4 Nov 2014

ஓலை விசிறி,,,,,



இரண்டு விசிறி கொண்டு விசிறிக்கொண்டால் எப்படியிருக்கும்? நன் றாகத்தான் இருக்கும் ,ஆனால் விசுறப்படுகிற விசிறிகள் இரண்டும் ஒத்துழைக்க வேண்டுமே? ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகபடுகிற நாட்டில் இது சாத்தியமே?

மனதுக்குள்ஒன்றைநினைத்துக் கொண்டு வெளியில் ஒன்றை பேசக் கூடாதுஎனசண்டைக்குவந்தவனைபோல ஆகிவிடக் கூடாது. விசிறி களின் ஒத்துழைப்பு மட்டுமல்ல, சண்டைக்கு நிற்பவர்களின் ஒத்து ழைப்புஇங்கு அவசியமாகிப்போகிற பொழுதாகிப் போகிறது. விசிறிப் பார்க்கலாம்.

”சரிஅந்தவிசிறியஎடுப்பா”எனச்சொன்னபோதுகையில்விசிறி தாங்கி வந்த சின்னமகன் அவனது மாமா கொடுத்தான் என கோடுகள் தரித்த டீசர்ட் அணிந்திருந்தான்.

சாம்பல்பூத்திருந்த கலரில்வெள்ளைக்கொடுகள்உடம்பின்குறுக்காக வரையப்பட்டு பார்க்க நன்றாகவேஇருந்தது.மாமா ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை

பார்க்கிறான். அவ்வப்பொழுது இப்படி ஏதாவது எடுத்துக் கொண்டு வந்து நிற்பான். அவன் வேலைபார்க்கிற கிராமத்திலிருந்து வாரத்தி ற்கு ஒரு முறைஞாயிறன்று வருகையில் இப்படி ஏதாவது சின்னதி லிருந்து ஒன்றைகொண்டுவந்து நிற்பான்.அந்த ஊரில் பிரியாணி நன் றாக இருக்கும் என பார்சல் வாங்கி வருவான்.மூன்று அல்லது நான்குபார்சல்கள்.அதில்ஒன்றுஅவனுக்கே சரியாகிப்போகும் அவ்வ ளவு பெருந்தீனிக்காரன்.இன்னும்கல்யாணம்ஆகவில்லை.அதனால் கூட இப்படி இருக்கலாம்.

திருமணமானவுடன் அப்படியேதலை கீழாக மாறிப்போகிறவர்கள் நிறையபேரைப்பார்த்துஇருக்கிறான்.இவனும் அப்படிஒன்றாய் ஆகிப் போய்விடக்கூடாதுஎன்பது இவனது ஆசை -யாயும் பிராத்தனையா யும் இருக்கிறது.கிடைக்கிற ஓசி பிரியாணிபறிபோய்விடக் கூடாது என்பதற்காகஅல்ல.அவன்நிலைகொள்வதற்காயும்இப்படியானதொரு மனோநிலை கைவரப்பெற வேண்டும் என நினைத்தான்.

எட்டாம் வகுப்பு படிக்கிற மகன் என்ன விசிறி எடுத்துக்கொடுத்து விடுவான் என்கிற மனோநிலையில்அல்ல. இருந்தாலும் கவனமாக எடுத்துக்கொண்டுவாஎன்கிறதாய்முடித்துக்கொள்கிறான்வார்த்தைகளை.
ரொம்பவுமாய் பேசமுடியவில்லை,ஏதாவதுஒன்றுசொல்லப் போய் ஏதாவதுஒன்றில்வந்துநிலைகொண்டுவிடுகிறதாய்மாறிப்போகிறது வார்த்தைகள். அதனால்தான் இந்தப்பதமும் நெளிவு சுழிவும்/

அவனுக்குமுழுப்பரிட்சைஆரம்பமாகப்போகிறநேரம்.அவனுக்குள்
இருக்கிறவிளையாட்டுத்தனங்கள்,சுட்டிமற்றும்சேட்டைத்தனங்களை
புதைக்கவிரும்பாமல்டீவிபார்க்க,விளையாட,நண்பர்கள்மற்றும்உறவின ர்கள்வீட்டிற்குப்போகஎன்கிறதானஅவனின்வாடிக்கைகளை குறைக் க வும் வெட்டவுமாய் விரும்பியதில்லை.

வரட்டுமே போய் விட்டும்,பார்த்து விட்டும்பேசிவிட்டுமாய் என்கிற மனோநிலையிலிருந்துஅவன்விலகியதில்லைஎப்பொழுதும்,இவனி டம் கூட உறவினர்கள் சிலர் கேட்டார்கள். ”என்ன பையனுக்கு பரிட் சை வரபோகுது டீ,வீ கேபிள் கட்ப்பண்ணலயா” என.

“ரொம்பவும் இறுக்கிப் பிடிச்சா படிக்க மாட்டாங்க. ரொம்ப லூஸ் லயும்விடவேணாம். ரொம்பவுமா இறுக்கிபிக்கவும் வேணாம், நடுவா ந்திரமா இருப்போம்.அப்பத்தான் பையனுக்கும் படிக்க இண்ட்ரஸ்ட் வரும்”என்பான்.

காலை எழுந்த ஏழு மணியிலிருந்து பல் துளக்கி சாப்பிடப்போகிற இப்பொழுதுவரைசின்சியராகமாடிப்படியில்அமர்ந்துபடித்துக்கொண்டு தான் இருந்தான். மணிபத்தாகிப் போகிற அரை மணிக்கு முன்பாகத் தான் சாப்பிட்டு எழுந்தான். அவன் எழுந்து சிறிது நேரத் தில் கரண்ட் போய் விட்டது. காலை வேளையின்மின்வெட்டைமனதில் இருத்தி யும், உடலில் தாங்கியுமாய் வீட்டின் வராண்டாவில் அமர்ந்திருந்த வேளை சின்னதான வராண்டாவின் இடது பக்கமாய் இருந்த தண் ணீர் மோட்டாரும், வலது பக்கம் சிவப்பு வர்ணம் காட்டி அமர்ந்திரு ந்த கேஸ் சிலிண்டரும் தத்தம் இருப்புக் காட்டியவாறு/

வலதும் இடதும் எதிரெதிர் திசையில் நிற்பதும்,பயணிப்பதும் புதிதா என்ன?வலது கையில் பனை ஓலை விசிறி,இடது கையில் தென்னை ஓலை விசிறி இரண்டின் நிறமும் பின்னலும் வேறு வேறாய் வித்தி யாசம் காட்டியும் கலர் காண்பித்துமாய்/

கைகளிரண்லும் வைத்திருந்த விசிறிகளை எடுத்து ஒரு சேர விசுறு கிறான்.விசையுடன் வருகிறது காற்று,என்ன இடத்திலிருந் ததை விட வலதிலிருந்து சற்று குறைச்சலாகவும் மட்டுப்பட்டுமாய்/

இடது கையில் இருந்த தென்னைஓலைவிசிறிசற்றுபரப்பு காட்டியும் அகலமாய் கை விரித்து பழுப்புக்கலர் காட்டி/ பனை ஓலைவிசிறி அப்படியல்லாமல்சிறிதான பரப்புக்காட்டி வெள்ளை நிற பின்னலில் இறுக்கம் காட்டித்தெரிகிறதாய்.

பழுப்புக்கலரில்இருந்துவருகிறகாற்றுஎதிர்முனைவிசிறியிலும்,வெள் ளைக் கலரில் இருந்து வந்தது அதன் எதிர் முனையிலுமாயும் அதன் உள்ளின் உள்ளிலுமாய் படர்ந்து பரவிகண்ணுக்குப் புலனாகிறது.

உடல் வேர்வை தணித்து நிற்கிறது.இத்துடன் வெளியில் வந்தவேப்ப மரக்காற்றும் சேர்ந்து கொள்ள மூன்றுமாய் கைகோர்த்து ஆடிய களி நடனம் வராண்டாவின் டைல்ஸ் பதித்த தரையில் பட்டு பிரதிபலிக் கிறது.இங்கிலீஸ்க்கலர் டைல்ஸ் எனச்சொல்வதை இன்னும் விட்ட பாடில்லைகொத்தனார்களும்,வீடுகட்டுபவர்களும்,டைல்ஸ்விற்பனை
யாளர்களும்.

வலதிலும் இடதிலுமாய் ஒரு சேர சீராக வீசிறிய விசிறிகளை சற்றே மாற்றிஒன்று கீழேயும், இன்னொன்று மேலேயுமாய் வருமாறு வீசிக் கொண்டால் என்ன எனத்தோணியது.கைக்கு அதுஒருபயிற்சி போல வுமாய்இருக்கும்.காற்றும்மாறுபட்டு வரும்.

இடதுமேலேசெல்கையில்வலதுகீழேயும்,வலதுமேலேசெல்கையில் இடது கீழேயுமாய் வந்து வித்தைகாட்டியும் கண்சிமிட்டி விட்டுமாய் செல்கிறது.இதுஒருசுழற்சிமுறையாயும்,விஞ்ஞானரீதியானசெயலாக வும்பார்த்தறியவும்அனுபவித்தறியவுமாய்நன்றாகத்தான்இருக்கிறது.

அப்பொழுதான்குளித்துமுடித்தஉடலிருந்துவழிந்தவியர்வைக்கோடு களும்,பூத்து ஈரம் பாரித்திருந்த உடலின் மீதுமாய் படர்ந்து காணப் பட்டவியர்வையையுமாய்உறிஞ்சிகாணாமல்போக்கிவிட்டதென்னை ஓலைவிசிறியையும்,பனைஓலைவிசிறியையும்தனது நிறத்தையும், பின்னலையும் முன் வைத்து அழகு காண்பித்ததாய்/

3 comments:

'பரிவை' சே.குமார் said...

விசிறி... இரட்டை விசிறியில் காற்று வாங்கி பேசிய வரிகளில் எல்லாம் கலந்து அருமை அண்ணா...

இடது வலது குறித்த கருத்து சூப்பர்...

Yarlpavanan said...

விசிறியை வைத்தே ஆக்கிய
தங்கள் கைவண்ணம் அழகு
தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் காசிராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/