24 Apr 2015

சுருள் சுருளாய்,,,,,

கைகொள்ளாக்காற்றைப்போலஇப்படியேசுற்றித்திரிவதும்பிடித்தமனிதர்களுடன் பேசவும்தேனீர்அருந்தவுமாய்இருப்பது மனம் பிடித்துப்போன ஒன்றாகவே/

காலையில்பதினோருமணிசுமாருக்குகம்ப்யூட்டரில்டைப்அடித்துக்கொண்டிரு
ந்தஇவனுக்குஅடுத்ததாய்வார்த்தைகளும்வரிகளும்சொற்கட்டுகளும்கிடைக்கா மல்மனம்திணறவும்விழிஇடரவும்டைப்அடிக்காமல்விரல்கள்பிடிவாதம்பிடிக்க வுமாய் இருக்க எழுந்து விடுகிறான் சட்டென கணிணியின் முன்னிருந்து சற்றும் அச்சப்படாமல்/ சுற்றிலும் வீடு பாவியுமாய் அமர்ந்திருந்த மனைவி, பிள்ளைகளைப் பார்த்தவாறு/

அதிகமாய் ஒன்றும் சொல்ல வில்லை அவர்களிடம்.இத்தனைக்கும் இளைய மகள்கேட்கிறாள்.”எங்கேசெல்கிறீர்கள்படக்கென எழுந்து” என/இத்தனைக்கும் அவள்இவன் மீதுமுழுஆதிக்கம்செலுத்துமளவு பிரியமாய் இருப்பவள். அவள் செலுத்துகிற ஆன்பு அவளுக்கேயானதாக மட்டும் இருக்க வேண்டும் என நினைப்பவள். சாப்பாட்டு வேலையின் போதும் மற்றமற்றவேலைகளிலுமாய் சம்மணமிட்டோ,கால் நீட்டியோ அமர்ந்திருக்கும் இவனது மடி மீதுவந்து படுத்துக்கொண்டு அவள் படிக்கிற பாடம் அடுத்ததாய் அள்ளி அணிய சுடிதார் மிடி,சாப்பாடு, பள்ளி தோழிகள் இத்தியாதி,இத்தியாதி என நிறைய பேசுபவள். கேட்பவள்.அவளதுஅம்மாவி ன்வசவைப்பொருட்படுத்தாமல்/

அவளதுஅம்மாதான்வைவாள்.என்னவாம்அப்பாகிட்டகொஞ்சிக்கிட்டுஇருக்குறவ/ ஒழுக்கமாஎந்திரிச்சி படிக்கிற வேலையப்பாரு,இல்லைன்னா எந்திரிச்சி ஒக்கா ந்து பேசிக்கிட்டிரு, அவனப்பாரு ஆம்பளப்பய பொட்டி மாதிரி ஒக்காந்து கெடக்கான் ஒனக்கென்ன மடியில சாய்மானம் வேண்டிக்கெடக்கு.அதுவும் ஏங் யெடத்துல போயி,,,,,,,இங்க பாருங்க ஒண்ணும் சொல்ல மாட்டீங்களா நீங்க ளும் என இவனை சப்தமிடும் மனைவியின் செய்கையை ஏறிடும் இவன் விடு நம்ம புள்ளைக நம்ம மடியில படுக்காம ஊரான் மடியிலயா போயி படுக்கும்.என்பான்,அது சரி அதுக்காக,,,,,,,,,,,என்கிற மனைவியின் சொல்தாங்கி எழுந்திருக்கிறவன் மனைவியிடம் சொல்வான்.ஆயிரம் இருந்தாலும் இது அவ யெடமில்லையா? என மகளிடம் சமாதானம் சொல்கிற அளவிற்காய் காட்சிப்பட்டு அவளிடமும் மனைவியிடமுமாய் சொல்லிவிட்டு இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான்.அணிந்திருந்த பேண்ட் சர்ட், ஒரு சிறு குழந்தையின் உயரத்தை ஒத்திருந்த தண்ணீர் பாட்டிலுடன்.

ஆஸ் கலரில் ரகுமான் டெய்லரிடம் தைத்த பேண்ட்டும் மரத்தூள் கலரில் கறுப்புக்கோடுகள் வரைந்த டீ சர்ட்டும் (ஓம் முருகா ரெடிமேட்ஸில் எடுத்தது) தோள் பையுமாய் கிளம்பி விடுகிறான். கிளம்பிவிடுகிறானே தவிர்த்து எங்கு போவதுஎன்னசெய்வதுஎன்பது பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. முட்டிக் கொண்டுவந்தஒண்ணுக்கைக்கூட கட்டிக் காப்பாற்றி அந்தப்பக்கம் போய் இருந்து கொள்ளலாம் என்கிற நினைப்புடன் கிளம்பி விட்டான்.

