9 Oct 2013

கோழிறெக்கை,,,,,,


                உதவி என கேட்டவனிடம்
முகத்திற்கு நேராய் முடியாது
என எப்படிச்சொல்ல?
என்கிற வார்த்தைகளில்தான்
வாஞ்சையும்,மனிதாபிமானமும்,
இன்னும் உயிரும் கொஞ்சம்
ஒட்டிஇருப்பதாக நினைக்கிறேன்.
சகமாணவனின் வீட்டுப்பாடத்தை
சிரத்தை எடுத்து செய்து கொண்டிருந்த
எனது மகனிடம் கேட்டபோது சொன்னான்.
கேட்கிற உதவியை முடியாது என
முகத்திற்கு நேராக எப்படிச்சொல்ல?என/
வாஸ்தவம்தான்,சொல்ல வேண்டாம்,விட்டு விடு
உனது ஈரம் பூத்த மனதாவதுஉன்னிடம் அப்படியே
இருக்கட்டும்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... படம் அட்டகாசம்...!

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

வேல்முருகன் said...

அருமை

vimalanperali said...

நன்றி வேல்முருகன் சார் வருகைக்கும்,கருத்துரக்குமாக/