23 Aug 2013

NO;6 பிச்சைத்தெரு,,,,,,,



அவர்கள் அனைவர் வீடுகளிலும் டீ.வி இருந்தது. அவர்கள் வசிப்பிடங்களின் அருகிலோ, சற்றுத் தள்ளி யோ சினிமா தியேட்டர் இருந்தது. அவர்கள் வசித்த ஊர்கள்அனைத்திலும் கேளிக்கை ;பொழுது போக்கு நிகழ்வுகளும், அதற்கான இடங்களும்நிறையவே இருக்கிறதுதான்.

ஆனால் அதையெல்லாம் விடுத்து அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள்? 

அலுவலகம்அலுவகம்விட்டால்வீடுபிள்ளைகள்படிப்புசினிமா,இதரகேளிக்கை களை விடுத்து அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள்?

அவர்கள்ஒன்றாய்க் கூடி சந்திக்கும் இடத்தில் அப்படி என்னதான் பேசிக் கொள் கிறார்கள்?பகிர்ந்துகொள்கிறார்கள்?திட்டமிடுகிறார்கள்?

பஸ்டாண்ட் அருகே உள்ள நெரிசலான பகுதியில் சரிந்து இறங்கும் அந்தத் தெருவின்இரண்டு பக்கமும் பெரியதும்,சிறியதுமாய் நிறுத்தி அடுக்கி வைக்கப் பட்ட வீடுகள். தெருவின் வாசலில் இடது பக்கமாய் சிறியதான மாரிய ம்ம ன் கோவில்.தெருக் கோவில் அது.அந்த கோவிலுக்கு தினசரி பூசை உண்டு. கோவிலின் எதிர் வீட்டுக்காரர்களேதண் ணீர் தெளித்து,கோலமிட்டு,சாமியைக் குளிப்பாட்டி சுத்தம் செய்து, எனமுறை வைத்து செய்வார்கள். 

இதுதவிரஅந்த கோவிலுக்கு வருடம் ஒரு முறை பொங்கல்உண்டு.(புரட்டாசிப் பொங்கல்) அடேயப்பா,பந்தல்அலங்காரம்,சீரியல்செட்,தெருவடைத்த ட்யூப் லைட் வெளிச்சம் ...........,,என தூள் பறக்கும். 

கோவிலின் அருகே பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலான மருத்துவமனை .கைராசிக்கார டாக்டர் என பெயர் எடுத்தவர்.

மருத்துவமனையும் கோவிலும் அருகருகே அமைந்து போனது தற்செயல் அதிசயமே. இது 

போலவே அந்த தெருவின்இருபக்கமும்மாறி,மாறி அமர்ந்திருந்தவீடுகள் பால் பண்ணை,பிரிண்டிங்க்பிரஸ்,பெட்டிக்கடை,டெலிபோன்பூத்,டீக்கடை , வீடுகள், வீடுகள்,வீடுகள்..... என கலக்கலாய் காட்சி தந்தவைகளுக்கு மத்தியில்தான் No;6 பிச்சை தெருஎன்கிற அடையா ளத்துடன் அந்தக் கட்டிடம் நின்றது.

வாழ்ந்து கெட்ட ஜமீன்தாரரின் வீடாய் அங்கங்கே பெயர்ந்து,உதிர்ந்த சிமெண்ட் பூச்சுடனும்,சுவற்றிலிருந்துவிழிபிதுங்கித்தெரியும்செங்கல்களுமாய் காலத் தின் சாட்சியாய் நின்ற அந்த கட்டிடம்தான் அவர்களது சங்க அலுவலகம். 

வாசலைக் கடந்ததும்பெரியதாய் 30 க்கு 15 என விரிந்த அந்த இடத்தில்தான் வரிசையாக சேர்களும்,டேபிள்களும்,நிறுத்திவைக்கப்பட்ட வரிசையாக சேர்க ளும்,டேபிள்களும்,நிறுத்திவைக்கப்பட்ட பீரோக்க ளும் முளைத்திருந்தன.

