23 Nov 2014

காலண்டர்த்தாள்,,,,,

 
பதினைந்துகடந்துபதினாறுக்குள்செல்லஅவ்வளவுசிரமப்படவேண்டுமாஎன்ன? அதுஅவ்வளவு பெரியபிரம்மப் பகீரத முயற்சி ஒன்றுமில்லையே/

ஒருஆட்டோஎடுத்துக்கொண்டோ அல்லது பஸ் பிடித்துக்கொண்டோ போய் வருகிறசிரமத்திற்குஉள்ளாகிப்போகவேண்டியஅவசியமெல்லாம்நேர்ந்து விடப் போவதுமில்லைதான்,பின் ஏன்இவ்வளவுதூரத்திற்கு?

எவ்வளவு நேரமாகி விடப்போகிறது? அல்லது எவ்வளவு காலம் பிடித்துவிடப் போகிறது?ஒருதாளைக்கிழித்தால்கிழிபட்டகாலண்டரிலிருக்கிறபேப்பர் 15கடந்து 16 காட்டிவிடப் போகிறது. அவ்வளவுதானே.

பொதுவாகவே15லிருந்து16க்கும்17ற்கும்போகமுடிகிற நம்மால் 14க்குள்போக முடியவில்லையே என்கிறார் நண்பரும் தோழருமான ஒருவர்.

காலண்டர்தாளைக்கிழிக்கிறபோதெல்லாம் அரிச்சலாகவோ அல்லது முழுதா கவோ ராமநாதண்ணனின் நினைவு வந்து போகாமல் இல்லை இவனுள்ளாக/

அல்லது இவனது மனதை அரிக்காமல் இருந்ததில்லை அவரது நினைவுகள். அவரை பொதுவாக சனிக்கிழமை ராமநாதன் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்.

முன்வழுக்கைநெற்றியுடனும்தொள,தொளபேண்ட்சட்டையுடனுமாய் அடை யாளப்பட்டும் உடல் பெருத்து தொந்திசரிந்து போயுமாய்45ற்குமிகாமல் காணப் படுகிற அவர் ஒரு வகையில் இவனுக்கு சொந்தம்.எப்படிச்சொந்தம் என்றால் யாருக்கும் தெரியவில்லை.

”அவருஒனக்கு அண்ணன்வேணுன்னுவச்சிக்க ,இப்பதைக்கு அப்பிடியே கூப்பி ட்டும் போ,அத வுட்டுப்போட்டு என்னஏதுன்னு கிராஸ் கொஸ்டினெல்லாம் கேக்காத,தெரியுதா,அத மீறி ஏதாவது கேட்ட எட்டி மிதிச்சி கொன்னுபுடுவேன் ஆமாம்”என்பார்கள்,இவனதுஊர்க்கார்கள்.”ஆமாம் இவுக எட்டிமிதிச்சிட்டாலும் அந்தமேனிக்கி,,,,,,அடப்போங்கடாடேய்”,,,,,என்றவாறாய்சொல்பவர்கள்எல்லோ ரையும் கேலியாய் பார்த்துவிட்டுச்சொல்வான் மனதிற்குள்ளாய் எகத்தாளமா யும், ஏளனமாயும்/

ராமநாதன்அண்ணனைஎல்லோரும்சனிக்கிழமைராமநாதன்என்றேசொன்னார்
கள். சனிக்கிழமை ஆகிவிட்டால் போதும் டென்ஷன் ஆகி விடுகிறார் மனிதர். கைகாலெல்லாம் உதறல் எடுக்க ஆரம்பித்து விடும்.எந்தக்காரணமும் இல்லா மல்யார் மீதாவதுஎறிந்துவிழுந்து கொண்டே இருப்பார்.அலுவலகத்தில் இருக் கிறசகஊழியர்களோடு,அலுவலகத்திற்குவருகிறவாடிக்கையாளர்களோடு,
அலுவலகத்திற்கு டீக்கொண்டு வருபவர்களோடு என இன்னும் இன்னுமாய் யார்யாரிடம் கோபப் பட வாய்ப்பு இருக்கிறது எனதேடிப்போய் கோபப்படுவார். யாரிடம்எப்பொழுது அவரதுகோபம்திரும்புஎனச்சொல்லமுடியாது.அவ்வளவு கோபப்படுவார்.

அவரின்அந்தக்கோபம்அந்த வாரம் முழுக்க திங்கள்க்கிழமையிலிருந்து வெள் ளிக் கிழமை வரை அவர் எல்லோரிடமுமாய் பழகி வைத்திருந்த நல்ல தனங்க ளை எல்லாம் கொன்றுவிடும். எல்லோரும் முன் விட்டு பின்னே வைவார்கள் ஏன் இப்படிச்செய்கிறார் என/

அவரது வலி அவருக்குத்தான் தெரியும்./செண்பகாவிடம் அவர் முதல் முதலா ய் பழக்கம் வைத்த போது அப்படி ஒன்றும் யாரும் கண்டு கொண்டதாய் நினை வு இல்லை அவருக்கு ஆவரது மனைவி உட்பட/சின்ன ஊரில் யார் எங்கே போனாலும் வெளிச்சம் போட்டது போலாகி விடாதா சின்னதான தீப்பெட்டிக் குள்ளாய் பொறி நெருப்புப்பற்றிக்கொண்டது போல/

அரசல் புரசலாக சிலர், நேரடியாக சிலர் என ராமநாதண்ணனின் மனைவியி ட ம் வந்து சொன்னபோது அவள் அப்படி ஒன்றும் பெரிதாய் எடுத்துக்கொண்டது போல்தெரியவில்லை,அசட்டைகாட்டியே இருந்து விட்டாள்.அல்லது சனியன் தொலைந்தால் போதும் என இருந்து விட்டாளோ என்னவோ,தண்ணீர் எடுக்க போகையில்முனியம்மாக்காவிடம்பேசிகொண்டிருந்தராமநாதண்ணின்மனைவி  இப்படியாய் சொல்லியிருக்கிறாள்.ஒரு மனுசனுக்கு நிதமா கேக்குது, வெக்கங் கெட்டுப்போயி இந்தவயசுல இப்ப்பிடி இருந்தா எப்பிடி,,? நம்மாள அவரு வேகத்துக்கெல்லாம்ஈடுகுடுத்துபோகமுடியாது.அதான்விட்டுட்டேன்எங்கயும் போயிஎப்பிடியும்திரிஞ்சிட்டுவரட்டும்ன்னு.நல்லவேளையாஅங்கிட்டுஇங்கிட் ன்னுநாலு யெடத்துலவாய் வைக்காம ஒருத்திகிட்டயே போறாரே அதுவரைக் கும்உத்தமமுன்னுஇருந்துறவேண்டியதுதா.
 
