31 Dec 2014

மணிக்கொச்சம்,,,,,,( பாகம் 2)

டீக்கடை உரிமையாளர் இளையராஜாவின் ரசிகர் போலிருக்கிறது. இளைய ராஜாவின் பாடல்களாய் எப் எம் ரேடியோவில் பென் டிரைவ் மாட்டிக்கேட்டுக் கொண்டிருந்தார்.எப்பொழுதோஇளையராஜாவின்அருகில்நின்றுஎடுத்த போட் டோஅவரதுகடைக்குள்ளாய்தொங்கியது.
 
இவன்போனநேரம்ரோசாப்பூரவிக்கைக்காரியில்உச்சிவகிந்தெடுத்துபாடலில் வரும்ஓங்காரஉடுக்கடிசப்தம்மனம்இளக்கிக்கொண்டிருந்தது.இவனும்பால
சேகருமாய்சென்றவேலையைமுடித்து விட்டு கி்ளம்பும் போதுஇருங்கள் மகள் டீவாங்கப் போயிருக்கிறாள்வந்து விடுவாள் விரைவாய்சாப்பிட்டு விட்டுப் போகலாம்எனஅவர் சொன்னமகள்கல்லூரி இளங் கலைஇறுதியாண்டுபடிக்கி றாள்.

டீக்கடைக்குஅனுப்புகிறேனேவயதுவந்தபெண்ணைஎனநினைக்க வேண்டாம். அப்படி அனுப்புவதில் எனக்கு எந்த விததயக்கமும்கிடையாது.டீக்கடைக்காரர் அவரது கடையில்அப்படி எதுவும் நடந்துவிட விட்டுவிடமாட்டார்.அவரது கண் முன்னால்மட்டுமல்ல,கடையை விட்டு எங்காவது வெளியில்போகிறவருகிற வழியில்எதேனும் நடந்ததாய் கேள்விப்பட்டால் கூடஅப்படிஎசக்கேடாகநடந்து கொண்டவனின்மென்னியைப்பிடித்துவிடுவார்.இப்படித்தான்ஆறுமாதங்களுக்கு முன்னால் இவள் டீவாங்கிக்கொண்டுவருகையில்கடைக்குவெளியேநின்று டீக் குடித்துக்கொண்டிருந்தவன்அருகிலிருந்தவனிடம்இந்தப்பெண்ணப்பற்றி எசக்கே டாய் பேசியது அவரது காதில் விழுந்து விட கல்லாவிலிருந்து எழுந்து வந்தஅவர்அந்தப்பையனின்சட்டையைப்பிடித்துஅடித்துவிட்டார்.அடிபட்டவன் போய் அரைமணியில்அவனுடன் வேலை பார்க்கிற நான்கைந்து பேரைக் கூட்டிவந்துவிட்டான்.அவர்களுடன்பேசிப்பார்த்தடீக்கடைக்காரர்விஷயம்கட்டு
க் கடங்காமல்போகவேமல்லையாகிருஷ்ணனுக்குச்சொல்லி விட்டு விட்டு மல்லுக்குப் பாய தயாராய் நின்று விட்டார்.வாங்கடா நின்னு பாத்துருவோம் என/ அந்நேரம் ஏதோவேலையாகப்போயிருந்தமல்லையா கிருஷ்ணன் தற் செயலாக சைக்கிளில் வந்துநின்றார் டீக்கடை அருகாக/சூழ்நிலையின் சூடு அறிந்து என்னஏதென விசாரித்துக்கொண்டும் எங்கே அந்தப் பையனுடன் வந்தவர்கள் என தேடிக் கொண்டிருந்த சமயத்தில் போன் வருகிறது, மல்லை யாக் கிருஷ்ணனுக்கு. போனில் பேசியவர் கடகடவென சிரித்துவிடுகிறார், அடக்கிறுக்குபயலுகளாஅவன்கேலி பண்ணுனது ஏங் பொண்ணடா,அவனுக்கு ஏத்துக்கிட்டுநீங்களும் வந்தீங்களாக்கும்/சரி சரி வாங்க நான் இங்கதான் நிக்கி றேன் டீக்கடைக்காரரு நம்மகூடப்பொறந்தபொறப்புமாதிரி. அவரும் நம்மள மாதிரிதா பொழப்புத்தேடி அத்து அலைஞ்சு இப்பத்தான் ஒரு யெடத்துல நெலையாஒக்காந்துருக்காரு.அவர்ட்டபோயி,,,,,அந்தப்பையதண்ணி, கிண்ணி  அடிச்சிட்டித்திரியாம இருக்கச் சொல்லி வீட்டுக்கு அனுப்பீட்டு வாங்க இங்க கடைவாசல்லயேநிக்குறேன்எனமல்லையாகிருஷ்ணன்சொன்னகால்மணியில் வந்து விட்டார்கள். அவர்கள். அப்புறம்மல்லையா கிருஷ்ணன்தான்டீக்கடைக் காரைக்கூப்பிட்டுப்பேசினார்.எல்லோரையும்அறிமுகம்செய்துவைத்தார்தன்னு டன்வேலைபார்ப்பவர்கள்அவர்கள்என/டீக்கடைக்காரரும் சிரித்துக்கொண்டே பொம்பளப்புள்ளவிஷயத்துலதப்புப்பண்றவனுக்குஏத்துக்கிட்டுவந்துட்டீங்கன்னு கொஞ்சம்கோபப்பட்டுட்டேன்,தப்பாநெனைச்சுக்கிறாதீங்க,தம்பிகளாஎனடீயும் வடையும்கொடுத்துஅனுப்பினார்.அந்தமாலைவேளையின்ஆறரைமணிப் பொழுதிற்குஅதுகொஞ்சம்ஆறுதலாகித்தெரியஉடல்தெம்புடன்வீடு சென்றவர் களாய் அவர்கள்/

