9 Sept 2013

நெருஞ்சி,,,,,,,

            

ந்த சிறுவனுக்கு பத்து பதினோரு வயதிருக்கலாம்.
 
பின்னேஅந்தவயதிற்குரியசேட்டைகளும்,விளையாட்டுத்தனங்களும்இல்லா மலா இருந்தது அவனிடம்?
 
சீசன்விளையாட்டுகள்களைகட்டும் நேரம் எக்ஸ்ட்ராவாய் இரண்டு கை கால் முளைத்துவிடும்அவனுக்கு.   
 
 கிட்டி,பம்பரம்,எறிபந்து,செதுக்குமுத்து,டயர்வண்டி(சைக்கிள்டயரைஉருட்டி  விளையாடுவது) இன்னும் இன்னுமான நிறைய விளையாட்டுகளில் அவன் முன் நிற்பான்.
 
அவனுக்கு வாய் சரியாக பேசவராது.காதும் கேட்காது.ஆளே மெலிந்து வாடி மேனி கருத்துப் போய் உடல் ஒட்டி  இருப்பான்.பேச வராததாலும்,காது கேட் கா ததாலும் பள்ளிக்குப் போகவில்லை அவன்.
 
காலையில் எழுந்தததும் முகம் கழுவிகிறானே இல்லையோ  நேராக ஊர் மந் தைக்கு வந்து விடுவான்.மந்தையைஒட்டிய கண்மாய்க் கரை மேல் நான்கை ந்து இச்சி மரங்கள்.கரையை ஒட்டியஇரண்டுடீக்கடைகள்.காலைநேரம்அந்த டீக் கடையும்,இச்சிமரப்பறவைகளும் கண்மாய்க் கரையும் கொஞ் சம் பிஸியாகவே இருக்கும். அவைகள்தான்  அந்த சிறுவனின் பொழு து  போக்குக் களம்.
 
பறவகளை கல்லை வைத்து எறிய,டீக்கடைக்கு வருபவர்களோடு வாக்குக் கொடுக்க,கண்மாய்க்குள் போகிறவர்களோடு விளையாட்டு,சேட்டைகள் என இதுதான் அவனின் அன்றாடங்களின் ஆரம்பம்.
 
அப்புறம்,?
 
அப்புறமென்ன,,,,,,,,,எல்லாம் முடிந்தவுடன்காலையில் வீட்டுக்குப் போவான். அவனுக்கென ஈயத் தட்டில் சாப்பாடு,செம்பில் தண்ணீர் வீட்டில் காத்திருக் கும். இவனாக போட்டு சாப்பிட்டுக் கொள்ளவேண்டியதுதான்.அம்மா கூலி வேலைக்குப் போயிருப்பாள்.
 
விளையாட்டும் பொழுது போக்குமாய் சாப்பிட்டுவிட்டு ,,,,,,வீட்டை பூட்டி முன்பிருந்த மாதிரியே கதவு நிலையின் மேல் சாவியை வைத்து விட்டு கிளம்பிவிடுவான்.திரும்பவும்மந்தைக்குவருவான்.வேறென்னவிளையாட்டுதான்
.
விரும்பினால் மதியம் சாப்பிடப் போவான்.இல்லையென்றால் பட்டினியோடு ஏதாவது ஒரு மர நிழலில் தூங்கிப் போவான்.
 
சாய்ங்காலம் ஆனதும் மணிஅடித்ததுபோல விழித்துஎழுவான்.விழித்து எழுந் தவன் கண்ணை கசக்கியவாறே நேராக கண்மாய்க் கரைக்குச் செல்வான்.
 
அரைமணி நேரமாவது குளிப்பான்.கண்மாய் ஓரமாக உள்ள களிமண்தான் அவனுக்குசோப்பு.உடலுக்கும்சரி,துணிகளுக்கும்சரிஅவன்தேய்ப்பதுஅதைத் தான்.அதிலும் நைஸ் களிமண் கிடைத்தால் குளியல் கூட அரை மணி நீடிக்கும்.
 
குளித்துமுடித்துதுவைத்தஈரச்சட்டையாலேயேஉடம்பைத்துவட்டிக்கொள்வான். டவுசரை போட்டுக் கொண்டு சட்டையை உதறி உளர்த்தியவாறே நேராக வீடு செல்பவன் டவுசர், சட்டை மாட்டிக் கொண்டு தலை நிறைய அப்பிய எண்ணெயுடனும்,படிய வாரிய தலையுடனும் திரும்பவும் மந்தைப் பக்கம் அல்லது ஊருக்குள் வந்து விடுவான்.
 
வாய்பேசமுடியாத,காதுகேட்காத, குச்சிக்குச்சியான கைகளிலும் கால்களி லும் படர்ந்து போய் செதில்,செதிலாய் இருக்கும் சொங்கையும்,சொறியையும் சொரிந்து கொண்டே திரியும் அந்தச் சிறுவன் கிட்டத்தட்ட அந்த ஊருக்கே செல்லப் பிள்ளை.
 
ஆனால் அந்த செல்லப் பிள்ளையின் இறகுகள் அங்குலம்,அங்குலமாக பிய்த்து எறியப்பட்டு தீவத்து கொளுத்தபடுகிறது.
 
சென்ற வருடம் நடந்த அந்த  திருவிழாவில் திடீரென பற்றிக் கொள்கிறது ஊர் .
 
