13 Jan 2013

அளவுகோல்,,,,,,,,,


பையிலிருந்து உருண்டு தரை

தொட்டவடை பாய் கடையில் வாங்கியதாய்/

வடையை சுட்டவர் தியாகராஜன் மாஸ்டராயும்

மாவாட்டியவர் ரோஸியக்காவுமாக/

பெரியசாமி கடையில் வாங்கிய

கடலை எண்ணெயும்,

அம்மா கடையில் வாங்கிய வெங்காயமும்,

கருவேப்பிலையும்,மிளகாயும்

பஜாரில் வாங்கிய அரிசியும்,பருப்பும்

சம அளவில் கலந்து அரைத்தெடுத்து

சுட்டவைகளை வாங்குபவர் கையும்,

விற்பவர் மனதும் நூழிலையில் 

வித்தியாசப்படுவதாகவே உணர்கிறேன்.

No comments: