8 Nov 2014

ஒரு சொல்,ஒரு ஓசை,,,,,,



 
ஒரு போட்டோ ஸ்டூயோவின் பெயர் பலகை அது.ஜீன்ஸ் பேண்ட் போட்ட இரண்டு சிறுவர்கள் அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். அலுமினிய ஏணியின்முதல்படியில் ஒருவனும் மேல் படியில் இரண் டாவது சிறுவனுமாய் அமர்ந்திருந்தார்கள்.

இரண்டாவது படியில் அமர்ந்திருந்த முதல் சிறுவன் முதலாவது படியில் அமர்ந்திருந்த சிறுவனை விட கொஞ்சம் புஷ்டியாகவும், வளர்த்தியாகவும்.முதல் சிறுவனின் தோள் மீது சாய்ந்து கொண்டு அவனது தலை மீது தலை வைத்திருந்தான் இரண்டாவது சிறுவன். சிறுவர்கள் சிரிப்பதும்,நாம் பார்ப்பதுமெல்லாம் சரிதான்.அதற்காக உடை கூடவா ஒன்று போல உடுத்திஇருக்க வேண்டும்? தரையில் பதிக்கப்பட்டிருந்தசிமெண்ட்கற்களில்படிந்திருந்ததூசியும்,மண்ணும் சிரித்த சிறுவர்களை முகம் சுளிக்க வைக்கவில்லை.

நண்பனுக்கு ரத்தப் பரிசோதனை எடுப்பதற்காக அங்கு சென்றிரு ந்தோம். T L R சாலையில் இருந்த ரத்த ப்பரிசோதனை நிலையமது. பெரும்பாலுமாய்நிரம்பிவழிகிறகூட்டத்துக்குமத்தியில்தன்னைபொதி த்துக் கொள்கிறரத்தப்பரிசோதனை நிலையத்திற்குள்ளாக நாங்கள் நுழைந்த போது ஆச்சரியம் நான்கைந்து பேர்களே இருந்தார்கள்.

வரிசையாய் போடப் பட்டிருந்த சேர்களில் வலது சாரி ப்ளாஸ்டிக் சேர்களையும்,இடது மரப்பெஞ்சுகளையும் காட்டிகொண்டிருந்த்தாய்/ இப்போதெல்லாம்இதுமாதிரியானமரப்பெஞ்சுகளைப்பார்ப்பது அரிதா கிப் போனது.

எங்களது அலுவலத்தில் ஒரு மரபெஞ்ச் இருந்தது.சுற்றிலும் நான்கு பக்கமாக ஊதா நிற கொடு இழுத்தது போல மைக்கா ஒட்டப்படிருக்க நடுவில் அரை வெள்லைக்கலர் காட்டி பார்க்கநன்றாகஇருந்தது பளிச்சென/

அதையே வெகு நேரமாக உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் சொன்னார் உடன் வேலை பார்ப்பவர். “இப்பிடித்தான்எங்கவீட்ல கொத்தனார்வேலைநடந்துகிட்டு இருக்கும் போது ஷெல்ப் வேல பாத்தவருகரண்டியவச்சி அப்பிடி,இப்படின்னு ரெண்டு திருப்பு திருப்பு னாரு,ஆகா என்ன ஆச்சரியம்.நல்லதா ஒரு டிசைன் வந்துருச்சி. அப்படியான ஆட்களால சும்மாசாதாரணமாவேலசெஞ்சிட்டுப் போக முடியாது.அது மாதிரிஒரு ஆளா இருப்பாருன்னு நெனைக்கிறேன் இந்தபெஞ்சசெஞ்சவரு.பாத்தாலே தெரியலையா கை வேலை யோட தெளிவ.”என்றார்.அது போலவேதான் காட்சிப்பட்டது நான் ரத்தப்பரிசோதனை நிலையத்தில் பார்த்த மரப் பெஞ்சும்/ அதுதச்சரின் கைவண்ணமஅல்லதுநிலையத்துக்கார்ர்களின்எண்ணவெளிப்பாடா  தெரியவில்லை.

