19 Nov 2013

அடையாளம்,,,,,



  
நகரின் நெரிசலான  நாற்ச் சந்திப்பு சாலை அது.
 
அதன் இடது முனைதிருப்பத்தில்இருக்கிறது அந்தபெட்டிக்கடை.அதில் இல்லா த  வியாபாரம் கம்மிதான்.
 
பீடி, சிகரெட், கடலை மிட்டாய்,வாழைப் பழம் என ஒரு பெட்டிக்கடையை அடையாளப் படுத்தும் வகைகளுடன் சேர்த்து தினசரி பேப்பர்களும் குமுதம், ஆனந்த விகடன் இப்படியான வாராந்திர,மாதாந்திர ஏடுகளும் கிடைத்தன.
 
 நகரில் எங்கும் கிடைக்காத சார்மினார் சிகரெட்டை எனது நண்பர் அங்குதான் வாங்குவார்.
 
 இருபத்தைந்து வருடங்களாக அங்கு அமர்ந்திருக்கும் அந்தக்கடையை 'அக்கா கடை' என்றார்கள்.  

 அக்கா கடை என்கிற பெயர்தான் நிலைத்துவிட்டதே, இனி நாம் எதற்கு? என அந்த வீட்டின் ஆண்களும் கடை வியாபாரத்தில் நிற்பது அரிதாகிப் போனது.
 
கடையைஒரு பெண்தான் நிர்வகித்தார். "என்ன வேணும்"என்கிற அவரது அதட் டலான கட்டை குரலே அந்தக் கடையின் சுழலை தூரத்திலிருந்து அறிமுகப் படுத்தும்.அவர்கள் திருநெல்வேலியிலிருந்துஇந்த ஊருக்கு வந் து பிழைக்க கதியற்று நின்றபோது இந்த பெட்டிக் கடைதான் அவர்களுக்கு கை கொடுத் திருக்கிறது.
 
 இருபத்தைந்து வருட வாழ்க்கையின் தளும்புகள் சுவடுகளாக அவர்களுள்.
 எத்தனைவிதமானமனிதர்கள்,எத்தனை விதமானசூழல்கள், எத்தனை விதமான சகிப்புத்தன்மைகள் என இன்னும் இன்னுமான அத்தனை விதமான சமூக சீண் டல்களுக்கும்,தீண்டல்களுக்கும்மத்தியில் குடும்பத்தை இழுத்து வாழ்க்கை யின்  அத்தனைக்கும்ஈடு கொடுத்து  நிலைத்து  நின்று தனது மகளுக்கும், மகனுக்கும் திருமணம் செய்து கொடுத்தார்."வெற்றிலை போட்டு குதப்பியவாயும் ,கட்டைக் குரலுமே" அவரது அடையாளமாகிப் போகிறது இந்த இருபத்தைந்து வருடங் களில்.
 
கடந்தநாட்களில்தன்னைஇப்படியெல்லாமுமாகஅறிமுகப்படுத்திக்கொண்டவர் ,இன்று தனது மகனுக்கு மணம் முடித்த மருமகளை கடையில் நிறுத்தியுள் ளார்.
 
 மருமகளாக வந்த அவள் அந்தக் கடையில் எத்தனைநாட்களாக நிற்கிறாள் என சரியாகத் தெரியவில்லை.ஆனால் நான் ஆறுமாதத்திற்குமுன்பார்த்தஅதே தோற் றத்திற்கு நேர் எதிர் இன்று.
 
சொக்கவைக்கும் அழகு இல்லைஎன்றாலும் கூட கழுத்தில்,காதில் தங்கத்துடன் பார்ப்பதற்கு பளிச்சென்று முகலட்சணமாய் இருந்தாள்.
 
மென்மையான பேச்சுக்குசொந்தக்காரியாகவும்இருந்தஅவளை இரண்டு  நாட்க ளுக்கு முன்தான் பார்த்தேன்.
 
 கழுத்திலும், காதிலும் ஒட்டிக் கொண்டிருந்த தங்கம் மட்டுமல்ல. அவளது முழு தோற்றமே மிஸ்ஸிங்.
 
அவளின் மாமியாரைப் போலவே கட்டைக் குரலும், வெற்றிலைபோட்டு குதப் பிய வாயுமாய், காவியேறிய பற்களுடன், முகலட்சணமேமாறிப்போயிருந்தாள்.
 
அன்று மட்டும் என இல்லை.நான் அவளைப் பாக்க நேர்கிற அடுத்தடுத்த நாட்க ளிலெல்லாம் அப்படித்தான் காட்சியளித்தாள்.
 
இந்த இடத்தில் இயல்பாகவே எழும் மெகாசைஸ் கேள்வியை தவிர்க்க இயல வில்லை.
 
