23 Mar 2012

உயிர்க்கூடு,,,,,,,


                                  
 பெற்று வளர்த்த தாயை கண் முன்னே பிணமாகப் பார்க்கிற சோகம் அவ்வளவு எளிதாக யாருக்கும் வாய்த்துவிடக்கூடாது  என்றே மனமாரவும், வாய்விட்டுமாய் சொல்லத் தோனுகிறது.
 முகம்கோண,வாய்இழுக்க,கண்கள்கலங்க அழுதே விடுகிறான் அவன்.திருமணமாகி இரண்டு  பிள்ளைகளுக்கு  தந்தையான  பின்பும் கூட  அவனுள்ளிருந்த  மென்மனது
அப்படியே குடிகொண்டிருந்தது.
 போலீஸ் உடை தரித்திருந்த முரட்டு உடலினுள் இப்படி ஒரு மென்மை பூத்த மனது  அமர்ந்திருப்பது மிகவும் ஆச்சரியமாகவே.லத்தி முனையில் கசிந்து நிற்கிற கண்ணீர் துளியின் முழு உருவினனாய் அவன் நின்றான்.ஐந்தரை அடி உயரத்தில்/
 தோளில் அவனது இரண்டாவது பையன். அருகில் அவனது முதல் பெண். அலங்கரிக்கப்பட்ட  தேரில்  பூத்திருந்த  பூக்களும்,செண்ட்அடிக்கப்பட்ட வாசனையும்/
 தட்டுஎடுப்பதற்கு,நீர்மாலைக்குஎனநேற்றுஇரவுஅவனதுதாய்இறந்து போனதிலிருந்து அனைத்து வேலைகளுக்கும்,அனைத்துயோசனைகளுக்கும் ஆளாகி அத்தனையையும் தாங்கிசெயல்பட்டதிலும்கல்மனதினனாய்அலைந்தஅவன்சுற்றங்களின் சொல்லுக்கும்,
ஆணைக்கும்அவர்கள்பிறப்பித்தஉத்தரவிற்கும்அவர்களதுஅபிலாஷைக்கும் அலைந்து,
அலைந்து சலித்த மனது இப்போது அவிழ்ந்திருப்பதாய் தோனியது.
    அவிழ்ந்திருப்பதைஅள்ளிமுடியபிரியமில்லாமல்அப்படியேவிட்டுவிட்டு நிற்கிறான்.
கண்களில்பெருகியநீரின்உப்பு முகமிறங்கி  உடல் நனைத்து கீழிறங்கிய போதுஅவனது தாயைதேரில் அமர்த்தி நாடிக்கட்டை சரிசெய்வதிலிருந்து பிற விஷயங்கள் வரை செய்து கொண்டிருந்தார்கள்.
   சிலதப்படிகளுக்கு முன்பாகவே இதெல்லாம் நடந்து கொண்டிருந்த போதிலும் அவனது கண்ணுக்கு அலசலாக காட்சிப்படுகிற அளவுதான் இருந்தது.
    இறந்து போனவர் எனது தூரத்து உறவு (சகோதரி முறை) என்பதை விடவும் அவனுக்கு தாய் என்பதே மிகவும் பொறுத்தமாய் இருக்கும்.
    சிறு வயதிலிருந்து அவனை தோளிலும்,மார்பிலுமாய் அடைகாத்து இந்த38வயது வரைஇந்த சமூகத்தில் ஒரு கௌரவம் மிக்க இடத்தில்  நிற்க வைத்திருக்கிறாள்.
    நேற்று இரவு பத்து மணிக்கு மேலாகத்தான் அவள் இறந்து போன தகவல் தெரிந்தது. அந்நேரம் நான் குடியிருந்த குடியிருப்புப் பகுதியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்திலிருக்கிற  அவர்களது வீட்டிற்கு போகமுடியவில்லை.
   இன்று காலை ஐந்து மணிக்கு எழுந்து ஆறு மணிக்கு அங்கு போய் மாலையுடன் நின்ற கணங்களும்,அதன் பின்பு அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லி விட்டு துக்க வீட்டில் இருந்த கணத்திலும் முழுவதுமாய் என் மனதை ஆக்ரமித்திருந்த உறவுக்காரை எனது சகோதரி என சொல்வதை விடவும் அவனது தாய் என சொல்வதே மிகவும் பொருத்தமாய் இருக்கும்.
   கிட்டத்தட்டஆறுமாதங்களாகவேஉடல்நலமில்லாமல் ஆஸ்பத்திரி,மருத்துவம்,மருந்து வாசனைஎனஇரவு,பகல்,காலை,மாலைஎனஎதுவுமற்றுஆட்டோக்களிலும்,பஸ்களிலுமாய் மருத்துவமனைகளை நோக்கி ஓடிக்கொண்டிருந்த நேரம்.
 எதற்கும் அடைபடாமல்  ஒன்றை விட ஒன்று நல்லது என மருத்துவமனை மாற்றி மருத்துவமனை, மருத்துவர்  மாற்றி  மருத்துவர்  இடையில்  நாட்டு   வைத்தியத்திற்கும்,
மந்திரிக்கிறவர்களுக்குமாய் இல்லை என்று சொல்லாமல் ஒரு தலையசைவு/
 நோய்க்கும் பாதி,பேய்க்கும் பாதி என பசப்பி பூசப்பட்ட நீண்ட சொற்களுடனும் வார்த்தைகளுடனும்,மனசமானத்துடனுமாய்அள்ளி,அள்ளிஇரைத்துப்பார்த்தவைத்தியம்
பலன் தராமலும்,கைகூடாமலும் போனபோது வந்த வருத்தம் பெரியதாகவே இருந்தது அவனில்/
  இந்த ஆறு மாதங்களில் மட்டும் என இல்லை.அதற்கு முன்பாக  இப்படித்தான் மருந்து மாத்திரைகளின் துணையுடனும்,குறையாத சர்க்கரை வியாதியுடனுமாய்  இருந்தாள்.
 வலது கால் பாதத்தினருகே கணுக்கால் முட்டியில் இருந்த எப்போது கட்டுப்போட்ட புண்ணுடமாய் வற்றாத மனவைராக்கியத்துடனுமாய் இத்தனை நாட்கள் ஊயிரைதக்க வைத்துக் கொண்டும், இறுக்கிப் பிடித்துக்
கொண்டும் இந்த குடும்பத்தின் சகலமுமாய் இருந்து,இந்த குடும்பத்தின் பெருமையை அணையாத தீபமாக பத்திரமாய் பொத்தி பாதுகாத்து வைத்து விட்டு பிரிந்து சென்றுவிட்ட தாயை கண்முன்னால் பிணமாகப் பார்க்கிற சோகம் யாருக்கும் எளிதில் வாய்த்துவிடக்கூடாது என மனமாரவும், வாய்விட்டுமாய் சொல்லத் தோணுகிறது.     

