17 Apr 2015

பிரம்படி,,,,,,


வழக்கம் போல அன்றும் முக்கு ரோட்டில் இருக்கிற பாஸ்கர் கடையில் டீ சாப்பி ட்டுக் கொண் டிருக்கிறேன்.

தொடர்ச்சியாய்பத்து நாட்களாய்பெய்து தீர்த்தமழைஇப்பொழுதான்ஒருஇரண்டு மூன்று நாட்களாய் இடைவெளி விட்டு பின்வாங்கியிருக்கிறது.குடைகளையும், ரெய்ன்கோட்டுகளையும்அவரவர் வீட்டிற்குள் வைத்து விட்டு கொஞ்சம் கை வீசி நடந்த பொழுதாய் இருந்தது இன்று.

காக்கைகளும்,குருவிகளும்,மைனாக்களும்இன்னும்பிறவைகளுமாய்தங்களது கூட்டை விட்டு சுதந்திரமாய் சுற்றித்திரிந்த நேரம்.சற்றே அகன்று விரிந்து பறந்த விசாலமான வெளியில் அமைந்திருந்த கடையின் முன்னும்,பக்கவாட்டிலும், கடையினுள்ளுமாக பேருந்தை எதிர் நோக்கி காத்திருப்பவர்கள் அங்குதான் நிற் பார்கள்.

அங்கிருந்து பக்கத்திலிருக்கிற,மற்றும் தொலைதூர ஊர்களுக்கு செல்கிற பேருந்துகள் அந்த வழியைத்தான் தேர்ந்தெடுக்கும்.

1,2,3,,,,,,,,,,,என வரிசையாக சில கிலோமீட்டர் தூர வித்தியாசத்தில் அடுக்கப் பட்டிருக்கிற ஊர்களுக்கு அதுவே பிரதான சாலையும் கூட/சாலையும் சாலை இருக்கிற வெளியும்,கடையு ம் ,கடையின் சுற்று வெளியும் கொஞ்சம் காய்ந்து ஈரமற்றும் சொதசொதப்புஇல்லாமலும். பரவாயில் லை கொஞ்சம் நன்றாக இருக்கிறது.ஆசுவாசமாயும் கூட/

சாலையில் வாகனங்கள் செல்கின்றன.மிதி வண்டிகள் போகின்றன.மனிதர்கள் நடக்கிறார்கள்.கூடவே காற்றும் அவர்களினூடாக புகுந்து பயணிக்கிறது.அதன் பயணம் மிடிவில்லாததாக,சாலைகளின் விரிவைப்போல/

ஆவி பறக்கிற டீயை ஊதிக்குடிக்கிற ஆர்வத்தில் இருக்கிற போதுதான் அந்தக் குரல் என்னை ஈர்க்கிறது.

“எக்ஸ்க்யூஸ் மீ சார்,ஏதாவது வண்டி வருதா சொல்லுங்க”என கையிலிருக்கிற நீளமான அலுமினிய குச்சியை இறுகப்பற்றி தூக்கிப்பிடித்தவறாய் கேட்கிறார்.

அவர்கேட்டுக்கொண்டிருக்கிற போதேஅவரது குரலை கடந்து இரு சக்கர வாகன ங்களும், வேன்களுமாய் செல்கின்றன.அப்படி செல்லும் வேன்களும், இருசக்கர வாகனங்களும் அவரை ஏளனப் பார்வை பார்த்தவாறும்,அவரது குரலை இழுத்து தரையில் போட்டு மிதித்து விட்டு சென்றவாறுமாய்/

டீக்கடைக்காரார்தான் சொன்னார்.அவர் பக்கத்து ஊரில் ஆசிரியராக பணிபுரிவ தாகவும், அவருக்கு பார்வை சரியாகத்தெரியாது எனவும் /

