27 Jul 2013

தண்டவாளம்,,,,,


                                                                                           

       எனது மனைவியின் தொலைபேசியழைப்பு என்னைத் தொட்டு எழுப்பிய போது மணி அதிகாலை மணி அதிகாலை 3.45 அல்லது 3.50 இருக்கலாம். விண் வெளுக்க ஆரம்பித் திருந்தஅதிகாலைபொழுது.        
                             இப்படியானஅதிகாலையின்அமைதியானபயணமும்ஒருவிதசுகம்அளிப்பதாகவே.

     காக்கைகளும்,குருவிகளுமாய் தூக்கம் கலைந்து சோம்பல் முறித்து தன்னை மறுநாளின் சுழற்சிக்கு தயார்படுத்திக் கொண்டிருந்த அழகிய பொழுது/இருள் விலகி பகல் தன்னை உள்நுழைத்துக் கொள்ள தயாராய் இருந்த நேரம்.

    பூக்கள்மலர்கிறமெல்லியஓசையையும்,பறவைகள் பறக்கிற ஒலியையும்,மரங்கள் ஆடும்மென் ஒலியையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தபொழுது என்னை
தாங்கிபயணிப்பதாயும்,நான் கொண்ட எண்ணங்களை சுமந்து,சூழ்கொண்டுமாய் பயணிக்கிற பொழுதாயும்  இருந்தது.

   அதிகாலை ஐந்து அல்லது விழிப்பு  வருகிற நாலு மணிக்கெல்லாம் எழுந்து மாடுகளை எழுப்பி  அதன் நலம் விசாரித்து, தண்ணீர் காட்டி, மாற்று இடத்தில் கட்டி கூளம் போட்டு,தொழுவை சுத்தம் செய்து மாடுகளை திரும்பவும் அதே இடத்தில் கட்டிப்போட்டு விட்டு மொழு,மொழு கடை டீயை சாப்பிட்ட பின்னாலானவிடியலில் ஆரம்பிக்கிற அசுர உழைப்பு காடு,கரைகளின்,மண்ணின் மலர்வையும்,விரிவையும், வாசத்தையும் அதன்சுக, துக்கத்தையும் அறிமுகம் செய்து விட்டு போன நாட்களிலிளிருந்து நகன்று இன்று ஒரு அரசு அலுவலகனாக உருவெடுத்து பயணம் செய்து கொண்டிருக்கிற வாழ்க்கை வாய்க்கபெற்றது நான் செய்த பெரும் பாக்கியமாகவே என்னுள் எப்பொழுதும் உறைந்து கிடக்கிறது.

     அது விரிந்தெழுகிற நேரங்களில் இம்மாதிரியாய் சூழ்கொள்கிற நினைவுகளும், அது தரும் இன்ப, துன்ப  மனப்பிரலயங்களும் சொல்லி மாளாது.

அப்படி சொல்லி மாளாத தருணங்களாய் என்னுள்ஏற்பட்ட ஏகமானதுகளின்
குவியல்களுடன்பயணித்துக்கொண்டிருக்கிறநான்இப்பொழுதுஉங்கள்முன்இதோ இப்படி யாய் காட்சிதந்தபடி/

     முன்புறம் இரண்டும் பின்புறம் நான்குமாக ஆறு சக்கரங்களை கொண்டிருந்த செவ்வக வடிவ நீள ஊர்தியில்தான்எனது பயணம்  தொடங்குகிறது.  அதைதான் பேருந்து என்றார்கள்.

     வாரத்தின் முதல் நாள்  பிள்ளையார் சுழியிடும் திங்களன்று அதிகாலை எனது பயணம் தொடங்குகிறது.

 மூன்றரைமணிக்குஇந்தபஸ்சைபிடிக்கநடுஇரவின்பின்பகுதியானஇரண்டு மணிக்கெல்லாம் எழுந்து விடுகிறேன்.கிட்டத்தட்ட ஊரும் அக்கம்,பக்கமும் ஆழ்ந்த தூக்கத்திலிருக்க நான் மட்டும் ஜில்லிட்டுப் போயிருக்கும் நீரை அள்ளி அவசர,அவசரமாகவும்,ஒரு வித மன பதட்டத்துடனும் குளித்துக்கொண்டிருப்பேன்.

