27 Jun 2015

மெழுத்துண்டு,,,,,

 
அந்தவேனைபின்னோக்கிஇழுத்தவனுக்குஎன்னவயதுஇருக்கும்எனநினைக்கி
றீர்கள்ஆறுஅல்லதுஎழாம் வகுப்புப்படிக்கிறவயது இருக்கலாம்.மாநிற மேனி யில்கொஞ்சம் பூசினார்ப் போலத் தெரிந்தான்.

கைலியைமடித்துக்கட்டியிருந்தான்.அவனதுபெயர்கண்ணன்.என்னதம்பிஇதெல்லாம் உன்வயதுபையன்களெல்லாம்பெரிமுடாஸீம்டீஸர்ட்டுமாய்அலைகிறபோது நீ மட்டும் இப்பிடி கைலியைடப்பாக்கட்டுக்கட்டிக் கொண்டும், முண்டா பனியன்போட்டுக் கொண்டும் தலையை படிய வாரிக்கொண்டு திரிந்தாயா னால்,,,,,,,உடைநாகரீகம்பற்றியஉன்வயதொத்தவர்களின் பார்வைஎன்னாவது? எனநினைத்ததைஅவனிடம்கேட்க முடியவில்லை.

காய்கறிக்கடைக்காரர்கருப்பசாமியண்ணனின்வேன்அது.கருப்பாசாமி பாறை யில் முளைத்த செடியாய் வேர் விட்டவர்.அவருக்கு நினைவு தெரிந்த நாளிலி ருந்துசைக்கிளில் புளி வியாபாரம் செய்கிறவர்.சுத்துப்பட்டியில் அவர் கால் படாத ஊர் இல்லை.கும்பலாக நாலு தலை தெரிந்தால் போதும். ”புளிவாங்க ளை யோ,புளி”என்கிற ரிதம் மாறாத குரல் அவரிடமிருந்து ஓங்கி ஒலிக்கும்.

புளிவியாபாரம்பார்த்தமூளைமெல்ல,மெல்லகடைபோட்டுசொந்தஊரில்உட்
கார்ந்தால்என்ன,,,?எனயோசித்தபோதுவேறுஎந்தக்கட்ஃபைக்காரரும்செய்யாத வேலை யை செய்தார்.

ஒரு ரூபாய்க்கு புளி,இரண்டு ரூபாய்க்கு எண்ணெய்,ஐம்பது பைசாவிற்கு பொரி கடலை, ஐம்பது பைசாவிற்கு தேங்காய்ச்சில்,,,,எனஇன்னும் பிறவுமாய் சேர்த்து எளியவ ர்களுக்கான இடமாய் தன் கடையை மாற்றிக் கொண்டார். கேட்டால்சிரிப்பார்.கேட்பவர்தோளில்கைவைத்தோ அல்லது ஆழமாக பார்த்த வாறோ/

நெருங்கிப்போய்கேட்டால்”அப்படிகைக்கும்,வாய்க்கும்பத்தாமலேயேவளந்துட்டேன்”.ஏங்வயசுல நல்ல சாப்பாட கண்ணுல பாக்க நாலு நாளாவது ஆகும்.வாரத்துல ஒருநா அப்பிடிசாப்புட்டாஅதிசியம்.அதஇப்பநெனைச்சிப்பாக்குறேன்.இப்பிடியேவாரம் பண்றதால எனக்கு ஒண்ணும் நட்டமில்ல,லாபத்துல கொஞ்சம்கொறையும் இல்லைன்னாரொம்பகூடுதலாலாபம்கெடைக்காது.அவ்வளவுதான். அதுனால இந்த மாதிரி ஜனங்களுக்கு யேவாரம் செய்யாம இருக்க முடியாது. நான் செய்யலைன்னா இவுங்களுக்கு வேற யாரு செய்வா?எல்லாம் ஐஞ்சுக்கும், பத்துக் குமா காடு கரைன்னும், கொத்த வேலைன்னும் பாக்குற ஜனங்க/என சொன்னகருப்பசாமிஇப்போதுபுதிதாய்காய்கறிக்கடைபோட்டிருக்கிறார். கோட்டூர் போகிற வழியில்/ அதன் பேரே ரெண்டு ரூபாய்க்கடை.ரெண்டு ரூபாய்க்கு ஒரு கை காய்.நாம் கொடுகிற ஒவ்வொரு இரண்டு ரூபாய்க்கும் ஒரு கைகாய் அதுதான் கணக்கு/அப்படி அவர் கடை ஆரம்பித்த புதிதில் இரண்டு ரூபாய்க்கு போட்ட காய்கறி இப்போது ஆறு ரூபாய்.சுற்றியுள்ள ஊர்க ளில் இருக்கிற கடைகளுக்கு எல்லாம் இவர் சரக்கு தான். காலை ஆறு மணிக்கு சூடுகட்ட ஆரம்பிக்கிற அவரது வியாபாரம் சுற்றுப்பட்டி கடைகளுக்கு காய்கறி சப்ளை செய்வதிலிருந்து உள்ளூர்க் கார்களுக்கும், தன்கடை தேடி
வந்துவியாபாரம்வாங்குகிறவர்வரைக்கும்நீண்ட
பட்டியலாய் உருவெடுத்துநிற்கும். அது தவிர இப்படி சடுதிகொள்கிற வியாபா ரத்தை பத்து மணிக்கு முடித்துக் கொண்டு சுற்றி இருக்கிற ஊர்களுக்கு காய் கறி வியாபரத்திற்கு போய் விடுவார். அதுமட்டுமில்லை சாத்தூரிலிருக்கிற ஒரு அரசுப்பள்ளியின் ஹாஸ்டலுக்கு காய்கறி சப்ளை இவர்தான்.

