11 May 2012

சுடுமண்,,,,,,,,,,,

                           
   வீட்டு வாசலை விட்டு இறங்கப்போன கீணா,,,,,,,என்கிற கிருஷ்ணமூர்த்தி 1968 ல் பிறந்து அப்புறமான நாட்களில் படித்து  வளர்ந்து பட்டம் பெற்றான் என சொல்லிச் செல்கிறது அவனது வரலாறு.
 சவேரியம்மாள் டீச்சர்தான் இவனது ஐந்தாம் வகுப்பு டீச்சர்.அவரை இவனுக்கு ரொம்பப்பிடிக்கும் அல்லது பிடிக்காது என்கிற நிலையறுத்து நடுநிலையில் இருந்தான்.
  இவன் படித்த கிறிஸ்டியன் பள்ளியில் அவர் ஐந்தாம் வகுப்புப்பாடங்களை மட்டும் நடத்தவில்லை.
 இரண்டு செக்க்ஷன்.அந்த ஆரம்பப்பள்ளியில் ஆச்சரியம்,இரண்டிலுமாய் சேர்த்து 80ற்கும் மேற்பட்ட பிள்ளைகள் படித்தார்கள்.இட வசதியும் கட்டிடமும் இல்லை.இல்லையென்றால் மூன்று பிரிவுகள் வந்திருக்கும் இந்நேரம்.அதனால்அதைசமாளிக்கவேசவேரியம்மாள்டீச்சர்ரெக்கைகட்டிக்கொண்டார். இவன் கூட நினைப்பதுண்டு.
 வகுப்புகள் சுற்றியிருக்க நடுவில் இருக்கும் சர்ச் சும்மாதானே இருக்கிறது.ஞாயிற்று கிழமை பிரேயர் கூட்டங்களும், அவ்வப்பொழுது நடக்கும் திருமணங்களை தவிர வேறொன்றுமில்லை பெரிதாக/
  உள்ளே சுவர்களும் கட்டிடங்களும் தாங்கியிருந்த சிலுவைகளும்,யேசுவின் உருவச்சிலையும் காட்சிப்பட்டு தெரிந்தது.
 ஒரே நேரத்தில் நூறு பேருக்கு மேல் உள்ளே இருக்கலாம் என்கிற அளவிற்கு இட வசதியுள்ள கட்டிடம். யாராவது இறந்து விட்டால் இங்கு வைத்து ஜெபம் செய்தும்,ஜெபித்த பின்பும்தான் இடுகாட்டுக்கு கொண்டு செல்கிறார்கள்.
  பள்ளி நாட்களின் நகர்வில் ஒரு நல்ல புதன்கிழமை மதியம் கண்டான் இது மாதிரி காட்சிகளை,அவ்வளவுதான் எங்கு பாடம் படிக்க?வேறு பக்கம் கவனம் திசை திரும்பிவிட அன்று மதியத்திற்கு மேல் பாடம் படிக்கவில்லை.வீட்டுப்பாடம் எழுதவில்லை.மறுநாள் சவேரியம்மாள் டீச்சரிடம் அடி வாங்கியதுதான் மிச்சம்.
 இரண்டு கையிலும் உள்ளங்கை கண்ணிப்போனது.அன்று மாலை P.T பீரியடில் ஜின்னாவுக்கு அடிபட்டது.விளையாட வந்தவன் சும்மா விளையாடி விட்டு போக வேண்டியதுதானே?
 அது அல்லாமல் சர்ச்சின் பின்புறமாய் ஊன்றப்பட்டிருந்த கம்பில் ஏறியிருக்கிறான். சேட்டை பிடித்தவன் கையையும் காலையும் வைத்துக்கொண்டு சும்மா இருக்க இருக்கமாட்டான்.
  ஏறும்போது ஏறி விட்டான்.அது இருக்கும் பத்தடி உயரத்திற்கு.இறங்கும் போது கம்பின் ஒரு ஓரமாக மடக்கி விடப்பட்டிருந்த ஆணி அவனது முன்பக்கமாய் இழுத்துவிட்டு விட பாதிக்கக்கம்பத்திலிருந்து அப்படியே இறங்கியவனாய்  தரையில் அமர்ந்து விட்டான் வலிதாங்காமல்/
  அவன் அப்படி சோர்ந்தமர்ந்து இவன் பார்த்தில்லை.கைதாங்கலாக காலைக்காலை இழுத்தவாறு வந்த ஜின்னாவை பாத்ரூமிற்குள் கொண்டு போய் பார்த்தால் ஒண்ணுக்கிறுக்கிற இடத்தில் ஆணி கீறி ரத்தம் வந்து கொண்டிருந்தது.
  ப்யூன்சத்தம் போட்டார்.வாத்தியார்களை அழைத்து வருவதாகப்போனவர் யாருமில்லை என சவேரியம்மாள் டீச்சரை அழைத்து வந்தார்.வெக்கப்பட்ட ஜின்னாவை “அடக்கிறுக்கா நான் ஒங்க அம்மா மாதிரிடா” என ஒரு கிளாஸ் ரூமிற்குள் அழைத்துப்போய் டவுசர் கழட்டிப்பார்த்து ரிக்க்ஷாவை வரச்சொல்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போயிருக்கிறார்.