 கடந்த இருபத்தைந்து வருடங்களாக கடையிலிருந்த பெண்ணும் சரி, கடந்த ஒரு  வருடத்திற்குள்ளாக கடையில் இருக்கும் பெண்ணும் சரி, இவர்களிருவருக் கும் வெற்றிலை(சமயங்களில் குட்கா புகையிலை) போடும் பழக்கம் ஏன் வந்தது?அவர்கள்ஏன் அந்த பழக்கத்தை பழகவேண்டும்? காபி, டீயைப் போலத் தான் அதுவும் என்றால்தன்னையே வருத்தி தனது முகத் தோற்றத்தை யே மாற்றிக் காட்டுகிற அளவிற்கா அந்தப் பழக்கத்தை அவர்கள் கை கொள்ள வேண்டும்?
 
அப்படியெல்லாம் அவர்கள் ஏன் போகிறார்கள்? தனது அழகையும் யவ்வனத் தையும் சிதைத்துக்கொள்கிறஅளவிற்கான நிலைமைகளை அவர் களாக விரும் பி ஏற்றுக் கொண்டார்களா?
 
அல்லதுவலிய  திணிக்கப்பட்ட சமூக நிர்பந்தத்தில் அப்படி தங்களைத்தோற்ற த்திற்கு மாற்றிக்கொண்டார்களா,,,?என்பது இன்றும் புரியாத புதிராகவே/

 தினமும் கடைக்குப் போகிற நான் இதைப் பற்றிஇதுநாள் வரை அவளிடம் கேட்டதும் இல்லை,அவளும் சொன்னதில்லை. அடுத்து போகும் போது கேட்க வேண்டும் கட்டாயமாக./

15 comments:

அ.பாண்டியன் said...

//திணிக்கப்பட்ட சமூக நிர்பந்தத்தில் அப்படி தங்களைத்தோற்ற த்திற்கு மாற்றிக்கொண்டார்களா,,,?என்பது இன்றும் புரியாத புதிராகவே// யோசனையின் உச்சத்தைத் தொட்டு விட்டீர்கள் சகோதரரே. வேலை மற்றும் சூழ்நிலை அந்த பழக்கத்திற்கு அவர்களை அடிமை படுத்துகிறது என்றே நினைக்கிறேன். எதுவாக இருப்பினும் மாற்றிக்கொள்ளத் தான் வேண்டும். பகிர்வுக்கு நன்றி சகோதரரே...

Tamizhmuhil Prakasam said...

அவர்கள் பார்க்கும் வியாபாரமும் , கடையின் சூழலும் அவர்களை அங்ஙனம் மாற்றி விடுகிறதோ ?

பகிர்வுக்கு நன்றி ஐயா.

'பரிவை' சே.குமார் said...

சூழலுக்காக தங்களை மாற்றிக் கொள்கிறார்களோ?
கண்டிப்பாக கேளுங்கள்...
பகிர்வு நன்று.

Yaathoramani.blogspot.com said...

ஆம் தமிழ்முகில் பிரகாசம் குறிப்பிடுவதைப் போல
சூழல்தான் இதற்கு காரணமாயிருக்கவேண்டும்
தங்கள் விவரிப்பு சூழலை கண்முன் நிறுத்திப்போனது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

புரியாத புதிராகவே உள்ளது... ம்...

உஷா அன்பரசு said...

இந்த பதிவு மீள் பதிவா? உங்கள் பதிவில் இதை ஏற்கனவே படித்திருக்கிறது போல் ஞாபகம்! உங்கள் பதிவின் ஒவ்வொரு விஷயங்களும் அப்படியே மனதுக்குள் ஒட்டிக்கொள்ளும் தன்மை என்பதால் உங்களின் பழைய பதிவுகளும் கூட அப்படியே நினைவுக்குள் இருக்கிறது... பாராட்டுக்கள்..!

”தளிர் சுரேஷ்” said...

அருமையான சிந்தனை! நன்றி!

vimalanperali said...

வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.கண்டிப்பாக சூழலன்றி வேறில்லை.ஆனால் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில்,ஒரு கால் சென் டரில்,ஒருரிஸப்சனிஸ்ட் என இன்னும் இன்னுமாய் இருக்கிற பெண்களிடம் காட்டுகிற மரியாதைக்கூட நம் சமூகம் இவர்களிடம் காடுவதில்லை என்பதே மிகப்பெரிய முக்கியப்பட்டுத்தெரிவதாக/நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் அ.பாண்டியன் சார்.நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
சூழல் அவர்களை அப்படி இருத்திவைத்திருக்கிறது
என்பது நெஞ்சைச்சுடுகிற உண்மையானாலும் கூட சமுகம் அவர்களை அப்படி பார்க்கிறது என்பதுதான் நெருடலாய் இருக்கிற விஷமாய்/

vimalanperali said...

வணக்கம் சேக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி ரமணி சார்.நன்றி வாக்களிப்பிற்கு/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/புரியாத புதிர் என இதில் ஒன்றுமில்லைதான்,இச்சமூகத்டின் கோளாறான பார்வைக்கு ஆட்ப்பட்டே இப்படியாய் ஆகிப்போகிறார்கள்.நன்றி

vimalanperali said...

வணக்கம் எஸ் சுரேஷ் சார்,
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் உஷா அன்பரசு மேடம்.
இது ஏற்கனவே பதிவிட்ட பதிவுதான் இது.
நன்றாக இருந்ததால் திரும்பவுமாய்
போட்டிருக்கிறேன்.நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/