எனக்கென்னக்கா,இப்பஎனக்கும்,புள்ளைகளுக்கும் அவரு சம்பாரிச்சி கொண்டு வந்து குடுக்காமயா இருக்காரு, இல்ல ஊரு ஒலகத்தப்போல கூத்தியா சகவா சம் ஏற்பட்டதும் பொண்டாடி புள்ளைங்கள தெருவுல விட்டுட்டாறா என்ன? விடுங்கக்கா இதப்போயி பெரிசா ,ஊருக்குள்ள பொழுது போகாம நாலு கழுதை ங்க நாலு பேசுதுன்னா நீங்களும் இதப்போயி பெரிசா ,,,,,,,,,,,,என்பாள் ராமநாத ண்ணனின் மனைவி/

இதுஅவருக்கா தெரியணும் இல்ல,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,தெரியணும், இல்லைன்னா அவ ளோட புருசங்காரன் இங்கயெல்லாம் வராதன்னு என்னைக்கி செருப்புட்டு நாலுபோட்டு அனுப்புறானோ அன்னைக்கிதான் விடிவு வரும் இந்தபிரச்சனை க்குன்னு நெனைக்கிறேன்.அதுவரைக்கும்இப்பிடித்தான்இருக்கும்ஊருஒலகம் சிரிச்சு,சீப்பட்டு ப்போயி,/ என்பாள் ராமநாதண்ணனின் மனைவி.

ராமநாதண்ணனைப்பொறுத்தவரைஅதுதான்பிரச்சனையே/சனிக்கிழமையா
னால் எங்கு போய் இருக்க, பொண்டாட்டி புள்ளைகளுடன்இந்த வீட்டிலா, இல் லை கூத்தியாளுடன் அங்கா,, என்ப தே அவரது தலையாயப்பிரச்சனையாய்/

மறுநாள் பள்ளிக்கூடவிடுமுறைஎன்பதால்அப்பாவுடன் இருக்கவிரும்பு கிறார் கள் பிள்ளைகள் என்கிறார்கள் எண்ணன்னேஇப்பிடிபெத்தபிள்ளைக ஆசைப்ப ட்டும் கூட சனிக்கெழம ஒரு ராக்கூடவா வந்து தங்க முடியாது ஒங்களால வாங்க புள்ளைங்க மொகத்துக்காகவாவது எனஅவரிடம் சொன்னவர்கள்.

அப்படிச் சொன்னவர்கள் முன் தலையாட்டிவிட்டு மௌனமாய் பழக்கத்திற்கு அடிமையாகிப்போய் அங்குதான் இருந்தார்.வாரத்தின் மூன்று நாட்கள் அங்கு மூன்று நாட்கள் இங்கு என ஒதுக்க முடிந்த அவரால் சனிக்கிழமையை மட்டும் சரிபண்ணமுடியவில்லை.

நாவின்சுவறும்புகளில்ஒட்டிக்கிடக்கிற ருசியாகபழக்கத்திற்கு அடிமையாகி ப் போனார்.அப்படியானஅடிமைப்பழக்கமேசனிக்கிழமையானால்மனதுள்புகுந்து அமர்ந்துகொண்டுசாட்டைஎடுத்துவிளாசுறது.தாங்கிக்கொள்ளமுடியாதவராக பட்டஅடியைவெளியில் இப்படியாய் உடன் வேலை பார்ப்பவர்களிடமும் மற்ற வர்களிடமுமாய்வெளிப்படுத்துகிறார்.

அவர்தான்இவனை கோவில் பட்டியில் இருக்கிற காலண்டர் ஆர்ட்டிஸ்டிடம் கொண்டு போய்ச்சேர்த்தார்.

வேலைக்குப் போகிற நேரம் போக வீட்டில் ஏதாவது படம் வரைய கோடுகள் இழுக்க,டிசைன் போட என இருந்த இவனை ஏதாவது ஒரு யெடத்துல சேந்து உருப்படியாகப்பாரு என்றார் ஒரு லீவு நாளின் மதிய வேளையாக அவரது வீட்டின் முன் வைத்து/ இரண்டு பெரும் உள்ளூர்தான் என்றாலும் கூட இது போலான விடுமுர்றை தினங்களில் பார்த்துக் கொண்டால்தான் உண்டு/

உண்மையில் அப்படியெல்லாம் ஆகிவிட முடியுமா என அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்த ஒரு நாளின் மாலை வேளையாய் அவரே டிக்கெட் போட்டு இவ னை கோவில் பட்டிக்கு கூட்டிப்போய் காலண்டர் ஆர்ட்டிஸ்டிடம் அறிமுகம் செய்து வைத்தார் பையன் நல்லா படம் போடுவான் என/

அறிமுகம் செய்து வைத்துவிட்டவர் கால் மணியில் கிளம்பிப்போய்விட்டார் பஸ்ஸிற்கு நேரமாகிறது என/அவர் போன சிறிது நேரம் இவனிடம் பேசிக் கொ ண்டிருந்தஆர்ட்டிஸ்ட்முற்றுப்பெறாதஒருகுதிரைப்படத்தைஎடுத்துக்கொடுத்து மீதியை வர்ணம் தீட்டி முடித்துக்கொடுக்குமாறு சொன்னார்.

படத்தை மேலும் கீழுமாய் பார்த்த இவன் அந்த ஓவியத்தை முடிக்க மாட்டான் என முடிவெடுத்த ஓவியர் அரை,கொறயா கொஞ்சம் கொஞ்ச படம் வரைய வரும் போல இருக்கு அப்பிடித்தானே,தொடர்ச்சியா ஒரு ஆறுமாசம் வாங்க ஏங்கிட்டஒங்கஆர்வத்தப்பொறுத்துதொழில்கத்துக்கலாம்எனச்சொன்ன போது அவர் சொன்ன சொல்க்கட்டின் விரிவு தாங்கி ஆறு மாதங்கள் இல்லை யாயி னும் கூட முடிந்த போதெல்லாம் போய் அரை குறையாய் கற்று வந்த தொழில் இவனை ஒரு ஓவியனாய் ஆக்கவிட்டாலும் கூடஒரு நல்லரசனையாளனாய் ஆக்கியிருந்தது/

இதில்15சனி,16ஞாயிறு என்றால் 17ஆம் தேதியான திங்கள் தனி அடையாளம் கொண்டு விடுகிறதுதான்.அல்லது அன்றைய தினத்திற்கு தனி மௌஸ் வந்து விடுகிறதுதான்,

இதுதவிர்த்து சனிக்கிழமையானால் போதும் ராமசாமியண்ணன் புலம்ப ஆரம் பித்து விடுவார்.சனி ஞாயிறு வந்துறக் கூடாது யேவாரம் பல்லக் காம்பிக்க ஆரம்பிச்சிருது என்கிறார்.

ஹௌசிங்போர்ட்காலனிக்குஎதிர்த்தாற்ப்போல்தான்இருந்ததுஅவரதுடீக்கடை. ,டீவடை,பீடிசிகரெட் கடலை மிட்டாய்,கேக்,பிஸ்கட்என அடைபட்ட கண்ணாடி பாட்டில்வியாபாரங்களுடன்டீயும்சேர்ந்துநெசவிட்டுஅடையாப்படுத்திக்கொண் டிரு ந்த கடை அவரது/

இவனுக்குத்தெரிந்து மாஸ்டர்களுக்காய் டீக்குடிக்க கடைகளைத்தேடிப்போன காலம் என ஒன்று இருந்தது இதே ஊரில்.மீசை மயிர் காற்றில் தூக்கியாட சைக்கிளில்பந்தயம்கட்டாமல்வேகம்காட்டிஊரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர்க ள் சைக்கிளில் பறந்து வந்து இங்கு டவுனுக்கு வந்து டீக்குடித்துப் போன நேரம் என ஒன்று இருந்ததுதான்,

அது தவிர்த்து கிராமத்திலிருந்து திருமணத்திற்கு பின்னாய் இங்கு டவுனுக்கு குடிவந்தபின்புமாய்அதேபோல்கடைதேடிப்போய்டீக்குடிக்கவாய்த்தும்இருக்கிறது தான் சமயங்களில்.இல்லையென்றால் பஜார்ப் பக்கம் அல்லது வேறு ஏதாவது வேலையாய் டவுனுக்குள் போகும் போது குறிப்பிட்ட மாஸ்டர்கள் இருக்கிற கடை தேடிப்போய் டீக்குடித்த அனுபவம் இருக்கிறது.

அப்பொழுதெல்லாம் டீக்கடைகளில் இப்பொழுது போல் டீ,காபி மட்டும் என இருந்ததில்லை,அதுதாண்டிஹார்லிக்ஸ்,மால்டோவா,ஸ்பெசல்பால்,மசாலாப் பால் என இருந்த காலங்கள் உண்டு,

இவனுக்குத்தெரிந்து டவுனில் இரண்டு நிறைய கடைகளில் அம்மாதிரியாய் மசாலாப்பால்இருந்ததுண்டு,ஆனால்இவன்தான்குடித்ததில்லை.கடையின்முகப் பில் இடுப்புயரத்தில் நிற்கிற அடுப்பில் அகலமாய் வாய்திறந்திருந்த இருப்புச் சட்டியில் வடைச்சட்டி அகலமாய் இருந்தால் எப்படி இருக்கும் அதுபோல் பெரியதாய் இருக்கும். அதில் காய்ந்து கொண்டிருக்கும்பாலைஒருவர் கிண்டிக் கொண்டேஇருப்பார்மறவாமல்.இல்லையெனில்பால்திரண்டுவிடக்கூடும் ,இல்லை கெட்டுவிடும் என்பார் தெரிந்த மாஸ்டர் ஒருவர்,

அந்நேரம்மசாலாப்பால்கேட்டு வருபவருக்கு சட்டியில் காய்கிற பாலிலிருந்து நேரடியாய்லிட்டர்படிகொண்டுமோந்துகிளாசில்ஊற்றிஆற்றிக்கொடுப்பார்கள். அப்படிஆற்றிக்கொடுக்கிற பாலின் மேலே இலவச இணைப்பாக பாலாடை கண்டிப்பாய்உண்டு/அப்படி அவர்கள் தருகிற மசாலாப்பாலையோ, டீயையோ, ஹார்லிக்ஸையோ,மால்டோவாவையோ,காபியையோகுடித்துக்கொண்டிருக் கிற நேரங்களில் கடைகளின் டேப்ரிக்கார்டரில் பாடுகிறசினிமாப்பாடல்கள் டீக் குடிக்கவருகிறவர்களைஈர்த்துவிடுகிறதுண்டுதான்பாடலின்இனிமைக்காக சேர் ந்தாற் போல தொடர்ச்சியாக இரண்டு, மூன்று டீக் குடித்துச் செல்பவர்களும் உண்டு.

அந்நேரம் ரோட்டில் போகிற வருகிற பஸ் கார் லாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சைக்கிள்கள் மற்றும் பாதசாரிகள் அழகுபட்டுத் தெரி வதுண்டு. நீலக்கலர்ஆகாயத்தில்வெள்ளைக்கலர்ஆடைஊடுபாவாய்நெசவிட்டுச்செல்வது போலவுமாய்,அதைஒட்டிப்பறக்கிற பறவைகள் கலர்தாண்டி அதை ஊடுருவிச் செல்வது போலவுமாய் தெரியும்/

