24 Oct 2014

மென்பனித்தூவல்,,,,,

வெற்றுடம்பில்பற்றிப்படர்ந்துகுத்திய குளிர் ஊசிகளின் முனைகளாய் உடலுக் குள் பரவுகிறது.

கை,கால் ,உடல் என முழுவதுமாய் பரவி எட்டித்தொட்டு கரம் நீட்டிய குளிர் சற்றெ பெருத்துத் தெரிந்த தொந்தியை ஏதும் செய்ய மறந்து விடுகிறது.குழித் தொந்தி என்கிறார்கள் அதை.எனக்கிருந்தது குழி அல்லாத தொந்தியாக இருக் கலாம்.

நேற்றும், இன்றும் என இரண்டு நாட்களாய் தொலைக்காட்சியும், செய்திதாள்க ளும் மற்றும் வானிலையும் சேர்ந்து அறிவித்திருந்த புயல் நேற்றிரவிலிரு ந்தே மழையை பதியனிட்டிருந்தது.

நேற்றிரவு தூக்கம் வராத பொழுதிலும் மின்சாரம் தன் விழிகளைஇறுக மூடிக் கொண்டநேரத்திலுமாய்தூக்கம்வராமல்வராண்டாவில்அமர்ந்திருந்தபொழுது மழையின் வாசனையையும் சப்தத்தையும் உணரமுடிகிறது. உணர்ந்து விட முடிகிறசப்தம், நுகர்ந்து விட முடிகிற வாசனை என வாசல் கேட்டின் பின் புலத்தில் அமர்ந்திருக்கிற ஒற்றை மனிதனாய் மின்சார வெளிச்சமற்ற அந்த இருளிலும் புலன்களை வெளியனுப்பி மழை பெய்வதை உறுதி செய்து கொள் கிறேன்.

மிகவும் பெரிதாயும் அல்ல,மிகவும் சிறிதாயும் அல்ல,வானத்திற்கும், பூமிக் குமாய் நட்டு வைத்திருந்தமென்வெள்ளிக்கம்பிகளாய் விடாதும்ஒரேசீராகவும் பெய்துகொண்டிருக்கிறது மழை.

மழை,மழை,மழை,,,,,,,,,,,மழை இல்லையேல் ,,,,,,,,,,,மழை,மழை,மழைதான் என எந்தவித அர்த்தமும் பொருளும் அற்று ஊற்றெடுத்துப்பாடத்தோணுகிறது.அது மட்டுமா? அதிராமல் மெல்லச் சொட்டுகிற மென் மழைத்தூறலில் உடல் நனையவும்மனம்பிடித்தவர்களைஉடனழைத்துகொண்டு குதித்துகும்மாளமிட வுமாய்ஆசை.தந்தானே, தந்தானே தன்னனான்னனானானேஎன்கிற பாடலை யும் கவி வரிகளையும் மனதில் கொண்டு.

10.30 க்கு ஆட்கொண்ட தூக்கம் 11.30க்கு காணாமல் போய் விடுகிறது.பாயை விட்டு எழுந்தமர்ந்து இருட்டை சிறிது நேரம் வெறித்தமர்ந்தவாறு பார்த்து கொண்டிருக்கையில் மின்சாரம் போய் விடுகிறது. மிகச்சரியாக12.00 மணியின் இரவுப்பொழுதில்.இனிகடிகாரத்திற்குள்ளிருக்கும் சின்ன முள்ளின் துணை கொண்டு பெரிய முள்ளும்,பெரிய முள்ளின் துணை கொண்டு சின்ன முள்ளும் ஒன்றின் உதவியுடன் ஒன்றுமாய் ஒன்றினைந்து மணிஒன்றைஎட்டித் தொ டும் வேளையில்தான் மின்சாரம் உயிர் பெறும்,இதில் கொடுமை என்ன வென்றால்உயிர் பெற்ற மின்சாரத்தின்உதவியுடன்இயங்கிற மின்விசிறியின் காற்றுதூக்கத்தை கொணர்ந்து என்னில் புகுந்து என்னை ஆட்கொள்கிற வேலையாய்ப் பார்த்து திருபவும் இரண்டு மணிக்காய் மின்சாரம் தந்து இயக்க த்தைநிறுத்திக்கொள்ளும்.உடதொட்டகாற்றும் தூக்கத்திலிருந்த கண் விழிகளு மாய்மின்சாரம்நின்றுபோனதும்தன்ஒத்துழையாமையைவெளிக்காட்ட ஆரம் பித்து விடும்.

அப்படியானதொருஇரவில்தூக்கம்வராமல் வராண்டாவில் அமர்ந்திருந்து விட் டு தூக்கம் கண்களை அழுந்த இழுத்து சொருகிற நேரமாய் எழுந்து வீட்டினு ள்ளே வருகையில் உயிர் பெற்றதாய் மின்சாரம்.

வீட்டினுள்ளே சுழன்ற மின்விசிறியின் வேகம் சற்றே வேகப்பட்டதாய் தெரிகி றது, எனக்குத்தான் அப்படித்தோணியதா அல்லது அதன் சுழற்சியே அதுதானா என்கிற நினைப்புடன் எழுந்து வீட்டினுள்ளேவருகையில் வீட்டின் வெளியே பெய்தமழைகரம்பற்றிஎன்கூடவேவருவதாய்நினைப்பெனக்கு/ஆ,,சில்லிட்டுப் போகிறதுமனம்.மனசுக்குள் மழை.கரம் பற்றி வந்த மழையை தனியே கழற்றி விட்டு,விட்டுவீட்டுனுள்ளே வருகையில் எதிர்ப்பட்டபேனின் காற்றுஈரப்ப்பத மாய்மேனிதொட்டு/

தலையில் பனிக்குல்லாவை மாட்டிக்கொண்டு தூங்கச் செல்கிறேன்.மணி அதிகாலை மூன்றை தொட்டு விட்ட வேளையில்.அப்போது தூங்கினேன், எப்போது எழுந்தேன் எனப்தெல்லாம் யாருக்கும் தெரிய கூடாத ரகசியமாக/

இப்பொது மணி ஒரவு 9.15.சாப்பிட்டு முடித்து விட்டு பூப்போட்ட கைலியும் சட்டை அணியாத வெற்றுடம்பில் பற்றிப் படர்ந்த குளிரின் முனைகள் மட்டு மல்ல, மெல்லிய காற்றும் காற்று சொல்லிப் போன செய்தியும்/ஆகா கேட்க வே நன்றாக இருக்கிறதே/ இது மாதிரி இருந்தால் அனு தினமும் எனது வெற்றுடம்பில் குளிர்பற்றிப் படர சம்மதமே எனக்கு/

4 comments:

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் காசிராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Yarlpavanan said...

தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html

vimalanperali said...

நன்றி வாழ்த்திற்கு காசி ராஜலிங்கம் சார்/