12 Sept 2013

பிஞ்சு நீர்,,,,,


இறங்கிச் சொட்டிய நீரின் வரிகள் சொல்லிச் சென்ற சேதி யை அறிய காத்திருந்தபறவைகள்,வண்டுகள்,பூச்சிகள் எல் லாம்இடம்பெயர்ந்து போய் விட்ட நேரத்தில் கீழே நின்றிரு ந்த எனது மகனின் மீது இறங்கிச் சொட்டிய நீரின் துளி வெடித்த சப்தம் “டப்”என வெடித்துக் கேட்கிறது. 
வெடித்துக் கேட்டசப்தம்அங்கிருந்தயாருக்கும்கேட்காததா ய் இருந்திருக்கும் போல.யாரும் அப்படியெல்லாம் ஆச்சரி யமாக திரும்பிப் பார்த்து விடவில்லை.காக்கா, குருவி, மை னா,இன்னும் நிறைய,நிறையனவாய் நிறைந்து போன வைகள் எல்லாம் எதையும் அறியும் ஆவலற்று திரிந்ததாய் எனது மகன் சொல்கிறான். 
“அப்படியெல்லாம்இல்லை,அததற்கானவேலை அததற்கு, விட்டு விடு,--அதைப்போய் தொந்தரவு செய்து கொண்டு”
எனநான் பதிலுரைத்த எனது மகனுக்கு வயது பதிமூணு. ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.காக்கி பேண்ட்,ஊதா சட்டை கொண்ட பள்ளியின் யூனிபார்மில் பார்க்க நன்றாக இருந் தான். 
அவனது கலருக்கு ஏற்ற யூனிபார்ம் என எனது மனைவி அடிக்கடி சொல்லுவாள்.கேலி கூடப் பண்ணுவாள்.அந்த கேலிக்கு அவன் சிணுங்கும் சிணுங்கல் இருக்கிறதே ,அடே யப்பா,பார்க்க கண்கள் இரண்டு போதாது. 
காலையில் எழுந்து பள்ளிக்குக் கிளம்பி அந்த புத்தக மூட் டையை தூக்கி சுமக்கும்பிள்ளைகள் எல்லோருமே வரு த்தப்பட்டு சுமப்பவர்களாகிப்போகிறார்கள்.போதாத இரண் டு கண்களுடனேயே அதை பார்த்தவனாகிப் போகிற நான் அதன்படியேதோற்றமளித்தஅவனைப் பார்க்கிறேன். 
அவன்சொல்கிறான்.“அப்பா திரும்பவும் மழை ஆரம்பித்து விட்டது” என. 
“ஆகா என்ன செய்வது மழை பெரியதாக பெய்ய ஆரம்பித்து விட்டால் நமது பாடு சங்கடமே,ஆத்திர அவசரத்திற்கு ஒது ங்கிக் கொள்ளலாம்.இங்கு வரிசையாக நிற்கிற கட்டிடங்க ளில்,இருந்தாலும் அவை எவ்வளவு தாங்கும் இங்கு காத்து நிற்கிறமனிதர்களைஅவர்களின்எண்ணங்களை,ஆசைக ளை,நிராசைகளை,வெறுப்புகளைஇன்னும்,இன்னுமானவைகளை.” 
மாலைஆறு பதினைந்துக்குப் போகவேண்டிய வண்டி மணி 6.40 ஆகியும் இன்னும் கடந்து போகவில்லை. தென்காசி பாசஞ்சர்.6.15க்கு கிளம்பி இரண்டரை மணி நேரத்தில் தனது இலக்கை அடையும்.அந்தவண்டியின் கிளம்பல் என்று தாம தம் போலும்.அதன் பாதிப்பு கேட் அடைப்பிலும் தெரிகிறது. 
கால் மணி நேரமாய் ரயில்வே கேட்டின் அடைப்பு நிலை கொண்டிருக்கிறதுஎனகோபப்பட்டவர்கள்யாரையும் கவனி க்காதவர்களாய் எங்களது பேச்சு ஒருஓரமாக ஓடிக் கொண் டிருக்கிறது. மழை காலம் இது எங்கிருந்து வருகிறது நீரின் வரிஎனஅறியும்ஆவல்கிளம்பியநேரத்தில்ரோட்டை, ரோட் டோரகட்டிடங்களை,சினிமாதியேட்டரைமனிதர்களை,பேருந்துகளை,சுற்றிநின்றஇருசக்கரவாகனங்களை மற்றும் எல்லாவற்றையுமாகவும்,அவைகள் நின்றரோட்டடியிலு மாகப் பார்க்கிறேன். 
வேஷ்டிதுண்டு,கைலிசட்டை,பேண்ட்இன்சர்ட்,டீசர்ட்ஜீன்ஸ்என்கிறஆடைகளில்பொதிந்துகொண்டு,இருசக்கரவாக னங்களில்,பேருந்துகளில்,சைக்கிள்களில்,பாதசாரிகளாக காட்சிதருகிறார்கள்.வடிவமைத்து செதுக்கி,உதிர்ந்ததுகள் கள் போக மிஞ்சிய மனிதஉருவாய் காட்சிதந்த அவரவர் களின் மீது யாதொரு குற்றமும் இல்லை இந்த கணம் வரை. மூடிய ரயில்வே கேட்டில் காத்திருப்பதை தவிர்த்து.