ரோட்டோரச்சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கிற சினிமா வால்போஸ்டரில் நாயக, நாயகிகள்தவிர்த்துவில்லன்கள்கூடஅழகாய்தெரிவதுண்டு.ஏரியாவில் எப்பொ ழுதும்முறைத்துக்கொண்டுதிரிபவன்அப்பொழுதுதென்பட்டால்அவனதுமுறை
ப்புஒன்றும்செய்யாதுபோய்விடும்.அப்படியானவேலையைசெய்தடீக்கடைகளும் அதன்மாஸ்டர்களும்அங்குபுழங்கியமசாலாப்பால்களும்,லைட்எரிந்துகொண்டே சினிமாப்பாடல்கள்பாடியபெரியபெரிய டேப்ரிக்கார்டர்கள் இப்போது இல்லாதி ருந்தபோதும் கூடஅன்று அவர்கள் அன்று ஆற்றிக் கொடுத்த டீயின் ருசி இன்னும் நாவின் சுவையறும்புகளில் ஒட்டிக்கிடப்பதாக/

அப்படியாய்டீப்போட்டமாஸ்டர்கள் இப்போது எங்கு போனார்கள் எனத் தெரிய வில்லை,இல்லையெனில்அந்தக்கடைகள்இப்பொழுதுஇல்லையாஎனவுமாய்த் தெரியவில்லை/ யாரையாவது கேட்டுச்சொல்லச் சொல்ல வேண்டும்.

ஹௌசிங்போர்ட்வீடுகள்இருக்கும் இடத்திலிருந்துஒரு நூறடி தள்ளி போஸ்ட் ஆபீஸ் இருந்தது,

போஸ்டாபீஸிற்குஇங்கிருந்துதான்டீப்போகும்.காலை மதியம்,மாலைமூன்று வேளையுமாய். இதில்காலை10.30மணிக்குபோகிற டீதனியாய்த்தான் போகும்,  மதியம் 12.30ற்கு ப்போகிற டீ வடையை துணை சேர்த்துக்கொள்ளும்.அவர்கள் சாப்பிட ஆகிப்போகிற மதியம் இரண்டு அல்லது இரண்டரை வரை பசிதாங்க வேண்டுமே.மாலைமூணறைமணிக்குப்போகிறடீயுடன் கொஞ்சமாய் பிஸ்கட் அல்லதுகேக்போகும்.எல்லோருக்குமேமாதக்கணக்குதான், சில்லறை யாய் நோட்டாய் அவர்களது தோதுக்குத்தகுந்தாற்ப்போல வந்து விழுகிற பணம் கடைக்காரின் மொத்தக்கடனுக்கு அல்லது மொத்தமாய் அவர் கணக்குப் பண்ணி வைத்திருக்கிற ஏதாவது ஒரு செலவுக்கு ஓடி அடையும்.

சாயங்காலம் ஆறு மணிக்கு மேலானால் போஸ்ட் ஆபீஸ்க்கார்கள் அங்கு வந்துவிடுவார்கள்டீசாப்பிட,அங்குவேலைபார்ப்பவர்களில்பாதிக்கும்மேல்இங்கு இருப்பார்களோஎனஎண்ணத்தோணிவிடுகிறதும்உண்டு..காலை9மணிக்குள்ளாகவும்மாலை6மணிக்குமேலாகவுமாய்அவர்களதுஆக்ரமிப்பேதனியாகஇருக் கும்கடையில்/ ஏதாவது கார்ட்,கவர்,ஸ்டாம்ப்,,,,,,,எனஎதுவும் வேண்டுமானால் அங்கேயேவாங்கிக்கொள்ளலாம்போலிருக்கிறது.எனநினைக்கத் தோணி விடு கிற அளவிற்கு/

அங்குதான்மலைச்சாமியைப் பார்ப்பான். தினசரிகளின் மாலைகளில் அல்லது காலைவேளைகளில் டீச்சாப்பிட வருகிற வேளைகளில்/

வழக்கமாகடீமட்டும்தான்இவனதுசாய்ஸ்ஸாகஇருக்கும்.ஆனால்எப்பொழுதா வதுஅல்லதுஎன்றாவதுஒருநாள்நாக்கடக்கமாட்டாமல்வடைசாப்பிட்டுவிடுவ துண்டு.பருப்புவடை,உளுந்தவடை,அதிரசம்,ரவாப்பணியாரம்தவிர்த்துஅவரிடம் கீரை வடை இருக்கும்.சுட்டெடுத்த மற்ற,மற்ற வடைகளை விட அது தனித்து அடையாளம்கொண்டவியாபாரமாய்/அதுதான்இவனதுபெரும்பாலானநாட்களி ன்சாய்ஸாக/மற்றவடைகள்சேர்த்துநூறுபோட்டால்கீரைவடைமட்டுமேநூறுக் குப்பக்கத்தில் போடுவார்,

தலைமைதலைமைதபால்நிலையத்திலிருந்து அகன்று நீண்டு போகும் தார்ச் சாலையின் இடது பக்கமாய் இருந்த ராமசாமி டீஸ்டாலில்ராமசாமிடீஸ்டால் என போர்டு போடப்பட்டு இங்கு சூடாக வடை கிடைக்கும் எந்நேரமும் என போர்டு வைத்திருந்த கடைதான் அவரது கடை என்பதான அடையாளம்/

நீண்டு உள்ளே போகிறகடையில் டீ பாய்லர் கொதித்துக்கொண்டிருந்த இடது பக்கத்தை ஒட்டியாய் சற்றே பின் தள்ளி அமைந்திருந்த இடத்தில்தான் பீடி, சிகரெட்,மிட்டாய் மற்றும் ,பிஸ்கட்கள் என வரிசையாய் அடுக்கப்பட்டிருந் தவைகளின் முன்னே அலுமினிய தட்டில் வடைகள் மற்றும் சோமாஸ் என தனித்தனியாய் அடுக்கி வைத்திருந்தார்,

இதுதவிர்த்து கீரை வடைக்கென தனித்தட்டு, இதுதாண்டி கையில் வாங்கிய டீக்கிளாஸீடன்நாம்விரும்பினால்கடையின்உள்ளேவிரிந்திருந்தவிஸ்தீரமான இடத்தில் போட்டு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக ச்சேர்களில் அமர்ந்து டீசாப் பிட்டுக்கொள்ளலாம்,ஆனால்பெரும்பாலுமாய்யாரும்அப்படிச்செய்வதில்லை எனதான்தோணுகிறது,அப்படிச்செய்கிறவர்கள்ஒன்றுசிகரெட்குடிக்கிறவர்களாய் இருக்கிறார்கள்அல்லதுவீட்டுக்கும்படிக்கிற பள்ளிக்கும் தெரியாமல் சிகரெட்க் குடிக்கிற மாணவர்களாய் இருக்கிறார்கள், பத்து ,பதினொன்றுபடிக்கிறவயதில் இப்படியொரு புத்தி அல்லது ருசி இல்லை என்னதான் இருக்கிறது இதில் என செய்துபார்த்துவிடுகிற தைரியம் வந்து விடுகிறதுதான் பெரும்பாலுமாய் எனத் தோணுகிறது மாணவர்களை கையில் சிகரெட்டுடன்ப்பார்க்கும் கணங்களில்/