நண்பரிடம் சொல்லி விட்டு வெளியே வருகிறேன்.வெளியே வந்த தும் எனது கண்களும், கால்களும் நோக்கிய இடமும்,சென்ற இடமும் டீக்கடையாக இருந்தது.

அது என்ன அப்படி தெரியவில்லை. டீக்கடைகளைப்பார்த்ததும் அப் படி ஒரு ஈர்ப்பு வந்து விடுகிறது .அவசரத்திற்கு கடன் கொடுத்த புத்தி மாதிரிஇப்படி ஆகிப்போகிறது. சுவையால் உந்தப்படுகிற நாக்கும், நின்று குடிக்கிற போதுகிடைக்கிற ஆசுவாசமும்தான் இப்படி செய்ய வைகிறது போலும்.

பாய்கடைக்குப்போகலாம்.அங்கேயென்றால்பக்கத்துசார்லஸ்கடையில் கடலைமிட்டாய்அல்லதுமுறுக்குசாப்பிட்டு விட்டு மறக்காமல் ஆன ந்தவிகடன்புத்தகம்வாங்கிவந்துவிடலாம்.அவரிடம்வாங்கினால் தான்உண்டு.இல்லையென்றால்மறந்துபோகிறது.அல்லது உடலும், மனமும்சேர்ந்துபோத்திக்கொள்கிறசோம்போறித்தனத்தால் எங்கும் போய்வாங்குவதுமில்லை. வாங்கலாம்எனத்தோணுவதுமில்லை. அவர்கடைக்குஎதிர்வரிசையில்இருக்கிறஅக்காகடையில்வேறொரு புத்தகம் வாங்குவேன்.

அக்காகடைக்குபெயர்காரணம்தெரியவில்லை.ஆனால்பாய்டீக்கடைக்கு
அருகிலிருக்கிற சார்லஸ் கடை பாய்கடைஎனத்தான் அறியப் படுகி றது. சார்லஸீக்குமுன்னதாக சிக்கந்தர் பாய் வைத்திருந்த கடையது. டீக்கடைக்காரருக்குச் சொந்தக்காரர்.வணக்கம்பாய் என்றால் வயிறு குலுங்கசிரிக்கிறமனிதர்.வாழைப்பழங்களில்அத்தனைரகங்கள்இருக் க க் கூடும் என அவரது கடையைப்பார்த்துத்தான் நான் அறிந்து கொண்டேன்..கடையின்முகப்பில்கொக்கிமாட்டிதொங்கவிடப்பட்டிரு
க்கிறவாழைப்பழத்தார்களுக்குப்பின்னால் நிற்கிறவரின் சிரிப்புச் சத் தம் கேட்கும் போதுதான் அவர் அங்கிருக்கிறார் என்பதே தெரிய வரும். அப்படி பழத்தார்களின் பின்பு நின்று வியாபாரம் செய்தவர் திடீரென ஒரு நாளில் கடையை காலிசெய்த போது பலரும் பல காரணம்சொன்னார்கள்,அண்ணன்தம்பிபங்குப்பிரிவினைதான்கடை
யின்வியாபாரத்திற்குவேட்டுவைத்துவிட்டதென சிலர் சொன்ன அன் று சார்லஸீக்கு கை மாறிய கடையைத்தான் நாங்கள்இப்போது பார் த்துக்கொண்டிருக்கிறோம்.அங்குஇப்போது ஆளை மறைக்கிற அளவு வாழைப்பழத்தார்கள் இல்லை.

ரத்தப்பரிசோதனை நிலையத்தை விட்டு இரண்டு அல்லது மூன்று எட்டுகள்எடுத்துவைத்திருப்பேன்.சார் வணக்கம் என்கிற குரல் பிரேக் கிடஅழுந்தகால்பதித்தவனாய்நிற்கிறேன்.குரல்வந்த திசை சக்கரைச் சாமியைஅடையாளமிடுறது.