    இன்று அம்மாதிரியான பதட்டமெல்லாம் கூட இல்லைதான்.வேகவேகமாக குளித்தாலும் கூட ஒருவித பதற்றமற்ற தன்மையில் குளித்து முடித்த திருப்தி இருந்தது.

     பச்சைக்கலர் பிளாஸ்டிக் வாளி,பச்சைகலர் கப்,பச்சை கலரில் இருந்த குளியல் சோப்,,,, லேசாக அழுக்குப்பிடித்துப்போயிருந்த குளியலறை,பக்கத்தில் இருந்த கழிவறை என எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. பார்த்து அதனை   மதிப்பிட்டுவிடமுடிகிறது,

     வீட்டுக்கு கூடிய சீக்கிரம் பெயிண்ட் அடிக்க வேண்டும்.நல்ல கலராகப்பார்த்து.
    அடுத்ததடவைசோப்புவாங்கும்போதுஅதிகமாய்ஒன்று வாங்கவேண்டும்.

வாளியையும் கப்பையும் மாற்ற வேண்டும்,அரத பழசாகிப்போனது.வழுக்கும் பாத்ரூம் தரையை சுத்தமாகக் கழுவச்சொல்ல வேண்டும் மனைவியிடம்/எங்கிற மாதிரியான சிந்தனை கள் வந்து விடுகிற இடைவெளிக்கிடைத்த மனோநிலை இருந்தது.

    என்னதான் இருந்தாலும் சனிக்கிழமை பின் மதியம் அலுவலகம் முடித்து அவசர, அவசரமாக கிளம்பி வருகிற அந்த சந்தோசம் இல்லை.அவசர,அவசரமாக அலுவலக பணிகளை முடித்து விட்டு அன்பின் மனிதர் சக்கரபாணியும்,ரகுராமும் சேர்ந்து வாங்கித் தருகிற சாப்பாட்டிடை கோழி தவிட்டை முழுங்குகிறமாதிரி முழிங்கி விட்டு(பின் ஏழுமணி நேரம் தாங்க வேண்டுமே வயிறு)புது பஸ்டாண்ட் வந்து பஸ் ஏறும்  போது,அல்லது பஸ் ஏற காத்திருக்கும் போது பார்க்கிற எல்லாமே அழகாகத்தெரியும், பஸ்நிலையமே சிரித்து,பூப்பூத்து த் தெரியும்.அழுக்குப்படிந்திருக்கும் பேருந்தும்,-

முகம் கடுத்து எரிச்சலாகப் பேசுகிற டிரைவர்,கண்டக்டரும் கூட நேசம்மிக்க வர்களாய்த் தெரிவார்கள்.பேருந்தின் டயர்களில் சிக்கியிருக்கிற தூசியும்,படிந்திருக்கிற அழுக்கும் கூட அழகாகத்தெரியும்.பஸ்சினுள்ளே கிழிந்து தொங்குகிற பஸ்ஸின் சீட்டுகளும்,நெரிசலும் கூட இடைஞ்சல் பண்ணி விடுகிற தோற்றத்தைகொடுத்துவிடுவதில்லை.யாரைப்பார்த்தாலும் நட்பாகவும்,சினேகமாகவும் தோன்றும்.

     மொத்தத்தில் பூத்து விடுகிற மனதோடு பஸ் ஏறுகிறநீண்ட பயணம் சனி இரவு முடியும். நான் வந்து இறங்குகிற நேரம் எனது வீடிருக்கும் பகுதிக்கு பயணிக்க  டவுன் பஸ் அல்லது மினி பேருந்து ஏதாவது ஒன்று இருந்தால்தான் உண்டு.இல்லையெனில் ஆட்டோவே சரணகதி/

     நான் கும்பகோணத்திலிருந்து சாத்தூர் வந்ததை விட அதிகம் பத்து ரூபாய் கொடுத்து பயணிக்க வேண்டியிருக்கும்.அம்மாதிரியான நேரங்களில் பயணச்செலவில் அதுவும் ஒன்றாகிப்போகும்.