அவர்களும்தைரியமாய்கடையின்உள்ளேசுவரின்உச்சியில்இருந்தஅகலமான முகம்பார்க்கிறகண்ணாடியைப்பார்த்தவாறேசிகரெட் குடித்தார்கள், கண்ணாடி பழையதாய்தெரிந்தபோதும்கூடஅதைச்சுற்றிஇருந்தமரப்பிரேம்நல்லவேலைப் பாடுடன்அமைந்ததாய்இருந்தது.இப்பொழுதெல்லாம் பாலீஸ்ப் போட்டால் மரப்பிரேம் பளிச்சென இருக்கும்.

இது போல் கண்ணாடியைப்பார்த்து சிகரெட்க்குடிக்கிற மாணவர்களைப்பார்க்க நேர்கிறசங்கட மனோ நிலை தவிர்க்கவே இவன் பெரும்பாலுமாய் கடைக்கு வெளியில்போடப்பட்டிருக்கும்பெஞ்சில்அமர்ந்தோஅல்லதுஓரமாய் கை கட்டி நின்றவாறு சாலையில் வேடிக்கை பார்த்துக்கொண்டே டீக்குடித்து விட்டு போய் விடுவதுண்டு,

இவன் மட்டுமல்ல தகப்பன் ஸ்தானத்தில் இருக்கிற பெரும்பாலானவர்கள் இப்படித்தான் செய்து விட்டுப்போய்விடுவதுண்டு.ரொம்பச்சிலரானால் அப்படி யாய்கடைக்குள்அமர்ந்துசிகரெட்குடிக்கும்மாணவர்களைஅடித்துதுவம்சம்செய் து விடுவது போல முறைத்துப் பார்ப்பார்கள்,இன்னும் சிலரானால்கடை ஓன ரிடம் போய் எண்ணண்ணே நம்ம வீட்டுப்பிள்ளைகள்ன்னா இப்பிடிச் செய்ய விட்டுபாத்துக்கிட்டுஇருப்போம்மாண்ணே,கொஞ்சம்சொல்லக்கூடாதா,இல்லை ன்னா சிகரெட் பீடி குடுக்குறதயாவது கொஞ்சம் நிறுத்தக்கூடாதா என்பார்கள். இப்பக்கம் மன உறுத்தல் .அப்பக்கம் வியாபாரம்.என்னதான் செய்வார் பாவம். கடைக்காரரும்/

ஒருமழை நாளின்மாலை வேலையாய் கடையின்உள்பக்கமாய் தெரிந்தஅடர் ஊதா வர்ணத்தைப்பார்த்தவாறே டீக்குடித்துக் கொண்டிருந்தபோது டீக்கடை ஓனர் கடைக்குவந்திருந்திருந்தவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.மனுசனா அவன்சொன்னாகேக்குறவனா இருக்கணும்,யார் சொன்னாலும்கேக்கமாட்டே ன்ங்குறான்,நான்சொல்றேன்,டீமாஸ்டர்சொல்றாரு,கடைக்குவந்துருந்தவங்க
ள்ல சில பேர் சொல்றாங்க,கேக்க மாட்டேங்குறான்.அந்நேரம் டீக்குடிச்சிக் கிட்டிருந்த கட்சிக்காரருஒருத்தர் கூட சொல்றாரு கேக்குற வழியக் காணம், அவரு அவுங்க கட்சியில்அவரு பெரிய லீடரு,ஊருஉலகத்துக்கெல்லாம் சேத் து வச்சி அவுங்க பேசிக்கிட்டுத்திரியிறாங்க/அவர்ட்டப்போயி எதித்துக்கிட்டு நிக்கிறான் நீயி யாரு என்னயச்சொல்லன்னுட்டு,

அவரு வேற ஒண்ணும் சொல்லீறல, வியாபாரம் நடக்குற யெடத்துல வச்சிக் கிட்டு ஏன்யா இப்பிடி எசக்கேட்டா பேசிக்கிட்டுஇருக்கிறன்னார்,அது தப்புன்னு என்னயஎப்பிடி அப்படிபேசப் போச்சின்னு அவருக்கூட மல்லுக்கு நிக்கிறான். நல்லா இருந்தா அவரோட மகன் வயசு இருக்கும் அவனுக்கு/வேற ஒண்ணும் நாங்கஅவன கேட்டுறலடீக்குடிச்சா பாக்க்கிய கேட்டதுக்குத்தான் இவ்வளவுக் கும்காரணம்/.

பேச்சுன்னாபேச்சு அந்தப்பேச்சு,நம்ம யேவாரத்துல ஒக்காந்துக்கிட்டு அவனப் போலநம்மளால வார்த்தைவித்தியாசமாபேசமுடியல,பொறுத்துப்பொறுத்துப் பாத்துகடைசியில செருப்புட்டநாலு போட்டுத்தான் அனுப்பவேண்டி வந்தது, ஏங்தம்பிவந்தான்வியாபாரத்துக்குபோயிருந்தவன்,நான்தான்வரச்சொன்னேன்,
போன் பண்ணி.வேறவழியில்ல,பாம்ப அடிக்க கம்ப எடுக்க வேண்டியதாத்தா இருக்கு சொல்லிக்கேக்கலன்னா,,,,என்ன செய்ய பின்னே எனக்கே சங்கடமாப் போச்சு,தம்பிவந்ததுக்குஅப்புறமா/அவனும்கொஞ்சம்கடுசாத்தான்நடந்துக்கிட்
டான்,என அவர் சொன்ன இரண்டு நாட்களுக்கு கடைப் பக்கம் போக வாய்க்கவில்லை இவனுக்கு,

மலைச்சாமி சார் கூடக் கேட்டார், ஆளையே பார்க்க முடியவில்லை என,,,,,,,,/

மலைச்சாமிசார்போஸ்ட்ஆபீஸில்வேலைபார்க்கிறார்என்பதைஅவரதுசீருடை யும் சைக்கிளுமே சொல்லிவிடும்.

டீக்கடைகளிலும் சரி, வெளியே அவரைப் பார்க்கிற கணங்களிலும் சரி அவர் அணிந்திருக்கிறசீருடையேஅவரைஅடையாளப்படுத்திக்காட்டிவிடும்.காக்கிக் கலர் பேண்ட்டும், காக்கிக்கலர் சட்டையும் சட்டைப்பையின் மேலாய் அவரது துறையின் லோகோவுமாய்த்தெரிவார்.அவர் வேலை பார்க்கிற அலுவலகத் திற்கு இவன் போகிறபோதும்இவன் வேலை பார்க்கிற அலுவலகத்திற்கு அவர் வருகிற போதுமாய் அரும்புவிட்ட பழக்கம்.

வரம்பு மீறாத நல்ல பழக்கம்,யாரைப்பற்றியும் யாரிடமும் பழிக்காத குணம் ஒரு இழி சொல் கிடையாது கெட்ட வார்த்தை கிடையாது,(அப்படியே வைதா லும்மனதிற்க்குள்ளாய்திட்டிக்கொள்பவராய்இருக்கலாம்)நல்லதனமாய் வந்து நல்லமாதிரியேபழகுவதால்அவருடன்இவனுக்குக்கொஞ்சம்ஒட்டுதல்ஜாஸ்தி இருந்ததில்ஆச்சரியம்இல்லைதான்.பெரும்பாலுமாய்மாலைவேளைகளில்தான் அவரைப் பார்க்க முடிகிற நேரமாய் ஆகிப்போவதுண்டு. அலுவலகம் விட்டு இவன் வரும் போது மிகச் சரியாக டீக்கடையில்தான் நின்றிருப்பார். என்ன சார் என்றால் டீக் கடைகள் தான் எனது ரிலாக்ஸ்ப்பாயிண்ட் என்பார். அதுவும் இது போலான டீக்கடைகள் வாய்த்துவிட்டால் போதும்நாள்முழுவதுமாய் டீக்குடித்துக்கொண்டேஇருப்பேன்என்கிறார்.வாஸ்தவம்தான்அவர்சொல்வதும்/

டீ,டீ,டீ,,,,,,,என்னய்யா இது டீப்பைத்தியமா உமக்கு என மனைவி மக்கள் வைத போதும் கூட சரி இதை விட முடியவில்லை என்கிறார்.கிட்டத்தட்ட அவரது நிலையில்தான் இவனும்/ என்ன10டூ5ன் அலுவலத்தனத்தில் இவன்ஒரே ஆணிஅடிக்கப்பட்டுவிடுவதால்இம்மாதிரியாய் டீக்குடிப்பது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அலுவலகத்தில் ஜெய்லானி பாய்கொண்டு வந்து கொடுக்கிற டீதான்.காலை பத்தரை அல்லது பத்தே முக்கால் மணிக்கு ஒன்று. மதியம்12.30அல்லது12.45ற்கு ஒன்று என வருகிறடீக்கடைகளே இவனுக்கு தாக சாந்தி ஆற்றுவதாக/

நாவின் சுவையறும்புகளில் டீயைப்படரச்செய்து கொண்டே வலது கையில் டீக்கிளாஸும்இடதுகைதோள்ப்பையைதொட்டதுமாய்இருக்கிறசமயங்களில் என்ன சார் நல்லாயிருக்கீங்களா எனக்கேட்டால் போது,உண்மையச் சொல்ல ணுன்னா நல்லாயில்ல,பொய்யச்சொல்லணுன்னாநல்லாஇருக்கேன் என்பார். ”பொம்பளப் புள்ளயப்பெத்து வச்சிக்கிட்டுஎங்கிட்டுசார்நல்லாயிருக்க”,ரெண்டு மூணுகெடையாது,ஒத்தப்பொம்பளப்புள்ளசார்.நல்லாத்தான்பெத்தோம் நல்லா த்தான்வளத்தோம்,ஏதோஎங்களுக்குத் தகுந்தாப்புலநல்லபடியாபடிக்க வச்சோ ம்.+2வுலமாவட்டத்துலமொதமார்க்கு.பி.காம்லபர்ஸ்ட்கிளாஸ்லபாஸ்பண்ணு
னா, நல்லாபடிப்பா,கற்பூரப்புத்தி டீவி ரேடியோன்னு எதுன்னாலும் முழுசாப் பிரிச் சிப் போட்டு ரிப்பேர்ப்பாத்து மாட்டீருவா. புதுசாக் கூட டீவி அசம்பிள் பண்ண ஆசை அவளுக்கு. அவ ஆசைப்பட்டாளேன்னு கேட்ட சாமான்ல்லாம் வாங்கிக்குடுத்தேன்./புதுசாஒருடீவியஅசெம்பிள்பண்ணிஏங்கையில குடுத்தா, இது போல ரேடியோ ,மிக்ஸி கிரண்டர்ன்னு எது வேணுமின்னாலும் செய்வே ன்னு சொன்னப்ப,அவ அம்மாக்காரி சத்தம் போட்டா,  ஊரே எடுத்துக்கிட்டு போற மாதிரி,பண்ணுவ,பண்ணுவடி மொதல்ல நல்லா சமையல்ப் பண்ணக்கத் துக்க ஏந்தம்பிஒனக்காக காத்துக்கிட்டு நிக்கிறா ன், அவன் கையில ஒன்னய புடிச்சிக் குடுத்துக்குஅப்புறம்நீயிடீவியோ,ரேடியோவோ மட்டும் இல்ல ஏரோப் பிளான் கூடப்பண்ணு/ எனச் சொல்வாள். ஒத்த புள்ளயபெத்து செல்லங்குடுத்து வளத்து நீ கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்து படிக்கவச்சதுல செலவுதானே ஆச்சே ஒழியபெரிசாஎதுவும் சேத்து வைக்க முடியாமப்போச்சு,அதான் இருக் கு றத வச்சி இன்னும் ஒன்னு ரெண்டு சேத்துப்போட்டு ஏந்தம்பிக்கு கட்டிக் குடுத்துரலாம்ன்னு இருக்குற வேளையில மிக்ஸி,கிரண்டர், டீவி,ரேடியோ ன்னு,,,பேசிக்கிட்டுவெட்டியாபொழுதாபோக்கீட்டுஇருக்காதஆமாம்,,,,,,எனஅவ சொன்ன நாளன்றிலிருந்துஆறுமாசக்குள்ளாய் அவளுக்கு கல்யாணம் செஞ்சி வச்சோம், அன்னையிலஇருந்து இன்னைய வரைக்குமா அவ ஒரு ஆம்பளப் புள்ளைய பெத்ததுக்கு அப்புறமும் கூடநாங்கதான் தூக்கிச்செமந்து க்கிட்டு இருக்கோம்.

