன்றை“வணக்கம்ண்ணே”எனச்சொன்னவருக்கு கொடுத்த
போதுவாழைப்பழத்தைஎன்னிடமிருந்துவாங்கியவரும்,கொடுத்ததற்கு ஆட்சேபனை
சொன்னவரும் போன பின் வாங்கிய தேனீரை அருந்திக்கொண்டிருக்கும்  போது உள்ளுள் வந்தமர்ந்த நினைவை தவிர்க்க முடியவில்லை.
   அவரது சட்டைப்பையில் எப்பொழுதும் சின்னதான ஒரு உளியும் அதைவிட்ட சின்னதான ஒரு சுத்தியலும் இருக்கும்.
   அது இரண்டும் அவரது அழுக்கான பையில் இருந்த போதும்கூட பார்க்க அழகாகவே இருந்தது.சிற்பியின் கைலிருக்கிறது போல இல்லாவிட்டாலும் கூட அவரது கைபட்ட வேலை மிளிரும்.
   சைக்கிள்,இருசக்கரவாகனங்கள்,சமயத்தில்பாத்திரங்கள்எனஇவர்பெயர் செதுக்குவார்.
ஒருநாள் இரவில் தெருவிளக்கின் வெளிச்சத்தில் டீக்கடையில் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த போது வனக்கம்ண்ணே,”ஒங்க சைக்கிளல பேரு அடிச்சுருவமா”என என் சம்மதத்துடன் ஐந்தே நிமிடங்களில் எனது பெயரையும் சேர்த்து அழகான இரண்டு மயில்களையும் பெயரின் வலமும்,இடமுமாக செதுக்கிக்கொடுத்து விட்டு விட்டார்.
    ஐந்தே நிமிடங்களில் ஏற்பட்டு விட்ட அந்த அதிசயத்தைகண்டு வியந்தவனாய் அவருக்கு பணம் கொடுத்த போது ஒரு டீயும் இரண்டு வடையும் மட்டும் போதும் என முடித்துக்கொண்டார்.
    நான்தான் வம்பு பண்ணி வீட்டிற்கு கொண்டு போங்கள் என மேலும் சில வடைகளை வாங்கி கொடுத்தனுப்பினேன்.இதே வேலையை வேறு யாராவது செய்திருந்தால் கண்டிப்பாக ஐம்பது ரூபாய் வரை வாங்கியிருக்கலாம்.அப்போது கிளைத்த அறிமுகமும்,நட்பும் இன்றுவரை/
    அவரது திறமையை பாரட்டி நாலு வார்த்தைகள் பேசியதுதான் காரணமாக இருக்கலாம்.நன்றாக இருந்தால் அவருக்கு முப்பத்தைந்து வயது இருக்கலாம்.உருக்கி வார்த்தது போலான உடம்பு..உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை தன்னைத்தானே செதுக்கிக்கொண்டவர் போல உடம்பில் உதிரித்தசை எதுவும் வெளிபிதுங்கிதொங்காமல் கச்சிதமாகத்தெரிந்தார்.
   விரைப்பாய் நீண்டு தெரிந்த கை,கால்களில் தசை முறுக்கித்தெரியும் எந்நேரமும்.சிறிய கூர் விழிகளும்,கத்தரித்து எடுத்து ஒட்ட வைக்கப்பட்டது  போலான மூக்கும்,சிவந்த உதடுகளுமாய் வசீகரத்தனத்துடன் இல்லாமல் போனாலும் கூட நல்ல முகவெட்டுடன் காணப்பட்டார்.சிந்தனை தாங்கிய நெற்றியும்,பார்வை நிறைந்த கண்களும் செயல் நிறைந்த  உடலுமாய் தெரிந்த அவர் அடர்நிற உடைகளில் கசலையாயும் அழுப்பு அப்பிய உடலுடனுமாயே  தெரிகிறார் எந்நேரமும். கூடவே போதை தெளியாதவராயும்/
   நான்பார்க்கிறபெரும்பாலானநேரங்களில் இப்படித்தான் தென்படுகிறார்.டீக்கடை முன்பு
ஏதாவது ஹோட்டல் முன்பாக அல்லது பெட்டிக்கடை முன்பாக/
   இவை மூன்றில் ஹோட்டல் தவிர்த்து பெட்டிக்கடைகளுக்கும்,டீக்கடை ஆகிய இரண்டிற்கும் எனக்குமாக ஒரு நெசவு அல்லது மெலிதான அல்லது தடிமனான ஒரு இழையோடல்இருக்கும்.அந்த இழையோடலும் நெசவும் ஹோட்டல்களின் முன்பு எப்போதாவது.
   அப்படியானநேரங்களில்”வணக்கம்ண்ணே”என்கிறவெள்ளைசிரிப்புடன்நேராகநிற்கக்
கூடசக்தியற்றவராக என்முன்னே/
    என்ன செய்ய?வணக்கம் சொல்லி எதிரே வந்து நிற்பவரை தவிர்க்க முடிவதில்லை.  அப்படியான செயலும் எனக்கு வாய்க்கப்பெற்றதில்லை எப்போதும்/
    தினசரி காலை 5.00 அல்லது 5.30 மணிக்கெல்லாம் அவரது திருப்பள்ளியெழுச்சி ஆரம்பம் என  அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
  அவரது எழுச்சி,அன்றாட ஓட்டத்திற்கான அவரது தயார் நிலை,,,,,,,,,,,,,,,,,,,,இதர,இதர என்கிறதானவைகளை உள்ளடக்கிய அவரது அர்த்தப்பூர்வமான (?/) செய்கைகளை கொண்டாடுவது போல் சேவலின் கூவலிருந்து பறவைகளின் கீச்சிடல் வரை எல்லாம்/   மரத்தின் இலைகள் உட்பட/
    ஒருகை தண்ணீர் அள்ளி முகத்தில் தெளித்தவராகவும்,தன்னை தயார் செய்து வீட்டை விட்டு ஓடிக்கொண்டிருப்பவராகவும் இருக்கிற அவருக்குகென நிலையான வேலை எதுவும் இல்லை.
   ஒருநாள்கட்டிடவேலைக்குசெல்வார்.இன்னொருநாள்பெயிண்ட் அடிக்கப்போவார்.
வேறு ஒருநாள் சினிமா போஸ்டர் ஒட்டுவார்.மில் வேலைகளில் தனது உழைப்பை கலந்து விடுவார்.மூடை தூக்கச்செல்வார். டீக்கடையில் டீ ஆற்றுவார்.ஹோட்டலில் சப்ளையராக உருமாறுவார்.விறகு வெட்டச் செல்லுவார்.,,,,,,,இப்படி உதிரி,உதிரியான வேலைகளாக நிறைய செய்தும் அதில்  வருகிற வருமானத்தை வைத்துமே நிலையற்ற வாழ்வில் தன்னை பிணைத்துக்கொண்டவராய் தெரிகிறார்.
    “சார்.இவனுக்கெல்லாம் நீங்க இப்பிடி உதவி செய்யிறது வேஸ்ட்டு சார்.இவனெல்லாம் கொஞ்சமாவா சம்பாதிக்கிறான்.என்ன கேடு இவனுக்கு?இவன் நெலையில நான் மட்டும் இருந்தேன்னா இந்நேரம் சொந்தமா ஒரு வீடு கட்டியிருப்பேன்”
   “யாருதான் சார் தண்ணி அடிக்கல இந்தக்காலத்துல/,பொழைக்கிற பொழப்புல ஒரு ஒழுக்கம் வேணும்ல சார்.அது இல்லாததுனால இப்படி சீரழிஞ்சு அலையுறான்.நீங்க இந்த மாதிரி ஆளுக்களுக்கு உதவி பண்றதெல்லாம்”,,,,,,,,,,,,,,,, என நீளமாக சொல்கிறார். கொஞ்சம் அடர்த்தியாகவும்/
    பழக்கங்களின் விளிம்புகளில் வந்து தோள் சேர்ந்து தெரிகிற மனிதர்கள் பற்றியான பார்வை அவரது பின்புலத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது,அவர் எவ்வளவு நல்லவராகவும்,திறமையானவராகவும் ,உண்மையானவராகவும் இருந்த போது கூட/     