இவர்கொடுக்கிறகாய்கறிக்குஉடனேபணம்கிடைக்காதுமாதம்ஒருமுறை செக் காகக் கொடுத்து விடுவார்கள்.கண்ணனின்அப்பாமருதண்ணனும், கருப்பசாமி யண்ணனும்ஒன்றாகப்படித்தவர்கள்.ஒன்றாம்வகுப்பிலிருந்துஆறாம்வகுப்பு
வரை.அதற்கப்புறமாய்வசதிகாணாமல்மருதண்ணனின்படிப்பைஆறாம் வகுப் போடுநிறுத்திவிட்டார்கள்.வசதிஎன்பதுஒருபுறம்இருக்கதங்களதுதொழிலைத் தொடரஆள் ஒருவர் வேண்டும் என மருதண்ணனின் கையில் ரம்பத்தையும், இழைப்புளியையும் கொடுத்துவிட்டார் அவரது அப்பா/

மருதண்ணன் படிப்பை நிறுத்திய மறுவருடம் கருப்பசாமியண்ணனும் ஏழாம் வகுப்புடன்வியாபாரத்திற்குதாவிவிட்டார்.அன்றிலிருந்து இன்றுவரை உழைப் பின் நுனி பிடித்து, கை ஊன்றி எழுந்து,சுவர் பிடித்து நடந்து,தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்து நடந்து தவழ்ந்தேறி வந்தவர்கள். இன்று அந்த ஊரின் பேசப்படுகிற அடையாள மனிதர்களில் ஒருவர்களாய் ஆகிப்போனார்கள்.

சாரதாக்காவின்கல்யாணவீடுஅது.ஒருவாரமாய்புதுக்களைபூண்டிருக்கிறவீட்டின்முன்தான் கருப்பசாமியண்ணனின்காய்கறிலோட்வேன்நின்றிருந்தது.கருப்பசாமியண்ண
னுக்குசாரதாக் கா கழுத்தை நீட்டியிருந்தால் கருப்பசாமியண்ணன்இப்போது சாரதக்கா வீட்டின் முன் போய் நின்றிருக்க மாட்டார்.

ஊதாப்பெயிண்ட்அடித்தவீடு.நாடாக்கமார்தெருதாண்டி,ரெட்டியார் தெரு நுழை யும் முன்பாக இடையிலாகஇருந்த ஆசாரிமார்தெருவைஒட்டியிருந்த வீடு. ஊதாக் கலர்வண்ணம் மின்னிய வீட்டின் மாடியிலிருந்து முல்லை பூக்கொடி காய்த்துத் தொங்கும் சரம் சரமாய்/

வரிசையாக வைக்கப்பட்டிருந்ததொட்டிகளில் ரகத்திற்கு ஒரு செடியாகவும், கன்றுகளாகவும்/ பார்க்கநன்றாகஇருக்கும்,அது போல வீடும் பளிச்சென சுத்த ப்பட்டு துடைத்து வைக்கப் பட்டதுபோலவேஎந்நேரமும்.

சாரதாக்காவுக்கும்கருப்பசாமியண்ணனுக்குவாக்கப்படவேண்டும்என்கிறஎண்ணம்மனம் முழுக்கமத்தாப்பூவாய்மலர்ந்திருத்திருந்தது.கருப்பசாமியண்னனுக்கும்அப்படியேஆகியிருந் தது.

ஒல்லியாய்,மாநிறத்தில்நடுவாந்திரஉயரத்தில் பளிச்சென துடைத்து வைத்தது போலிருக்கிறசாரதாக்கவைபார்க்கிறபொழுதெல்லாம்மனம்களிகொள்ளாமல் இருந்த தில்லை.