அந்த உயிர்ற்றவைகளுக்கு மத்தியில்தான், சங்கத் தலைவர்களும்,சங்க உறுப்பினர்களுமாய்/ 

நின்றுகொண்டும்,அமர்ந்துகொண்டும்,பேசிக்கொண்டும்,எழுதிக்கொண்டுமாய் இருந்தஅவர்கள் பல உணர்வுகளோடும், பல முகத்தோற்றத் தோடும்,பல பாவ னைகளோடும். 

அங்கிருந்தஇருக்கைகளில்இருந்தசெய்தித்தாள்கள்சர்க்குலர்கள்.நோட்டீ ஸ் கள்வால்போஸ்ட்டர்கள்இத்தியாதி,இத்தியாதிகள். 

ஆமாம் யார் அவர்கள் ?ஏன் இங்கு வரவேண்டும்?தினந்தோறும் கூடி கலையும் வேடந்தாங்கலாய் ஏன் அந்த கட்டிடத்தை பாவிக்க வேண்டும்? 


வேடந்தாங்கலாய் ஏன் அந்த கட்டிடத்தை பாவிக்க வேண்டும்?முன்பு நடை பெற்ற "அரசு ஊழியர், ஆசிரியர் வேலை நிறுத்தத்தில் சிறை வாசம்சென்று" பணிக்குத் திரும்பியவர்கள் போக அரசால் நயவஞ்சகமாக டிஸ்மிஸ் செய்யப் பட்டசங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கென "குடும்ப பாது காப்புநிதி"ஒன்றைஉருவாக்கி  அவர்களின் குடும்பத்திற்குத் தந்து அவர்களின் குடும்பம் அனாதரவாகதெருவில் நிற்காமல் பாதுகாக்கும் உன்னதமான லட்சியப் பணிகளையும்,,,,தெருவில் நிற்காமல் பாதுகாக்கும் உன்னதமான லட்சியப் பணிகளையும்,,,,சபை நடுவே உரியப் பட்ட பாஞ்சாலியின் சேலை யாய் இரவோடு,இரவாக பணிபறிக்கப்பட்ட" பத்தாயிரம் சாலைப்ப ணியாளர் களுக்காய்""ஒருமாதச்சம்பளத்தை" மூன்றுவாரங்களுக்குள் வழங்கவேண்டும், காலியாக உள்ள அரசுப் பணிகளில் (தற்காலிகம்)அவர்களுக்குமு ன்னுரிமை வழங்க வேண்டு ம். என்கிற தீர்ப்பைப் பெற்று தந்ததுமான பணியை யினை யும், இதரப் பணியினையும் வருடம் முன்னூற்றி அறுபத்தைந்து நாட்களும்
அவர்கள் செய்து கொண்டும் திட்டமிட்டுக் கொண்டும் இருக்கத்தான் செய்தார்கள். 
பணியையினையும்,இதரப் பணியினையும் வருடம் முன்னூற்றி அறுபத்தைந் து நாட்களும்அவர்கள் செய்து கொண்டும் திட்டமிட்டுக் கொண்டும் இருக்கத் தான் செய்தார்கள்.

சங்கப் பணிகளுக்காய் தனது சொந்த ஊரை விட்டுபல கிலோ மீட்டர் கள் தள்ளி வந்து, சங்க அலுவகத்திலேயே தங்கி தன் சுகம், துக்கம், உடல் சுகம், சுகவீனம் இன்னமும்,இன்னமுமான பிறவற்றை அங்குள்ள சங்கத் தோழர்க ளோடும் சங்கத்தோடும் பகிர்ந்துகொண்டு அங்கேயே ஐக்கியமாகிப் போன சோலைமாணிக்கம்கணேசன்,சுந்தர்ஜீ,இவர்களைவிடுத்தசங்கப்பணிகளுக்கா க அன்றாடம்சங்க அலுவல கம் வந்து போகும் மாதவராஜ்,காமராஜ்,மூர்த்தி, கண்ணன், பாலு,உலகநாதன்,கணேசமூர்த்தி,மாயமலைமுத்துராஜ்,செல்வின்,
பாலகுரு ராமர்,டெய்சி,மாரிமுத்து, கோட்டை, பிச்சை, அதிர்ஷ்டம், குமரேசன் ........இன்னமும் பெயர் மறந்து போன,எழுத விடுபட்டுப் போன(தயவு செய்து யாரும் கோவித்துக் கொள்ளக் கூடாது)