 சவேரியம்மாளுக்கு பிள்ளைகள் இல்லாத காரணத்தினாலேயோ என்னவோ பிள்ளைகளிடம் பிரியமாக இருப்பார்.இதில் தன்னிடம் படிக்கிற பிள்ளைகளிடம் தனி அக்கறை.
 டீச்சரின் கணவன் டீச்சரை விட்டுபோய் இரண்டு வருடங்கள் இருக்கும் என்றார்கள்.டீச்சருக்கும் அவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும்.அவர் மலையென்றால் டீச்சர் மடு.டீச்சர் மலையென்றால் அவர் மடுவாக பலசமயங்களில்.
 டீச்சர் ரொம்பவே சிம்பிளாக பெஸ்டாக தெரிவார்.அவர் பெஸ்ட் என நினைத்துக் கொண்டு படோடோபமாக காட்சிப்பட்டுக்கொண்டு.
  ஒரு காட்டன் சேலை,தளையக்கட்டிய முடி.முகத்தில் லேசாக பவுடர் தீற்றல்,இதுவே டீச்சரின்  வெளிப்பாடாக  இருக்கும்.அவரது கணவர் லாண்டிரி வெள்ளையிலிருந்து செண்ட்வரை எப்போதும் படோடோபமாகவே/
  பிள்ளைகள் இல்லை என்கிற காரணமே அவரது கணவர் டீச்சரை விட்டு பிரிந்து போக காரணமாய் இருந்து இருக்கிறது.சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நாள் எங்கோ கண் காணாமல் போய் விட்டார் என்றார்கள்.
  இரண்டு வருடங்கள் ஆகிறது அவர் போய் எங்கிருக்கிறார் என இதுவரை தெரியவில்ல்லை எனவும்,அங்கிருக்கிறார்,இங்கிருக்கிறார் எனவுமாய் அரசல் புரசலாக பேசிக்கொள்ளவும் செய்கிறார்கள்.
 எது எப்படியிருப்பினும் டீச்சர் முன்பைவிட கூடுதல் தைரியமாகவே இருந்தார்.டீச்சரின் வீடு பள்ளியிலிருந்து கூப்பிடு தூரத்திலேயே இருந்தது.
  இவன் டீயூசன் படிக்கப்போயிருந்த இரண்டாவது நாள் டீச்சருக்கு தேள் கொட்டிவிட்டது.
 ஆஸ்பத்திரிக்கு போயிருப்பதாக சொன்னாள் டீச்சரின் பக்கத்து  வீட்டுக்காரி.அந்த வீட்டிலேயே வளர்ந்து தெரிந்த மனோநிலை சரியில்லாத ஒரு பெண் பிள்ளை இருந்தாள்.
 அவள் மீது டீச்சருக்கு தனிப்பிரியம் உண்டு. அவளை கவனிப்பதிலே தனது பெரும்பாலன நேரங்களை செலவழித்திருக்கிறார் டீச்சர்.அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்செல்ல,சர்ச்சுக்கு கூட்டிச்செல்ல ,சொந்தக்காரர்களது வீடுகளுக்கு கூட்டிசெல்ல,சினிமாவுக்கு ,,,,,,,, என இருப்பாள்.
 தன்னால் முடிந்த அளவு அவளை ஒரு படியாவது குணப்படுத்தி விட முடியுமா என்பதில்முனைப்பாகஇருந்தார்.அதற்குஅந்தபெண்ணும்  ஒத்துழைத்தாள்.
  ட்யூசனுக்குப்போகும் போது சிரிப்பாள்.ட்யூசன் முடிந்து போகும்போது பீட்டாப்பா,,,,,,,,,,(போய்ட்டுவாப்பா,,,,,,,,)என்பாள்.
  அப்படியான பீட்டாப்பாக்களும்,சிரிப்பும் டீச்சர் நடத்தும் பாடத்தை தாண்டி இடைஞ்சல் செய்த நாட்கள் பல உண்டு.
அந்தமாதிரியானநாட்களைதாண்டிஉந்திஉதறி வேறோன்றில்,வேறொன்றில் என அடியெடுத்து வைத்து வந்து விட்ட பின்பும் கூட பீட்டாப்பா சொன்னவளையும்,டீச்சரையும்  மறக்க முடியவில்லை.
சாம்பல்கலர்பேண்டும்,மெரூன் கலர் சட்டையும் அணிந்திருந்தான்.இப்போது மாதிரி உடம்பை பிடித்த மாதிரி இருக்கமாக இல்லாமல் நல்ல லூசாக இருந்தது.அவனது உடலுக்கு ஏற்ற மாதிரியாகவே/
