9 Feb 2012

யாசகி,,,,,,


                           
      அவள் இறுகப்பற்றிய கையின் தடம் இன்னும் என்னிலிருந்து மறையவில்லை.
     அவள் பிடித்திழுத்த  சட்டையின் கிழிசலை இன்னும் முழுமையாக நான் தைத்து முடிக்கவில்லை. அவள் பிடித்த இடம் இன்னும் வலி குறையாமல்/
    சாலையும்,சாலையில்விரைந்தமனிதர்களும்,வாகனங்களில் பயணித்தவர்களும்,
இரு சக்கர வாகனங்களும் கூடவே சக ஜீவராசிகளும், ஊர்வனவும் பறப்பனவும்
இயற்கையுமாய்/
     சூரியன் வெயில் பரப்ப ,பெய்த பனியின் வேகம் குறைந்திருக்க அள்ளிப்பரவியிருந்த தூசிகளும்,இலைகளும் ரோட்டில் விரிந்திருக்க எனது இருசக்கர வாகனத்தை கடையின்  ஓரம்  நிறுத்தி  விட்டு  அன்பு  மனிதர் பாஸ்கர்  கடையில்  டீ சாப்பிட்டுக்
கொண்டிருந்தேன்,அல்லது டீ சாப்பிடப்போனேன்.
   அடித்த  வெயில்  சாய்வு  காட்டி  கடைக்குள்  நுழைந்து  நின்றிருந்த என்னையும்,
தரையையும்,  தரையின்  இலைகளையும்,  இலைகளினடியிலும்,  இல்லையில்லை
இலைகளுடன் சண்டையிட்டு சற்றே கோபமாக சென்று கொண்டிருந்த எறும்புகளையும்,,,,,,, (இலைகளினடியில் புழு நெளிந்து செல்கிறதாம், இலைகளின்  நிழல் தங்களுக்கே உரியது என உரிமை கொண்டாட வேண்டும் என்பது எறும்புகளின் தணியாத தாகம்,அதுவே  இப்படி அவர்களை கோபித்து ஒதுங்கச்சொல்கிறது அல்லது கூட்டமாய் சேர்ந்து கொடிபிடிக்கச் சொல்கிறது.
     அப்படி கொடி பிடிக்கச் சொல்வதற்கும், போராடுவதற்கும் அதற்கு தலைமை தாங்குவதற்குமாய் அவர்களை ஒழுங்கு செய்து மனோரீதியில் தயார் செய்வது யார்?
   அவர்களது கூட்டத்திற்கு உணவு சேகரிக்க அவர்களின் உறைவிடத்திற்கு எல்லாமும் தலைமையாய்ஒருஎறும்புஇருக்குமாமேஅதுஆண்எறும்பா,பெண்எறும்பாதெரியவில்லை.
    இதில் ஆண் என்ன,பெண் என்ன திறம்பட தலைமை வகிப்பவர் யாரோ அவர் நிர்வகித்துக்கொண்டு போக வேண்டியதுதானே?வீட்டின் சமையலைறையையும்,இன்ன பிற சில வீட்டு நிர்வாகத்தையும்(?/)  பெண்களுக்கென ஒதுக்கி விடுகிற ஆண்கள் உலகம் எங்களது விஷயத்தில் பெண்கள் தலைமையேற்பதை ஏன் மறுதலிக்கிறார்கள்”.) டீக்கடைக்காரரையும் நனைத்த வெயில் ஊடுருவி வந்த தருணத்தின் மென்மை பாய்ந்த பொழுதில்தான் என் கரம் பற்றி இழுத்து யாசகம் கேட்கிறாள் அவள்/
   ஆறடிக்கும் சற்று குறைவாக வளர்ந்து தெரிந்தாள்.மெலிந்து வாடி களைத்த தேகம்.சுருங்கிய நெற்றி.ஒட்டிய கன்னங்கள்.கிழிந்து தொங்கிய புடவை எனத்தெரிந்த அவள் 60 தை தொடுகிற தூரத்தில்/
    நான்,டீ மாஸ்டர்,கையில் ஆவி பறக்கிற டீக்கிளாஸ்,கடை,கடைக்கு  சொந்தமான சேர்,டேபிள் ,சிமிண்ட் பூசப்பட்ட மேடை மற்றும் சிதறி அமர்ந்திருந்த இரண்டு,மூன்று மனிதர்கள்மட்டுமாய்குடிகொண்டிருந்தசூழல் நேரத்தைதள்ளி எம்பிக்கொண்டிருக்க,,,,,
யாசகம்கேட்டுநீட்டியகையில்ஒருரூபாய் போடுகிறேன்.
   வொத்தா,,,,,(வேணாம்,,,,)என்கிறாள்.அந்தஒற்றைநாணயம்தவிர்த்துஎன்னிடம் வேறில்லை.
  என்னசெய்யஇப்போது.வடைஒன்றைவாங்கி நீட்டுகிறேன்.அதற்கும் அதே வொத்தா,,,,, தான்.டீ வாங்கி நீட்டினேன்.அதற்கும் அதே வொத்தா,,,,,,,,தான்.கடைக்காரரைப் பார்த்தேன்.அவரும் அர்த்தமாய் என்னை பார்த்தவாறு கல்லாவிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொடுத்தார்.அதையும் வாங்கி இரண்டு ஒற்றை ரூபாய் நாணயங்களாய் சேர்த்து அவர் நீட்டியிருந்த கையில் போட்டேன்.அப்போதும் அதே பேச்சு.அதேவொத்தா,,,,(வேணாம்)காசைதிரும்பவும்கொடுத்துவிட்டு சொன்னாள்,
    கைகள்  இரண்டையும்  ஆட்டி,  ஆட்டி  பேசியவாறும்,  சப்தமிட்டவாறும்,  சைகை
செய்தவாறுமாய் கடையைச்சுற்றிச்சுற்றிவந்து கொண்டிருந்தாள்.
    வொத்தா,,,,வொத்தா,,,,,வொத்தா,,,,,,(வேணாம்,வேணாம்,வேணாம்,,,,,)என்கிற அவளது ஒவ்வொரு வேணாம்களுக்குப்பின்னாலும் ஒவ்வொவொருமாதிரியான தொனிய அடங்கிய அதிர்வு.
   “அதுஅப்பிடித்தான்சார்.நீங்க மொதல்லயே இல்லைன்னு கைய்ய ஆட்டீர்ந்தீங்கன்னா அதுவாட்ட போயிருக்கும். பைய தடவ ஆரம்பிச்சி பாத்துருச்சின்னா,இப்பிடித்தான் கேட்டுக்கிட்டேஇருக்கும்.  தவுரஒருரூவா,ரெண்டுரூவாயெல்லாம்குடுத்தாவாங்காது.
கைநெறையகுடுத்தாத்தான்வாங்கும்.”எனசொல்லியவாறேகடைக்காரர்அந்த பெண்னை விரட்டினார்.
   “போ அங்கிட்டு,,,,,போ அங்கிட்டு,,,,,ஓடிப்போ,,,,,,”என பேப்பர் கப் அடங்கிய பையை தூக்கி அடிப்பது போல பாவனை செய்தார்.அவளும் அடிக்கி விலகி பம்மியாளாய் பாவனை காட்டினாள்.
   அப்படியெல்லாம் பாவனை காட்டியவாறும்,கடையை சுற்றியவாறுமாய் இருந்த அவளது வீடு கடையிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருந்தது என்றார்கள்.கடை முன் இருந்தவர்கள்.
   “அதெல்லாம் சரி ஏன் அப்படி ஆனாள்?எப்படி அப்படி உருமாறிப்போனாள்.அவளுள் நிகழ்ந்த எது அவளை அப்படி திருப்பிப்போட்டது?”என கடைக்காரரிடம் கேட்டபோது சொன்னார்.
    “எல்லாம் கடன் விவகாரந்தான் சார்,அகலக்கால்தான்.நல்லா பொழச்ச குடும்பம் அது.ஆகோ,ஓகோன்னுஇல்லைன்னாக்கூடஏதோ அவுங்க சத்துக்கு அவுங்கவாட்டுக்கு  தான்உண்டு,தன் பொழப்பு உண்டுன்னு இருந்தாங்க.சொந்தமா வீடு,காடுகரை எல்லாம் இருந்துச்சிசார்.அதுலபாடுபட,வேலை  நேரம்  போக  தீப்பெட்டி ஆபீஸ்,களையெடுப்பு,
கூலிவேலைன்னுஅவுகவாட்டுக்குஅவுகபொழப்பபாத்துட்டுநல்லாத்தான் இருந்தாங்க/
    மொத்தம்நாலுஏக்கர்வயக்காடு,ரெண்டு ஏக்கர் கருசக்காடுன்னு இருந்துச்சி.வழக்கமா நெல்லு,பருத்தி,  குதிரவேலின்னு  எடுத்துக்  கெட்டு  இருந்தவுங்களுக்கு ஒரு ஆசை,
மேக்கொண்டு ஏதாவது செய்யலாம்ன்னு,