அன்று மல்லையா கிருஷ்ணனிடம் மேடை போடபேசிவிட்டுவந்தமறுநாள் இவனைத்தான்மேடைஅருகேநிறுத்திவைத்துப்பார்த்துக்கொள்ளச்சொல்லியிருந்தார்கள். அன்று,

வெயிலில்நின்றுமல்லையாக்கிருஷ்ணனுடன்மேடையமைத்துக்கொண்டிருந்த பொழுதுபொட்டலில்வெங்காயம்விற்கிறபாட்டிசொன்னதுஇவன்மனம்கவ்விய நிகழ்வாக/ பக்கத்தூர்ல இருக்கேன் தம்பி.மகன்க ரெண்டு பேரும் வெளியூர்ல வேலையிலஇருக்காங்க,அவுங்களுக்குஅவுங்ககுடும்பம்பொழப்புபுள்ளைங்கப் படிப்புன்னு ஆயிப்போன பிற்படுநம்மளக்கவனிக்க நேரமில்லாமபோயி ருச்சி போலயிருக்கு. என்னைய வந்து பாக்க நேரமில்லாம போயிருச்சி.அவுக பாடு அவுங்க,ஏங்பாடு நானுன்னுஆகிப்போச்சி,இங்கதான்மார்க்கெட்டுல வெங்காய மண்டியிலவெங்காயம்வாங்குவேன்.இங்ககொண்டுவந்துவிக்கிறேன்சில்லறைக்கு. அழிவுசெலவுபோககையிலகொஞ்சம் மிஞ்சுது தம்பி.அத வச்சி பொழப்பு ஓட்டு றேன். பையங்க அப்பப்பபோன் பண்ணிகேக்கும் போது ஊர்ல விவசாயம் பாத்துக்கிட்ருக்கேன்னுசொல்லீருவேன்.எனஅன்றுமூதாட்டிசொன்னவார்த்தை கள் இன்று அதேபொட்டலில்ராமு வந்து அருகில் நிற்கும் போது மனம் தோனி நிற்பதாக/

