13 Nov 2012

கலர்ப்பூ,,,,,1


இரவு மணி 11 ஆகிப்போகிறது. 
அமைதி குடிகொண்டதாயும் 
ஆள் அரவமற்றதாயும் வீதி/ 
உடுத்திய புத்தாடையை 
களைந்துவிட்ட திருப்தியுடனும், 
பலகாரங்கள் உண்டு 
செரித்த களைப்புடனும், 
வேட்டு வெடித்துக்கொண்டாடிய 
சந்தோசத்துடனுமாய் 
தூங்கிப்போன வீதியில் 
வெடித்துச்சிதறியிருந்த

வெடியின் துகள்களும்,சிதறல்களும், 
கூடவே வேட்டு வெடித்தவர்களது சந்தோஷமும்/

4 comments:

மகேந்திரன் said...

அடுத்தடுத்து வரும்
என்ற நம்பிக்கையுடன்
இந்த ஆண்டு விழாவை
முடித்த திருப்தியும்....

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாடா... ஒரு நாள் கூத்து முடிந்து விட்டது...

vimalanperali said...

வணக்கம் மகேந்திரன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/