      வீடு போய் இறங்கியதும் வருகிற நிம்மதி,மனபூரிப்பு மனைவி,மக்களது அருகாமை என எல்லாம் சேர்ந்து ஞாயிறு ஒரு நாள் சந்தோசமாகக்கழியும்.

     திரும்பவும் திங்கள் கிழமை அதிகாலை தொடங்குகிறஅலுப்பான  சுழற்சியின் வட்டத்தில் காணாமல் போகிற சந்தோசம் எனது பயணத்தினுள்ளே ஊடறுத்து நிற்கிறது.
    அதிகாலையின் பிஞ்சு இருட்டில் பஸ்  ஏறுகிற நான் நன்கு புலர்ந்த காலை 9.30 அல்லது 10.00 மனிக்கு பிழைப்பு தேடி வந்த ஊரில் இறங்குவேன்.

    அதுதான் என் போன்றோரை பொறுத்தவரை வாரத்தின் முதல் நாள்.அந்த நாளின் ஆரம் பம் மிக சந்தோசமாகவே இருக்கும்.நன்றாக வேலை செய்வேன். வயிறு நிறைய நன்றாகச் சாப்பிடுவேன்.நன்றாகத்தூங்கியும்கூட விடுவேன்.காலையில் மனைவி கொடுத்து விட்ட டிபன்,மதியம்ஹோட்டல் சாப்பாடு,இரவும் அப்படியே இருக்கும் நகர்வு  நன்றாகவே/
 இரண்டாவது நாளும் அப்படியே/

மூன்றாம் நாள் கொஞ்சமாக நொண்டியடிக்க ஆரம்பிக்கும் மனது.சாப்பாடு தண்ணீர்கொஞ்சம் மட்டுப்படும். உடலும்,மனதும் டல்லாகும்.எரிச்சல் மிகும்.
செல்போன் பேச்சு அதிகமாகும்.250 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கிற எனது வீடு நான் தங்கியிருக்கும் அறையின் வாசலில் வந்து வீற்றிருக்கும்.மனைவி மக்கள் கண்முன்னே நடமாடுவார்கள்.ஏற்கனவே இருக்கிற அல்சர் கூடும்.எனது அறையிருக்கும் தெருவிலிக்கிற ஓய்வு பெற அரசு மருத்துவரிடம் 40 ரூபாய்க்கு ஊசி போட்டுக் கொள்ளவேண்டியிருக்கும்.
     மீதமிருக்கிற இரண்டு நாட்களில் நான்கு இட்லி மூன்று இட்லியாகும்.ஒரு சப்பாத்தி அரை சப்பாத்தியில் நின்று போகும்.டீக்குடிப்பது தள்ளிப்போகும்.குளிப்பது,துணி துவைப்பது பல்விளக்குவது,ஷேவிங்க் செய்து கொள்வது எல்லாம் அப்படியப்படியே/

     நானும் எனது மேலாளரும்தான் அறை எடுத்து தங்கியிருந்தோம்.அறை என்றால் அது ஒரு வீடுதான் சின்னதாய்.புதிதாய் மணமானவர்கள் தங்கிக்கொள்ளுமளவுக்கு/

     சுற்றிலும் தென்னை மரங்களும்,பிற மரங்களுமாய் வளர்ந்து தெரிந்த எங்களது அறையின் கீழேதான் வீட்டு உரிமையாளர் குடியிருந்தார்.

தென்னையின் கீற்று பச்சையும்,மாமரத்தின் வெளிறிய,கரும் இலைகளும் மனம் சூழ்ந்து கொண்டதாகவே எப்பொழுதும்.

     கீழேதான் வீட்டின் உரிமையாளர் குடியிருந்தார்.நல்லதண்ணீர்,நல்ல காற்று,நல்ல இட வசதி,நல்ல சூழல் என எல்லாம் பொருந்தித் தெரிந்த இடத்தில்தான் எங்களது உடலும், உயிரும் மையம் கொண்டிருந்தது.

