3 Feb 2013

அடுப்புக்கல்,,,,,


GIF
                         
வந்து விடுகிற பின் மாலை அல்லது முன் மாலைபொழுதுகள்பசியாய்மாறிஉருவெடுக்கையில் கொண்டு போகாத சாப்பாட்டிற்கு மாற்றாய் மாரிக்கண்ணு கடை  திகழ்கிறது.சமயத்தில் ஆபத்பாந்தவனாயும் கூட/

ஒரு மனிதன்,ஒற்றை அடுப்பு ,ஒற்றை புரோட்டாக்கல்,,,,,,,, இதுவே அவரது கடையின் தோற்றமும்,பதிவும்/செம்மண் வைத்து பூசப்பட்டிருந்த அடுப்பு,அதன் மேல் வெந்து கொண்டிருக்கிற புரோட்டாக்கல், எரிந்து  கொண்டிருக்கிறஅடுப்புஅதன்முன் கட்டம் போட்ட  கைலியும்,பனியனுமாய் மாரிக்கண்ணு.

நீண்டு செல்கிற சாலை தன் பதிவாய் கண்மாய்க்கரையின் மேட்டில் அவரது கடையை விதைத்து விட்டோ,ஊன்றி விட்டோ சென்று விட்டது போலும்.

அவரது கடையை கடந்தால் இன்னொரு கடையும் உண்டு .அவரது கடையின் எதிர் பக்கமாய் இருந்தது அது. ஆனால் அதில் சென்று சாப்பிடுவது என்பதெல்லாம் ஆசைப் பட்டாலும் எங்களால் இயலாத காரியமாகவே.பழக்கம்தான் அதற்குமுக்கிய காரணமாய்/ அப்படி எங்களில் யாராவது கடையை அவரது கடைதாண்டிச்சென்றுடீசாப்பிட சென்று விட்டால் மறு நாட்களில் அவரதுவெளிப்படையானபுலம்பலும்ஆற்றாமையும் வெளிப்பட  ஆரம்பிக்கும் ஆதங்கமான பேச்சாக/

“நம்மளும் நல்லா ஷோபண்ணிகடைவச்சிருந்தாஇங்க சாப்பிடவருவாங்க,நாம இப்பிடி ஓட்டக் கடை  வச்சிருக்குறதால நம்ம கிட்ட  சாப்பிட  வரமாட்டேங்குறாங்க  என்பார்.  

அவரது பேச்சு அப்படி வெளிவந்த நாளன்றிலிருந்து மறுநாள் முதல் வேறு கடையை நினைத்துப்பார்க்கிற மனதைரியம் எங்களுள் எட்டிப் பார்த்ததில்லை.நீண்ட நாட்களாய்  எங்களது அலுவலகத்திற்கு டீக்கொடுப்பவர்.அன்பும் வாஞ்சையும் கொண்ட மனிதர். அது இருந்தால் மட்டும்வியாபாரத்திற்குபோதாதுஎன்பதுஅவருக்குஏனோ புரிவதில்லை. அல்லது எங்களுக்கு அதை சொல்லுமளவு தைரியமும் இல்லை.அதனால்அவரது குறை அவருக்கு தெரியவில்லை என்பதில்லை. அவ்வளவுதான்  அவருக்கு என பேசிக் கொள்வார்கள்.

மதியப் பொழுதுகளில்  12 மணி டீ அவரது கடையிலிருந்து வருவதுதான் வருவார், “சார் டீ,” என்கிற ஒற்றைச்சொல்லை தாங்கி நீள்கிற கரத்துடன் டீயை தந்து விட்டுப்போய் விடுவார்.

அப்படியொரு பிளாஸ்டிக் டம்ளர் அவருக்கு எப்படி கிடைக்கும்என்பது ஆச்சரியத்திலும்  ஆச்சரியமாகவே/ மிக மெலிதாகவும் ரொம்பவும் சின்னதாயும் இருக்கும் டம்ளரைப் பிடித்துத்  தூக்க முதலில் ஒரு இரண்டு நாட்களாவது பயிற்சி எடுக்க வேண்டும். பயிற்சியாவது  வெளிப்படையாகஎடுத்துக்கொள்ளலாம்அவர்கொண்டு வருகிற டீயைக்குடிக்கிற தைரியத்தை வரவழைக்க எங்கு போய் பயிற்சிஎடுப்பதெனதெரியவில்லை.விசாரித்துக்கொண்டிருக்கிறேன், தெரிந்தவர்கள் சொல்வார்கள் என.சொல்லட்டும் அதுவரை காத்தி ருக்கலாம்  பொறுமையாக என்பதே இங்கு சொல்லப்பட வேண்டியதாக/

அப்படியெல்லாம் விறகுகள் அவருக்கு எப்படி கிடைக்கும் எனத்தெரியவில்லை.எல்லாம் வேர் முடிச்சுவிழுந்தவைகள்.சீமைக்கருவேலந்தூர்கள்.முண்டும்முடிச்சுமாக/அவைகளில்  
சிலவற்றில்  மனித முகம் பார்க்கலாம்.சில சமயங்களில் வேறொருன்றும் உருப்பட்டுத்தெரியும்.

