14 Aug 2013

இளமை இதோ,இதோ,,,,,,,


  
அதுதான்காதலா,சொல்லத்தெரியவில்லைசரியாக/முன்பின்காதலித்தறியாஅனுபவம் காதல் மயக்கத்தில்,சொற்ச்சிலம்பத்தில் பொய் பேசி அறியா தன்மை.மருந்துக்கும் கூட மனம் கட்டு ண்டு கிடக்காத நாட்கள் என இருந்து பழகி விட்டதில் காதலை ப்பற்றி ஒன்றும் தெரியாத ஜீரோவாக.

சரி தலைவரிடம் கேட்டு வைப்போம் இதைப்பற்றி,காதலின் மேன்மைபற்றியும், புனிதம் பற்றி யுமாய் பேசுகிற,சொல்லிச்செல்கிற நல்ல உள்ளங்களில் தெரிவு பட்டுத் தெரிகிறவராய்/

எனக்கு நினைவு தெரிந்த நாளிருந்து அவர் அப்படித்தான் காட்சிப்பட்டு தெரிவதாக உணர்கி றேன்நாங்கள்கூட்டமாகவோஅல்லதுநான்கைதுபேரோஅமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிற தனிமையில்அவர் அப்படித்தான் பதிவு செயவார் அவரது இருப்பை/

காதலின்முதற்சொல்,,,,என ஆரம்பித்து நீளும் அவரது உரையில் நாங்கள் கொஞ்சம் அசிரத் தை காட்டினால் அவரது பேண்ட்டில் அவரது பெயரையும்அவரதுகாதலியின் பெயரையுமாய் எழுத ஆரம்பித்து விடுவார்.அந்த அளவில்தான் எனக்கு காதலைப் பற்றித்தெரியுமே தவிர நேரடி அனுபவம் வாயக்கப்பெறாத அபாக்கியவானக நான்.

மாலை ஆறு அல்லது ஆறரையின் அந்தி சாய்வில் நான் மற்றும் எனது சக்கடா இரு சக்கர வாகனமுமாய்.அதன்மீதுநான்அமர்ந்துவருகிறேனாஅல்லதுஎன்மீதுஅதுஅமர்ந்து பயணிக்கிற தாஎனபிரித்தறிய முடியா தன்மையில்வந்துகொண்டிருந்தநான்மெயின்ரோடுதாண்டி உள்ளே  வீதியில்  நுழைகையில் உன் மீது என் பார்வை/ 

பாலக்காரரிடம் பால்வாங்கிக்கொண்டிருக்கிறாய்நீ.50 வயதின் மூப்பை உடம்பில் காட்டி/

சிவப்புக்கலரில் பெரிது பெரிதாய் வெள்ளைப்பூக்கள் பூத்திருந்த  சேலை.ஆரஞ்சு வர்ணத்தில் மேட்சாக சட்டை.நன்றாகவே இருக்கிறது,

அவைகளை விற்ற கடையும்,வாங்கிய இடமும் அப்பு அண்ணன் கடையாக இருந்த போதிலும்  அதை நெய்த கைகள்,நூலெடுத்து,பாவு முக்கி பதம் பார்த்து மீட்டெடுத் துஉயிரூட்டிய மனிதர்கள் எவர்,எங்கிருக்கிறார்கள் அவர்கள், அவர்களது நிலை என்ன? ஏது செய்ய அவர்கள் விதிக்கப்பட்டிருக்கிறார்கள்,தொழில்  கருகிப்போய் நிற்கிற இந்நேரம்,,,,,,,?என்கிற கேள்வியும், கிடைக்காத பதிலுமாய் உன்னை ஏறிட்ட வாறு நான் ஊர்ந்து வந்து கொண்டிருந்த அந்தி  சற்றே சற்றே கண் அயர்ந்ததாயய் காட்சிப்பட்ட வேளை/

தன்னில்ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகளையும்,பூச்சிகளையும், வண்டுகளையும்  இன்னமும் பிற,பிறஜீவராசிகளின்நடமாட்டத்தையும்தன்னில்தாங்கிபடரவிட்டிருக்கிறதாய் இருந்த பூ மலர்கிற வேலையில் மண்விரிந்து சிரித்த முகம் கொள்ளா சிரிப்புடன் கைகோர்த்தவாறாய் வந்து கொண்டிருக்கிறேன்.