  கறுப்புக்கலர் பேண்ட்,வெள்ளைக்கலர் சட்டை,வெள்ளைக்கலர் பேண்ட் என்றால் அடர்கலரில் சட்டை இதுதான் அவனது ஆடையில் வாடிக்கை.
 இதுதவிர அவன் வைத்துள்ள டீசர்ட் மூன்றை அணிகிறபோதும் இதைதான் கடைபிடிக்கிறான்.
 மனைவியிடம் சொல்லிவிட்டு வாசல் படியில் இறங்குகிறான்.ஒன்று இரண்டு மூன்று என வரிசையாக ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்கபட்டிருந்த வாசல்படியின் மடிப்பு முனைகளிலிருந்த இரண்டு கோடுகளில் தங்கியிருந்த ஈரமும் சேர்ந்திருந்த அழுக்கும் அவனது கவனம் ஈர்த்ததாகவே/
 இரண்டாவது படியின் நடுவில் ஊர்ந்து சென்ற எறும்பு தன் உடலை இழுத்து கோடு கிழித்துக்கொண்டு சென்றது.எறும்பே ,எறும்பே எங்கு போகிறாய் நீ?யாரை சந்திக்க இவ்வளவு அவசரம் ஏன்?என அவன் மனதில் நினைத்த வேகத்தில் பதில் வருகிறது.எறும்பிடமிருந்து/
 “அட சும்மாயிருங்க சார்.நானே உணவு சேகரிக்க முடியலைன்னு வருத்தமா இருக்கேன்.அடிச்சு பெய்த மழையில கட்டி வச்சிருந்த இத்துணூண்டு புத்தும் நனைஞ்சு கரைஞ்சு எங்கள சேந்தவுங்களும்,நாங்க சேமிச்சு வச்சதும் ஜலசமாதி ஆயிப்போச்சு.எப்பிடியோஉயிர் தப்பி ஒத்தை ஆளா இப்ப வந்துக்கிடிருக்கேன்,என்ன செய்யட்டும் நான்.எங்களுக்குன்னு ஒரு பாதுகாப்பு,உயிர் காக்கும் திட்டம் அது இதுன்னு ஏதாவது இருக்கான்னா எதுவும்  கெடையாது.அப்புறம் இப்படித்தான் நாதியத்து தெருவுல திரியவேண்டியிருக்கு.”
  “மனுசங்கள்லயும் இப்படித்தான் போலிருக்கு நெலம.இல்லாதவுக.எப்பவுமே பொல்லதவுகளாதான் இந்த மனுசக்கூட்டத்துல பட்டுதெரியிவாங்க போல இருக்கு.
  இதுல நீங்க என்னைய கேள்வி கேட்டுடீங்க சரி பரவாயில்ல,வுடுங்க,நீங்க ஒங்க வேலைய பாக்க கெளம்புங்க,நான் ஏங் வேலய பாக்க கெளம்புறேன்.என சொல்லி விட்டு நகன்ற எறும்பை பார்த்தவாறே படியிறங்கிய கீணா,,,,,,,/
  ஈரம் பூத்து சகதியாய் இருந்த தெரு தன் அடையாளம் காட்டியும் வாசனை விரித்துமாய்/
  “இந்த ஈரத்திற்கும்,சகதிக்கும் இந்த உடை ஏற்றதல்ல” “சும்மா பஜாருக்கு போகத்தான?,முந்தாநாள் போட்ட பேண்டையும் ஏதாவது ஒண்ணரையணா டீசர்ட்டையும் போட்டுகொண்டு போங்க/”
 நேற்றைக்கு முன் தினம் மனைவிசொன்னது ஞாபகம் வந்தது.அது சொன்னதா அல்லது வைததா தெரியவில்லை.சொல்கிற சாக்கில் வையவும்,வைகிற சாக்கில் சொல்லவுமாய் இருக்கிற கலை அவர்களுக்கு திருமணமான சிறிது நாட்களிலேயே வாய்க்கப்பெற்று விடுகிறது.
 இளஞ்சிவப்பு நிற சேலையும் அதற்கேற்ற கலரில் சட்டையும் அணிந்திருந்த அவள் தலையில் பூவைத்தும்,நெற்றிக்கு பொட்டிட்டும் இறுக்கமாய் படிய வாரியுமாய் பிண்ணியிருந்தாள்.
  டவுனுக்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் கூட எண்ணை நிறைந்து படிய வாரிய தலை,கீழிழுத்து தொங்குகிற ஒற்றை ஜடை உச்சியில் ஏற்றி சொருகியிருக்கிறமல்லிகைப்பூ,எந்நேரம்கழண்டு ஓடிவிடுமோ என்கிற ஜாக்கிரதையுடன் இறுகச் சுற்றியிருக்கிற புடவை எனஇன்னும் கிராமத்தின் பால்ய நாட்கள் அவளிடமிருந்து நகர மறுத்து அவளை அடையாளம் காட்டிச்சென்றபடி/    