அவர் பிசைகிற புரோட்டா மாவு அந்த ஊரையும் தாண்டி பக்கத்துஊருக்கும் சரியாகிப் போகும் போலும். அப்படி ஒரு பிசைவு.பெரிய,பெரிய கடைகளில் கூட இப்படி மாவு பிசைந்து நான் பார்த்ததில்லை.விட்டால்இருபத்திநான்குமணிநேரமும்மாவைபிசைந்து கொண்டிருப்பார் போலும்கடையினுள்ளே நீண்டு விரித்து போடப்பட்டிருக்கிற கடப்பக்கல்  பதித்த மேஜைகள் இரண்டுடானாப்படகாட்சியளிக்கஅதன்முன்பிளாஸ்டிக்ஸ்டூல்கள்கலர்களில் அமர்ந்திருக்கும். கடைக்கு வெளியே ஒருபிளாஸ்டிக் வாளியில் வைக்கப்பட்டு  இருக்கிறநீரில் கை கழுவிக் கொள்ளலாம்,பிளாஸ்டிக்வாளிகூடஇல்லைஅது. லாரிகளுக்கு  ஊற்றுகிற எஞ்சின் ஆயில்  டப்பா அது.அதில் பாதி அல்லது பாதிக்கும் குறைவாக நிரம்பி இருக்கிறதண்ணீரில் மஞ்சள்க்கலரில்ஒருபிளாச்டிக்டம்ளர்தண்ணீரில்மிதந்துகொண்டேகண்சிமிட்டும்.அதில் ஒட்டி  இருக்கிற அழுக்கை சகித்துக்கொள்ள தனி மனம் வேணும். அதில் மிதக்கிற இலைகளைக் கூடதள்ளிவிட்டுவிட்டுகைகழுவிக்கொள்ளலாம்.ஆனால்  தண்ணீரில் மிதக்கிற அழுக்கையும்  வாளியின் அழுக்கையும் சகித்துகொள்ள  ஒரு தனி மனம் வேணும்.அது  அங்கு சாப்பிட வருகிற எத்தனை பேரிடம் இருக்கிறது எனத் தெரியவில்லை.

மாரிக்கண்ணுவிடம் கேட்டால்  “கடையின் கூரைக்கு மேல் இருக்கிற மரங்கள் இரண்டு உதிர்ப்பவைதான்,இவைகளை நான்எவ்வளவுகூட்டிப்பார்த்தபோதிலும் திரும்பத்திரும்ப  வந்து விடுகிறது என்ன செய்ய” என்கிறார். “இது பரவாயில்லை,சாப்புட்டு இருக்கும் போது யெலையில வந்து விழுந்துருது சார் ,என்ன செய்ய ,,,,,சொல்லுங்க” என்கிற மாரிக்கண்ணு புரோட்டாக்கடை மட்டுமில்லாமல் டீக்கடை,கோழிக்கறிக்கடை என எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறார்.

”பின்ன ஒடம்புல தெம்பு இருக்கும்போது நாலுகாசுபாத்துக்கிட்டாதான்சார்.30 வயசாகப் போகுது எனக்கு. ரெண்டு பொம்பளப் புள்ளைங்க நிக்குது.இப்பத்தான் ஒருத்தி ஒண்ணாப்பு போயிருக்கா,இன்னொன்னுக்குரெண்டுவயசாகுது.அதுகளுக்காகத்தான்சார்இத்தனையும்.  என்னதான் மூச்சப்புடிச்சி கட்டி இழுத்துப்பாத்தாலும் சமயத்துல கயிரு அந்து போகுது சார்.முன்ன மாரி இல்ல சார் யேவாரம். அந்தா அந்த எதிர்க்கடை வந்ததுலயிருந்து  நமக்குக் கொஞ்சம்யேவாரம்டல்லாயிருச்சி.போதாதுக்குபக்கத்துலயேவெனைய வச்சிருக்கேன் “.என பக்கத்து வீட்டுக்கார்ரை கைகாட்டுகிறார்.

அவர்பழையஇரும்பு வியாபாரி.பெயர்தான் பழைய இரும்பு வியாபாரம்.பழைய பேப்பர், அட்டைப் பெட்டி,பைகள்,இத்துப்போனசைக்கிள்,பழையமோட்டாரின்உதிரிப்பாகங்கள்,சாக்குகள், இத்துடன்பழையஇரும்பையும்சேர்த்துக்கொள்கிறார்இங்கிருந்து20கிலோமீட்டர்கள்வரை சுற்றி இருக்கிறஊர்கள்தான்அவரதுவியாபாரஇலக்குஇதுதவிரயாராவது வரச்சொன்னால் கொஞ்சம் தூரமானாலும்  கூட போய் வாங்கி வந்து விடுவார்.  

