17 Jan 2012

மலர்வு,,,,,,,,


    

வீட்டின் பக்கவாட்டு வெளியை
கூட்டிக்கொண்டிருந்த போது
“அண்ணே”என அழைத்த குரலுக்கு
உரியவள் இருபத்தைந்து
வயதிற்குட்பட்டவளாக தெரிந்தாள்.
பரஸ்பரம்  விசாரித்துக் கொண்டிருந்த
பேச்சினூடாக வீடு பார்க்க
வந்திருப்பதாக சொன்னாள்.
முன்னால் குடியிருந்த வீட்டை
வீட்டின் உரிமையாளர்
விற்கப் போவதாகவும்
ஒரு மாததிற்குள்ளாக வேறு வீடு
பார்க்க வேண்டிய அவசியத்தில்
இருக்கிறோம் எனவுமாய் சொன்னவள்
தூரத்திலிருந்த பக்கத்து வீட்டை காட்டி
இதையே பேசி முடிக்கலாம் என
இருக்கிறோம் என்கிறாள்.
அவள் பேசிக்கொண்டிருந்த
நேரத்தில் கூட்டிய மரத்திலைகள்
அப்படியே இருக்கின்றன.
தூசிகள் விறைத்தெழுந்து  
காற்றில் கிளம்புகின்றன.
கையில் பிடித்திருந்த விளக்குமாறும்,
வாயில் வைத்திருந்த டூத் பிரஷும்
அப்படியப்படியே இருக்க
அவசர,அவசரமாய்
அவளுடன் பேசியவாறும்,
மனைவியை அழைத்தும்
அவளை ஒப்படைத்து விட்டு
பாதியில் நிறுத்தி  விட்டுப்போன
இடத்திலிருந்து பணியை தொடர்கிறேன்,
அட,,,,,,,,,,,,,,,போய் திரும்புவதற்குள்
நான் கூட்டிக்கொண்டிருந்த
தரையின் மண் பூத்து மலர்ந்திருந்தது.  

No comments: