16 Jul 2013

மறக்க முடியவில்லை.,,,,,


ஆமாம் தாயே மறக்கஇயலவில்லை .
கருங்கல் உரலில் நீ இடித்துத் தந்த 
எள்ளுருண்டையின் சுவையை.
ஆமாம் தாயே மறக்கஇயலவில்லை .
துவரங்காய் பறித்து 
அவித்துத் தந்த நாட்களை. 
ஆமாம் தாயே மறக்க இயலவில்லை.
உளுந்தம்காயும் தட்டாம்பயறும்,நிலக்கடலையுமாய் 
நீ நிலத்திடமிருந்து 
வாங்கித் தந்த நாட்களை.
ஒவ்வொன்றின் அறுப்பிலும்
ஒவ்வொரு சுவையும்,வாசனையும் 
உணர்த்தி மறைந்து போன
உன்னையும், 
வீட்டுமனைகளாகிப் போன
விளை நிலங்களையும் மறக்கமுடியவில்லை




5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள் அப்படித்தான்...

படத்தில் உள்ளதும்... இனி படத்தில் தான்...!

Tamizhmuhil Prakasam said...

என்றும் மறவா நினைவலைகள்...

பெற்ற தாயின் அன்பும், நிலத்தாயின் அன்பும் என்றென்றும் போற்றி வணங்க வேண்டியவையே !!!

அழகான வரிகள் ஐயா...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களதுவருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.நிலத்தாயும்,பெற்றதாயும் வணங்கப்பட வேண்டியவர்கள் என கருத்துக்கூறிய தங்களின் வருகைக்கு நன்றி/

vimalanperali said...

இனிய நினைவிகலை தொடர வைக்கலாமே?திண்டுக்கல் தனபாலன் சார்,