    பக்கத்துஊர்பேங்குலலோன்வாங்குனாங்க.விவசாயத்துக்குன்னு சொல்லி/அன்னிக்கு
புடிச்சது சனியன் அவுகளுக்கு.
    இப்ப லோன் வாங்குனவுங்களெல்லாம் நொடிச்சா போயிட்டாங்க.அவுங்க வாங்குன நேரம்,நெலத்துல போட்ட துட்டு ஒண்ணுமில்லாம போச்சு.
    வாழை போடனும்முன்னு  போட்டாங்க.  சொந்தக்  கெணறு  கெடையாது. பக்கத்து
கெணத்துலயிருந்துவாடகைக்குதண்ணிவாங்கித்தான்பாச்சுனாங்க/பண்டுவம்
பாத்தாங்க.
     சும்மாசொல்லக்கூடாது.வாழை,வாழைன்னு எந்நேரமும் அங்கதான் கெடந்தாங்க வீடு முழுசும்.தீப்பெட்டி ஆபீஸ் வேல,கூலி வேல,மத்தமத்ததெல்லாம் பாத்த நேரம் போகஅவுங்களுக்குவாழை தோட்டமே வீடாச்சு,வீடே வாழை தோட்டமாச்சு.எந்நேரமும் அங்கதான் குடியிருந்தாங்க.பொண்டாட்டி,புள்ள குட்டி அம்புட்டும் அங்கதான் அவரையும் சும்மா சொல்லக்கூடாது.உசுரக்குடுத்து ஒழச்சாரு,நல்லா பாடுபட்டாரு.     
     “ஒரு சொலவம் சொல்லுவாங்களே,வாழ வாழவும் வைக்கும் தாழவும் வைக்கு”முன்னு அது மாதிரியாகிப்போச்சு.
     நல்லாதலை எடுத்து வர்ர நேரமா பாத்து விழுந்த நோயில அத்தனையும் போச்சு,பாடுபட்டதுஅத்தனையும்கண்ணு முன்னால போன சோகத்த முழுங்கீட்டுதான் அவுகளும்மீண்டெழுந்துவாரதுக்குமுயற்சி பண்ணாங்க,என்ன செய்ய பாவம்,ரொம்பவும் அவுக வாழ்க்கைய சோதிச்சிருச்சி விதி. கீழ விழுந்தவுங்க கைய ஊணி,கர்ணம் பாஞ்சு உருண்டு,பெரண்டு எந்திரிச்சிட்டாங்க, மேல்ல(மேனியில்)ஒட்டியிருந்த தூசியெல்லாம் தொடச்சி விட்டுட்டு திரும்பிபாக்குறப்ப,,,,,,,,,,,அவுங்க பொழப்புல விழுந்த மண்ணு அம்பாரமா குவுஞ்சி போச்சு,வாங்குன கடன் வட்டியும் மொதலுமா வளந்து நிக்கிது,வளந்த பொண்ணு கல்யாணத்துக்காக காத்து நிக்குறா,நல்லா திங்கிற புள்ளைக ரெண்டும் சொத்துக்கு ஏங்கி நிக்குதுக/போட்ட வெள்ளாம கை குடுக்கல,காடுகள்ல எதுவும் வெளச்சல் இல்ல.தீப்பெட்டி ஆபீஸ் வேல,கூலி வேல எல்லாம் மத்துவமா போச்சு/பொழப்புக்கு வழியில்ல,சாப்பாட்டுக்கு கதியில்ல.நடுத்தெருவுல நிக்குது குடும்பம்.சுத்தி இருந்தவுங்க,சொந்தக்காரங்க எல்லாம் இருந்தும் இல்லாதது மாதிரி ஆகிப்போனாங்க. புருசன் சம்பாதிக்க ஹோட்டல் வேலைக்குப் போயிட்டாரு/ என்னதான் செய்வா பாவம்,ஒத்தை ஆளா? கோழி குஞ்ச அடைகாத்த மாதிரி குடும்பத்த காத்து வந்த ஒரு நாராத்திரி புத்தி பேதலிச்சி ரோட்டுப்பக்கம் தலைய விரிச்சுப்போட்டு ஓட ஆரம்பிச்சதுதான்,இன்னிக்கி எங்க கடையில வந்து ஒரு டம்ளர் டீக்கு நிக்குது”.என சொல்லி முடித்தவரின் வார்த்தைகளில் கனத்த மௌனம்.
     டீ வாங்கிய டம்ளரை இரண்டு கையிலும் சேர்த்து இறுகப்பிடித்தவாறு தூரமாய் சென்று கொண்டிருந்த அவளையும்,கடைக்காரர் சொன்ன வார்த்தைகளையும் உள்வாங்கி சுமந்தவாறு அவளையே  பார்த்துக்கொண்டிருக்கிறேன். 

