29 Jul 2014

வாசல் தெளிப்பு,,,,,,,,,


#வெட்ட வெட்ட தழைக்கிறது
 சலூன்காரரின் வாழ்க்கை/

#உரிக்க உரிக்க வருகிறது பட்டையாய்
  மரம் வெட்டுபவனின் வாழ்க்கை/

#கிளைகள் நிறைந்த இலைகள்
  அடர்ந்து தெரிகிறது வாழ்க்கை/

#குழைந்தைகள் விளையாடுகின்றனர்
  பறவைகள் பறந்தமரும் சப்தம்/

#பொங்கிப்பிரவகிக்கிற வெள்ளம்/
  பயிருக்காய் கால்வாயில் ஓடுகிற தண்ணீர்/

#மைதானத்துக்குருவி
  ஒற்றையாய் கூவுகையில்
  துணைகழக்கிறது என்னை/

#காலை வேளை சுப்ரபாதம்
  பால்க்காரரின் சைக்கிள்மணிச்சப்தம்/

#மனம் நிறைந்த இனிப்பு
  தூரத்துக்குயிலின் ஓசை/

#ஊர் மைதானத்தில் கூட்டம்.
  மைக் இல்லாமல் பேசிக்கொள்கிறார்கள் 
  கண்களால் மட்டுமே இருவர்/

#மரம் வரைகிறபென்சிலின் நுனியில்
  துளிர்த்து நிற்கிறது துளிர் இலைகள் இரண்டு/

#அருள் வந்த சாமி அவள் மேல் இறங்கியதாம்/
  என்ன இப்பொழுதுகெட்டுப்போனது,.
  இறங்கிவிட்டுப்போகட்டும்
  அவள் ஆடிய ஆட்டம் யாருக்காக என
  அவனுக்கு மட்டுமே தெரிந்திருந்திருந்தது,

#கன்னம் சிவந்திருக்கிறது
  குழந்தை இட்ட முத்தம்.

#நால்முனைசாலைச்சந்திப்பில் 
  சிவப்பு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன
  தவழ்ந்து வந்து கொண்டிருந்தது குழந்தை/

#கொட்டும் அருவியில் வண்ணக்கோலம்
  சிறுவர்கள் குளிக்கிறார்கள்/

#யாரது வீட்டுக்கு வெளியே?
  தென்றல் வாசலைக் கடக்கிறதாம்/

#தூரத்தில் என்ன சப்தம்?
  பூக்கள் வெடித்துச்சிரிக்கிறதாமே
  கூடவே வெக்கமும் கொள்வதாய் தகவல்/

#மண் பிளந்து நின்றது
  இரு இலைகள் காட்டிய பெருமரமொன்று/

#வீட்டுக்கு வெளியில் வெளிச்சம்
  நிலா கடந்து போகிறது தன் பாதையை/

6 comments:

KILLERGEE Devakottai said...

அருமையான கவிதை மழை
நனைந்தன என் மனம்.

vimalanperali said...

வணக்கம் கில்லர்ஜி.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Yarlpavanan said...

சிறந்த பாவரிகள்
தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் காசிராஜலிங்கம் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

இளமதி said...

சிக்கெனச் சிறிய வரிகளில்
நச்செனத் தந்த நற்கருத்து!

மிக மிக அருமை!.
வாழ்த்துக்கள்!

vimalanperali said...

வணக்கம் சகோதரி இளமதி அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/