சாரதாக்கவைப்பார்க்கவென்றே கருப்பசாமியண்ணன் வம்பாக ஏதாவது ஒரு வேலை வைத்துக் கொண்டு போவார். கல்யாணம் முடித்து,குடும்பம் நடத்தி பிள்ளை குட்டிகளுடன் நடமாடித் திரிவார் மனதிற்குள்ளாக/

அவர் மனம் முழுக்க இப்பிடி என்றால் சாரதாக்காவின் மனது லேசாய் இல்லை. கருப்பாசாமி ---யண்ணன் அந்ததெருப்பக்கம்வருகிறமாதிரிதெரிகிற நாட்களில் வீட்டு முன் கலர் கோலம் மின்னும்.ஜடை ஒற்றையிலிருந்து ரெட்டையாய் மாறும். எதற்கெனத் தெரியாமலேயே அந்தத் தெருவில் நாலைந்து முறைகுறுக்குநெடுக்காக நடப்பாள். கடைக்குப்போக வந்து விட்டு கடைக்குப்போகாமலேயேயார்வீட்டின்முன்பாகவாவதுநின்றுபேசிக் கொண்டி ருப்பாள்.வீட்டு வாசலில் நின்று கொண்டு நன்றாக இருக்கிற தலையை உளைத்து விட்டுவிட்டு ஜடை பின்னிக்கொள்வாள்டீ.வியில் சப்த மாகபாடல் வைத்துக்கேட்பாள்.கருப்பசாமியண்ணனின் கடைக்குப் போய் அவர் கையால் ஏதாவது ஒரு சாமான் வாங்கி வருவாள். பெரும்பாலுமாய் அப்படி அவள் வாங்குகிற சரக்கு,,(?/)தேன் மிட்டாயாகவே இருக்கும்.

சாரதாக்காவின் அப்பாவிற்கு இது ஜாடை,மாடையாகக்கூட அல்லாமல் நேர டியாகவேதெரியஅவர்கருப்பசாமியண்ணனிடம்போய்பேசிவிட்டுவந்துவிட்டார்.

“வேணாம்மாப்ளஇது வீண் ஆச,விட்டுருங்க,ஒங்க குடும்பம் ஒரு மொன,எங்க குடும்பம் ஒருமொன,, எப்பிடி ஒட்ட வச்சாலும் ஒட்டாது.,,,,,,,,,,,,,,,என நீளமாக பேசி விட்டு வந்து விட்டார். அன்று அந்த நினைப்பை கைவிட்டவர்தான்.

மஞ்சள்,பச்சை,பிங்க்எனபலவர்ணங்களில்காணப்பட்டவீடுகளின் முன் காட்சி ப்பட்டகோலங்கள்அழிந்தும்,அழியாமலும்/வெள்ளைமாவும்,கலர்மாவுமாய் காட்சிப்பட்டகோலங்கள் காட்சிப்பட்ட வீதி சிமிண்ட்பூசப்பட்டிருந்த தரையாய் இருந்ததாக/

மெயின் ரோட்டின் இடது புறம் வாசல் வைத்தது போல் இருக்கிற தெருவில் நுழைந்து நூல்ப் பிடித்துச்சென்றால் அப்படியே கடந்து,நடந்து வந்து இந்தப் பக்கமாய் இருக்கிற மெயின் ரோட்டில் ஏறிக்கொள்ளலாம்.ஊரின் ஆரம்பத்தி ல்நுழைந்துகடைசியில் வெளி யேறுவது போல/

சைக்கிள்கள்,மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மட்டுமே நுழைந்து வெளி யேறுவதற்கு வசதியுள்ள வீதி அது.அதில் போய் எப்பிடி இந்த வேனை நுழைத்தார்கள் எனத்தெரியவில்லை.

தெருவின் முனையிலிருந்து பின்னோக்கி முழு உந்து விசையுடன் ஏறிய வண்டியை பின்னோக்கி தொட்டு இழுத்த சிறுவனைப்பார்த்து ஊதாக்கலர் பூசிய வீட்டிலிருந்து வெளியே வந்த சாரதாக்கா சைகையில் சொல்கிறாள் கவனம் என/

வேனில் முன்னால் அமர்ந்து ஸ்டியரிங்பிடித்துக்கொண்டிருந்த கருப்பசாமி யண்ணன் வேனை பின்னோக்கி நகர்த்திக்கொண்டிருந்தவராய்/

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனதிற்குள்ளாக நினைத்தது நடக்கட்டும்...

”தளிர் சுரேஷ்” said...

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை! அருமை!

Thulasidharan V Thillaiakathu said...

வாழ்க்கையில் தினம் நடக்கும் ஒரு நிகழ்வை எப்படி அப்படியே கண் முன் கொண்டு வருகின்றீர்கள் நண்பரே! சாதாரண மக்களின் வாழ்வியல், சாதாரண நிகழ்வு கூட உங்கள் வார்த்தைகளில் ஒரு விவரணமாகச் சித்திரமாக வரைய முடிகின்றது....வியக்கின்றோம்....பாராட்டுகள் நண்பரே!

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்வில் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே
அருமை
தம +1

vimalanperali said...

வணக்கம் துளசி தரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

நினைப்பது நடக்கும்...
நல்ல கதை... வாழ்த்துக்கள் அண்ணா...

vimalanperali said...

வணக்கம் பரிவை சே குமார் அண்ணா
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Sengai Podhuvan said...

சாரதாக்கா சைகையில் சொல்கிறாள் கவனம் என
- இது என்ன விளைவைத் தரும்

vimalanperali said...

வணக்கம் பொதுவன் செங்கை சார் ,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/