அப்போதுதான்அவரைமுழுமையாககவனிக்கிறேன்.அடர்நிறத்தில்மிகசாதாரண மான நூல்ச்சேலை,அதற்கேற்ற நிறத்தில் சட்டை,காலில் சாதாரண செருப்பு, இருகப்பிண்ணியிருந்த ஜடை,வட்டமான குங்குமப்பொட்டு,அதிகமாய் இல்லாத பவுடர் பூச்சு,,,,,என மிகவும் சாதாரணமாயும்,எக்ஸட்ராமேக்கப் எதுவும் இல்லாம லும் பார்வையற்றவர்களின்உற்ற துணையான அலுமியக் கம்புடன் நின்றார். அது தான் அவர்களுக்கு துணை போலும்.

“பார்வையற்றவர் எப்படி பாடம் எடுப்பார் பிள்ளைகளுக்கு”?என்கிற உயர் காழ்ப் புணர்ச்சி காரணமாய் அவரை அறிந்தவர்கள் யாரும் அவரை ஒரு பொருட் டாகவே நினைக்காத மனோ நிலையுடனேயே/

“பார்வ நல்லா உள்ளவுங்களே பாடம் ஒழுங்கா எடுக்குறதுல்ல,இந்த லட்சணத் துல இவுங்க எப்பிடி”?,,,,,,,, என என்னுடன் வேலை பார்ப்பவர் ஒரு அர்த்தப் பூர்வ மான(?/)கேள்வியை எழுப்பு கிறார்.

அதேகேள்வியும்சந்தேகமும்,எனக்குஅன்றாடம்தேநீர்தருகிறகடைக்காரருக்கும்,அவரைப் போலவே வெகு சிலருக்கும் இருக்கும் போலும்.அதனால்தான் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காத உயர்ரக(?/) மனோபான்மையுடன்/

அதான் இன்னும் பத்து நிமிஷத்துல பஸ் வந்துருமுல்ல,அதுல ஏறிக்கிற வேண்டி யதுதான?ஏன் இப்பிடி அவசரப்படுறாங்க,என்கிற என்னின் பேச்சு அவருக்குக் கேட்டிருக்கும் போல, “இல்ல ஏற்கன்வே லேட்டாயிருச்சு,இன்னும் லேட்டாப் போனா அவ்வளவு நல்லாயிருக்காதுன்னுதான்,,,,”எனதொடர்ந்துபரிதவிப்பவரா ய் “எக்ஸ்க்யூஸ்மீ ஏதாவது வண்டி வந்தா சொல்லுங்களேன்” என்கிற அவரது குரலைதொடர்ந்துபதிவுசெய்துகொண்டேஇருக்கிறார்.தாயின்அரவணைப்பிற்கு ஏங்கும் குழந்தையைப்போல/

அந்தக்குரலைகேட்டவாறும்,அவரைபார்த்தவாறும்டீயைகுடித்துமுடித்தவனாக அந்தஇடத்தைவிட்டு நகன்றுவிடுகிறேன் கனத்த இதயத்துடனும், கையறு நிலை யில் உள்ளவனுமாக/

நான்அங்கிருந்து நகன்று வெகுநேரம் கழித்தபின்பும்கூடஅந்தபார்வையற்ற டீச்ச ரின் பரிதாபமான மனிதக்குரல் காற்றின் திசைகளில் கலந்து கேட்டுக் கொண்டே யிருக்கிறது.

10 comments:

KILLERGEE Devakottai said...

பிரம்படியால் மனது வலித்தது நண்பரே...
தமிழ் மணம் 2

கரந்தை ஜெயக்குமார் said...

மனம் கனக்கிறது நண்பரே
தம +1

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அவர்களும் இறைவனின் படைப்புதானே?

உடல் நலமுடன் இருக்கும் நாம் அவர்களுக்கு
உதவுதல் என்பது நமது கடமைதானே?

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

நன்றாக உள்ளது மனதை கனக்க செய்தது.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் அ முகமது நிஜாமுதின் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை நெகிழ வைக்கும் நிகழ்வு...

vimalanperali said...

வணக்கம்திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/