13 Nov 2012

கைகாட்டி,,,,,,


                 
ரயில்வே கேட்டின் அடைப்புக்காய் நின்றிருந்த வேளை உடன் வந்து நின்ற இருசக்கர
வாகனங்களும்,பஸ்களும்,லாரிகளும்,ஆட்டோக்களும்,மற்றும்பிறவாகனங்களுமாய் சாலையில் வால் பிடித்து நின்று நீண்டதாய்/

நான் வந்த பின்பாய் அந்த வாகனங்கள் வந்ததாஅல்லது வாகனங்கள் வந்த பின்பாய் நான் வந்தேனாஎன்பது தெரிந்திருக்கவில்லை.

மனிதர்கள்,மனிதர்கள்,மனிதர்கள்,,,,,,,,,,,ஆண்களாய்,பெண்களாய்,குழந்தைகளாய் மற்றும் பெரிவர்களாய் வெளிப்பட்டுத் தெரிந்தார்கள்.

வெள்லைக்கலர்பேண்ட், மெரூன் கலர்ச்சட்டை, என எனதருகாமையாக ஸ்டாண்ட் போடாமல் நிறுத்தியிறுந்தஇருசக்கர வாகனத்தில் ஹெல்மெட்டைக் கழட்டாமல்ஸ்டைலாக(?/) அமர்ந்து கொண்டிருக்கிறவரின்அருகிலேயே வண்டியை நிறுத்தி விட்டு கைகட்டி நின்றிருந்தவரையும் பார்க்க முடிந்தது.

சைக்கிள் பெடலில் இடது காலை வைத்தவராய் நின்றிருந்தவரின் பார்வை அவசரமாய் அலைபாய்வதாக/

கைலியை டப்பாக்கட்டு கட்டிக் கொண்டு தள்ளுவண்டியில் மூட்டைகளைஅடுக்கியிருந்தவர் வண்டி நகர்ந்து விடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வுடன்/

கலர் விளக்கு சுழன்று கொண்டிருக்க சைரன் ஒலியை தவிர்த்த ஆம்புலன்ஸினுள் கிடத்தப்
பட்டிருந்த ஒருஉயிர் குளுக்கோஸ் பாட்டில் ஏற்றப்பட்டுக்கொண்டு/

மூடப்பட்டிருக்கிற கேட்  எந்நேரம் திறக்குமோ என்கிற கேள்விக்குறியுடனும், பேச்சுடனுமாய்
உடன் வந்தவளுடன் கேட்டின்ஓரத்து வழியாய் கடக்கிற கர்ப்பிணித்தாய்.

வெப்பமும்,கசகசப்பும் தாளாமல் வாயால் காற்றை ஊதிக்கொண்டு உடலை ஆற்றுப்படுத்து
கிறவர்கள் என நிறைந்தவர்களை பார்த்தவாறு பின்னால் திரும்பிப்பார்க்கிறேன்.

கிட்டத்தட்ட ஐம்பதடி தூரத்திற்கும் மேலாக வாகனங்கள் நின்று கொண்டிருந்தது.அது சுமந்திருந்தவர்களையும்,அதுதாங்கி நின்றவர்களையும் காட்டி/

ஐந்து,பத்து,பதினைந்து என கடந்த நிமிடங்கள் கரைந்து காற்றில் கலந்ததே தவிர அடைக்கப்பட்டிருகிற கேட் திறக்கிற வழியைக் காணோம்.ரயிலையும் காணோம்.

ரயில்வருவதெப்போ,கேட்திறப்பதெப்போ?,,,,,,என்கிற எண்னமும் அவசரமும் மனதை அழுத்த 
நின்று கொண்டிருந்தவர்களுக்கும்,வாகனங்களுக்கும் வேர்விட்டு போகுமோ,இந்த அழுக்கும்
தூசியும் மண்ணும் படர்ந்த மேடும் பள்ளமுமான சாலையில்?என்கிற நினைப்பு மனம் படர
நின்றிருந்தவேளையில்சரக்குரயில்ஒன்றுகடந்து போகிறது.“ஹீம்,,,சரக்குரயிலா,,,?”என்கிற
சலிப்பு மேலிடுகிறது காத்திருந்தவர்களின் முகங்களில்/

அதென்னவோ தெரியவில்லை,பயணிகள் ரயில் வர காத்திருப்பவர்கள்,சரக்கு ரயிலைக் கண்டதும் சலிப்புருவது ஒரு முரணாகவே/

இப்படியானமுரண்களுடன் நகன்று கொண்டிருக்கிற வாழ்க்கையில் மனிதர்களும்,
வாகனங்களும், அடைபட்டுக்  கொண்டிருக்கிற  ரயில்வேகேட்  திறந்ததும்  பாதையை
கடக்கிறவர்களாய்.

“அடைபட்டு கிடக்கிற சாலைகள்திறக்கட்டும் தாராளமாய்” என்கிற நினைப்புடன் நானும் அவர்களுடன் சேர்ந்து கிளம்புகிறவனாய்/ 

No comments: