6 Jul 2014

பூஞ்சுனை,,,,,,,

                                
அது அவளுள்ளாகஎப்படி குடிகொண்டது எனத்தெரியவில்லை .
அல்லது அவளின்பிரியப்பட்டஅழைப்பின்பேரில்வந்ததாகவும் இல்லை என்கிறாள்.
அவள்சித்தாள்.அவளது கணவன் சமையல் வேலைக்குப் போ கிற வராம்.ஒருநாளைக்கு500ரூபாய்சம்பளமாம்.சமையல்
வேலைக்குப்போவதில் இருக்கிற ஒரு சின்ன சௌகரியம் வேறு எதிலும் இருப்பதில்லை.சாப்பாடுஓசியாகப் போய் விடு ம்.சாதாரணசாப்பாட்டிலிருந்துவிதவிதமானஅயிட்டங்கள்வரை/
என்ன வயிறுதான் வேண்டும் உள்ளே தள்ளுகிறதை ஏற்றுக் கொள்ள என்கிறாள் கணவனைப்பற்றி கூறுகிறபோது/
இவளுக்கு 200 ரூபாய் சம்பளம்.நாள் முழுக்க வெயிலில் காய் கிற பாடு.
மழைக்கும்,வெயிலுக்கும்,காற்றுக்கும்ஆளாகிப்போகிறஅவலம்.
சமயத்தில்அதனதன்கோபத்திற்கும்,எரிச்சலுக்கும்ஆற்றாமைக் குமாய்/
அலுவலகம் முடியப்போகிற முன் மாலை நேரமாய் வந்தாள். அவள் வரும் போது வேலைகளை முடித்து விட்டு கிளம்பலாம் என முடிந்து வைத்திருந்த எண்ணத்தை மனம் அவிழ்க்கப் போகிற நேரம்.
வந்து விட்டாள்.கையில் வைத்திருந்த தங்கச்செயினை காட்டி இதற்கு எவ்வளவு பணம் தருவீர்கள் என பார்த்துச் சொல்லுங் கள் அடகு வைக்க வேண்டும் உங்களிடம் என்றாள்.
நன்றாகயிருந்தால் 28 இருக்கலாம் வயது என சொல்லிச் சென் றது அவளது தோற்றம்.
அடர் கலரில் சேலை உடுத்தியிருந்தாள்.அதற்கு ஏற்ற கலரில் சட்டை.
கருத்து மெலிந்திருந்த உருவம்.வாடிக்காணப்பட்ட உடல்.வளி த்துச் சீவி அள்ளிக்கட்டியிருந்த தலைமுடி.அதில் ஒன்று பிரி ந்து தவழ்ந்து வந்து அவளது தோளில் அமர்ந்தி ருந் தது.இவை எல்லாவற்றையும் மீறி சிரிப்பை அணிந்து கொண்டிருந்த அவளது முகம்.
“ஆஸ்பத்திரி செலவிருக்கு சார்.அதான் கொணாந்திருக்கேன்,
எனக்குத்தான் ஆபரேசன்.யெடது பக்க மார்ல ஒரு கட்டி இருக்கு சார்.ஏற்கனவே ரெண்டு தடவ ஆபரேசன் பண்ணுனது தான்.இப்ப திரும்பவும் வந்துட்டு உயிர வாங்குது ,கையதூக்கக் கூட முடியல.நேத்து அப்பிடித்தான் வேல செய்யிற யெடத்துல சாந்துசட்டிய தூக்க மாட்டாம கீழ போட்டுட்டேன்.
வீட்டுக்காரரு கூட சத்தம் போடுறாரு. “பேசாம மண்ணு வெட் டு வேலைக்குப்போக வேண்டியதுதான” இதுலபோயி எதுக் குஉசிரக்குடுத்துக்கிட்டுங்குறாரு.,
“நாந்தான்வேணான்னுட்டுகெட்டிக்கிட்டுஒழப்பீட்டுதிரியிறேன். மண்ணு வெட்டு வேலைன்னா ஒரு நாளைக்கு 80 ரூபாதான் சம்பளம்.இதுன்னா 200 ரூபாய் சம்பளம்.200 க்கும் 80 மத்தியில இருக்குற 120துலதான எங்க பாடும் அல்லாடிக்கிட்டு இருக்கு சார் என்றாள்.
என்ன செய்ய அப்பிடி ஒரு பொறப்பா வந்து பொறந்துட்டோம். இது கூட எங்க வீட்டுச்செயின் இல்ல சார்.எங்க மாமியார் வீட்டுக்காரவுங்ககுடுத்தது.எங்கஅம்மாஐயாயிரம்ரூபாதர்றேன் னுருக்காங்க.இத அடகு வச்சது போக மேக்கோண்டு உருட்டி பெறட்டி செய்யணும் சார்” எனவும் சொன்னாள்.
“கௌவர்மெண்டு ஆஸ்பத்திரியெல்லாம் சொகப்படாது சார்.
தனியார்ட்டைன்னாஎன்னத்தையோமுன்னப்பின்னசீக்கிரம் குணப்படுத்திஅனுப்பிச்சுருவாங்க/,
“நாங்களும்,போனமா,வைத்தியம்பாத்துவந்தமா,பொழப்பப்பாத்த
மான்னு இருக்கும்.,
“நேத்து சாய்ங்காலம்தான் எல்லாம் கேட்டு விசாரிச்சிட்டு வந் தம்.நல்ல வேள கேன்சர் கட்டியில்ல.டாக்டர் ஒண்ணும் பயப் படக்கூடாது.அழுது பொழம்பக்கூடாதுன்னு சொல்லீட்டாரு. டாக்டரு பேரு தெரியல, அவரு அமெரிக்காவுல போயி படிச்சிட்டு வந்தவராம்ல” என அவள் சொல்லவும் எங்களது மேலாளர் ஆஸ்பத்திரிகளில் உள்ள இலவச இன்ஷீரன்ஸ் திட்டம்பற்றி கூறினார்.
எங்கனசார்.நீங்கசொல்றதெல்லாம்விவரம்தெரிஞ்சஆள்களுக்கு த்தான் சார்.எங்கள மாதிரி ஒண்ணும் தெரியாத ஆள்க இப்பிடி த்தான் பட்டுக்கிட்டு முழிக்கிறோம்.அவுக வசதியா இருந்தாக் கூடஇதப்பயன்படுத்திபலன் அடைஞ்ச்சிர்றாங்க/ நாங்க இப்பிடி யே,,,,,.எங்களுக்குன்னு எதுவும் சொல்றதுக்கு வகையான ஆள் கெடையாது சார்.அதான் இப்பிடி சீப்பட்டு அலையிறோம்” என்றாள்.
“சரிசார்இது எவ்வளவு வருன்னு சொல்லுங்க” என்றாள் அவள்  கொண்டு வந்திருந்த நகையைக்காட்டி/
மேலாளர் அவளிடம் எத்தனை பவுன் என்ன ஏதென கேட்டு அடகு வைத்தால் இவ்வளவு ரூபாய் கிடைக்கும் எனசொல்லிக் கொண்டிருந்தார்.
“வீட்டுக்காரரு சமையல் வேலையில இருந்தாலும் நாலு பேரப்போல தண்ணி போட்டுட்டு அலும்பு பண்ணவோ ரோட்ல கெடக்கவோ மாட்டாரு சார்.அவரும் தண்ணி போடுவாரு இல்லைங்கல.ஆனா வேலைக்குப்போறன்னக்கு கெடைக்குற பேட்டா காசுலதான் எல்லாம்,எக்காரணம் கொண்டும் வேல சம்பளத்துல கைவைக்க மாட்டாருசார்அதஅப்பிடியே முடிஞ்சி கொண்ணாந்துருவாரு.
அனாவசியமாஎதுவும்கெடையாது.ஒருபீடி,சிகரெட்டு,தண்ணி,
வெத்தல,பாக்கு,,,,,, ம்கூம்/”என அவள் முடிக்கவும் நான் ஒரு மருத்துவரின் பெயரை சொல்லி அவரைப்பார்த்து அவரிடம் ஆலோசனை பெற்று விட்டு பின் அமெரிக்காவில் படித்துவந்த டாக்டரிடம் நீங்கள் போகலாமே என்றேன்.
அது எனது வாய்க்கொழுப்பா,அல்லது இதுமாதிரியான விஷய ங்களும் எனக்குத்தெரியும் என்கிற காட்டிக்கொள்ளலா?சரியாக பிடிபடவில்லை.
“பெரியவ5வது படிக்கிறா சார்,சின்னவ4வது படிக்கிறா,புள்ளக ரெண்டும் தங்கம் சார்.,
“ஆனாபாருங்கஇந்தபெரியவபெறந்ததுலயிருந்துதான் இப்பிடி ஆகிப்போச்சி.அவ பெறந்த நேரமா இல்ல ஏங் கெரகசாரமா ன்னு தெரியல. ஒண்ணுமாத்திஒண்ணுன்னு, ஒரேஆஸ்பத்திரி செலவாத்தான் வந்துக்கிட்டு இருக்கு .,
“செலவும் கட்டுக்கடங்காம போயிக்கிட்டு இருக்கு. என்னதான் செய்யப்போறம்,ஏதுதான்பண்ணப்போரம்ன்னுதெரியல.அப்பிடி யே ஓடிக்கிட்டு இருக்குது சார் பொழப்பு.,
“சரி சார்,நாளைக்கு வர்ரேன்.இந்தப்பொருள அடகு வாங்கீட்டு பணம் குடுங்க சார்”.என போய் விட்டாள்.
நாங்கள் அலுவலகத்தை பூட்டி விட்டு வெளியே வந்தோம். வானம் சலனம்பூத்திருந்தது.ஒற்றையாய்பறந்தபறவைஒன்று தன்திசை தேடித்திரிவதாய் தோனியது/

9 comments:

'பரிவை' சே.குமார் said...

ஒரு வாழ்க்கையை கொஞ்ச நேரத்துல சொல்லிச் சென்ற பெண்மணி....

பூஞ்சுனை அருமை அண்ணா....

KILLERGEE Devakottai said...

அன்றாடங்காட்சிகளின் வாழ்க்கையை அழகாக படம் பிடித்து காட்டிவிட்டீர்கள் நண்பரே..... மனம் கணத்து விட்டது.

கரந்தை ஜெயக்குமார் said...

வெள்ளந்தியான பெண்ணின் வார்த்தைகளை அப்படியே கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள் நண்பரே
நன்றி
தம 1

திண்டுக்கல் தனபாலன் said...

நிகழ்வுகள் மனதை கனக்க வைத்தன...

vimalanperali said...

வணக்கம் சேக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்க்கம் கில்லர் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Geetha said...

வெள்ளந்தியான ஏழைகளின் அவல வாழ்க்கை சொற்சித்திரமாய்...மனம் கனக்கின்றது.நன்றி

vimalanperali said...

வணக்கம் கீதா மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/