என்ன இது அந்தி சாய்கிற வேளையாய் செவியில் வந்து விழுகிற குயிலின் சப்தம். கூவிட்டு த்தான் போகட்டுமே?தன் குரலை சங்கீதமாய் வெளிப்படுத்த அதற்கு ஏது நேரம் காலம் ?நேரமற்று,காலமற்று ஓடோடித்திரிகிற உழைப்பின் மனிதர்களை தன்வயப்படுத்தி மனசாந்தி கொள்ளச்செய்கிற குரலாய்/

என் வீட்டின் பக்கவாட்டு வெளியிலிருந்த மரங்கள் வெட்டப்பட்ட பின்பு அது இருந்த இடம் இப்போது பசுமையை மாற்றி இருந்த வெற்றிடமாய்/வேப்பமரங்கள் இரண்டு ,பன்னீர் மரங்கள் மூன்று என அவைகள் அனைத்திலுமாய் பாரபட்சமின்றி கூடுகட்டி குடிகொண்டிருந்த பறாவைகள் இப்போது,,,,,,,,,,,?அவைகளில் ஒன்றுதான் இந்தக்குயில் சப்தம் என நினைக்கிறேன்.

வெறுமை பூத்த வெற்று வெளிகளிலில் இருக்கப்பிடிக்காமல் தன் ஒற்றைக்குரல் உயர் த்தி எதிரும், இசைவுமாய் தன் குரலை பதிவு செய்யும் எதிர்ப்பு  அது.இப்போது ”ஐ வாண்ட் ட்ரீ”ஐ வாண்ட் ட்ரீ,,,,,,,,என இந்த வெளியெங்கிலும் இன்னும் இன்னமுமான பூமியின் பரப்பெங்கும் பரந்து திரிந்து ஓங்கி ஒலிக்கும் தன் குரலை பதிவு செய்த அந்தகுரல் வந்த திசை நோக்கி பார்வை கழட்டி அனுப்பி விட்டு பயணத்தை தொடர்கிறேன் பயணித்துசென்ற பார்வை குயிலை பார்த்து விட்டு வந்த பின்பாய்/

தொடர்ந்த பார்வை,மண்,மரத்தின் சுவடுகளற்ற வெற்றிடம் இவை எல்லாம்தாண்டி வீடுகள் முளைத்துகிடந்தவீதிகளில் நம் வீடுநோக்கி வருகையில் கண்டகாட்சிதான்  என்னை இப்படியெல்லாமுமாய் பேசவும்,கேட்கவுமாய் வைத்திருக்கிறது. இந்த 50 திலும் எப்படி இப்படி இளைமை போர்த்தித்திரிகிறாய் என?

இளமைஉன் உடலிலா,மனதிலா,,,?அகத்தின்அழகு முகத்தில் தெரியும் என்றார்கள். தெரிந்து விட்டுப்போகடுமே,அதில் யாருக்கும் எந்த வித ஆட்சேபனையும் இருந்து விட முடியாது. சிலரானால் அதில் அபிப்ப்ராய பேதம் கொள்கிறார்கள்.அகத்தின் அழகு அகத்திலும், முகத் தின் அழகு முகத்திலுமாய் தெரிவு பட்டுத்தெரிந்து விட்டுத் தான் போகட்டுமே, ஏன் இப்படி தோற்றப்பிழை கொள்ளச் செய்கிறீர்கள்,,,, என்கிற சொல் உதிர்ந்த சொல்லை மனம் கட்டி வந்து  கொண்டிருந்த  வேளை விழியில் பட்டுஇதயம் படர்ந்த நீ பாவித்தெரிகிற அந்தியிலும் அந்த 50 லும் இளமை போர்த்தித் தெரிகிறவளாய்/ 

5 comments:

Yaathoramani.blogspot.com said...

காட்சியாய்
மனதில் படிப்பவர் மனதில்
தோன்றும் விதம் பதிகிற திறனும்
முடிக்கிறவிதமும் மனம் கவர்கிறது
வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

இளமதி said...

மொட்டவிழ்ந்து மெல்லிதாய் மணம் பரப்பிச்
சிட்டெனப் பறக்கும் சிறுகுருவியாய்ப்
பட்டெனத் தெறிக்கும் பண்பான வார்த்தைகளில்
கொட்டிச் சென்றகாதல் கொள்ளை அழகுதான்!

வழமை போலில்லாமல் இன்னும் சற்று அதிகமாக அழகு தெறித்த பதிவு சகோ! வாழ்த்துகிறேன்!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

த ம.3

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்/

vimalanperali said...

வணக்கம் இளமதி அவர்களே/
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/