5 comments:

Unknown said...

உணர்த்துகிறது... நெருடுகிறது... நன்றி...

ஹேமா said...

சொல்லத் தெரியவில்லை.ஆனால் அருமையான அனுபவப் பகிர்வு !

நிலாமகள் said...

அந்த‌ ம‌னித‌ர் ப‌ற்றிய‌ அனைத்து கோண‌ங்க‌ளும் தெளிந்த‌ விவ‌ர‌ணைக‌ளாய். இறுதி வ‌ரிக‌ள் ஏற்க‌த் த‌க்க‌தெனினும், இருக்கும் ஒன்றிர‌ண்டு கெட்ட‌ ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளால் சில‌ரை வெறுத்தொதுக்க‌ முடியாம‌ல் அவ‌ரின் பிற‌ ந‌ல‌ன்க‌ளை ப‌ற்றிப் பீடித்துக் கிட‌க்கிற‌ ம‌ன‌சை ஒன்றும் மாற்ற‌ முடியாது... திருத்த‌ முடியாவிட்டாலும் வெறுத்து ஒதுக்காம‌ல் இருந்து விட்டுப் போவோமே.

vimalanperali said...

வணக்கம் நிலாமகள் அவர்களே,நம் சமூகமுகவரியில் இதுவும் ஒன்றாய் பதிவாகிறது.திருத்துவதும்,வெறுத்து ஒதுக்குவஸ்துமல்ல,ஏன் அப்படி ஆகிப்போகிறார்கள் என எழுந்த கேள்வின் நீட்சியே இந்த பதிவுக்கு வித்தாய்/ந்ன்றி உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஹேமா அவர்களே,சொல்லத்தெரியாத அளவு போய் விடவில்லை பதிவு,அனுபவங்கள் கற்றுத்தந்ததை பகிந்துள்ளேன்.உங்கள் அனைவரிடமும்,நன்றி உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/