7 Jul 2013

ஆனாலும்,,,,


ஆனாலும் போயிருக்கலாம்
என்றே  என்னத் தோனுகிறது .
திட்ட மிட்டபடியே சென்றிருக்கலாம் .
சிறப்பு  நிகழ்ச்சியை ஒலி பரப்பி
தொலைக்காட்சியில் மனது  லயித்து  விட
அமர்ந்து  விடுகிறேன்  .
பச்சைக்கலர்  புடவையும்
கருப்புக்கலர் ரவிக்கையும் அணிந்திருந்த
மனைவி ஒருபக்கமும் ,
பெர்முடாசும் வெள்ளை பனியனுமாய்
இருந்த மகன் மறு  பக்கமுமாய்
நைட்டி  அணிந்திருந்த இளைய மகள்
கழுத்தைக்கட்டியபடிசுற்றிலுமாய்
காலைச்சாப்பாட்டின்இனிய  நேரமும்
தொலைகாட்சி  நிகழ்ச்சிகளும்
எங்களது பேச்சுபரிமாறல்களும்
திட்ட்டமிட்டதை 
மறக்கடிக்க செய்துவிடுகிறதுதான் .
ஆனாலும்     போயிருக்கலாம்
என்றே  இந்தக்கணம் வரை நினைக்க தோனுகிறது .                                                                                    
   

8 comments:

ராஜி said...

முதல்ல தொல்லைக்காட்சி இணைப்பை எடுத்துடுங்க. அப்போதான் எல்லாம் சரிப்படும்

Tamizhmuhil Prakasam said...

பேச்சின் சுவாரஸ்யத்திலும், தொலைக்காட்சியின் சுவாரஸ்யத்திலும் சில வேளைகளில் சிலவற்றை நாம் மறந்து விடுவதென்னவொ உண்மை தான்.

vimalanperali said...

வணக்கம் ராஜி அவர்களே/தொலைக்காட்சி அல்ல பிரச்சனை.லியிப்புதானே?தொலைக்காட்சி இல்லையென்றால் வேறொன்று,நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.சுவாரஸ்யங்களில் குடிகொண்டுவிடுகிற மறதி,,,,,சிலசமயங்களீல் இப்படியெல்லாமும்,இது தாண்டியுமாய்/நன்றி தங்களதுவருகைக்கும், கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

ஆனாலும் போயிருக்கலாம்...
அழகியலான கவிதை.

ezhil said...

தொலைகாட்சி தொல்லைக்காட்சியானாலும் குடும்பத்துடன் இயைந்து இருக்கும் சந்தர்பங்கள் மகிழ்வுதானே.....

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்.நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/