எல்லாதாயி தப்பனப்போல நாங்களும் ஆச ஆசயா மண்டபம் புடிச்சித்தான் கல்யாணம் பண்ணி வச்சோம்/சந்தோஷமாவும் எந்தக்கொறவுமில்லாமயும். மாப்புள வெளியூர்ல வேலை பாத்ததால அவுங்க ஆபீஸ் ஆள்க வேற,ஏங்கூட வேலை பாத்த ஆட்கள் தனி அப்புறம் தெருவுல சொந்தக்காரங்கன்னு எல்லா ரும் வந்திருந்து வாழ்த்தீட்டுப்போன கல்யாணம்தான்/

அதெல்லாம்நல்லாதான்இருந்தாங்க ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு/ அப்புற மா யாரே கண்ணுபட்டதுபோல ஆகிப்போச்சி நெலமதீடீர்ன்னு அவனுக்குள்ள தூங்கீட்டு இருந்தமிருகம் இல்லைன்னா அவன் மூட்டை கட்டிப் போட் டிருந்த கெட்டபுத்தி முழிச்சிக்கிருச்சி/ புள்ள இங்கன இருக்குற வரைக் கும் ஒண்ணும் தெரியல,நாங்களும் ல்யாணமான புதுசுல புள்ளய அனுப்பி வைக்க வேணாம் ன்னு மாப்புளயமட்டும் அனுப்பி வச்சோம் வேலை பாக்குற ஊருக்கு. அவரும் வாரத் துக்கு ஒருக்க வந்து போனாரு.அதுவரைக்கும் கூட சரிதான்,எல்லாம் சரியாக வே ஓடிக்கிட்டு இருந்துச்சி.அப்புறமா அவரு வேலை பாக்குற ஊர்ல கொண்டு போயி இவங்கள குடிவச்சிட்டு வந்த பிற்பாடுதான் ஆரம்பிச்சது வெனை/

சந்தோசமாத்தான் அவுங்கள அங்க கொண்டுபோயி குடிவச்சோம்.கையில கழுத்துலஇருக்குறதகழட்டிஅடகு வச்சி மகளுக்காகத்தானன்னு குடுத்துட்டு வந்தா, வாடகை வீடு வேணாம் சரிப்படாதுன்னுசொல்லிஅந்தஊர்லஇருக்குற எங்க டிபார்ட் மெண்ட்ஆட்கள்ட்டச்சொல்லிநல்லஏரியாவாப் பாத்து ஒத்திக்கு வீடு புடிச்சி குடிவச்சிட்டு வந்தோம்,மொதல்ல சாயங்காலமானா குடின்னு மட்டும்இருந்தவன்அப்புறம்மோகத்துக்கும்,ஆசைக்கும்நாட்களஎண்ணிக்குடுத் துட்டு கூத்தியா பின்னாடி போயிட்டான்.மாசத்துல பாதி நா கண்ணக்கசக்கீட்டு ஏங் மக இங்கதான் வந்து கெடப்பா,பின்ன நாங்க கொண்டு போயி சமாதானம் பேசி வச்சிட்டி வருவோம்,மொதல்லநாங்கபேசுன நயந்த வார்த்தைக்கு கட்டுப் பட்டவன் அப்புறமாகூடப்பொறந்த அக்கான்னு கூட பாக்காமஏங் பொண்டா ட்டிய வீட்ட விட்டு வெளியே போடி,,,,,,,,,,,,,ன்னு சொல்லீட்டான். அப்புறமா எங்கஏங்மகஅங்கநிம்மதியாஇருக்க,,,,,வளைகாப்புக்குகூட்டீட்டிவந்தவஇன்னை
ய வரைக்கும்இங்கதான்இருக்கா,அவபுள்ளைக்கும் இப்ப ஒண்ணரை வயசு ஆகப்போகுது,இது வரைக்கும் புருசன் காரன் வந்து என்னன்னு ஒரு வார்த்த கூட கேக்கல,நாங்களும் அலையா அலைஞ்சிபாத்த அலைச்சலெல்லாம் பிர யோ ஜனமில்லாமப்போச்சி/

மொதப்புள்ளயபெத்ததுக்குஅப்புறமாபுருசன்வீட்டுக்குபோகமாட்டேன்னுசொன்
ன வளசமாதானம் பண்ணி கூட்டிட்டுப் போயி விட்டுவந்தோம், கொண்டு போயிவிட்டுட்டுவந்த கொஞ்ச நாள்ல பச்ச ஒடம்புக்காரின்னு கூடப்பாக்காமா அவள அடிச்சிக்கொண்டு வந்து இங்க விட்டுட்டுப் போயிட் டான்,என்னன்னு கேட்டப்ப இந்த தொட்டாச்சிணுங்கிகூடயெல்லாம் என்னால வாழ முடியாது ன்னு சொல்லீட்டுப்போயிட்டான்.