பாண்டியன்காலனிபோஸ்ட்ஆபீஸ்,அரசுமருத்துவமனை நேராகஅல்லம்பட் டி முக்குரோடு,கலெக்டரேட்,,,,எனவாகனத்தின்ஆக்ஸிலேட்டரைமுடுக்கிவிட்ட
தில்வாகனம்நடுவாந்திரவேகத்தில்சென்றுகொண்டிருந்தது.
 
சூலக்கரை தாண்டியதும் சிமெண்ட்பேக்ட்ரியின் பிரமாண்டம் கண்ணுக்குத் தட்டுப்பட்டது.ஆகாபேசாமல் சின்ன மகளை கூட்டி வந்திருக்கலாம்.அவள் இதையெல்லாம்பார்க்கவிரும்புபவள். பெரியவள் ஆகிறாள் அவளுக்கு இது போல் நான்கு இடங்கள் தெரிய வேண்டும்.எதோ தெய்வாதீனமாய் கையில் இருசக்கர வாகனம்இருக்கிறது. வாய்த்துப்போனஒன்றைபயன்படுத்தலாமே இது போலான விஷயங்களுக்கு என்கிறயோசனையுடன் போய்க் கொண்டிரு ந்தவனின்விழிப்படர்வுவாகனத்தின் வேகம் அதன் ஸ்பீடா மீட்டர்,சைட் மிரர் என மூன்றையும் மாற்றி மாற்றி பார்த்தவாறாய்பயணிக்கிறதாய்/

அப்படியே போய்க்கொண்டிருக்கிற வேகத்தில் போனால்இன்னும்கால் மணி அல்லதுபத்துநிமிடங்களில்சிமிண்ட்பேக்டரிஇருக்கிறஊரைஅடைந்துவிடலாம். அங்கேயே ரோட்டை பராக்குப்பார்த்தவாறு ரோட்டோர டீக்கடையில் நின்று ஒரு டீ சாப்பிட்டு விட்டுதோதுப்பட்டால்சாத்தூர்ப்போவதுஇல்லையென்றால் அப்படியேதிரும்பி விடுவது என்கிற எண்ணத்தில் போய்க்கொண்டிருக்கும் பொழுதுநண்பரின்ஞாபகம்வரதிரும்பிவிடுகிறான்.பெயர்தெரியாத ஒரு ஊரின் தொடு எல்லையிலிருந்து/

திரும்பிய பின்தான் ஞாபகம் வருகிறது அவர் எங்கு இருக்கிறார் என கேட்க வேண்டும்என/கேட்கிறான்கலக்ரேட்பக்கமாய்இருக்கிறேன்என்கிறார்,இருக்க
ட்டும் அங்கேயே என மனதுள் நினைத்ததை சொல்லி விட்டு பத்து நிமிடத்தில் வருகிறேன் எனக்கிளம்புகிறான்.பத்து நிமிடம் என்பது இவனது மன வேகத் தையும் வண்டிஓடுகிறவேகத்தையுமாய் பொறுத்தது எனலாம்.இவன் போன போது அவர் நிற்கிறேன் என ச்சொன்ன ஜெராக்ஸ்கடைஅவரைவிடுத்து வேறு யார்யாரையோநகலெடுத்துக்காண்பித்துக்கொண்டிருந்தது.வேலையில்லாம
லும் சங்கதியில்லாமலும் அங்கு அவ்வளவு நேரம் நிற்பது நல்லதல்ல, நால் வழிச் சாலையின் வாகனங்களை வெறித்தவாறும்சாலையின்அழகையும் விஸ்தீரணத்தையும் பார்த்தவாறு எவ்வளவு நேரம் தான் நிற்பது,அழகும் கூட ஒரு நேரத்தில்,,,,,,,,,,,,அப்படியா சார் என பக்கத்தில் பிரவ்ன்க் கலர் பேண்ட்டும்,
வெள்ளைச் சட்டையும் கருப்புக் கலர்சூவுமாய் அணிந்து நின்றிருந்தவரிடம் கேட்கத் தோணியது.

ஆறு மாதங்களுக்குமுன்னாய் அரசு அலுலகத்தின் ஏதோ ஒரு துறைக்குச் சென்ற போது இது போலாய் நீட்டான தோற்றத்தில் இருந்த அந்தத்துறையின் அதிகாரி டீ சர்ட்டெல்லாம் போட்டுக் கொண்டு வரக்கூடாது அலுவகத்திற்கு/ முடிகிற வேலைகூட முடியாமல் போய் விடக்கூடும்.ஆகவே இன்று போய் நாளைவாருங்கள்,நாளை வரும்போது மறக்காமல் டீ சர்ட் போட்டு வருவதை தவிர்த்து விடுங்கள் இல்லையென்றால் முடியாது தாங்கள் வந்த வேலை எனச்சொன்னவரை ஏறிட்டு விட்டுத் திரும்பியவன் அட சண்டாளத்தனமே இப்பிடியா சொல்வீங்க,உங்களது உரிமை காக்கவும்,நலம் காக்கவுமாய் உங்க ளுக்கென இருந்த சங்கத்தில் உழைத்துத் திரிந்தவன் நான்,மழை வெயில் பனி சூறைக்காற்று இரவு பகல் என எதுவும் பாராது உங்கள் நலம் காக்க என்னைக் கரைத்துக்கொண்டவன்.எனக்கேவா,,,,,?எனநினைத்தபோதுஅல்வாஎல்லோருக்
கு மானதுதானே,,,?சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும்எப்படி கொடுக்காமல் இருப்பது.என்கிற அடிப்படையில்தான் இருந்தது அவரதுபேச்சு/