ஜாதிகளுக்குள்சண்டை.கோகொல்லேஎனஒரேஆர்ப்பாட்டம்,சத்தம்.எங்கும், எதிலும் பற்றிக் கொண்ட பதற்றம்.வீட்டிற்குள்ளிருந்து  பத்தடி தூரம் நடந்து போகக் கூட பயம்.ஒண்ணுக்கு இருக்கக் கூட கண்மாய்க் கரைக்கு சென்று வர பயம்.
 
அங்குல,அங்குலமாக சிதறிப் போட்ட நெருஞ்சி முட்களாக ஊரெங்க்கும் அப்பிக் கிடக்கும் கலவர பீதி.
 
தெருக்களில்,மந்தையில்,வீதிகளில் கோவில் முன் என அரிவாள்,கம்புடன் மனிதத்தலைகள்.ஆண்கள் கையில் அரிவாள் கம்பென்றால்,பெண்கள் கையி ல் விளக்கமாறு,அரிவாள்மனை.
 
பரஸ்பரம்இரண்டுதரப்பிலும்இப்படித்தானேஇருந்திருக்கவேண்டும்.எதனால், எப்படி வந்தது எந்த சண்டை என்பது தெரியவில்லை.யாராலோ எங்கோ பத்த வைக்கப் பட்டது இங்கு வந்து வெடித்திருக்கிறது.
 
ஆதிக்கம் செலுத்தும் மனோபான்மை உள்ளவர்கள் சாதாரணர்களின் மண் டையை திறந்து விஷவித்துக்களை ஊன்றி அவர்களை விஷஜந்துக்களாய் வளரவிட்டு ஊருக்குள் உலாவவிட்டு திட்டமிட்டு திராவகம் ஊற்றி எறிய விடப்படும் விஷஜுவாலைதானே ஜாதிச் சண்டை.
 
இதைநீங்களும் அறிவீர்கள்.நானும் அறிவேன்.நாம் எல்லோருமே அறிவோம்.
 
அந்த கலவரத்தில் ஒருவர் இறந்து போகிறார்.தோட்டங்காடுகளில் வெள் ளாமை பார்க்க ஆட்கள் இல்லை.விளைச்சல் எல்லாம் கொள்ளை போனது.
சரியாக நான்கு மாதம் போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. 
 
கோர்ட்,கேஸ்,ஆஸ்பத்திரி செலவு என குழைத்துப் போடப்பட்ட சகஜ வாழ்க் கை.
 
ஊர் முழுவதும் பதட்டமும் ,பயமுமாய் மனிதமுகங்கள்.நெஞ்ச்சில் நெருடிய நெருஞ்சிமுட்களுடனானநினைவுகளைசுமந்துகொண்டுபூச்சாண்டிகுடி கொண்ட மனதுடன் அந்த ஊர் மக்கள்.முட்கள் மண்டிய புதராய் ஆகிப் போன அந்த ஊரின் சூழல்.,,,,,,,,,,,,,,.
 
இப்பொழுதெல்லாம் அந்த சிறுவனை கண்மாய்க் கரைப் பக்கம் காணமுடிய வில்லை.
 
அவனதுகண்மாய்க்கரைகுளியல்கிடையாது.சீசன்விளையாட்டுகள்கிடையா து.அவன்சகமனிதர்களுடன்கொண்டிருந்த அந்நியோன்யம் கிடையாது.டீக் கடை வம்பு கிடையாது.சேட்டைகள்கிடையாது
 
இப்படியான கிடையாது,கிடையாதுகளையும், தொலைந்து போனதுகளையும் இன்னும் எத்தனை காலம்தான் காணப் போகிறோம் நாம் எனத் தெரியவில் லை


12 comments:

Tamizhmuhil Prakasam said...

// இப்படியான கிடையாது,கிடையாதுகளையும், தொலைந்து போனதுகளையும் இன்னும் எத்தனை காலம்தான் காணப் போகிறோம் நாம் எனத் தெரியவில் லை.

நியாயமான கேள்வி.

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வேண்டியது...

Yaathoramani.blogspot.com said...

அந்தச் சிறுவனை நல்ல குறியீடாகக்
கொண்டால் பல காணாமல் போனதுகள்
நமக்கு தெரியக் கூடும்
சிந்தனையைத் தூண்டிப்போகும்
அருமையான பகிர்வு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma

இளமதி said...

உங்களின் சிந்தனையும் சொற்களின் காட்சிப்படுத்தலும் அற்புதம்!

நெஞ்சுக்குள் வந்து அப்பிக்கொண்டது சிறுகதை!
இங்கே ஜாதிக்கலவரமென கூறி விபரித்த விபரணம்
எனக்கு என் நாட்டில் நடந்த... இனக்க..லவ..ரமாய்
நினைவில் விரிகின்றது சகோ!

மிகவும் ஆழ்ந்து (சு)வாசித்தேன்!.. அருமை!
வாழ்த்துக்கள்!

த ம.5

vimalanperali said...

வணக்கம் தமிழ்முகில் பிரகாசம் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தன்பாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்.

vimalanperali said...

வணக்கம் இளமதி அவர்களே.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

வெற்றிவேல் said...

அண்ணா வணக்கம்,

வலைச்சரத்தில் தாங்கள் என்னைப் பற்றி எழுதியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்வைத் தருகிறது, பெருமையாகவும் உள்ளது. மிக்க நன்றி அண்ணா...

vimalanperali said...

வணக்கம் வெற்றி வேல் சார்,உங்களுக்கு மகிழ்ச்சியையும்,பெருமையையும் நான்(ங்கள்)தராமல் யார் தர/நன்றி வணக்கம்/