அவர்களது காலடியிலும், பக்கவாட்டிலுமாகவும்,நின்று கொண்டிருந்த வண்டிகளின்ஓரமாயும்முழுவதுமாக பறந் து அமர்ந்திருந்த தூசியும்,அழுக்குமாய் காட்சியளித்ததார்ச் சாலையில் பறந்தகொசுக்கள்,ரீங்காரமிட்ட வண்டுகள்,
மாலையின் மயங்கலில் அடர்ந்த மரம் தேடி அடைந்த பறவைகளின் சப்தம்,,,,,,,,என காட்சியளித்த நேரம்தான் இந்த காட்சியும் பதிவாகிறது. 
மழைபெய்யவில்லையே,.காணோமே மழையை என அவ னிடம் சொன்னபோது “இல்லை எனது தலையின் மீது இப்போதுதான் இறங்கிச் சொட்டியது” என்கிறான். 
சுற்றிலுமாக பார்த்து விட்டு “இல்லை,மரத்தின் இலையிலி ருந்து இறங்கிச் சொட்டியிருக்க வேண்டும்.பெய்து முடித் திருந்த மழையின் மிச்சம் மீதி மரஇலைகளின் மீது ஒட்டி இருந்திருக்க வேண்டும்,அவைதான் இப்பொழுது உன்மீது மழை நீர் வரிகளாக இறங்கிச் சொட்டுவதாய் அறிகிறேன். மற்றபடிமழையெல் லாம்இல்லை”என்கிறேன். 
ரோட்டடி,வண்டிகள்,கார்கள்,மனிதர்கள்,மற்றஎல்லாவற்றையுமாக பார்க்கச் சொல்கிறேன்,ஆமாம் மழை பெய்ய வில்லை,என்பதை உறுதி செய்த அவன் என்னைப் பார்க்கி றான்.நான் அவனைப் பார்க்கிறேன்.திரும்பத்திரும்ப எனது பார்வை அவன் மீதும்,அவனது பார்வை எனது மீதுமாக மாறி,மாறி மோதிக் கொண்ட நேரத்தில் மரத்தை அண்ணா ந்து பார்த்த நான் அதன் நீள,நீளமானஇலைகளையும், அதன் அடர்த்தியையும்,அதன் ஆகுருதியையும்,அதன் வளர்ச் சியையும்,,,,,,,,, கண்டு வியக்காமல்இருக்க முடியவில்லை. ஐம்பது வருட சரித்திரம் உண்டு என்கிறார்கள்.அந்த மரத் திற்கு. 
ராமமூர்த்திரோடுஉருவானகாலத்திலிருந்துஇருக்கிறது என்கிறார்கள். 
இருக்கலாம்,ஐம்பதுவருடங்கள்மட்டும்இல்லை.அதற்கும்கூடுதலாகஇருந்தாலும்ஆச்சரியப்படுவதற்குஇல்லை. அவ்வளவு பெரியதாக தனது தோற்றம் காட்டி நின்றதை நான்கு பேர் சேர்ந்தால்தான் சுற்றி வளைக்க முடியும்.
“ஆத்தி எத்தத்தண்டி”என்கிற இலக்கணத்துக்கு மாறாததாய் காட்சியளித்தது.நான்குபேர்சுற்ற,நாற்பதுபேர்அதைபார்க்க,பூக்கள்பூக்க,இலைகள் உதிர,காய்கள் வெடிக்க, மறுபடியும் மறுபடியுமாய்இவையெல்லாம்சுழற்சியாய் நிகழ,,,,,,,
பார்ப்பவர்க்கும்,கேட்பவர்க்கும் ஒரே சந்தோஷமாகிப் போகிறது. .அந்த சந்தோஷம் நிலைக்க நான்,எனது என்றில் லாமல், நாம், நமது என யோசித்து அல்லது நிலை கொண்டு மரங்களை வளர்க்காவிடில் கூட அதிலிருந்து சொட்டும் நீரை ரசிக்க,ஏற்க கற்றுக் கொள்வோம் வாரு ங்கள். 
அடுத்துமழைநின்றகணங்களில் மரத்தடியில் நிற்கும் யாரு ம்மழைநீர்சொட்டுவதைக்கண்டுஅஞ்சிஒதுங்கிவிட வேண் டாம்என இதன் மூலம் கேட்டுக் கொள்ளப் படுகி றார்கள்.

4 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை.... அருமை...

மழைச்சாரலாய் எழுத்து...

இளமதி said...

மழை நின்ற பின்னரும் அதன் இலைகளிலிருந்து சொட்டும் நீர்த்துளியை ரசித்துச் சித்தரித்தை கதையை நான் ரசித்தேன்!

நல்ல ரசனைச் சொல்லோவியம்! வாழ்த்துக்கள் சகோ!

த ம. 2

vimalanperali said...

வணக்கம் சேகுமார் சார்,நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் இளமதி அவர்களே,நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/