அவரது வாகனமான சூப்பர் XL ல் காலையில் 8 மணிக்கு வீட்டை விட்டு கிளம்புவார். மாலை மூணு அல்லது நாலு மணிக்கு வீடுதிரும்புவார். வாங்கிய பொருட்களையெல்லாம்  ஒன்று சேர்க்கிற இடமாகவும், தரம்பிரிக்கிற இடமாகவும் அவரது  இடம் இருக்கிறது. பாட்டில் தனி ,பேப்பர் தனி,அட்டை தனி என ரகம் பிரித்து கட்டுப்போட்டு அடுக்கப்படுகிற தருணங்க -ளிலெல்லாம்  மாரிக்கண்ணுவின் டீதான் அவருக்கு சக்தியூட்டுகிற பானமாக/ 

எப்போதாவது ஒரு நாள்  “ரொம்ப ஆசையாகஇருக்குடாநாக்கு அரிக்குதுடா” என சால்னா நிறைய ஊற்றி மூன்று புரோட்டாக்களும் இரண்டு ஆம்லேட்டுகளுமாய் வாங்கிச் சாப்பிடுவார். சமயத்தில்  எப்போதாவது  கோழிக்கறிவாங்குவார்  அவர்  சாப்பிடுவதற்கு  மாரிக்கண்ணு
எப்பொழுதுமேகணக்குப்பார்த்துகாசுவாங்கியதில்லை.அவரும்வஞ்சகமில்லாமல்”நம்மள மாதிரி  ஆளுகளுக்குநம்மளப்போலவுகதான்ஆதரவு”எனபையிலிருந்துரூபாயைஅள்ளிக் கொடுப்பார். அதுஒருகணக்கு,அள்ளிக்கொடுத்த போதுஅவரதுகையிலிருந்து அளவுக்கு மீறி வந்ததில்லை. குறைந்தும்போனதில்லைமாரிக்கண்ணுபெண்எடுத்தஊர்தான் அவரது ஊரும். பிழைப்பிற்காய் இங்கு வந்து விட்டார்.

“நேத்துப்பைய சார் இவன்,இவன் பொண்டாட்டி சின்னப் புள்ளையாஇருக்கும்போது ஏங்தோள் மேலயும் மார் மேலயும் போட்டு வளத்தேன்சார்,இப்பஏன்முன்னாடியே நெஞ்ச தூக்கிட்டி அலையுறான்.ஏங்வீட்டுப்பக்கத்துலஇருக்குறமரங்கரெண்டுஇவனுக்குயெடைஞ்சலா இருக்கு -துன்னு சொல்லி ஏன் வீட்டுப்பக்கத்துல இருக்குற ரெண்டு மரங்களையும் வெட்டச் சொல்றான் சார்.கிட்டத்தட்ட அதுக ரெண்டும் ஏன் உசுருமாதிரி. நான் என்னத்தச் சொல்ல, அவன் மாமனார்கிட்டப்போய்தான் ஒரு நா பேச்சு வாக்குல சொன்னேன்,அதுக்குஎப்பிடி நீங்க அவர்கிட்டசொல்லப்போச்சுன்னுமல்லுக்கு நிக்குறான் சார்.நானும் எவ்வுளவுதான் பொறுக்க சொல்லுங்க,மனுசந்தான நானும். சின்னப்பயன்னு பாக்காம பதிலுக்கு சத்தம் போட  வேண்டியதுதான் இருக்கு. பின்ன என்னசெய்யச் சொல்லுங்க, எனக்கு மாப்புளத்தான் வேணும் அவென், மாமென்னு அவன் என்னய நெனைக்காதப்போ நான்மட்டும் ஏன்சார் அவனமாப்புளைன்னுதயவு காண்பிச்சு மருகி நிக்கணும் சொல்லுங்க”/என்கிறார்.

இதுவும் மாரிக்கண்ணுவுக்குள் சமீபகால வருத்தங்களில் ஒன்றாக சேர்ந்து கொண்ட நாட்கள் ஒன்றில்தான்அவரதுமனைவியையும்,பிள்ளைகளையும்பார்க்கநேர்ந்தது. பிள்ளைகள் இருவரும் கவுன் அணிந்த குட்டிப் பூங்கொத்துக்களாய் நின்றார்கள். மனைவி பூப்போட்ட சேலையில் அப்பு ராணியாய் நின்று கொண்டு சிரித்தார்.

அவர்களனைவரையும்  ஒன்றாக பார்த்த நாளன்றிலிருந்து நான் வேறொரு கடைக்கு போக நான் எண்ணியதில்லை.

6 comments:

சேக்கனா M. நிஜாம் said...

அனுபவம் அனைத்தும் அருமை !

தொடர வாழ்த்துகள்...

vimalanperali said...

வணக்கம் சேக்னா நிஜாம் முகைதீன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

ezhil said...

அருமையான அனுபவம். அந்த கவுன் போட்ட குட்டிப் பெண்களை என்னாலும் பார்க்க முடிந்தது உங்கள் வரிகளால்

குட்டன்ஜி said...

உயிரோட்டமுள்ள வரிஅக்ளில் அழகான வாழ்க்கைச் சித்திரம்

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்.நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் குட்டன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/