 “இப்பிடி ஓயாம தொவச்சத தூக்கி மாட்டிக்கிட்டுப்போயிட்டிங்கின்னா எத்தன தடவைதான் தொவைக்கிறது,எத்தன தடவதான் தேய்க்கிறது?இங்க என்ன வாசிங்மிசினா இருக்கு?புள்ளைங்க துணிகள வுட ஒங்க துணிகதான் அதிகமா அழுக்கு விழுகுது.ஆமாம்/”
வாசிங்கமிசின்ஒன்றுவேண்டும்என்கிறஅவளதுவருத்தமும் ஞாயமானதுதான்.
வேலைக்கு சென்று20வருடங்கள் கழித்துதான் ஒரு X L சூப்பர் சாட்தியப்பட்டது.
21ம் வருடத்தின் முடிவில் ஒரு சாம்சங் கலர் டீவி வீட்டின் மைய ஹாலை அலங்கரித்தது.28ம்  வருடத்தில்  வீட்டின்  உள்ளறையில்  நின்ற  குளிர்  சாதனப்
பெட்டியின்தவணை இன்னும் பாக்கியிருக்கிறது.
  இப்படி கைக்கும் வாய்க்குமாய் இடிக்கிற வாழ்க்கையில் வாஷிங் மிஷின் நீண்ட நாள் கனவாகவே.பார்க்கலாம் அந்த கனவும் சீக்கிரம் ஒரு நாள் கை கூடி வந்து விடலாம்.பை சீ யூ/
 மனைவியிடம் சொல்லி விட்டு இருசக்கர வாகனத்தை எடுத்து கிளம்புகையில் எதிர்பட்ட கடைசி வீட்டுப்பாட்டிசொல்கிறாள்.
  “செத்த நேரம் படியில ஒக்காந்துட்டு  போயிக்கிறேன்.கடைக்கு நடந்து போயிட்டு வந்ததுஒருவடியாவருது.அதான் இப்படியே செத்தவோடம் ஒக்காந்து போயிக்கிறேன்” என்கிறாள்.
   வீட்டினுள் இருந்த சின்ன மகளை அழைத்து பாட்டிக்கு குடிக்கதண்ணீர் தருமாறு கூறி விட்டு கிளம்புகிறான்.
   தெருவின் இரண்டு பக்கமும் நட்டு வைக்கப்பட்டிருந்த சிறியதும் ,பெரியதுமான வீடுகளில் தெரு முனை திருப்பத்திலிருந்த வலது புற கடைசி வீடுதான் பாட்டியின் வீடு.
  கீழே உரிமையாளரின் வீடு.மேலே அவர்களது வீடு.தடுக்கப்பட்டிருந்த காம்பவுண்டு சுவரில் வலதுபுறம் படியேறிச்சென்றால் பாட்டி குடியிருக்கிற வீடு.800  ரூபாய் வாடகை.
மேலேயிருப்பதனால்கொஞ்சம்கம்மி.தண்ணீபுழக்கம்தாராளம் எனலாம்.
தாயும்,மகளும்,மகனுமாய் அடங்கிய குடும்பத்திற்கு அது போதுமானதாய் இருந்தது.
 போன வாரம்தான் அவளது பெண்ணுக்கு பூ வைத்து போனதாய் சொன்னார்கள்இரண்டுமாதம்கழித்துதிருமணம் வைத்திருப்பதாகச்
சொன்னாள் பாட்டி.
  சிறிய அளவில் நெருங்கிய சொந்தங்களுக்கு  மட்டும்  சொல்லி வைத்து நடந்த  நிச்சயம்.மாப்பிள்ளை ஏதோ ஒர் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.கை நிறைய இல்லாவிட்டாலும் வாழ்க்கை நடத்துகிற அளவிற்கு போதுமான வருமானத்தில் வேலை செய்கிறார்.நிச்சயம் பண்ணிவிட்டார்கள்.
அன்று ஒரு நாள் மட்டும்தான் கொண்டாட்ட மனோநிலையில் பார்த்திருக்கிறான் அந்த வீட்டை/
 தெருமுனை திரும்பி,வலதுபுறம் வளைந்து முத்தால்நகரில் விழுந்து மெயின் ரோட்டை அடைந்து போஸ்ட் ஆபீஸ்,கௌவர்மெண்ட் ஆஸ்பத்திரி வழியே பஜாருக்கு சென்றான் கீணா என்கிற கிருஷ்ணமூர்த்தி.
  தோழர் முத்துக்குமார் பார்க்க வேண்டும் என்றார்.அவரைப்போய் பார்த்து விட்டு வருகிற வழியில் நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு  தம்பியையும் பார்க்க போக வேண்டும்.
   இவர்கள் எல்லோரயும் பறந்து,பறந்து பார்க்கப்போகிற மனதுக்கு இங்கிருந்து ஐந்தாவது கிலோ மீட்டரில் இருக்கிற தாயைப் பார்க்கிற மனோநிலைவர மாட்டேன்என்கிறதேஎன்கிறமனோநிலையுடன் பயணித்துக் கொண்டிருந்தான். 

