21 Feb 2013

தார் ரோடு,,,,,,


                               
வொர்க்‌ஷாப் சந்து வழியே சென்றால் சீக்கிரம் போய் விடலாம்.இல்லையென்றால் இப்படியே சாலை வழியே செல்வதென்றால் சுற்றி வடம் பிடித்துச்சென்ற கதையாகிப் போகும். நடக்கத் தெரியாதவன் பக்கத்து வீட்டிற்கு பஸ் ஏறிப்போன கதையாக/

மாவட்ட நூலக வாயிலில் இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட்ப்பண்ணுகையில் கை பேசியில் அழைத்த முருகன் தம்பி நிறைய நேரம் பேசினார்.கால் மணிக்கும் மேலாக நீண்டது அவரது பேச்சு.

மிதமானதூறல்பூந்தூறல்என்கிறார்கள்அதை.நானும்அதையேசொன்னேன்அவரிடம். ”மழையா  அந்தப்பக்கம்எனக்கேட்ட போது/” ”எங்களது ஏரியாவில் சரியான மழை,வீட்டை விட்டு வெளி -யேறமுடியவில்லை.மழை மட்டு பட்டதும் இதோ உங்களை சந்திக்க வருகிறேன்பர்மாக்கடை
-யருகில்  வந்து  விடுங்கள்” என்றார்.

ஆனால் அவர் அடையாளமிட்ட நண்பர் வெளியூரில் இருப்பதாய் தகவல் சொன்னார்கள். 
தெரிந்தவர்கள்ஆகவே பர்மாக்கடை செல்வது,நண்பரைப் பார்ப்பது பேசுவது அதிமுக்கியமாக பேசிக்கொண்டே டீக்குடிப்பது ,,,,,,,,,என்கிற எல்லாமே கேன்சல்.

எல்லாவற்றையும் கைபேசியிலேயே பேசியும்,உறுதி செய்து விட்டுமாய் “பெய்கிற மழையை நிறுத்திவிட்டுவரவேண்டாம்.தாங்கள்.மழைதன்போக்கில்பெய்யட்டும்,நீங்கள்உங்கள்போக்கில் வீட்டிலேயே இருங்கள்” எனச்சொல்லி விட்டு  மிதமாய் விழுந்த பூந்தூறலுடன் இருசக்கர வாகனத்தை  நகற்றுகிறேன்.

அகன்று தெரிந்த நூலக வாயிலிலிருந்து வலப்பக்கமாய் செல்கிற சாலையில் சென்றால் சிக்கந்தர் பள்ளியைத்தாண்டி சிவகாசி பாலம் அருகே ஜேம்ஸ் டீக்கடை.

ஆனால் சிக்கந்தர் பள்ளியை கடப்பதுஅவ்வளவுஎளிதல்லஎனக்கு.இரண்டு  பக்கமுமாய் தன் அகன்ற வாயிலைக்காட்டி மிகவும் பெரிதாக நின்ற பள்ளியது.அந்தந்த ஊர்களில் நின்று நிலைத்து விடுகிற மாற்று அடையாளங்களில் எங்களூரில் சிக்கந்தர் பள்ளி.

புல்லப்பஸ் எடுப்பதற்கு கம்பி ஏற்றிவிடப்பட்ட கண்ணன் அலறிய அழுகைக்கு பி.டி மாஸ்டர் ஆறுமுகம் சிரித்த சிரிப்பில் விளையாட்டு மைதானமே அதிர்ந்தது அன்று/

எங்களதுவகுப்புவாத்தியார்வராததால் முதல் பீரியடே பி.டி பிரியட் எனச்சொல்லி விட்டார்கள்மாணவிகளெல்லாம் வகுப்பில் இருக்க நாங்களெல்லாம் ஓருவித ஏக்கம் கலந்த பிரிவுடன் கிரவுண்டுக்குப்போனோம்.எங்கள்வகுப்பின்சுவரைஒட்டித்தான்கிரவுண்ட்.அதுவும்மாணவிகள்  அமர்ந்திருந்தஜன்னலோரம்,கொடுமைடாசாமி.இதற்குபயந்தே நாங்களெல்லாம்  தப்பில்லாமல் எக்ஸ்ர்ஸைஸ் பண்ணவும் விளையாடவுமாய் முயற்சிப்போம்.அதிலும் அந்த குட்டைப் பையன் கண்ணன்இருக்கானே?வாயாலேகிரவுண்டைஅளந்துவிளையாட்டைவிளையாண்டுவிடுவான்.

அவனுக்குபூக்களின்மீதுபிரியம்இருக்கிறதோ இல்லையோ,முன்பெஞ்சில் அமர்ந்திருந்த மகேசின் மேல் பிரியம் இருந்தது. பள்ளியின்உள்ளேஇருக்கிறதோட்டத்தில் உள்ள பூச் செடிகளுக்கு வாடிக்கையாய்தண்ணீர் ஊற்றுவது அவன்தான். பூத்துமலர்ந்திருக்கிற பூக்கள் ஒவ்வொன்றிலும் மகேசின் முகம் பார்க்கிற திருப்தி அவனுக்குள்.

ஒரு தடவை அவள் கண்ணனிடம் ஊக்கு கேட்டு வாங்கிவிட்டாள்எனபத்து நாட்கள் வகுப்பு பூராவும்சொல்லிக்கொண்டும் சந்தோஷித்தும்   திரிந்தான்.

அவனுக்கிருக்கிற கவலையெல்லாம் வேறுயார் பார்த்தாலும்  சரி,மகேஷ் தான் தப்பாய் விளை -யாடுவதையும்,எக்ஸர்ஸைஸ் எடுக்கத் தெரியாமல்நிற்பதையும்பார்த்து விடக் கூடாது என்பதே  அவனது அதிமுக்கிய கவலையாய் இருந்தது.

அவனது வீடு இருக்கிற தெரு வழியாகத்தான்நான்,மற்றும்இன்னும்நால்வர்சேர்ந்து வருவோம்பள்ளிக்கு,நாங்கள் வரும் போது ரெடியாக நிற்பான் அவனது வீட்டு வாசலில்.

பட்டணம் பொடி பொம்மை தலையாட்டிகொண்டு நிற்கிற  முருகன் கோயில்சந்து வழியாக வருகையில்எப்படியாவதுஅந்த பொம்மையைதொட்டுவிடவேண்டும் என்கிற  ஆசை என்னுள் எழாமல் இருந்ததில்லைஎன்னின் அந்த ஆசைக்கு எண்ணை ஊற்றுகிறவனாய் என்னுடன் வருகிற  சந்திரன் இருந்திருக்கிறான் அப்போதெல்லாம்.

அவனும் நானும் பக்கத்துப் பக்கத்துத் தெரு,அவன் மணி முத்து சந்து,நான் சிதம்பரம் சந்துஇரண்டு பேரும் எப்போதாவதுஅபூர்வமாகதெருக்குழாயில்சந்தித்துக் கொள்வோம்.

எங்கள்இருவரின்தெருவுக்கும்ஒரேகுழாய்தான்.அதனாலேயேஎன்னவோசண்டைநொறுங்கும்.  சண்டைஉச்சதில்இருக்கும் போது நாங்கள்இருவரும்தனியாகஒதுங்கிப் போய்  பேசிக்கொண் -டிருப்போம் சிரித்து விளையாடியவாறு/

அது என்ன ராசி எனத்தெரியவில்லை.நாங்கள் குழாயடிக்கு வருகிற நாட்களிலெல்லாம் சண்டைநடக்கிறது.ஒருவேளைதினசரிஇப்படித்தானோஎன்னவோ?என நாங்கள் இருவருமாய் கவலைகொண்டிருந்த நாளின் மாலைப்பொழுதொன்றில்நாங்கள்விளையாடிக் கொண்டிருந்த பொழுது கனகு அண்ணனை நான்கு ஐந்து பேர்கள் அடித்து இழுத்துப் போனார்கள்சந்திரன் தந்த தைரியத்தில் கொஞ்சம் தயங்கி நானும் பின்னால் சென்றேன். கனகு அண்ணனுக்கு உடம்பெல்லாம் ஒரே அடி,அவரால் நடக்கக்கூட முடியவில்லைஉதடெல்லாம் கிழிந்து தொங்கியது. முகத்தில்ஆங்காகேதிட்டுத் திட்டாய் ரத்தம்இழுத்துப் போனவர்கள் கையில் கட்டையும் செங்கலும் கல்லுமாய்/நன்றாககுடித்திருப்பார்கள்போலும்.கனகுஅண்ணன் பாவம் வெட்டுப்படப்போகிறஆடுபோல பரிதாபமாய் முழித்துக்கொண்டும்தலையை கவிழ்ந்து கொண்டுமாய் சென்றார். கனகு அண்ணனின் வீட்டுக்காரப் பெண்கள் தலையிலடித்துக் கொண்டு அவர்களின் பின்னால் அழுது கொண்டே செல்கிறார்கள்.

அவர்கள் அடியும் கையும் வசவுமாக அவர்களது பின்னால் வந்த பெண்களையும்,கனகு அண்ணனையும் அடித்து இழுத்தபடிசெல்கிறார்கள்.அங்கு உள்ளவர்கள்தான் சத்தம் போட்டு கனகு அண்ணனின் வீட்டுப்பெண்களைவீட்டிற்குப்போகச்சொன்னார்கள்.இல்லையென்றால் பெண்கள் மீது இருக்கிற கோபம் கனகு அண்ணன் மீது இன்னும் கூடக்கொஞ்சம் பாயும் எனச் சொன்னார்கள்.

அவரது அண்ணன் அந்தத் தெருவில் உள்ளவனுடன் பஜாரில் வைத்து சண்டை போட்டு விட்டானாம். வார்த்தை முத்தி கைகலப்பு ஆகிவிட்டதுபோலும்.அதற்குபதிலடியாக ஆட்களை சேர்த்துக் கொண்டு வந்து விட்டான்அந்த தெருக்காரன் அண்ணணை தேடி வந்த இடத்தில் அவன்இல்லைஎனவும் சாப்பாட்டுத் தட்டின்முன் அமர்ந்திருந்த தம்பியை அடித்து இழுத்து வந்து விட்டார்கள்.

கனகுஅண்ணன்ரொம்பவும்நல்லவர்.கைவண்டிகள்நிறுத்தப்பட்டிருக்கும்இடத்திற்குப்பின்னால் ஓடுகிறசாக்கடைவிளிம்பில்அமர்ந்துவழக்கமாய்காலையிலும்மாலையிலுமாய் மலம் கழிக்கிற என்மீதும், சந்திரனின்  மீதுமாய் குப்பைகளை வீசி விட்டுப்போனப் போனவர்களை அடித்துத் துரத்தியவர். பார்க்கிற நேரங்களில் எங்கள்இருவருக்குமாய் மிட்டாய் வாங்கித்தருவார். சந்திரனுக்குச் சொந்தக்காரர்.

சந்திரனின்அப்பாதான்போய்கனகுஅண்ணனைஅடித்துஇழுத்துபோனவர்களிடமிருந்துமீட்டு க்கூட்டிவந்தார்.கையுடன்கனகுஅண்ணனின்அண்ணனைதனதுசொந்தக்கார்கள் இருக்கிற  தூரத்து ஊர் ஒன்றில் ஆறு மாதத்திற்கு விட்டு விட்டு வந்தார். கையோடு கனகு அண்ணின் வீட்டார்களை வீட்டை காலிபண்ணச் சொல்லிவிட்டு தங்களது வீட்டின் அருகிலேயெ குடி வைத்து விட்டார்.

சந்திரனின் அப்பாவுக்கு ஊருக்குள் முக்கியப்புள்ளிகள்சிலபேர்பழக்கம்.அவரிடம்பேசப் பயப் படுகிறவர்களே கூட உண்டு,.பார்த்தும் நமக்கு ஏன் வம்பு என பார்க்காதது மாதிரி கடந்து போகிறவர்களும் உண்டு. இவன் குடியிருந்த காலத்தில் வேனல் பூத்திருந்த தெரு அது. இயல்பில் அப்படி இல்லாவிட்டாலும் கூட தற்காத்துக் கொள்ளவாவது அப்படி இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிப் போனார்கள்.

அங்கிருந்து சிக்கந்தர்பள்ளி இரண்டு கிலோமீட்டராவது இருக்கும்.நடைதான் வாகனம். செருப்புஇல்லாதகால்களுடனும்,வார்அறுந்தபையுடனும் விளையாட்டாய்ச் செல்கிற அவர்கள் ஒருவனின்கிழிந்தசட்டையினுள்மற்றொருவன்பொடிப்பொடிகல்லைபோட்டுவிளையாடியவாறு  செல்வார்கள்.டவுசர் தபால் பெட்டி.

