22 Dec 2013

மணற்கடிகை,,,,,,

தொழுகைக்குச் சென்றிருந்தபாய்திரும்பிவரகாலதாமதமாகிப் போகி றது சற்றே/மணியைப் பார்க்கிறேன்.8.10 என்கிறது கைக்கடிகாரம்.

25வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டிநான்வேலைபார்க்கிற நிறுவ னம்கொடுத்தகடிகாரம்.நிறுவனத்தின்லோகோதாங்கிபெரியது,சிறிய துமானமுட்களில்வட்டவடிமாய்நேரம்காட்டிச்சிரித்தது.

ஒன்றுடன்ஒன்றுமோதாமல்விலகிநிற்கிறமுட்களைமேலுரசிச்செல் கிற விநாடிமுள் கை திருப்பி மணிபார்க்கிற நேரம் லேசாக கண் சிமி ட்டியது போலானதொரு உணர்வு வியாபித்துப் படர்கிறதாய்/

பத்துவருடங்களாய் கையில் இருக்கிறது,பெரியதாக ரிப்பேர்என இது நாள்வரைவந்ததில்லை.வழக்கமானவார்மாற்றுதல், பேட்டரி செல்,,, இது மாதிரியான செலவு தவிர்த்து வேறொன்றுமில்லை.
பையனுக்குவாட்ச்வாங்கிஇரண்டுஆண்டுகள் கூட முழுதாக முடிய வில்லைஒரு வருடம் ஏழ ரை மாதம் எனச் சொன்னான் பையன். அதற்குள்ளாக இரண்டுதடவைரிப்பேராகிப் போனது. இரண்டு தட வையும் ரூபாய் இருநூறு ரூபாய்க்கும் குறையாத செலவு. கூட்டிப் பார்த்தால் வாங்கிய விலையை எட்டிததொடப்போகிறது.

பிடிவாதம்தான்,வேண்டாம்,வேண்டாம்எனச்சொல்லகுறிப்பிட்டஅந்த மாடல்தான் வேணும் என அடம் பண்ணி வாங்கியது.அவன் மனம் பிடித்ததை அவனே முடிவு பண்ணட்டும் எனஒரு மனது சொன்னா லும்கூட இன்னொரு மனது அப்படியெல்லாம் இல்லை என்ன தான் பெரியபையன்ஆனாலும்நல்லது,கெட்டதுதெரியவேண்டாமா?  இந்த வயதில் தெரியாமல் எந்த வயதில் தெரிய?

ஷோரூமில் இறக்கைக்கட்டித்திரிந்த இளம் பெண் ஒருத்தி அதெல் லாம் தானாகத் தெரியும் நல்லதும்,கெட்டதும்.அவன் சுட்டிக்காட்டிய மாடல் நீங்கள் எடுத்துக் காட்டியதை விட ஐம்பது ரூபாய் குறைவு தானே?எடுத்துக்கொடுங்கள்,சந்தோஷப் பட்டு மனம்பூத்துத் திரியட் டும். இதில் போய்என்னமிகவும் யோசித்துக்கொண்டு பெரியதாக  என்றாள்.

பில்போட்டுமுடிந்ததும்வாட்சைமகனின்கையில்கட்டிவிட்டாள்.சந்தோ ஷித்துபோகிறான்மகன்.மடித்தஇறக்கைகளைதிரும்பவுமாய்விரித்து கொண்டு பறக்க ஆரம்பி த்து விடுகிறாள்.

ஷோரூமின் வெளியெங்குமாய் பறந்து திரிந்த அவள்நாங்கள் கடை யை விட்டு வந்த நேரமாய்ரிஷப்சனில் நின்றிருந்தாள். வெளிர்க் கலரில் மென்மை பூத்துத்தெரிந்த சுடி தார்அவளுக்கு நன்றாகயிருந் தது. குச்சிகுச்சியாய் தெரிந்த கைகால்களிலும், உடலி லுமாய் பொரு ந் தித் தெரிந்தவள் நன்றாகத்தான் இருந்தாள் பார்ப்பதற்கு/

பெண்பிள்ளைகள்இல்லாத ஏக்கம்இப்படிபார்க்கிற பிள்ளைகளையெ ல்லாம் மகளைப் போல எண்ணவைத்து விடுகிறதுதான்.