இரண்டு,இரண்டுபேர்களாய்இடதுபக்கம்அமர்ந்திருந்தஇருக்கைகள்9வரிசைகளாகவும், மூன்று,மூன்று பேர்களாய் வலது பக்கம் அமர்ந்திருந்த இருக்கைகள் 11 வரிசைகளாயும் ஒன்றன் பின் ஒன்றாக காட்சி தந்தது.

     பின் பக்க வாசலோரம் சற்று பின்தள்ளி நின்றிந்தேன்.என்னைப்போல மூன்று பேர் நின்றிந்தார்கள். முன்புறவாசலில் ஒருவர் அமர்ந்திருந்தாரரிருக்கைகளின் நெருக்கடி மிகுந்து காணப்ப்படுகிற நேரங்களில்இதுமாதிரி பார்க்க முடிவது சாதாரணமாகிப்போன ஒன்று.

    இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தன.அனைவரும் அனேகமாக தூங்கி விட்ட நிலையில் இருந்தார்கள்.

    பஸ் ஓடிய சப்தத்தையும் நடத்துனர் டிக்கெட் கேட்ட சப்தத்தையும் தவிர வேறொன்று மில்லை.

    கலர்,கலராக துணி போர்த்தியிருந்த இருக்கைகளின் அருகில் நின்றிருந்த கம்பியில் சாய்ந்திருந்தேன்.கம்பிகளில் பூசியிருந்த நிக்கல் எனது கண்ணில் பட்டு டாலடித்தது. டாலடித்ததின் ஊடாக பெயிண்ட் உதிரிந்து உருவம் காட்டிய கம்பி பலவாறாக அர்த்தம் சொல்லியவாறு/

    நான் நின்றிருந்த பக்கத்து இருக்கைப்பெண் அடர்நிறத்தில் புடவை கட்டியிருந்தாள் .அவளருகே அமர்ந்திருந்தவளினது புடவை  லைட் கலரில்.அவளது மடியிலிருந்த குழந்தை லேசாக  புரண்டு படுத்து சிணுங்கியது.

     பஸ்ஸினுள் ஒலித்த பாடல் சம காலத்தைய,பழைய காலத்தைய  நினைவுகளை சுமந்து சுற்றியபடி/

     பேருந்தின் விளக்கு ஒளியில் சாலையின் தெளிவும்,அதிகாலையின் சுகந்தமும்/

    இவை எல்லாமுமாய் என்னுடன் உறவாடிக்கொண்டிருந்த நேரத்தில்தான் எனது மனைவி யிடமிருந்து கை பேசிஅழைப்பு.

    அழைப்பையும்,உறவையும் துண்டிக்க மனமில்லாதவனாக, எண்ணங்கள் சுமந்தவனாக எனது பயணம் தொடர்கிறது. 

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் பயணம்...!

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களதுவருகைக்கும், கருத்துரைக்குமாக/

இளமதி said...

உங்கள் எழுத்துக்களை ரசித்துக் கொண்டே நானும் பயணித்தேன் சகோ!

மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள்!

Yaathoramani.blogspot.com said...

அந்த அந்த கணத்தை அப்படியே ரசித்தலோடு அல்லாது
அதை அப்படியே அனைவரும் ரசிக்கத் தரும்
தங்கள் எழுத்துத் திறன் பிரமிப்பூட்டுகிறது
தொடர வாழ்த்துக்கள்

மாதேவி said...

தொலைதூரம் வேலை நிமித்தம் பிரிந்து வாழ்பவர்களின் சிரமங்களையும்.

பயணத்தை இனிக்கவும் தந்துள்ளீர்கள்.

vimalanperali said...

வணக்கம் இளமதி அவர்களே,
நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களதுவருகைக்கும் கருத்துரைக்குமாக/பயனங்கள் விதைக்கிற காட்சிகளும்,சொல்லிசெல்கிற விஷ்யங்களும் நம்மை வேறொரு தளத்தில் நீந்த் அவைக்கின்றன/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/பிரமிப்பு உங்கள் எழுத்திலும் உள்ளது,

vimalanperali said...

வணக்கம் மாதேவி அவர்களே,நன்றி தங்களது வருகைக்கும் , கருத்துரைக்குமாக/