1 Jun 2015

ஊத்துத்தண்ணி,,,,,

ஒருமொச்சை,இரண்டுவடை,கையலகவாழைஇலை.இலையில்பரப்பியமொச் சையுடன் இரண்டு வடைகளை தூள்,தூளாக பிய்த்துப் உடைத்துப்போட்டு சட்னியையும்,சாம்பாரையும் சேர்த்து குழைத்து வாங்கிய கடையின் ஓரமா யும், உள்ளேயும்நின்று அள்ளிசாப்பிட்டு விட்டுஇரண்டுடம்ளர் தண்ணீரையும், ஒரு டீயையும் குடித்து விட்டுஅவசர,அவசரமாக தன் உழைப்பை நோக்கி நகர்கிற கைவண்டி இழுக்கிற,மூடை தூக்குகிற உழைப்பின்மக்கள் நிறைந்தி ருந்த பூரிகளாய் அடுக்கப்பட்டிருக்கும் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள கடைகள் என்றும் போலவே அன்றும் பிஸியாகவே/

ஒன்று இரண்டு மூன்று,,,,,,,என முளைவிட்டு தெரிய ஆரம்பித்து பத்திற்கும் மேற்பட்டதாய் கை விரித்து தெரிந்தது.

சிறு,சிறு கடைகளாக காட்சிப்பட்ட அவைகள் தெப்பக்குளத்தின் நான்கு திசை களிலும் இருந்ததோடு மட்டுமல்லாமல் தெற்குவாயிலின் இறக்கத்திலுமாய் வரிசை காட்டியும்,எதிர் எதிர் திசைகளிலுமாய் உள்வாங்கி நின்றது.

பத்திற்கும்மேற்பட்டுஅந்தப்பக்கமும்,இந்தப்பக்கமுமாய்அதற்குமேற்பட்டுமாய் இருக்கிறவைகளை கூட்டினால் 25 கடைகளாவது தேறும் போல தெரிகிறது.

டைல்ஸ் ஒட்டப்பட்டு சிறியதாய் விரிந்து தெரிந்த சின்னச்சின்ன காம்ப்ளக்ஸ் கடைகளிலிருந்து,சற்றேபெரியதானஇடம்வரைக்கும்கடை தெரிந்தது.

இட்லி,தோசை,பொங்கல்,வடை மற்றும் பூரி என கலந்து விற்ற கடைகளில் இப்போது பூரி பிரதானஇடத்தை பிடித்து தோற்றமளித்தது.

அப்படி பிரதானப்படுத்தப்பட்டு பூத்திருந்த கடைகளில் பொங்கலை கண்ணில் காண்பிக்க மறுத்தார்கள்.கேட்டால் பொங்கல் போடுகிற பழக்கம் இல்லை எனவும்சொல்கிறார்கள்.வயிறுதள்ளியகனத்தமாஸ்டர்களும்,உடல் மெலிந்து  கன்னத்துஎலும்பு வெளிதெரிந்த கடைக்காரர்களும்/

அப்படி சொன்ன அவர்களுக்கு எதை வைத்தால் எது விற்கும் என்கிற சூட்சுமம் தெரிந்திருந்தது.

“நீங்க வேற சார்,இந்த ஏரியா முழுக்கவும் லேபர் ஏரியா,லேபர்ன்னா கை வண்டி இழுக்குறவுங்க, மூடை தூக்குறவுங்க கெடையாது,எல்லாம் பலசரக்கு கடையில,
காய்கறிக்கடையில வேலை செய்யிற ஆள்கள்தான் சார் சாப்புடவர்ராங்க. அப்பிடி வர்ரவுங்க மெயினா சொல்றதும்,கேக்குறதும் வயிறு நெறையிற மாதிரி சாப்பாடு போடுங்க,போதும்ன்றாங்க.அதுக்குத்தகுந்த மாதிரி நாங்களும் போயிக்கிருவோம்.”
“நீங்களும்தான் இப்ப ஒரு வாரமா சாப்புட வர்ரீங்கில்ல.பாக்கத்தான செய் றீங்க,ஒரு நாமட்டும் எங்க கடைய தாண்டி போயிட்டீங்க, பரவா யில்ல,எங்க யேவாரமெல்லாம் நெலையான யேவாரம் கெடையாது .ஒங்கள மாதிரிதான் தினசரிவந்துதொடர்ந்து சாப்புட்டு இருப்பாங்க,திடீர்ன்னுஒருநாள் இன்னொரு கடையில போய் நிப்பாங்க.இப்படித்தான் ருசி தேடி அலையுற நாக்கு ஒரு மாத்துக்காக எங்கிட்டாவது போயி நிக்கும்.ஒங்கள குத்தமா சொல்லல ,நாங் களா இருந்தாலும் அப்பிடித்தான் சார்”
“நாக்குரொம்பசொரணகெட்டுப்போச்சுன்னாஏதாவதுபெரியஹோட்டலாப்பாத்து இஷ்டத்துக்கு சாப்புட்டு வருவோம்.அப்ப அந்த கடையோட சுத்தம்,சப்ளை பண்றஆளுக,டேபிள்,சேர்,எல்லாம்பாக்ககொஞ்சம்பொறாமையாக்கூடஇருக்கும். என்ன செய்யிறது?அவுங்களுக்கு விதிச் சது அப்பிடி.நம்மளுக்கு விதிச்சது இப்படின்னு சமாதானத்தோட வந்துரு வோம்,அவ்வளவுதான்” என பேசுகிற கடைக்காரர்களது அனல்மூச்சை மீறி அங்கு வெகு சில வருடங்களுக்கு முன்பாக காட்சிப்பட்டசாப்பாட்டு கடைகளும் அதில் விற்ற பண்டங்களும் காணக் கிடைக்கவில்லை.

