4 Jun 2015

ஈரச்சுவடு,,,,,,

“யாருஅவரு இந்த ஊருதானா”?என்கிறஎனதுகேள்விக்குடீக்கடைக்காரர்பதில் சொல்லவில்லை.

கடைக்குவந்திருந்தவர்தான்சொன்னார்.அவர் டீமட்டுமேகுடிக்கவந்தவராயும்,
எங்களைப் போல என்றைக்காவது ஒருநாள் வந்து டீக்குடிப்பவராகத் தெரிய வில்லை.

டீ,டிபன்என்கிறரகவாடிக்கையாளராய்இருக்கவேண்டும்போலிருக்கிறது.தினச ரிகளின் புலர்வுகளில்அதிகாலையில் திறக்கப்படுகிற அந்தக்கடையில் முதன் முதலில் டீக்குடிக்க வருபவரும் அவராகத்தான் இருப்பாராம், சொன் னார்கள்.

இடையிடையில்டீ,டிபன்,வடைஎன்கிறஎக்ஸட்ராக்களிலும்நிறைந்துதெரிகிற
வர்.

அவர்தான் சொன்னார்.வெள்ளை வேஷ்டி,வெள்ளை சட்டை அழுக்குப்படாத மேனி,அலுப்பில்லாத உடல். ஆனால் முகத்தில் நிரந்தரமாய் ஒட்டிக்கிடந்த கவலை ரேகைகள் எல்லாம் தாண்டி சிரித்துக்கொண்டே சொன்னார்.

வாடலாய் தெரிந்த கருத்த மேனியினரான அவர் கால் மீது கால் போட்டு பெஞ்சில் அமர்ந்திருந்தது பார்க்க பாந்தமாய் இருந்தது.ஆட்டி,ஆட்டிப்பேசிய அவரதுவலதுகையால்இடதுகையில்சிலிர்த்துத்தெரிந்தமுடிகளைதடவிவிட்ட வாறும்,தலைகோதிக்கொண்டும்மூக்குகண்ணாடியைசரிசெய்தவாறுமாய் சொன்னார்.நாற்பதிற்குமேலிருக்கும்வயதின் அனுபவம் போலிருக்கிறது.

“இந்தஊருதாஅவன்,நல்லா படிச்ச பையன்.திடீர்ன்னுபுத்திபேதலிச்சுப் போச்சு” என்றார்.

“பக்கத்துடவுன்லதான்படிச்சான்.வசதியானவீட்டுபுள்ள,அடுக்குத்தகுந்தாப்புல வாக்கப்பட்டு வந்தவளும் எக்கா நகநட்டு, துட்டுதுக்கானின்னுதா வந்தா, உத்தி யோகம்ன்னு பையனுக்கு நெரந்தரமா எதுவும் இல்லைன்னாலும் அவன் சொ த்தநம்பிபொண்ணகுடுத்தாக,சும்மா சொல்லக்கூடாது பையன,வந்தவள கையி ல் வச்சி தாங்குனான்.

அப்பறம்ஒருபுள்ளபெர்ரவரைக்கும்புதுச்செழிப்புமா,குதுகூலமும்சந்தோசமுமாத் தான்இருந்தாங்க,எத்தனஇருந்தாலும்உக்காந்துதின்னாமலையும் கடுகாயிரும் தான?

பாத்தான்,வீட்டுக்காரிக்குவளைகாப்புநடந்தகையோடபஸ்ஏறிட்டான்.வேலை
தேடிப்போரம்னு/

பழக்காமனவன்ட்ட ஏற்கனவே சொல்லி வச்சிருந்ததால இவன் நேராப்போயி வேலையில சேந்துட்டான்.

அவ்வளவு படிச்சவன் ஓட்டல்ல கணக்கு எழுதுற வேலையின்னு கொறவா நெனைக்கல,கைநெறையஇல்லைன்னாலும்ஏதோசம்ளம்முன்னுஅவன்பாத்த வேளைக்கு தகுந்தாப்புல குடுத்துருக்காங்க/

வேலையிலசேந்தகொஞ்சநாளையிலயேமொதலாளிமனசுக்குபுடிச்சவனாயும், கைராசிக்காரன்னும் ஆகிபோனான்.

அப்பறம் என்ன கடையில இவன் ராஜாதான். அது பொறுக்குமா கூட வேலை
பாக்குறவுங்களுக்கு.கடைகல்லாவுலகைவச்சிட்டான்னுஇவனசிக்கல்லமாட்டி
விட்டுட்டாங்க/

இத வாடிக்கையா கடைக்கு சாப்புட வர்ர ஒருத்தர்தா கவனிச்சு மொதலாளி கிட்ட எடுத்துச்சொல்லி அவனமீட்டுருக்காரு.கடையில சேந்த கொஞ்ச நாளை யிலையே அங்கயிருக்குற மனுச மக்க,மண்ணு ,ஊரோட தரம் எல்லாம் பத்தி அறிஞ்சி அதுக்கு தக்கன போயிகிட்டான்.