“நல்லாயிருக்கீங்களா சார். என்றவராய் விளக்குக் கம்பத்தினடியில் நின்றிந்திருந்தார்.
மாலைமயங்கிஇரவைகொண்டுகைகோர்த்துக்கொண்டுவந்துகொண்டி
ருந்தவேளையது.தெருவிளக்குகள்எரியஆரம்பித்திருந்தது.விளக்கின் வெளிச்சத்தில்பிரகாசித்த அவரது முகம் இடது பக்கம் வெளிச்சம் காட்டியும் வலது பக்கம் நிழல் காட்டியுமாய்/

அவரதுகால் பாதம் நன்றாக இருந்தவரைஎங்குபோனாலும் சைக்கிள் தான். சிவப்புக்கலர் ஹெர்க்குலிஸ் சைக்கிள் அது.அவரது மகளுக் காய் பள்ளிப்பிராயத்தில் வாங்கியது என்றார் முன்னொரு நாளில்/ வீட்டிலிருந்து கிளம்பி விட்டாரென்றால் அவரது கையில் சைக்கி ளும் சட்டைப்பையில் பாடல் ஒலிக்கிற செல்போனும் இருக்கிறது என்று அர்த்தம். இத்தனைக்கும் அவர் வசிக்கிற பாண்டியன் காலனி யிலிருந்து தடுக்கி விழுந்தால் மினி பஸ்,ஆட்டோ டவுன் பஸ் என நிறைந்திருகிறவசதிகள்இருந்தபோதும்கூட அவைகளை ஓரக் கண் ணால் கூட பார்த்தில்லை அவர். “ஒடம்புல தெம்பு இருக்குற வரைக் கும்அடுத்தவுங்கஉதவியையோ,மத்தவங்ககையையோ எதிர்பாக்கக் கூடாது சார்”.எனச் சொல்பவர் அவரது வலது கால் பாதம் நன்றாக இருந்தவரை அப்படித்தான் இருந்தார். காலில் வந்த புண் ஆறாமல் இருந்த பொழுது டாக்டர் அவருக்கு சக்கரைச் சத்து இருக்கிறது என்பதை உறுதி செய்தார்.டாக்டரின் பரிந்துரைப்படி ரத்தப்  பரிசோ தனை, வைத்தியம் என எடுத்துகொண்டிருந்த நாட்களில் ஆறாமல் மேலும் சீழ் வைத்த புண் கால் முழுவதுமாய் பரவி நிற்கிறது.

வேறுவழியேயில்லை, ஆபரேஷன்தான் பண்ண வேண்டும் இல்லை யெனில் பாதம் வழி சலம் ஏறி விடும்,அப்புறம் காலுக்குச் சிக்கல் என்றார்டாக்டர்.ஆபரேஷனில்வலது பாத்தின் முன்முனையைஐந்து விரல்களோடு வெட்டி எடுத்து விட்டார்கள்.

ஒருவாரம் ஆஸ்பத்திரியில் இருந்தார்.பத்து நாட்கள் வீட்டில் ஓய்வு, பதினோராவதுநாளிலிருந்து கொஞ்சம் வெளியில் நடக்க ஆரம்பித்த வர் எங்கும் வெளியில் போக யாரையாவது எதிர்பார்த்து கொண்டும் பஸ்ஸிலும் ஆட்டோவிலுமாய் பயணிக்கிறவர் ஆகிறார்.