பொட்டலில் நடக்க இருக்கிற திருவிழா மேடையை ஒட்டி அமைக்கப்பட் டிருந்த லைட்டைப்பார்த்துத்தான் கேட்டான் ராமு.என்ன இவ்வளவு ஒசரத்துல இப்பிடி ஒரு லைட்டா,உண்மையிலே திலகர்ப்பாலு பெரிய ஆளுதான்.என ராமு சுட்டிக்காட்டிய லைட் தியாகிகள் நினைவு ஸ்தூபி அருகே தன் உயரம் காட்டியும்கம்பீரம்காட்டியுமாய்நின்றிருந்தது.இல்லைராமுஇதுநம்திலகர்பாலு அண்ணனின்வேலைஇல்லை.நமதுநகராட்சிநட்டுவைத்திருக்கிறஒளிவிளக்குகள் என்றான்இவன்/அண்ணாந்துபார்த்தராமுஇவனைக்கூட்டிக்கொண்டுசெல்கிறான் டீக்கடைப்பக்கமாக/ராமுஇவனதுநண்பனாய்சமீபங்களுக்குமுன்பாய்அறிமுகமா னவன்.நல்லஇசைப்பிரியன்,நல்ல ஓவியரும் கூட,கண்முன் பார்ப்பதை தனது கைகளின்திறனால்நகலெடுத்துவைத்துவிடுகிறஅழகியமனதுக்குச்சொந்தக்காரன்.காதல்ஓவியம்படத்தில்வருகிறசங்கீதஜாதிமுல்லையைஅப்படியே சுதிசுத்த மாய் பாடுவான்,அவனுக்கு அப்படியான தன் பாட்டைக்கேட்டு யாராவது ஒருபெண் காதலித்து விடாதா என்கிற நப்பாசைதான்.

“அதெல்லாம்சும்மாஇவனுக்கிருக்கிறஆசைவேறு,இவன்காதலிக்கவெல்லாம் மாட்டான் என ஓவிய நண்பரும் இன்னும் பிறருமாய் கேலி பண்ணிய போது அதெல்லாம் இல்லை ஒருபெண்பிள்ளையைபின்னால் அமரவைத்துக் கொண் டுமதுரைரோட்டில்அவன்போனான்எனசிலர்சொன்னார்கள்.அடப்போயாஅவனா வது பெண்பிள்ளையை வைத்துக் கொண்டு வண்டியில் போவதாவது என்கிற கேலிக்கும்உண்மைப்பேச்சுக்குமாய்ஒரேநேரத்தில்ஆளாகிப்போகிறராமுபள்ளி வாசல் தெருவிலிருக்கிற தனது ஓவிய நண்பனைப் பார்க்க போகிற நேரத்தி லெல்லாம் அவன் அங்கு இருப்பான்,அவனது வீடும்பள்ளிவாசல் தெருவிலிரு ந்து இரண்டு தெரு தள்ளி இருக்கிற பாண்டியன் காலனியில்தான் இருந்தது. பெண்பாடசாலையிலிருந்துமூன்றாவதுவீட்டில்அவன்இருந்தான்காம்பவுண்ட் வீடுஅது.வலதுபுறம்நான்கு,இடதுபுறம்நான்குஎனஎட்டுவீடுகளைக்கொண்டதாய் இருந்தஅதில்இடதுபுறம்இருக்கிறமூன்றாவதுவீட்டில்அவன்இருந்தான்,அம்மா, அப்பா,தங்கைஎனஅளவாய்அடங்கிபோனகுடும்பம்.அப்பாவுக்கும்அவனுக்கும் எப்பொழுதுமே ஏழாம் பொருத்தம்தான் எனச்சொல்லிவிடமுடிய விட்டாலும் கூட அருகருகே வைத்துப்பார்க்க முடியாத எதிரெதிர் குணமாய்/

டீவியில் நல்லநிகழ்ச்சியாய் வைத்துப்பார் என்பார் அப்பா,அவன் அதெல்லாம் முடியாது உங்களுக்கு நல்ல நிகழ்ச்சியாய் தெரிவது எனக்கு நல்லதற்றுத் தெரிகிறது, அது பாடல்,சினிமாப் படம், செய்தி இப்படி எதுவான போதிலும் கூட/உங்களுக்குப்பிடித்ததைநீங்கள்பார்க்கையில்நான்ஏதாவதுஎப்பொழுதாவது சொன்னதுண்டாஏன்தேவையில்லாமல்,,,,அது போல் எனக்குப்பிடித்தது போல் முடிவெட்டிக் கொள்கிறேன்,பேண்ட், சட்டைபிடித்தநிறங்களில் போட்டுக் கொள்கிறேன்,என்னஇப்பொழுதுகெட்டுப்போனதுஅதனால்,,,,,,?என்கிற கருத்து வேறுபாடுஇவர்களுக்குள்ளாய்எப்பொழுதுமேஇருந்ததுண்டுதான், அது பெரிய சப்தமாகிப்போகிறசமயங்களில்கோபித்துக்கொண்டுஓவியக்கூடத்திற்குவந்து விடுவான் ராமு.