முகத்தில் வெட்டுகாய தழும்பை சுமந்திருந்த பி.டி மாஸ்டர் ஆறுமுகம் அன்றைக்கு எந்த விளையாட்டும் இல்லை.பீரியட் முழுவதும் எக்ஸர்ஸைஸ்தான் எனச்சொல்லி விட்டார். அப்படிச்சொன்ன மறுகணமே ”சார் ஒண்ணுக்கு” என ஒற்றை விரலை தன் நெஞ்சுக்கு நேராய்காண்பித்தகண்ணன்பாத்ரூம்போய்பத்து நிமிடங்களுக்கு மேலாகியும்  வராததால் பையன்கள் போய் அவனை கூட்டி வந்தார்கள்.உடல் நெளிய வந்தவனை புல்லப்ஸ் கம்பத்தில் ஏற்றி விட்டு விட்டார்.பி.டி மாஸ்டர்.அனேகமாக எல்லோரும் தாவி கம்பத்தைப் பிடித்து விட்டார்கள்.முடியாத சில பேருக்கு பி.டி ரூமிலிருந்து ஸ்டூலைக் கொண்டு வந்து போட்டார்கள்.  ஸ்டூல் போட்டும் ஏற மறுத்த கண்ணனை ஒரு அதட்டு அதட்டி கம்பத்தை பிடிக்க வைத்தார்.ஒனக்கு என்னடா ஆச்சு,ரெண்டு வாரமா தப்பிச் சுட்டு வார,இந்தா அவனப்பாரு,முடியாது எனக்கு வராதுன்னு சொன்னவன் இன்னக்கு ஒரே தம்முல இருவது எடுத்துட்டான்.நீயி,,,,,,,,,,,ஏறுடா, ஸ்டூல்மேலஎட்டிக்கம்பத்தப்புடி. இன்னைக்கு ஒரு ரெண்டாவது எடுக்கணும்.இல்ல தோல உரிச்சி அந்தக்கம்பத்துலயே தொங்க விட்டுருவேன். ராஸ்கல்.ஏறுடா மேல ஏறுடா,,,,,,,,,,,,,,என அவர் அதட்டியதும் கண்ணன் கீழே தரை பார்த்து அழுது கை நழுவ விட்டதும் நிஜமாய் பழங்கதையாய் இன்று/

அவன் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஏதோ ஒரு பேங்கில் வேலைக்குச்சேர்ந்து விட்டதாய் கேள்வி.பி.டிமாஸ்டரும்,என்.சி.சிமாஸ்டரும்எங்களுக்குதமிழுக்குநாக்கைப்பழகிய நாகேந்திரன் சாரும்,வரலாற்று டீச்சரும் ஸ்கூல் பியூன் மணி அண்ணனும் மறக்க முடியா அடையாளங்களாகவும் அடி மனதில் தங்கிப்போனவர்களாகவும்/

ஒவ்வொருமுறையும் பள்ளியை கடக்கிற போது இவர்கள் அனைவரின் நினைவும், பிம்பங்ளும்,  பள்ளியின் பிரமாண்ட தோற்றமும்  இன்னும் பச்சையாகவே/

எப்போது போனாலும் அன்பும் பிரியமும் வாஞ்சையுமாய் பேசுகிற மனிதர் ஜேம்ஸ் ராஜ். கண் பார்க்க கை செய்ய என வேலை கவனத்தில் இருந்த போதும் கூடயாரிடம் எப்படிப்  பேசுவது என்கிறஅளவுகோளைஎந்நேரமும்மடியில்சுருட்டிவைத்துக்கொண்டிருக்கிறவராகவே/ அந்த ஏரியாப்பக்கம் போய் விட்டால்  அவரது கடையில் ஒரு வடையும் டீயும் சாப்பிடுவது உறுதி. குடிக்கிற டீயும்,கடிக்கிற வடையும் கலந்து கட்டிஇருக்கிற பேச்சுமாய்  இருக்கிற இனிய தருணம்அது.சமயத்தில்பேச்சுவாக்கில்டீயின்எண்ணிக்கைஇரண்டாகக் கூட உயர்வதுண்டு.