மககிட்டவிபரம்கேட்டப்பஒன்னுமேசொல்லாமஓன்னுஒரேஒப்பாரி,,,,ரெண்டு நா கழிச்சி அவ அம்மாதான் சொன்னா, கூத்தியாவ வீட்டுக்கே கூட்டீட்டுவந்து வச்ச்சி குடும்பம் நடத்த ஆரம்பிச்சிட்டான்னு,இவளும் கூடுமானவரைக்கும் சொல்லிப்பாத்துருக்கா,கூத்தியா கூட சண்டையெல்லாம் போட்டுருக்கா,அவ உள்ளூர்க்கார்யில்லையா,ஆள்களக்கூட்டிக்கிட்டு வந்துருக்கா ஞாயம் பேச, ஏங் மருமகனுக்கும் கூத்தியாள வீட்டுக்குள்ள வரவேணாம்மின்னு சொல்ல தைரியமில்ல.பொறகு அங்க இருக்குறது மரியாதை இல்லைன்னுஏங் வந்து ட்டா புள்ளையா தூக்கீட்டு,மருமகன் கூட சொல்லீருக்காரு கூத்தியாள ஓங்அக்கா மாதிரி நெனைச்சிக்கிட்டு கூட இருன்னு.எனக்கு நீயி எப்பிடி முக்கி யமோ அப்பிடித்தான் அவளும்ன்னு சொன்னவர்ட்ட அப்படின்னா அவளயே கட்டீட்டு அழுங்கன்னு சொல்லீட்டு அன்னைக்கி வந்தவ இன்னைக்கி வரைக் கும்இங்கதான் இருக்கா,/ஏங் பொண்டாட்டி சொந்தத்தம்பிக்குக்குடுத்து மக வாழ்க்கைய கெடுத்துட்டமோன்னு நெனைச்சி வருத்தப்படாத நாள் இல்ல,

எங்களுக்குஒடம்புநல்லாஇருக்குறவரைக்கும் பாத்துக்குவம்,எங்ககண்ணுக்கு அப்புறம்,,,,,,,,?இப்ப மருமகன் வந்து கூட்டீட்டுப் போனாக்கூட எனக்கு சம்மதம் தான்,ஆனாஇங்க வர்றாரு,போறாரு எங்க வீட்டுப் பக்கம் வர்றதில்லை. இங்க தான்அஞ்சுகிலோமீட்டர்தூரத்துலஅவுங்ககிராமம்இருக்கு.அங்க இருக்கிறதாச் சொல்றா ங்க,நான் ஓரு நாக்கூடப்பாத்ததில்லை. வேலை பாக்குற ஊர்லயும் இருக்கமுடியலயாம்நிம்மதியா,கூத்தியாளோடஅட்டகாசம்தாங்கமுடியலயாம் மருமகன் வேலபாக்குற ஆபீசுக்கே வந்து தொந்தரவு குடுக்க ஆரம்பிச்சிட்டா ளாம்.அதுக்குத்தாங்க மாட்டாம,ரொம்ப நாளா லீவூ போட்டுட்டு இங்கதான் சுத்திக்கிட்டு திரியிராரு,

சும்மாவே தண்ணி தண்ணின்னு திரியிறஆளு அவரு,இப்ப கேக்கவா வேணும் தடுக்கிவிழுந்தாஒயின் ஷாப்புல போயித் தான் விழுகுறாரு/ நாலு நாளைக்கு முன்னாடிவந்துஇங்கடீக்கடையிலசத்தம்போட்டவருயாருன்னுபாக்குறீங்க, எல்லாம் ஏங் மருமகந்தான்,என்ன செய்ய பொழப்புக்காக என்னவோ தின் ன கதையாப்போச்சி. வந்திருந்தவன் டீக் குடிக்க வந்துருந்தக் கூட டீயக்குடுத்து அனுப்பிச்சிட்டு வழக்கம் போல ஏங் கிட்ட காச வாங்கிக்கிருவாரு கடைக்கார ராமசாமியண்ணன்/ அவன் இப்பிடி வந்து குடிக்கிற டீக்கும் சாப்புடுற வடைக் கும்,குடிக்கிறசிகரெட்டுக்குமா நாந்தான் காசு குடுக்குறேன்.அட அன்னைக்கும் ஒன்னும் நடந்துரல,பெரிசா தண்ணியப் போட்டு வந்து சிகரெட் கேட்டவன்ட்ட கடைக்கார ராமசாமிண்ணேபாக்கி ரொம்ப ஏறிப்போச்சின்னு ஒருவார்த்ததான் சொல்லியிருக்காரு அதுதப்புன்னுமிட்டாயிபாட்லயெல்லாம்எடுத்துப் போட்டு ஒடைச்சி,,,,,, என்னைக்கும் சாய்ங்காலமா கடைக்கி வர்ற நானு அன்னைக் கின்னு பாத்துஒரு வேலையா பஜார்ப்பக்கம் போயிட்டேன்.இங்க பாத்தா நாரிப் போயி வீதியில இழுபட்டுக்கெடந்துருக்கு நம்ம வீட்டு மானம்,

மறு நா வந்தப்ப கடைக்காரரு சொன்னாரு,என்ன செய்ய கையெடுத்துக்கும் பிட்டு அவருகிட்டமன்னிப்பு கேட்டுக்கிட்டேன்,மருமகனால ஏற்பட்ட நஷ்டத் துக்குநான் பொறுப்பேத்துக்கிறேன்னு சொல்லி/நஷ்டஈடெல்லாம்வேண்டாம், மருமகன் இந்தப்பக்கம் வராமமட்டும் பாத்துக்கங்கன்றார்,நம்மஅவரச்சொல்ல முடியுமா அப்படி அவர இந்தப்பக்கம் வராதீங்கன்னு, சொல்லிப்பாப்போம், கேட்டா கேக்கட்டும்,இல்ல நடக்குறது நடக்கட்டுன்னு இருந்துற வேண்டியது தான். நம்ம இந்தக்கடப் பக்கம் வர்றத நிறுத்தீற வேண்டியதா,எனச்சொன்ன அவரை ஏறிட்டுகிறான்.

கடைக்குள்ளாய் இருந்தகண்ணாடியில்அவரரும் இவனுமாய் நிற்கிற உருவம் காட்சிப்பட்டுத்தெரிகிறது

பொதுவாகவே15லிருந்து16க்கும்17ற்கும்போகமுடிகிற நம்மால் 14க்குள்போக முடியவில்லையே என்கிறார் நண்பரும் தோழருமான ஒருவர்.

4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

கதை விவரணம் மிக அருமையாக, யதார்த்த நடையில் , போகிற போக்கில் சொல்லிச் செல்வது போல ....மிக அருமை.

ஆம்! முன்னே சென்று விடலாம் ஆனால் பின்னே செல்லமுடியாதே!

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/