ஓவியநண்பர்கூடச்சொல்வார்,விடுராமு,இத்தனவருஷமாஒன்னையமனசுல
தூக்கி சொமந்துக்கிட்டுதிரிந்த வருக்குஇதுகூடசொல்ல உரிமை இல்லையா,,,? என/அவர்சொன்னதும்,அப்படியேமுனகிக்கொண்டுஅமைதியாகிவிடுவான்ராமு/

.ராமுவின்அப்பாமத்தியக்கூட்டுறவுவங்கியில்பணிபுரிகிறார்மேலாளராக/அம்மா குணதேவியாய்வீட்டில், கடை கண்ணிக்கு,வீட்டுவேலை, என்கிற அன்றாட நகர்வு சுமந்து/தங்கை கல்லூரியில் முதலாம் ஆண்டு காலடி எடுத்து வைத்தி ருக்கிறாள்.இதற்காகவெல்லாம்சூழ்நிலைசுமந்து ராமு சும்மா இருந்ததில்லை. காம்பவுண்டுக்குள் எதிர் வரிசையில் மூன்றாவது வீட்டில் இருக்கிற ஒரு பெண்ணை ஒருதலையாய் காதலித்து வந்தான்.இந்த வயதில்அது இல்லாமல் எப்படி,,?மனதில் வடிகிற ஜொல்லை மறைக்கத் தெரியாத அப்பாவியாய்/

ஓவிய நண்பர்தான் சொல்வார்,மிகவும் பேர் போனரசனைக்குச்சொந்தக்காரன். இன்று ஒரு ஓவியம் வரைந்து வேண்டும் என்றால் இரண்டு வாரம் கழித்துக் கண்டிப்பாகத்தந்து விடுவான்,அப்பேர்ப்பட்டக் கெட்டிக்காரன்.ஒரு ஓவியம் ஓவியத்தைவரைவதுபோலானகற்பனையில்வரைந்ததை அழித்து திரும்பத் திரும்பவுமாய் வரைந்துகொண்டிருப்பான் என்பார் ஓவிய நண்பர்.படம் வரை யும்போதுவரைவதற்காய்சிந்தித்துக்கொண்டிருக்கிறநேரத்திலுமாய்ஒருதலை யாய்காதலித்தப்பெண்ணைப்பற்றியக்கனவில்இருப்பான்.கனவெல்லாம்சரிதான்.படம்வரைகிறபிரஷ்ஷைவைத்துமுதுகுச்சொறியதே,மூக்கைக்குடையாதே,காது குத்தாதே என்பார் ஓவிய நண்பர்/ .

திலகர்பாலுதான்வருடாவருடம்காண்ட்ராக்ட்,திருவிழாநடக்கும்சமயங்களின் பொழுதெல்லாம்,அவர் இந்த விரும்பித்தான் இதை ஏற்றுக்கொண்டார் வலிய வந்து/காசுக்காகக்கூடஅல்ல,நீங்கள்எனக்கும்நான்கொண்டுவருகிற பொருட்க ளுக்கும்வாடகைகொடுப்பதுகூடஇரண்டாம்பட்சமே/என்னிடம்வேலைபார்க்கும் பையன்களுக்குநீங்கள் கொடுக்கிற சம்பளம் சரியாகிப்போனால் அதுவேதங் கள் நிகழ்ச்சிக்கு வந்து போகிற எனக்குதாங்கள்செய்கிற பேருதவியாய் இருக் கும் என்பார்,

இவரைச்சேர்த்துமூன்று பேர் வேலை செய்கிறார்கள் கடையில்/வேலை அதிக மாய் இருக்கிறநேரங்களில் கூட ஆட்களைச்சேர்த்துக் கொள்வார்,அப்படியே கூட வேலைக்கு ஆட்களைச் சேர்த்துக்கொண்டாலும் கடப்பாரைபிடித்து மண் ணில் குழி தோண்டினால்தான் திலகர்பாலுவுக்கு திருப்தி,சின்னவயதிலிருந்து கஞ்சிக்குஉழைப்பை நம்பிப் பிழைத்தவர்,அவரதுவிருப்பம் அப்படித்தான் இருக் கும்அப்படிஇருப்பதில்ஒன்றும் பெரிய ஆச்சரியம்ஏதும்இல்லை, அப்படி இல்லா மல்இருந்தால்தான் ஆச்சரியம். தூங்குகிற நேரம் தவிர எந்நேரமும் உழைப்பு உழைப்பு எனவாய் காட்சிப்பட்டுத் தெரிகிற அவர் ஞாயிற்றுக் கிழமைகளில் பையன்களுக்கு முழு லீவு கொடுத்து விடுவார், என்னைய எப்ப வேணாலும் கூப்பிட்டுக்கிறாலாம். பாவம் பையங்க, அவுங்க இல்லைன்னா ஏங்பொழப்புபடுத்துரும்,தவுரவாரம்முழுக்கநாயாஓடிக்கிட்டுத்திரியிற இவுங்க ளுக்கு அன்னைக்கி ஒரு நாளாவது ரெஸ்ட் குடுக்கலைன்னா கொஞ்சம் கூட ஈவு சாவுஇல்லாதவனா ஆகிப் போவேன் என்பார்,