சொரசொரப்பாபான்டைல்ஸ்பதித்தநடைவாசல்பார்ப்பதற்குஅழகாயி ருந்தது. நடையில் கால் வைக்கையில் இறகு முளைத்தவளை திரும் பிப் பார்த்தால் காணோம் ஆளை. மனைவியைக் கூப்பிட்டுச் சொல் கிறேன்.அவளும்சிரித்துக்கொண்டேசொல்கிறாள்.

அவர்கள் பறந்து திரிய சிறகு கடைக்குள்ளாக மட்டுமே தரப்படும். வெளியில் திரிய அவர்க ளுக்கு அனுமதியில்லை. வேண்டுமானால் அவர்களது பறத்தலுடனான நினைவுகளை மட்டும் சுமந்து செல் வோம் வாருங்கள் எனச்சொல்லிவிட்டு அவளின் அரு காமையாய் நடந்துவந்துகொண்டிருந்தமகனைக்காண்பிக்கிறாள்.அவன்கையையும், வாட்சையும் திருப்பித்திருப்பி பார்த்துக்கொண்டே வருகிறான்.

அன்று திருப்பிப் பார்த்த வாட்ச் இன்று ரிப்பேர் ஆகியும்,வார் இல்லா மலும்என்பையினுள்ளாய் கிடந்தது.

திரும்பவுமாய் மணியைப்பார்க்கிறேன்.8.15 என்கிறது.

நிறுத்தியிருந்த சைக்கிளின் மேல்இடதுகையையும்,ஹேண்ட் பாரில் வலது கையையும் வைத்த வனாய் நிற்கிறேன்.
கண் பார்வை தொடுகிறதூரத்திலிருந்து தொழுகை முடிந்து எல்லோ ருமாய் மசூதியிலிருந்து வெளியேறி வந்து கொண்டிருந்தார்கள். இரவுநேர லைட் வெளிச்சத்தில் சாலையோரமாய் உள்வாங்கித் தெரி ந்த மசூதிவாசலைமட்டுமேபார்வைக்கு வைத்தாய்/

கடந்த ஒருவருடம் வரை மிகவும் பரபரப்பாக இருந்த சாலையிது. பாதாளச்சாக்கடைதோண்டப்பட்டநாளிலிருந்துஇன்றுவரை இப்படித் தான் இருக்கிறது,கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கும் மேலாகிப் போகி றது.

பஸ்ஸீம்,லாரியும் இருசக்கரவாகனங்களும்சைக்கிள்களுமாய் வேக மா யும் மெதுவாயும் சென்ற சாலை இப்போது குண்டும் குழியுமாய்/ தொழுகை முடிந்து வந்த ஒருவர் நான் கடைக்கு முன்பாக நிற்பதைப் பார்த்ததும் ”வாட்ச் கடை பாய்தான, இந்தா வந்து க்கிட்டு இருக்காரு”. எனச் சொன்னவாறே என்னைக்கடக்கிறார்.கணுக்கால் தெரிய அவர் கட்டியிருந்த மூட்டப்பட்ட வெள்ளை வேஷ்டியும்,கலர்ச்சட்டையும் அவருக்கு நன்றாகத்தான் இருந்தது. மெலிதாகச்சிரித்தவாறே என் னை கடந்து சென்ற அவரை எங்கோ பார்த்தாய் ஞாபகம்.

முன்புறமாய் முகம் காட்டி பக்கவாட்டாய் கடந்து பின் புறமாய் தன் னைஅடையாளப்படுத்திச்செல்கிறஅவர்கொஞ்சம்பூசினார்ப்போல பொதுபொதுவெனதெரிந்தார்.தொந்திபோட்டிருந்தாராஎன்பதைப்பார்க்க
வில்லை.

கண்ணாடிக்கதவுபோட்டிருந்தகடை.நம்பிப்பூட்டிவிட்டுப்போய்விடுவார்
போலும்அவ்வப்பொழுது.