மிகவும் அருமையான தோழர்களை சுமந்து "No;6 பிச்சைத் தெரு" என்கிற அடை யாளத்துடன்நிற்கும்அந்தசங்கக்கட்டிடத்தையும்,,,,அவர்களுக்கானசங்கப்பணி களையும்,அவர்களுக்கென இருக்கிற குடும்பம்,உறவுகள்,பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் எதிர்காலம், டீ.வி,சினிமா,பொழுது போக்குகள் ,கல்யாணம் ,காதுகுத்து, கோவில் நிகழ்வு இன்னும்,இன்னுமான விசேசங்களை அவர்கள் எப்படிஎதிர் கொள்கிறார்கள்? குடும்பத்தோடும்,பிள்ளைகளோடும் அவர்கள் சந்தோஷித்துஇருப்பது எப்போது?

தெரு முனையில்இருக்கிற அந்த சின்ன மாரியம்மன் கோவில் பொங்கல் சந்தோஷத்தில்அவர்கள் பங்கு கொள்ள முடிகிறதா?அந்த கோவிலில் ஒலிக் கும் பாடல்களை ரசிக்கஅவர்களுக்கு நேரமிருக்கிறதா?அல்லது ரசிக்கும் மனோநிலையில் அவர்கள் இருக்கிறார் களா?ட்யூப் லைட் வெளிச்சம் சீரியல் செட்அலங்காரங்களைஅவர்கள்கண்டுகழித்திருக்கிறார்களா?அதற்காக அவர் கள் நேரம்ஒதுக்க முடிந் திருக்கிறதா?கண்டு கழித்திருக்கிறார்களா?அதற்காக அவர்கள்நேரம் ஒதுக்கமுடிந்திருக்கிறதா?இது தவிர சங்கப் பணிகளுக்காக அவர்கள் எடுக்கும்சம்பளமில்லா விடுப்பு, நிர்வாகத்தைஎதிர் கொள்ளும் போது நிர்வாகத் தரப்பிலிருந்து வரும்மிரட்டல்,ஷோகாஸ், சார்ஜ்சீட்,சஸ்பென் சன்,டிஸ்மிஸ்இவைகளால்அவர்களுக்கும்அவர்களதுகுடும்பத்திற்க்கும் ஏற் படும்மனஉளைச்சல்இன்னமும்,இன்னமுமான நிறைந்துபோன பிரச்சினை களை அவர்கள்எப்படியெல்லாம் எதிர் கொள்கிறார்கள்?என்பதுபோன்ற பல கேள்விகளைமனதில்இருத்தி,இவர்களைப்போன்ற"தியாகிகளை"கொண்டாடு வோம், 

அவர்களுடன்நல்லுறவைவளர்த்துவளப்படுத்திமனங்களில்மனிதச் சங்கிலிக ளை படரவிடுவோம்.





(பி,கு தற்பொழுதுமேற்கண்டமுகவரியில்அந்த சங்கஅலுவலகம் இயங்கவில் லை.வேறுஇடத்திற்குமாறிப்போய்விட்டார்கள்.முன்பிருந்ததலைவர்களும் பொறுப்பாளர்களும்இப்போது,எந்தெந்தஊர்களில்பணிபுரிகிறார்கள்எனத் தெரியவில்லை.எந்தெந்தபொறுப்புகள்வகிக்கிறார்கள்எனவும்தெரியவில்லை.   அவர்களுக்கெல்லாம் எனது ராயல் சல்யூட்)

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வேண்டிய கேள்விகள்... தியாகிகளுக்கு வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

நானும் அப்படி ஒரு பிச்சைத்தெரு போன்ற
வீட்டில் 20 ஆண்டு காலம் இருந்தவன் என்பதால்
அந்த வீட்டின் புனிதம் எனக்குத் தெளிவாகப் புரிந்தது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நீங்கள் இருந்த வீடும் புனிதம் பெற்றதாய்/நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/