25 Jul 2013

வெள்ளக்கட்டி,,,,


எங்குமேகாணக்கிடைக்கிறதுதான்காசியப்பன்கடைகள்.காசியப்பன்கடைஎன்றால்எங்களூரில் மிகவும் பேமஸ்.பிறக்கப்போகிற குழந்தை தவிர அனைவருமாய்  அறிந்த கடை.

காசும்,பணமுமாய்கைகோர்த்துஉறவாடிக்கொள்ளாதகாலங்கள்அது.இப்போதிலிருந்து ஒரு நாற்பதுஆண்டுகள்பின்னோக்கிவைத்துக்கொள்ளலாம். கட்டளையிட்டது போல காலங்களில் வானம் அவிழ்ந்து பெய்கிற மழையும்,கோடையில் அடிக்கிற வெயிலும் ஆடியில் தேடி விதை க்கிற பட்டங்களும் நிறை கண்மாய்த்தண்ணீரும் மடை வாய்க்காலில் நிறைந்த நீரும் வயல் நிறைந்து பயிர்களுமாய் செழித்திருந்த காலமது.

களையினூடே பயிரும், பயிருனூடே களைகளுமாய் கறுப்பு முடிகளுக்கு மத்தியிலிருக்கிற வெள்ளை முடியாயும்,வெள்ளை முடிகளை தூக்கிக்கொண்டு தெரிகிற கறுப்பு முடியாகவும் காட்சிப்படும்.

உயர்ந்து நிற்கிற கண்மாய்க்கரை மேட்டில் செல்கிற கருநிறம் பூசிய தன் இரண்டு ஓரங்களில் வலப்புறம் கண்மாயையும்,இடப்புறம்  வயல் வெளியையுமாய் காட்சிப் படுத்திய ஊரது.

கண்மாயில் அலையடிக்கிற நீர் மீதும்,வயல்களில் தலையசைக்கிற பயிர்கள் மற்றும் மரம் செடி கொடிகள் மீதும் தழுவிப்படர்கிற காற்றாய் உறவு பூத்த நெஞ்சங்களும், நட்பு கொண்ட உள்ளங்களும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் நன் மதிப்பு கொண்டும், உள்ளச்சுத்தியோடுமாய் வாழ்ந்து வந்த காலங்கள் அவை,எதைப்போட்டாலும் முளைக்கிற மண்ணாய் காட்சிப்பட்ட அதுஅவர்களது உழைப்பையும், வியர்வையையும், தன் ஈரம் காயா உடல் மீது அப்பியிருந்தது/

கணக்கும்,வழக்கும்காசும்,பணமும் இருக்கட்டும் உங்களோடு. உழைப்பும், வியர்வையும் அதன் உன்னதமும் இருக்கட்டும் எங்களோடு என போகத்திற்கு ஒரு முறை விளைகிறவிளைச்சலை கமிஷன் கடையில் விற்று விட்டு காசும் பணமுமாய் வாங்கி வந்து வைத்திருக்கிற பணத் திற்கு சரியாக கனக்குக்கூட பார்க்கத்தெரியாமல் குத்து மதிப்பாய் செலவளித்து வாழ்ந்து தெரிந்த வெள்ளந்தி மனிதர்கள் குடிகொண்டிருந்த பூமியுமாய்.

கலர்க்கலராய் கொம்புகளில் அடித்த பெய்ண்ட் உதிர்ந்திருக்க தன் உயரம் காட்டிச் செல்லும் காளை மாடுகள்,கொஞ்சமாயும் அப்புராணியாயும் செல்லும் பசு மாடுகள். கூட்டம்,கூட்டமாய் தன் தினவுகாட்டிச்செல்கிற எருமைகள், உடலில் வளர்ந்து கிடக் கிற ரோமத்தின் அடர்த்தி காட்டியபடி நடமிடும்ஆடுகள்.வீதிகளெங்கும் நிறைந்து வீசுகிற வாசனையும், காணக் கிடைக் கிற காட்சிகளும்   வீதிகளில் நிறைந்து கிடக்கிற சாணத்தையும் கோமியத் தையும்,ஆட்டுப் புழுக்கைகளையும்,தரையில் உதிர்ந்துகிடக்கிறகோழிஇறகுகளையும்,எச்சங்களையும் நிறைந்து காட்சிப்படுத்தியவாறும்   பூத்தும்,சிரித்துமாய்/

அதிகாலை4.30திற்கெல்லாம் விழித்துக்கொண்டு விடுகிற டீக்கடைகள் அந்நேரமே கையில் டீக்கிளாஸீடன் மனிதர்களை அறிமுகம் செய்யும்.அந்நேரமே ஊரின் துவக்கத்தை பிள்ளையார் சுழியிட்டு ஆரம்பித்து வைக்கிறவர்களாக அவர்களே ஆகித் தெரிகிறார்கள்.ஊர் மந்தையில் சின்னதாய் ஒரு குடிசைதாங்கி காட்சி தருகிற அந்த இரண்டு டீக்கடைகள்தான் ஊரின் தேநீர் விரும்பிகளுக்கு தாக சாந்தி அளிப்பதாக. மத்தியான வெயிலில் டீக்குடிகிற டீ ஆர்வலர் களை தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டிருக்கிற அந்த இரு கடைகளில் ஒரு கடைமதியம் ஒருமணிக்குமாய்,இன்னொரு கடைசற்றேபிந்தியுமாய்மூடப்படுகிறஅதிசயம்இங்கே அன்றாட ங்க ளில்/ ஒரு மணி நேரம் முன்னப்பின்ன என்கிற சொல்லாடலுக்கு உட்பட்டு/

சொல்லாடல் சரிதான்.கடை மூடுவது சொல்படியா அல்லது முன்னப்பின்னவா என்கிறதெ ல்லாம் காசிநாதன் அகராதியில் வந்திருக்கவில்லை.

24 நான்கு நேர டீக்கடை அது.இப்போது பலசரக்குக்கடை வைத்திருக்கிற இடத்தில் முன்பு டீக்கடைதான் வைத்டிருந்தார்.டீ,வடை மொச்சை என்கிற ஜபர்தஸ்தான ஏற்பாடுடன்/ தூங்குகிற நேரம் தவிர்த்து அவரிடம் வந்து டீக்குடிக்க ஆள் இருக்கத் தான் செய்தார்கள். காலை எழுந்து வருகிறவர்கள் முதல் மாலை வேலைக்கு சென்று திரும்பி வருகிறவர்கள்,இரவு வீட்டில் மனைவி மக்களுடன் சண்டை போட்டு விட்டு மனதில் மல்லுக்கட்டு நிரம்ப வந்து கடித்துக்குடிக்கிற டீயும்,உடைத்துச்சாப்புடுகிற வடையும்எனசாப்பிடுபவர்களுக்காய்இரவு ஒன்பது  மணிவரை கடை திறந்திருக்கும்.

டீ வாங்கலையோ,டீ,,,,,,என குரல் கொடுக்க மறந்து போகிற காசிநாதனை ஞாபகப்படுத்து கிறவர்களாய்இருக்கிறார்கள்இரவு 9 மணிவரை டீக்குடிக்க வருகிற ஆட்கள்.அவ்வாறாய் வந்து  போகிற கடைசி டீத் துளியின்மனிதர்கள் தருகிற காசின்அல்லது சொல்லிச்செல்கிறகடனின் அடையாளங்களுடன் அணைக்கப்படுகிற அடுப்பு எந்நேரமும்பால்ச்சட்டி சுமந்தே/

அடுப்பை சுத்தம் செய்கிற அவரது கவலையெல்லாம் நெருப்புக்கு விறகு செலவாகிப் போகும், இல்லையென்றால் அடுப்பில் எந்நேரமும் சட்டியை ஏற்றி வைத்துக் கொண் டே இருக்கலாம் என்பதே/

பாலுக்கென ஒன்று,தண்ணீருக்கென பிறிதொன்று என இரண்டாய் காணப்படுகிற சின்ன தேக்சா அலவிலான ஈயச்சட்டிகள் அடுப்பில் காய்ந்து கொண்டே/அப்படி காய்ந்து கொண்டி ருக்கிற சட்டிகள் ஒன்றில் இரு நாளின் இரவுப் பொழுதில் காலியாய் எரியாத அடிப்பில் ஏறி வைக்கப்பட்டிருந்த சட்டியில் இறந்த பூனை ஒன்று யாருக் கும் தெரியாமல் ரகசியமாக விழுந்து விட்டது என்கிறார்கள்.

உயரம் காட்டி நின்ற அடுப்பாதலால் விழுந்த பூனையை கவனிக்காமல் மறுநாள் அந்தப்பாத்திரத்தில்அப்படியே தண்ணீர்  ஏற்றி டீப்போட்டு விட்டார் என்கிறது தகவல் அறிந்த வட்டாரங்கள் சொல்லிச் செல்கிறதாய் ஒரு பேச்சு இருந்தது ஊருக்குள்/அப்படியெல்லாம் காசிநாதன் போட்ட டீ திக்காக இருந்ததற்குப்பதிலாய் ஒரு மாதிரி கிக்காய் இருந்தது.அந்த கிக் அனைவரிடமுமாய் குடிகொண்டிருந்த நேரங்களில்தான்  கட்டு படியாக வில்லைஅவசர அவசரமாய் டீக்கடையை மூடி விட்டு பலசரக் குக் கடையை ஆரம்பித்தார்.

சரி பலசக்குக்கடைக்கு எதற்கு வண்டி மாடெல்லாம் என அவர் தவிர யாருக்கும் தெரிந்தி ருக்கவில்லை.இப்போது போல் அப்போதெல்லாம் முக்குக்கு மூணு கடைகள் கிடையாது, அல்லது நினைத்த நேரம் நினைத்த மாத்திரம் பக்கத்து நகரம் சென்று இருசக்கரவாகனத்தில் சரக்கு வாங்கி வருகிறபழக்கங்கள்முளைத்துக் காணப்பட்டதில்லை.

அப்படியிருந்த காலத்தில் காசிநாதன் கடை தேடி பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் சரக்கு வாங்க ஆட்கள் வந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்.

அப்படி நிலைகொண்டிருந்த கடை மிகவும் சின்னதாகவும் அல்லாமல் பெரியதாகவும் அல்லா மல்  நிலை கொண்டு காட்சி அளித்ததாய்/

ஆனால் அந்தமாட்டு   வண்டி இருக்கிறதே அவரது கையில் படுகிற பாடு சொல்லி மாளாது.  தினசரி வேலை இருக்கிறதோ இல்லையோ வண்டியை பூட்டிகொண்டு கிளம்பி விடுவார் டவுன் நோக்கி/

ஒற்றை மாட்டு வண்டு கூட்டு வண்டிசைஸில் சின்னதாய் காட்சிப்பட்ட சென்ற பயணம்  நேர்கொண்ட பயணமா அல்லது சீரற்றதா எனவெல்லாம் சொல்ல இயலாது.

மார்க்கெட்,காய்கறி,மாம்பழப்பேட்டை,மாம்பழங்கள்,இதர,இதரவென அள்ளி வருவார். அப்படி அள்ளிவருகிறவைகளில் அரிசிபருப்பும் அடங்கும் சமயங்களில்/இவர் என்ன கடையில் போய் வாங்குவார சரக்குகளை அல்லது சூரை போடும் போது அள்ளி எடுத்து வந்துவிடுவாரா  என பேசிக்கொள்ளாதவர்கள் இல்லை  ஊருக்குள்/

பத்துபைசாவிற்குப்புளி,நாலணாவிற்குபொரிகடலை,பத்துபைசாவிற்குதேங்காய்ச்சில் ஒரு ரூபாய்க்கு நல்லெண்ணை,,,,,,,,,,,,,,,,எனதருகிறஅதிசயம்அவரதுகடையில் நடக்கிற போது இந்தப்பேச்செல்லாம் அழுங்கிப்போகும் தன்னாலே/

ஊரே நின்று ஒட்டு மொத்தமாய் சரக்கு வாங்கினாலும் கூட அவரிடமும், அவரது மனைவி யிடமும் இருக்கிற நிதானம் அவரது கடைக்கு அடையாளமாய்/

தபால் பை டரவுசரும்,தோள்ப்பட்டையோரம் கிழிந்த சட்டையும், புத்தகங்கள் சுமந்த மஞ்சள் பையுமாய் பள்ளி முடிந்தவுடன் வசதியாய் இருக்கிற நாங்கள் (அப்பொழுதெல்லாம் கையில் ஐந்து பைசாவிற்கு மேல் வைத்திருந்தால் வசதி மிக்கவர்கள்)  நேராகச்செல்வது காசிநாதன் கடைக்கே/ கடைக்குச்சென்ற பெரும்பாலானவர்களின்வாக்குபொரிகடலைப்பக்கமாகவே இருக்கும்.கைநிறையவைத்துச்சாப்புடுகிறஅளவிற்கு நிறைந்து தெரிகிற பண்டம் ஆதுதானே? ஆதலாலே பிடிக்காவிட்டாலும் கூட அது அனைவரினது பிடித்த தின்பண்டங்களின் லிஸ்ட் டில் காணப்பட்டதுண்டு.

எங்களுக்குமட்டும்எனஇல்லை.பெம்பாலனவர்களின்தின்பண்டம்அதுவாகவேஇருக்கும். வடக்குத் தெருவின் வாசலை ஒட்டி இடது புறசந்தில் இரண்டாவதாய் காணப்பட்ட கட்டிட மாய்/

கடைக்கு என ஏது அப்பொழுதெல்லாம் தனியாக கட்டிடங்கள்.அதுவும் கிராமத்தில்/ அந்த வகையில் வீடே கடையாய் காட்சிப்பட்டுத்தெரிந்தது.சுண்ணாம்பு உதிர்ந்த சுவர்களும், வெள்ளை மங்கி பழுப்புகாட்டி கரை படிந்த சுவர்களுமாய் அழுக்குப் பிடித்த கட்டிடமாயும் காட்சிதரும்.

உப்பிலிருந்து காய்கறிவரை எல்லாமுமாய் அடைபட்டு காணக்கிடைகிற கடையில் என ஒரு பெரிய வம்பென்றால் எந்தப்பொருள் எங்கிருக்கிறது எனத்தெரியாதபடி எல்லாவற்றின் மீதும் எல்லாமும் கிடக்கும்.உப்பு மீது துவரம் பருப்பும்,பருப்பு மீது அரிசியும்,அரிசி மீது காய்கறிகளும் கறிவேப்பிலையும் எண்ணெய் டின்னின் மீது வெல்லக்கட்டிகளும், வெல்லக்கட்டிகளின் பக்கத்தில் சேவு டின்னும்,அதனருகில் சீவல் வைத்திருக்கிற கொட்டானுமாய் அதிலும், இதிலும் என மாறி,மாறி கிடக்கும்/

கடையின் வாசலிருந்த உப்பு மூட்டையின் அடியிலிருந்து தண்ணீராய் கசிந்து ஒழுகும். வாசலோரத்தில் கடைமுன்பாகதரையில்கசிந்து ஓடுகிறஉப்புத்தண்ணீரைக் கடக்க படகெல் லாம் தேவையிருக்காது.

அழுக்கடைந்து போயிருக்கிற அந்தக்கடை இருட்டடைந்து போயுமாய்.மின்சார வசதியில்லா த வீடு,கடை வாசலிருக்கிற உப்பு மூட்டையை தாண்டி கடைக்குள் பிரவேசிக்கையில்  ஒன்றின் மீது ஒன்றாய் சிதறி காட்சிப்பட்ட சரக்குகள் தரையிலும் சிந்திக் காணப்படுவதாக/

காசிநாதனும் அவரது மனைவியுமாய் அடைபட்டுதெரிகிற கடையில் இருக்கிற பலசரக்கின் நிறங்கள் அவர்களது உடலில் ஒட்டிக்கொண்டதா அல்லது இவர்களது நிறம் பலசரக்கில் பாய்ந்து போனதா எனதெரியாத அளவிற்கு இருப்பார்கள் அவர்களிருவருமாய்/

ஊரில்கூடசிலர்கேலியாகபேசிக்கொள்வதுண்டு.”ஊர்பஞ்சாயத்தக் கூட்டி மொதல்ல அவுங்க ரெண்டு பேரையும் சுத்தமா குளிக்கச் சொல்லிச் சொல்லணும்”என/

அம்மாதிரியாய் காட்சிப்பட்டுத்தெரிந்தவர்கள் உடையிலும், கூடவா அப்படித் தெரிய வேண் டும்?

எங்கும் காணக்கிடைப்பதாகவே காசியப்பன் கடைகள்/

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

காட்சிகள் சிறு வயதில் இருந்த ஒரு கடையை கண்முன்னே கொண்டு வந்தது...

பூனை நல்லதே செய்து விட்டதோ...? அவர்களின் உழைப்பு கண்ணை விட்டு நீங்க மறுக்கிறது...!

வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

ஒரு சிறுகதையைப் படித்த திருப்தியை அளித்த அருமையான பகிர்வு...
வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கவியாழி said...

கதை நன்று .அந்தகால நிகழ்வை என் கண்முன்னே நிறுத்தியது.வாழ்த்துக்கள் தொடருங்கள்

சசிகலா said...

வெள்ளந்தி மனிதர்களின் மத்தியில் சில நிமிடங்கள் வாழ்ந்த மகிழ்வை தருகிறது தங்கள் எழுத்து நடை.. வயல்வெளிகளின் வர்ணனை அக்காட்சியை கண் முன் கொண்டு வந்தன. மிக்க நன்றிங்க.

vimalanperali said...

வணக்கம் கவியாழி கண்ணதாசன் சார்,நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்,நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/