“எண்ணன்னே,இப்ப ஒடம்புஎப்பிடியிருக்கு?என்ன இங்க நின்னுக்கிட் டிங்க?-நான்
“ஆமா சார் அப்பிடியே வந்தேன் பஜாருக்கு/ சொந்தக்காரப்பையன் ஒருத்தன்கூடவண்டியிலவந்தேன்என்னைய இங்கன நிறுத்தி வச்சிப் புட்டுஅவன்ஒருசோலியாபோயிருக்கான்இந்தாவர்ரம்ன்னுட்டு/ அவன்வரவும்கெளம்பணும்.சேலமகளுக்கு எடுத்தது. கட்டிக்குடுத்த யெடத்துல இருந்து வந்துட்டாநெரந்தரமா.நல்லபயன்னுநம்பித் தான் கட்டிக் குடுத்தோம்.ரொம்ப தூரமும் இல்ல,ரொம்ப பக்கமும் இல்ல. சொன்னவுங்க பேச்ச நம்பிமோசம் போயிட்டோம். எந்நேரமும் குடி யோடதிரியிரவனோடஎப்பிடிபொழப்பு நடத்துவா பாவம். பொறுத்துப் பொறுத்துப்பாத்தவவந்துநிக்குறாநெறமாசமா/ பிடிவாதமா திரும்பப் போக மாட்டேங்குறா?எங்களுக்கு என்ன கணக்குன்னா அவள ஒரு நா,ஒரு பொழுதாவது மாப்புள வீட்டுல கொண்டோயி விட்டுட்டு அப்பிடியபுள்ள பொறப்புக்கு கூட்டிக்கிட்டு வந்துரலாம்ன்னு நெனை ப்பு.ஆனாஅவசொல்றாஅங்ககொண்டோயிவம்பாஎன்னையவிட்டிங் கின்னா நாண்டுட்டுச் செத்துப் போயிரு வேங் குறா, என்ன செய்ய சார்,நடுத்தொண்டையில நிக்குற வெசமா,,,,,,மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம தவிச்சிகிட்டு இருக்கேன்.சார்.

எனக்கு ஒங்களப்பாக்குறப்ப்யெல்லாம் ஒரு ஆசை.மனசுக்குள்ள கெடந்து ஓடிக்கிட்டேயிருக்கும் சார். அந்த ஆசை ஞாயம்தானா இல்லையான்னு தெரியல, ஆனா ஒங்களப் பாக்குற நேரங்கள்ல அப்பிடி ஒருஆசை மனசுக்குள்ள மொளவிட்டுக்கிட்டே இருக்கும். ஒங்கள மாதிரி ஒருநல்லஆளுஎனக்கு மாப்புள்ளையாவாக்கலையே ங்குறநெனப்புதான்சார் அது.ஆனா காலம் வேற மாதிரி வார்த்தை களாலபதிவுபண்ணீட்டுப்போயிருச்சிவாழ்க்கைய/இப்பஅதஎதுபண்ணி
சரி செய்யிறதுன்னு எனக்கும் தெரியல. வந்த மகளும் சொல்ல மாட் டேங்குறா.
சரிசார்வுடுங்கஅத/இப்பிடியேபேசுனாபேசிகிட்டேஇருப்பேன்.வாங்க டீசாப்புடலாம். என பேசிக்கொண்டே சென்றவர், டீக்குடித்துக் கொண் டிருக்கும் போது சொன்னார்.

”சார் எனக்கு ஒரு சின்ன ஆசை.அது ரைட்டா,தப்பான்னு தெரியல, ”ஒங்கள நான் மாப்புளைன்னு கூப்பிட்டிக்கிரட்டுமா”?,,,,

10 comments:

'பரிவை' சே.குமார் said...

எதார்த்தமான கதை...
சின்ன ஆசை... ரொம்ப நெகிழ்வாய் இருக்கிறது...
அருமை அண்ணா...

கரந்தை ஜெயக்குமார் said...

நெகிழ்ந்தேன்

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணகம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

UmayalGayathri said...

இயல்பான கதை. மனதை தொடுகிறது

vimalanperali said...

வணக்கம் உமையாள் காயத்திரி மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

விச்சு said...

அவசரத்திற்கு கடன் கொடுத்த புத்தி மாதிரிஇப்படி ஆகிப்போகிறது. சுவையால் உந்தப்படுகிற நாக்கும், நின்று குடிக்கிற போதுகிடைக்கிற ஆசுவாசமும்தான் இப்படி செய்ய வைக்கிறது போலும். .. ஹாஹா.. ரசனைக்காரர். சின்ன சின்ன ஆசைகளும் மனதில் இப்படி ஏற்படுவதுண்டு.

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Yarlpavanan said...

கதை நகர்வு நன்று
படிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிஙம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/