25 Oct 2015

ஒல்லிக்குச்சி,,,

இவ்வளவு ஒல்லியாகவா இருப்பான் ஒரு ஆள்?

என்னய்யா இது கொடுமையா இருக்கு,,,?

இழுத்துப்போர்த்திய தோலும் அதன் உள்ளுமாய்இருக்கிறகொஞ்சம் எலும்புக ளுமாய் பார்ப்பதற்கே பரிதாப தோற்றம் கொண்டிருந்தான்.

தலைநிறைந்த முடியும், ஷேவிங் பண்ணப் படாமல் அருகித்தெரிந்த தாடியுட னுமாய் இருந்தான்,அவன்கை நீட்டிப்பேசும் போது அவனுடையவலது முழங் கையின் மடக்கில் குமிழிட்ட எலும்பு அவனுடைய உடலின் வீக்னெஸை காண்பித்தது.

என்னஇப்படியாஇருப்பது ஒரு பிள்ளை என கேட்டு விடாதீர்கள் யாரும். இதெ ல்லாம் எங்களது யூத் கல்சர்.ஏதாவது கேட்டால் வன்மையாக கண்டிப் படுவீர் கள்.என்பது போல் எங்களைப்பார்த்து விட்டு ஆஸ்பத்திரியின் வாசலில் நின்றி ருந்தஎங்களதுஅருகில்வந்தஅவனுக்கு20லிருந்து25ற்குள்ளாகஇருக்கலாம் வயது.

மஞ்சள் கலரில் ஏதோ பொடியாக எழுத்துக்கள் எழுதியிருந்த வட்டக் கழுத்து பனியனும்கருப்புக்கலரில்காட்டன்பேண்டும்அணிந்திருந்தஅவன்ஒருதிருமண மண்டபத்தின் பெயரைச்சொல்லி வழி கேட்கிறான்.சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை இவனுக்கு.

இவன் நின்றிருந்த இடத்திலிருந்து எதிர் சாரியிலிருந்தலாரி ஆபீஸில் விசாரி க்குமாறு சொல்லி விட்டி இவன் விலகிக் கொள்கிறான்.

அந்தப்பையன் சென்ற பிறகுதான் ஞாபகம் வருகிறது, அவன் விசாரித்த இடம் இங்கிருந்துஇரண்டு கிலோ மீட்டர்களாவது இருக்கும்.

அருப்புக் கோட்டை பஸ்ஸில் ஏறினால் பாலம் இறங்கியதும் அல்லம் பட்டி முக்கில் இறங்கி அங்கிருந்து நடந்து போகிற தூரம்தான் எனச்சொல்ல/

ஞாபகம் வந்ததும் ஆஸ்பத்திரி தெருவின்முனைக்கு வந்துஎட்டிப்பார்க்கிறான் போய் விட்டிருந்தான் அதற்குள்ளாக ,ஆளைக்காணவில்லை.

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

யூத் கல்சர்
இன்றைய இளைஞர்களை எப்படிக் கேட்பது
தம +1

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
இன்றைய இளைஞர்கள் எவ்வளவோ
மாறியிருக்கிறார்கள்,
உதாரணமாக நம் தலை முறையில்
இல்லாத குடும்பத்தில் விட்டுக்கொடுக்கும்
பழக்கம் அவர்களிடம் இருக்கிறது.
உதாரணம் சமையல் பாத்திரம் கழுவுதல்,,,,,,
இன்னும் இன்னுமான பிறவைகள்,,/

Yarlpavanan said...

சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

”தளிர் சுரேஷ்” said...

பையனை உருவகப்படுத்திய விதம் சிறப்பு!

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வரிகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/