சாமிசன்னதிசந்தில்தான்அவரதுகடையும்குடோனும்சேர்ந்தாற்ப்போல்இருந்தது.கடைகுடோன்போலவும் குடோனே கடை போலவுமாய் இருக்கவாய்க்கப் பெற் ற கடையாய் இருக்கும் அது,

மேடை காண்ட்ராக்ட்த் தவிர்த்துசவுண்டசர்வீஸும்வைத்திருந்தார், மேடைக் காண்ட்ராக்ட்இவருக்குபழகிப்போனத்தொழில்.சிறுவயதிலிருந்தகைவரப்பெற்ற ஒன்று/,சவுண்ட்சர்வீஸ் கைவிட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காய் மச்சின னிடமிருந்து வாங்கி நடத்தியது.

தொழில்மேடேறியதும்குடி கூத்து எனஆரம்பித்துவிட்டான்மச்சினன். கையில் புழங்கிய காசு சேர்த்து வைத்திருந்த பெயர், ஊரில்இருக்கிற செல்வாக்கு என எல்லாமும்ஒன்றுசேரஇன்னும்இன்னுமானஉசுப்புதல்களும்கூடகைகோர்க்க,,,,,,,,,மூணாம்பேருக்குத்தெரியாமல்மச்சினக்குள்முளைவிட்டிருந்தவிட்டிருந்தகெட்ட சகவாசம்வெளிவந்து பல்லைக் காட்ட ஆரம்பித்த நேரம் மச்சினனிடமிருந்து தொழில் மெல்ல மெல்ல கழன்று கொள்ள ஆரம்பித்திருந்தது.

உள்ளூருக்குள்மட்டும்என இல்லை,அக்கம்பக்கத்தில் இருக்கிற ஊர்களில் கூட இவர்களது தொழிலின் தடமும், அடையாளமும் இருந்தது.

அந்தஅடையாளம்அழிந்துவிடக்கூடாதுஅவ்வளவுஎளிதாக, அழித்து விடுவதற் காய்ரெடியாய்காத்திருக்கிறவர்களிடம்தொழிலைக்காவுகொடுத்துவிடக்கூடாது என்கிற ஆத்திரத்திலும் நிலைத்து நிற்கிற பெயர் கழண்டு காணாமல் போய் விடக்கூடாது என்பதற்காகவும் திலகர்பாலுஎடுத்துநடத்திக்கொண்டிருந்தார் தொழிலை,தொழிலைநடத்தினாரேதவிரதெரியாதவேலைகளில்மூக்கைநுழைப் பதில்லை எப்பொழுதும்.ஆள்ப் போட்டுத்தான் நடத்தினார்,மச்சினனிடம் கடை ஆரம்பித்த புதிதில் வேலைக்குச்சேர்ந்த ஆளை எங்கிருந்து தேடிக்கண்டு பிடித் து கூட்டி வந்தார் எனத் தெரியவில்லை,அவரை வைத்துத்தான் சவுண்ட் சர்வீ ஸை நடத்தினார்,நல்ல நம்பிக்கையான ஆள்.மச்சினனுக்கு தினசரி இவ்வளவு என கொடுத்து விடுவார், தொழில் நடக்கிறதோ இல்லையோ மச்சினனுக்கான பங்குஒழுங்காய்போய்சேர்ந்துவிடும்.கூடவேஒருகுவார்ட்டரும்கைகோர்த்துக் கொண்டு.