13 comments:

Unknown said...

இயல்பான நடையில் கதை !

சிறப்பு!

புலவர் சா இராமாநுசம்

விச்சு said...

சார் நல்லாயிருக்கு எழுத்து நடை. தாயைப் பார்க்ககூட நேரமில்லை. உடையினைக் கூட அழகாக வர்ணித்துள்ளீர்கள்.

vimalanperali said...

வணக்கம் புலவர் ராமானுசம் சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

rajamelaiyur said...

அருமையான எழுத்து நடை ...

rajamelaiyur said...

இன்று


யார் தெய்வம் ?

vimalanperali said...

வணக்கம் ராஜபாட்டை ராஜா சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாய்.

வேல்முருகன் said...

உடனுக்குடன் பதிவு அதுவும் சிறப்பான பதிவுகள் என உங்களது சுறுசுறுப்பு ஆச்சரியமாக உள்ளது.

vimalanperali said...

வணக்கம் வேல் முருகன் சார்,
நலம்தானே?ஆச்சரியங்களை ஏற்படுத்துவதற்காக அல்ல,படைப்புகளை படைப்போம் என்கிற உந்துதலே அதற்கு காரணம் என நினைக்கிறேன்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

ஹேமா said...

அசந்துபோகிறேன்.எத்தனை இயல்பான கதை.சொல்லும் விதமும்
அப்படித்தான் !

ராஜி said...

எளிய நடையில் அற்புதமான கதை. பகிர்சுக்கு நன்றி

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்.நன்றி தங்கலது வருகைக்கும்,கருத்துரைக்கும்/

vimalanperali said...

வணக்கம் ராஜீ அவர்களே,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/