சரி இருக்கட்டும் அதனால் என்ன இப்பொழுது கெட்டுப் போனது,,,? என்கிற மனச்சமாதானம் தாங்கியவனாய் வருகிறான் வெளியில்/

அன்றுஅரசுஅலுவலகத்தில்பார்த்தவரைப்போல் தோற்றம் கொண்ட அவரிடம் போய் என்ன கேட்டு விட முடியும் பெரிதாய்,,,,,,?என நினைத்தவாறே நகன்ற வேளைநான்இருக்கிறேன் கலெக்டர் ஆபீஸின் உள்ளே,தேடித்திரிய வேணாம் வீணாக.நேராக வாருங்கள் நிற்கிறேன்ஒருடீக்கடையில்என நண்பர் சொன்ன அடையாளத்தின் நூல்ப்பிடித்து அங்கு போய் நின்ற போது அவர் மற்றும்அவரதுஇருசக்கரவாகனம்மற்றும்உடன்இருவர்நின்றுகொண்டிருந்தார் கள்.

உடன்வேலைபார்ப்பவர்களாம்.இயக்கத்துக்காரர்கள்தானாம்பரவாயில்லைஅது வரைக்கும், சொல்லும் செயலும் இலக்கும் இயக்கத்தோடுதான் பிணைப்பாய் இருப்பது குறித்து மகிழ்ச்சியே மிகவும்/

இவனும் மாறனும் வாசனும் மற்றும் குமாருமாய் கைகோர்த்து பாவிட்டு அமர்ந்திருந்தபொன்மாலைபொழுதது.மூன்றுதினங்களுக்குமுன்பாய்ஜேம்ஸ்  அண்ணன் டீக்கடையில் டீசாப்பிட அமர்ந்திருந்த வேளை காற்றைப் போல மெது மெதுவாய் வந்து கைகோர்த்த இவர்களின் நூற்பு கொஞ்சம் ஆசுவாசம் கொள்ளச்செய்ததாயும், பேசச்செய்ததாயும்/

இவர்களெல்லாம்ஒன்றன்பின்ஒன்றாய்வந்துகொண்டிருந்த வேளை டீக்குடித் து முடித்து விட்ட இவன் டீக்குடிக்கும் முன்னாய் ஒரு டீயும், டீக்குடிக்கும் போது ஒரு டீயும் டீக்குடித்து முடித்த பின்னாய் ஒரு டீயுமாக குடிக்க வேண் டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிப்போனான்.

ஏற்கனவே இவன் அப்படித் தான் டீக்குடிக்கிற விஷயத்தில் என இருந்தவன் இவர்கள்கைகோர்ப்பிற்குப் பின் அப்படியப்படியே என ஆகிப்போனான்.

நடிப்பும் பாட்டும் ஏற்புடையதுதானே எல்லோருக்குமாய்என்றிருந்தவேளை இவன் வீதி நாடகங்களில் உயிர்ப்புற்று அலைந்து கொண்டிருந்த காலங்கள் அது.சில பிள்ளைகளுக்கு வாய்க்கப்பெறுகிற இளம் பிராயங்கள் போல் சேராத சேர்க்கைசினிமாகூத்துஎனஇல்லாமல்பொதுவான ஒன்றிற்காய் ஒருங்கிணை ந்தசிந்தனையுடன் கை கோர்த்துத் திரிந்த காலங்களில் ஊன்றிய கால் எடுத்து வைத்த அடிகள் பற்றி பேசிகொண்டும் அளவளாவிக்கொண்டுமாய் இருந்த நேரம் மெது மெதுவாய் நகன்று நகன்று மணிஇரவுஏழைஎட்டித்தொடப்போகிற நேரமாய்கலைந்தார்கள்அன்றுஎன்கிறதானநினைவுதாங்கியும்கலெக்ட்ரேட்டில் நண்பனுடன் பேசிவிட்டு திரும்புபவனாகிறான்/

3 comments:

Thulasidharan V Thillaiakathu said...

பலருக்கும் இளம் பிராயத்துக் கனவுகளும், ஆசைகளும் நிராசைகளாய் கலைந்து வாழ்க்கையே திசை மாறிப் போவதுதான் வாழ்க்கையின் ரகசியமா இல்லை சாபமா....

திண்டுக்கல் தனபாலன் said...

காலம் போகிற போக்கில்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/