அப்படிப்போய்சேரவில்லைஎன்றால்மறுநாள்அந்தஇடம்ரணகளமாகிப்போகும், மச்சினனைன் மனைவிகூடச்சொல்வாள்நீங்கதான் அவரக்கெடுக்குறீங்க, விட் டுறவேண்டியதுதானஅப்பிடியே,கழுதஎக்கேடும்கெட்டும்போறாருன்னு, எனக் கும்,ஏங்புள்ளைகளுக்கும்எங்கஅம்மாவீடுஇருக்கு,ஆயூசுக்கும்அங்கனயிருந்துகாலத்தக்கழிச்சிக்கிருவோம்.இப்பஅவருபொழப்பநீங்கதான் கெடுக்குறீங்கண்ணு நெனைக்கிறேன். ஆம்பளயா லட்சணமா பொழப்பவந்து பாருண்ணு சொல்லாம அவருக்குசெலவுக்குரூவாயும் குடிக்கத்தண்ணியும் வாங்கிக்குடுத்துக் கெடுக்குறீங்க,ஆமாம்,வருசமெல்லாம் இப்பிடியேவாங்கிக் கு டுத்தேசமாளிச்சிருவீங்களா, அப்பறமா எங்க குடும்பம் புள்ளைங்க எல்லாம் என்னாகுறது,நான் எங்க போக இன்னார் பொண்டாட்டி இன்னார் புள்ளைங்க ன்னு இப்பயே வீதியில நடமாட முடியல.கரிச்சிக் கொட்றாங்க, இதுலநீங்க சொல்றதகேட்டுஅவருநடந்து,,,,,,,,,வெளக்குவச்சிப்போகும்எங்ககுடும்பம்.
என்கிறசொல்லைஉதிர்த்தமச்சினனின்மனைவியைப்யைப்பார்த்துஇல்லம்மா
அப்படியெல்லாம்கழுதகெடக்கான்னு விட்டுற முடியலம்மா,விட்டா இப்ப கூடச்சேந்துருக்குறவஒண்ணுமில்லாபுடுங்கீட்டுப்போயிருவா,மண்டமசுறுகூட மிஞ்சாதுபாத்துக்க,ஏதோபொண்டாட்டி கூடப்பொறந்தவங்குறதுக்காகப் பாக்கு றேன்,குடும்பக்கட்டுவிட்டுப்போயிறக்கூடாதுன்னுநெனைக்கிறேன்,அதுபுடிக்க லைன்னாசொல்லுவிட்டிர்றேன்,பாத்துக்கம் மா, எனக்கென்ன தலையெழுத்தா இத்தனையும் கட்டி இழுக்கணும்ன்னு, ஒங்க சொத்துலஇதுவர ஒரு பைசாகூட எடுத்ததில்லம்மா, இன்னும்சொல்லப் போனா எங்க கைக்காசப்போட்டுத்தான் இழுத்துக்கிட்டு வர்ரோம், இஷ்டமில்லைன்னா சொல்லு,ஏங் வீட்டுக்காரி கூட சொல்லீக்கிட்டுஇருக்காரொம்பநாளாஎதுக்குப்போயிட்டுன்னு,,,,,,வாநாளைக்கு ஓங் விட்டுக்காரனக் கூட்டிக் கிட்டுதர்துர்ரேன் கடைய எடுத்து நடத்துங்க,,,, நா வேணாங்கல,நா நெனக்கிறதுநம்மவீட்டுமானம் வெளிய போயிறக் கூடாதுன் னுதான்.என குடும்பம் காத் து வந்த திலகர் பாலு அமைத்திருந்த மேடையும் அதை ஒட்டிய மைக் செட்டும் ஸ்பீக்கர் பாக்ஸீமாய் எப்பொழுதும் இருக்கும் திருவிழா மேடையைப் போல் இல்லாமல்இருந்த மேடைஅப்படி ஒன்றும் பெரிதாயும்பிரமாண்டம்காட்டியுமாய்இருந்திருக்கவில்லை. ஆனாலும் மனம் பிடித்திருந்ததாய்/

8 comments:

yathavan64@gmail.com said...

"அன்பும் பண்பும் அழகுற இணைந்து
துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

வலைப் பூ நண்பரே!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

vimalanperali said...

வனக்கம் யாதவன் நம்பி சார்,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

திண்டுக்கல் தனபாலன் said...

மனம் நெகிழ்ந்த கதை...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாக/

'பரிவை' சே.குமார் said...

மணிக்கொச்சம் நெகிழ வைத்தது...

vimalanperali said...

வணக்கம் சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

அருணா செல்வம் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் அருணாசெல்வம் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/