பெரியடவுன்னுன்னாலும்ஒருஜாதிஆதிக்கம்உள்ளஊரு.அதுலயும்அவன்வேலை பாத்த கடையில கூட வேலை பாக்குறவுங்க கூட அப்பிடி பிரிச்சுத்தான் பாப்பாங்க/

அதுல இருந்தெல்லாம் நெளிவு சுளிவா தப்பிச்சு நெரந்தரமா அங்கயே இருந்து சாதிச்சவன் மாசத்துக்கு ஒரு தடவ வீட்டுக்கு வருவான்.சில சமயம் ரெண்டு மூணு நா லீவுல வருவான்,சில சமயம் மொத நா நைட்டு வர்றவன் மறுநா சாயந்தரம் பஸ் ஏறிருவான். என்ன செய்ய அவன் பொழப்பு அப்பிடி/

இப்பிடிஇருந்தஅவங்கமேலயாரு கண்ணு பட்டுச்சோ தெரியல, நல்லா இருந்த அவுங்கபொழப்புலமண்ணுவிழுந்துருச்சி,,,,,,,,,”எனபேச்சுவிரிந்தநாளொன்றின் காலை நேரம் நானும் எனது நண்பனுமாக அலுவகத்திற்கு சென்று கொண்டிரு ந்தோம்.

நண்பன்என்றால்பலவருடங்களாகபழகியபழக்கமோ,நட்பு முறையோ அல்ல. உடன் வேலைபார்ப்பவர்தான்நண்பர்ஆகிப்போனார் அல்லது அவரை வலிந்து நண்பராக ஏற்றுக்கொள்ள வேண்டிய மனோபாவம் வந்து விழுந்து விடுகிறது.

வந்து விழுந்தது விதையாக, செடியாகமரமாகபூவாக,பிஞ்சாக,காயாக,பழமாக கனிந்து கிளை பரப்பி நிற்கிறது.

அதிலிருந்து விழுகிற துளிகளாக கனிந்து,கனிந்து விழுந்து எழுந்து நிற்கிற உயர்நவிற்சிமனோபாவம் வந்துவிட்ட காரணங்களாலேயே அப்படி சாத்தியம்  கொள்ளவும் கைவரப்பெறவுமாய் செய்கிறது.

அப்படி வரப்பெற்ற கைகளின் பரஸ்பர கைகுலுக்கலில்தான் நட்பின் பரப்பு விரிந்து நின்றது கைத்தாங்கலாக/

நாங்கள்வந்த இருசக்கர வாகனத்தை கடையின் ஓரமாக் நிறுத்தி விட்டு டீக்குடித்துக் கொண்டிருந்தோம்.

அப்போது ஒருவர் அழுக்கு வேஷ்டியுடனும்,மேனியுடனுமாய், தலை முடிகள் பறக்க கடை முன் வந்து நிற்கிறார்.

சைகையால்டீ தருமாறு கையேந்தி நிற்கிறார்.(கேட்கிறார்.) பஞ்சடைந்த கண்க ளில் விட்டேத்தியான ஒரு பார்வை.எண்ணை காணாத தலைமுடி பரட் டை விழுந்து சிக்கல்,சிக்கலாக திரிந்துபோய்/காய்ந்து ஈரமற்றுப் போயிருந்த உதடு கள் வெடிப்பு விழுந்து/முகத்தில் அடர்ந்து தெரிந்த தாடி அவரை இன்ன மும் கொஞ்சம் விகாரமாய்க் காட்டியது.நடுங்கிய கரங்கள் எதையும் பிடிக்க சக்தி யற்று/மெலிந்து இற்றுப் போனது போலிருந்த கால்கள் நிற்கக்கூட வலுவற்று/ சட்டையணியாத வெற்று மேனி அழுக்குடனும், பிசுபிசுப்பாயும்/

தினசரியான அவரது வழக்கமோ அல்லது அப்படிகேட்டதால் கடைக்காரருக்கு அவர்மீதுவந்த வெறுப்போ தெரியவில்லை.

“ஓடு அங்கிட்டு,இங்கயெல்லாம் வரக்கூடாது ஆமாம்”என்கிறார்.டீக்கேட்ட வரும் பரிதாபமாக போய் கடையின் ஓரமாய் நின்று கொண்டிருந்தார்.

அப்படிவிரட்டப்பட்டவரைப்பற்றிதான்இவ்வளவுநேரமும் சொல்லிக் கொண்டி ருந்தார் டீக்கிளாஸைகையில்வைத்துக்கொண்டவாறே கைக்கு டீக்குடிக்க வந்திருந்தவர்.குடித்த டீக்கும்,தின்றவடைக்குமாககாசு கொடுத்து விட்டு கிளம் புகிறேன்.

பூத்து மகிழ்ந்து நின்ற மண்ணும்,விரிந்து ஓடிய தார்ச்சாலையும்,கரம் விரித்து நின்றமரங்களும்,சாலையில்ஓடியகனரக,மிதரகவாகனங்களும்அவரின்நிலை பற்றியும்,அப்படி ஒருவர் நின்று கொண்டிருப்பதைப்பற்றியும் கவலை கொள் ளாதவர்களாக.படுகிற கவலையும் ஞாயமற்றது என தோன்றியவாறு சென்று விடுகிறார்கள்.

கடையோரமாக நிறுத்தியிருந்த வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது நண்பனிடம்சொல்லுகிறேன்கடையின்ஓரமாகநின்றஅவரை திரும்பவும் பார்த் த வனாக/

மனோநிலைசரியற்றவர்களின்வாழ்வுபெரும்பாலும்இப்படிகவனிக்கப்படாமல் தெருவோரங்களிலும், கிட்டத்தட்ட நாடு முழுவதுமாயும்/

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எங்கு பார்த்தாலும் சொல்ல முடியாத சோகம் மனதை வாட்டும்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/