6 comments:

விச்சு said...

தாயின் ஸ்பரிசம் இனி கிடைக்காதே என நினைக்கும்போது அழுகை பீறிட்டுவிடும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

சசிகலா said...

கிட்டத்தட்டஆறுமாதங்களாகவேஉடல்நலமில்லாமல் ஆஸ்பத்திரி,மருத்துவம்,மருந்து வாசனைஎனஇரவு,பகல்,காலை,மாலைஎனஎதுவுமற்றுஆட்டோக்களிலும்,பஸ்களிலுமாய் மருத்துவமனைகளை நோக்கி ஓடிக்கொண்டிருந்த நேரம்.
எதற்கும் அடைபடாமல் ஒன்றை விட ஒன்று நல்லது என மருத்துவமனை மாற்றி மருத்துவமனை, மருத்துவர் மாற்றி மருத்துவர். // என் தாயை மரண படுக்கையில் இருந்த போது அனுபவித்த வேதனைகளை சொல்லிப் போகிறது பதிவு .

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்.நலம்தானே?தீண்டுகிற தாயின் ஸ்பரிசம் என்றும் எப்பொழுதும் நம் மனதில் எப்பொழுதும் பச்சையாகவே/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சசிகலாமேடம்.மருந்து மாத்திரைகளைத்தாண்டி இருக்கிற மனிதமகத்துவம் மிகபெரிய சக்தியாக/விஞ்ஞாம, இதனை முன்னேறிய காலத்திலும் இன்னும் கேன்சருக்கு மருந்து இல்லைதானே/நன்றி தங்களது வருகைக்க்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் நடராஜன் சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Anonymous said...

uuiqbgfx apkyuicliu mulberry sale gydohpk http://mulberriesbagsxoutletstore.webeden.co.uk/ jfnnchsh fnkpohnzka timberland boots sale etnmalc http://timblandbootsxoutletstores.webeden.co.uk/