7 comments:

ஹேமா said...

கதை மனதை நெகிழவைக்கிறது.நம்பிக்கையும் துணிச்சலும் முயற்சியும் இருந்தாலும் சிலசமயம் காலம் புரட்டிப்போட்டுத்தான்விடுகிறது சிலரது வாழ்க்கையை.இதுதான் விதியோ !

கதையின் ஆரம்பத்தில் இலை,புழு,நிழல்,எறும்பு என்னவோ சொன்னது !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்.கதையின் ஆரம்பத்தில் வந்து போன இலை,புழு,எறும்பு நிழல் எல்லாமே ஒரு உருவகமே/

vimalanperali said...

தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக நன்றி ஹேமா மேடம்.

Seeni said...

nanpa!

valiyai urivaakkiya -
anupavam-
nantru!

vivasaayai-
oorukke soru pottu-
thaan pasiyila kidakkiravarkal!

vimalanperali said...

வணக்கம் சீனிசார்,நலம்தானே
?தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாய் நன்றி.
தமிழில் எழுதினால் என்போன்றவர்கள்இன்னும் எளிதாகப் படித்து பயன் பெற்று கொள்வோம்.ந்ன்றி.வணக்கம்.

விச்சு said...

எனக்கு கிடைத்த "versatile Blogger Award " இந்த விருதினை தங்களுக்கு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி.
http://alaiyallasunami.blogspot.in/2012/02/blog-post_17.html

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,எனக்கு விருது வழங்கியதற்கு நன்றி,வாழ்த்துக்கள்.