இப்பொழுது நிற்கலாமா இல்லை போய்விட்டு இன்னொருநாள் வர லாமா? இன்னொருநாள் என்பது மறதியிலோ அல்லது தாமதத்தி லோ கொண்டு விட்டுவிடலாம்.

மணியண்ணன்மிஸ்டுகால்கொடுத்திருந்தார்.பஜார்வழியேவரும்போது
போனைஎடுக்கமுடியவில்லை.ஒரு ஓரத்தில் நின்று பேசியிருக்க லாம்.நேரமாகிப்போகும் என வந்து விட்டேன்.
மணியண்ணன் லைனில் வரவில்லை.தொடர்பிலக்கிற்கு அப்பால் இருக்கிறதாய் பதில் வந்தது. தோழரிடம்தான்பேசினேன். பேசிக்கொ ண்டிருக்கையிலேயே பாய் வந்து விட்டார்.வந்து கொண் டிருந்தவரு க்குவணக்கம்சொல்லிவிட்டுதொடர்கிறேன்பேச்சை.முற்றுப் பெறாப் பேச்சுகளா னாலும்கூடஏதாவதுஒருபுள்ளியில் நிறைவுற்றுத் தானே ஆக வேண்டும்.

பேசிமுடித்ததும் கடைக்குள்ளாய்ச் செல்கிறேன்.முடிவுற்றகடைசி வார்த்தையின் சூழ்க்கொள் ளலும் பாயினது வாங்க என்கிற சொல் லும் மனம் தைக்க சரியாய் இருந்தது.

முண்ணனிவாட்ச்கம்பெனியின்பெயர்கடையின்கதவில்ஒட்டப்பட்டிரு
ந்தது.ஊதாக்கலர்பிண்ணனியில்வெள்ளைக்கலர் எழுத்துக்கள் பொரி க்கப்பட்ட ஸ்டிக்கர் பார்க்க நன்றாகத் தான் இருந்தது.


சின்னதான கடையில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஷோகேஸீக்கு பின்னால் நின்றிருந்த பாய் வாட்சை கையில் வாங்கி ரிப்பேர் செலவு பற்றிச்சொன்னார்.

அவர்சொன்னதுஒன்றும்அவ்வளவுமிகையாகப்படவில்லை. நான்கு, ஐந்து மாதங்களுக்கு முன்பாக இதே வாட்ச் ரிப்பேர் என கொண்டு சென்ற போதுகடைக்காரர்200வரைசெலவாகும்என்றார்,அன்று பாய் கடைலீவு என வேறொரு கடைக்கு சென் றிருந்தேன். அப்படிப் போன து தப்பு என பிறகுதான் தெரிந்தது. தெரிந்ததை எப்படிச் சொல்லி புரிய வைப்பது/

வாட்ச்வாங்கியஅன்றிலிருந்து இன்று வரைசெலவழித்ததொகைக்கு ஒருபுதுவாட்சே வாங்கியிருக்கலாம். ஆனாலும் மகன் ஆசைப்பட்ட காரணத்திற்காகபாய்சொன்னசெலவுக்குஒத்துக் கொண்டு வாட்சை ரிப்பேர் செய்து வாங்கிக்கொண்டு வருகிறேன்.

வாங்கிவருகிற வழியில் சிறகுமுளைத்துத்தெரிந்தவனாய்என்மகன் பறந்து திரிகிறான் வான் வெளியெங்கிலுமாய்/

15 comments:

Geetha said...

காட்சியை கண்முன் நிறுத்திய விதம் அருமை,வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் கீதாமேடம் .
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்த்ரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே அருமை.
கடையில் நானும்தங்களுடன் இருந்ததைப் போன்ற ஓர் உணர்வு.
நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.3

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார்சார்,
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

ரசிக்க வைத்த கதை...
வாழ்த்துக்கள் விமலன் அண்ணா..

'பரிவை' சே.குமார் said...

தமிழ் மணத்தில் 4 வது வாக்கு நமதே/

Anonymous said...

வணக்கம்

ரசிக்க வைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்
த.ம 5வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு குமார் அண்ணா/

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம்சே குமார் சார்,
நன்றிவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு ரூபன் சார்.

வேல்முருகன் said...

நன்றாக உள்ளது