டீக்கடைகள் பொதுவாகவே என்னைப் போன்றமனிதர்களைக்கட்டிப்போட்டுதான் வைத்திரு க்கின்றன.வாங்கிற காய்கறிகளையும், பலசரக்குகளையும் விட டீக்கடைகளின் முன்னோர  தாழ்வாரங்களிலும்,அதனுள் உள்ள உறைவிடங்களிலுமாய்அமர்ந்து குடிக்கிற டீயும்,கடிக்கிற வடையும் ,நிலவுகிற பேச்சும் நம் வாழ்வின் பிரதிபலிப்பாகவே/

அப்போதெல்லாம் டேப் ரிக்கார்டர் இல்லாத கடைகள் மிகவும் குறைவு.அதை யாரும் டீக்கடையாகப் பார்ப்பதில்லை.கூட்டமும் போகாது.அதிலும்கடைகளுக்குள் போட்டியே/ பாடலின் இசைக்கேற்ப அமர்ந்து அமர்ந்து எரிகிற பொடிப்பொடி லைட்டுகள் கொண்ட டேப்ரிக்கார்டர் மிகவும் பேமஸ்.

எனக்குத்தெரிந்து தாலூகா ஆபீஸ் பக்கம்ஒருவர்இரண்டுடேப்ரிக்கார்டர் வைத்திருந்தார் அவரது டீக்கடையில்/இரண்டிலுமாய் இருந்து சப்தமிட்டு ஒலிக்கிற பாடல்கள் அந்த வழியே செல்கிறவர்களையும்,கடையில் டீ சாப்பிடுபவர்களையும் தலையாட்ட வைக்கும். அவர் ஒரு இளையராஜா ரசிகர்.இத்துணூண்டு கடையின் மூன்றுபக்கச்சுவர்களிலும் இளையராஜாவுடன் சேர்ந்துஎடுத்துக்கொண்ட போட்டோக்கள் சிரிக்கும்.

மாஸ்டர்களுக்காக டீக்குடிக்க குறிப்பிட்ட கடைகளை தேடிச்செல்கிறவர்களைப் போல டேப் ரிக்கார்டர் இருக்கிற கடைக்குப்போனார்கள்.

ஆனால் இது எதுவும் இல்லாமல் பிரிய மனிதர் ஜேம்ஸ்ராஜ் இந்த முப்பது ஆண்டுகளாக ஜெயித்துக்கொண்டு வருகிறார்.

வொர்க்‌ஷாப் சந்து தாண்டி மெயின் ரோட்டிற்கு வருகிறேன்.வலப்பக்கம் ,இடப்பக்கம் மற்றும் நேராக பிரிந்து வழிகாட்டுகிற  சாலையின் உச்சி வகிடை பின்பற்றிச் சென்றால் வீட்டிற்குப் போகலாம்.வலப்பக்கம் போனால் பஜாருக்கு,இடப்பக்கம் சென்றால் ரயில்வே ஸ்டேஷனுக்கு/

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் வருகிறேன் எனச்சொன்ன நண்பணை ர்சீவ் பண்ண வேண்டும். அதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது,வீட்டிற்க்குப் போனால் வர முடியாது.ஏதாவது வேலையாகிபோகலாம் அல்லது மிதமிஞ்சிய சோம்பல் வந்து உடல் போர்த்தி விடக்கூடும். ஆகவே இங்கேயே எங்காவது ஒரு டீக்கடையில் நின்று பொழுதைக் கழித்து விட்டு ரயில் வருகிற  நேரமாய்ப் போகலாம் என நினைக்கிறேன்.

நிறைலக்கேஜுடனும்தன்காதல்மனைவியுடனும்வருவதாகச்சொன்னவன்வேறு யாருமில்லை.

அன்று புல்லப்ஸ் கம்பத்தில் தொங்கிவாறு அழுத கண்ணனும், அவனுக்கு முன் பெஞ்சில் அமர்ந்திருந்த மகேசும்தான் கணவன், மனைவியாக வருகிறார்கள்/

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எதிர்ப்பார்க்காத முடிவு...

குட்டன்ஜி said...

சரளமான நடை;அருமையான வாழ்க்கைச் சித்திரம்,சூப்பர் விமலன்

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக.

vimalanperali said...

வணக்கம் குட்டன் சார்,நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

தி.தமிழ் இளங்கோ said...

அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (23.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 23.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

vimalanperali said...

வணக்கம் தி,தமிழ் இளங்கோ அவர்களே. நன்றி தங்கள் அறிமுகத்திற்கு, கண்டிப்பாக வலைச்சரம்ப்பக்கம் செல்கிறேன்.