ஆனால் அப்போதிருந்த பூரி மட்டும் அப்படியே நிலைத்து விட்டது,இந்த ஊரிலி ருக்கிற எல்லா ஹோட்டல்களிலும் பூரி தீர்ந்து போனாலும் சரி,எங்களது ஏரியாவில் ஏதாவது ஒரு கடையில் மதியச்சாப்பாடு நேரம் வரை பூரி கிடைக்கும் எனவுமாய்மேலும் அவர் சொல்கிறார்.

கைவண்டிக்காரர்களும்,மூடைதூக்குபவர்களுமாய்நிறைந்துகுடிகொண்டிருந்த வீதிகளில்அமைந்திருந்தஅந்தக்கடைகள்இப்போது போல அப்போது எண்ணிக் கையில் அதிகமாக காணப்பட்டிருக்கவில்லை.

ஆனால்கொஞ்சமாய்இருந்தகடைகளில்உணவுவகைகள் நிறைந்து தெரிந்தது. அதில்மற்றஅலங்காரஉணவுவகைகள்தவிர்த்துஇட்லி,தோசை,பூரி, மொச்சை,  வடை,என்பதுவே பிரதானப்பட்டு/

விளிம்புகளில் எண்ணை மின்ன வட்டமாய் காணப்படுகிற தோசையின் அளவு ஒருவிரல்தடிமனாய்பருத்துக்காணப்படும்.இட்லியைஇறுக்கிப்பிடிக்க ஒருகை போதாது.அது போலவே தடித்துத் தெரிகிற வடையும் சில்வர் சட்டிகளில் குவித்து வைக்கப்படிருக்கிற மொச்சையும்/

இரண்டு இட்லி,ஒரு தோசை,அல்லது இரண்டு பூரி,ஒரு தோசை ,ஒரு மொச் சை அதில் பியித்துப்போடப்பட்ட இரண்டு பருப்பு வடைகள், சாம்பார், சட்னி யின் நனைப்பு எனபிசைந்துஉயிரூட்டமாய்அள்ளிச் சாப்புடுகிற அந்தஉணவு சாப்புடுகிறஅவர்களுக்கும்அலுக்கவில்லை.சாப்பிடக்கொடுக்கிறவர்களுக்கும் சலிக்கவில்லை.

இப்படியான சலிப்பின்மைகளும், அலுப்பின்மைகளுக்கும் ஊடே ஓடிய அந்தக்
கடைகள் இன்று காணக்கிடைக்காமல் போய் அல்லது உருமாறிப் போனவை யாய் தோற்றமளித்தாலும் கூட அன்று அவர்கள் விற்ற பூரி மட்டும் இப்போது பிரதான இடத்தை பிடித்திருந்தது அங்கு உள்ள கடைகளில்/

பாதாளசாக்கடைக்காய் நடுரோட்டில் தோண்டியகுழியின்ஓரம்இருசக்கர வாக னத்தில் கடந்த போதுதான் இத்தனையும்/

மொச்சையையும், வடையையும் சாம்பார், சட்னியையும் தோய்த்து பிசைந்து
சாப்பிட்டவர்கள்இன்று எங்கே போனார்கள் தெரியவில்லை.அவர்களது சாப்பாட்டு வகை என்னவாகமாறிப்போனதுஎன புரியவில்லை. இப்படி புரியாத,தெரியாத இந்த வேளையில் அவர்களுக்காக மொச்சையும்,வடையும் இதர உணவுப்பொருட்களும் தயாரித்த ஈரமான கரங்களும் மனதும் இப்போது எங்கே போனது? அதுவும் தெரியவில்லை என தோணிய சமயம் ரோட்டின் நடுவில் ஆழமாக தோண்டப்பட்ட குழி தன் மேனிகாட்டி சிரித்தது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவையெல்லாம் புதைந்து விட்டதோ...?

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும் கர்துதுரைக்குமாக/