15 Feb 2013

கரிச்சட்டி,,,,

                                             
  
கையைச் சுட்டசுடுநீரின்கோபம்உன்னைநினைவுகொள்ள வைக்கிறதாகவே/

உடலெங்குமாய் கரி அப்பிப்போயிருந்த ஈயச்சட்டி.அதனுள்ளே குடி கொண்டிருந்த சுடுநீர்.

என் மகன் வைத்துத் தந்தது எனக்காக/முக்கால் வாசி அளவே நிரம்பியிருந்த ப்ளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த பச்சைத் தண்ணீருடன் சட்டியிலிருந்த சுடு தண்ணீரை ஊற்றுகிறேன். போதும்,போதும்,,,,,, எனச்சொன்னமனதின்வார்த்தைக்கு ஆட்ப்பட்டும், கட்டுப்பட்டுமாய் பாதி நீரை மட்டும் ஊற்றி விட்டு மீதி நீரை அப்படியே சட்டியிலேயேவைத்து விடுகிறேன்.

உடல் தேய்த்தசோப்பின்நுரையில்உடலின் அழுக்கும்,அழுப்பும்போய்விட்ட திருப்தியுடன்  பச்சைத்தண்ணீரில் மென்மையாய்கலந்துவிட சுடு தண்ணீரை ஊற்றுகிறேன்.தலை, முகம், ஊடல்,கை,கால்,,,,,என  நனைத்த நீர் பக்கெட்டில்  குறைவாகவே இருக்கிறது, ஆகவே சட்டியில் மிச்சமிருகிற நீரை எடுத்துஊற்றிவிட்டு பக்கெட்டிலிருக்கிற பச்சைத் தண்ணீரில் கலக்கவும்  என செயல் முறை விளக்கமளிக்காத குறையாய் அசரீரி இட்டு சொல்லிச் செல்கிறது   மனது,அதுவும் மனம்பிடித்தசரீரின்குரல்பல வகைப்பட்டதாமே?  அதில் தண்ணீர் சொன்னது எந்த வகையில் சேரும் எனத் தெரியவில்லை.வலது கை தூக்கிப் பிடித்த சட்டியிலிருந்து வழிந்து விழுந்த தண்ணீர் பக்கெட்டுனுள்ளிருந்த இடது கை தொட்டு நிரம்புகிறது.

கரி பிடித்த சட்டி ,பச்சைத்தண்ணீர்,ஊதா நிற ப்ளாஸ்டிக் பக்கெட்,பிங்க்கலர்பூசிக்கொண் டிருந்த பாத்ரூம் சுவர்கள்,இன்னமும் டைல்ஸ் பதிக்கப்பட்டிராத பாத்ரூமின் தரை. பாத் ரூமை  ஒட்டியே இருந்த கழிப்பறையின் கதவு,ஆஸ்பெஸ்டாஸ் தகடு போர்த்தப்பட்டு/

நான்,வாளி,பாத்ரூம் மற்றும் சுடு தண்ணீர் மற்றும் பச்சைத்தண்ணீர்எனமாறிமாறி காட்சிப் பட்டவைகளுடன் நின்றிருந்த என் இடது கையை வலது கரம் ஊற்றிய தண்ணீர் சுட்டு விட்டது சற்றே/சுட்டது தண்ணீர் தானே, ஊற்றியது நான்தானே?என்கிற நினைப்பிருந்த போதும் கூட சூட்டின் கடுமை சிறிது நேரம் மனம் தங்கியதாகவும்,கை சுட்டதாகவுமே/

பள்ளிக்குச்செல்கிற பையன் என்றைக்குமேமுதல்ஆளாககுளித்துகிளம்பிவிடுவது வழக்கம். அது போலதான் அன்றும்/அவனுக்கான சுடுநீர் ஸ்டவ்விலிருந்து இறக்கப்பட்டதும்  மறக்காமல் அதே சட்டியிலேயே இன்னொரு முறைஎனக்கான  சுடுநீர்தயாராகும். இதில் சுடு நீரை இறக்குபவனும்,அதைதிரும்பவுமாய்ஸ்டவ்வில்வைத்துஏற்றுபவனும்அவனாகிப்
போகிறான்.அது அவனின்அனிச்சைசெயலாஅல்லதுவிருப்பச்செயலாத் தெரியவில்லை.

பத்துத் திரிகளை தன்னகத்தே தாங்கிய மண்னெண்ணை ஸ்டவ்வில் சுட்ட நீர்என்கையை சுட்டதாகவே இருக்கிறது சகியே.

சுடட்டும்,சுட்டு விட்டுப்போகட்டும்.என்னகுறைந்து விடப் போகிறது இப்போது ? ஆறிப் போகிறகோபம்போலசுடுநீர்சுட்ட வடுவும் ஆறிப்போகும் சீக்கிரம் சகியே எனச் சொல்பவனாய்  பாத்ரூமிலிருந்து வெளியேருகிறேன். 

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... Graphics படமும் கலக்கல்...

சசிகலா said...

படமும் தாங்கள் சொல்லிச் சென்ற விதமும் சிறப்பு.

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைகுமாக/

vimalanperali said...

திண்டுக்கல் தனபாலன் சார் நீங்கள் சொன்ன தகவலே கிராபிக்ஸ் படம்.நன்றி திரும்பவுமாய்.

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்,
நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/