27 Feb 2016

ஒற்றை வரி,,,,,

ஒற்றை ஆளுக்கு எத்தனை தேவையாய் இருந்து விட முடியும்?அதிகாலை 5 மணிக்கெல்லாம் அலாரமில்லாமல் எழுந்திரிக்கிற அவர் செய்கிற முதல் வேலை வீட்டின்பின் புற வெளியில் இருக்கிற அடுப்பை பற்ற வைப்பதுதான்.
கரி படிந்த அலுமினியச் சட்டியில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் ஏற்றிய 
கையோடு பிரஷ்சை எடுத்துகொண்டு பல் விலக்கப் போய் விடுவார்.

புகழ் பெற்ற கம்பெனியின் டூத்பேஸ்ட்,அதே கம்பெனியின் பிரஷ்,இடுப்பில் கட்டிய கைலி.வெற்றுடம்பில் போர்த்திய வெள்ளைத் துண்டுடன் அவர் பல் தேய்த்து முடிக்க வும் அடுப்பில் இருந்த தண்ணீர் சுடவும் நேரம் சரியாய் இருக்கும்.

அதை வைத்துதான் வாய் கொப்பளிப்பார்.பின்அதேஅடுப்பில் எரிந்து கொண்டி ருக் கிற தனலையும்,தீயையும் சரிபார்த்தவாறே டீப் போடுவார்.

அது கொதித்து கொண்டிருக்கிற இடைவெளியில் பாத்ரூம் போய் குளித்து முடித்து விட்டு வந்து விடுவார்.

கட்டியியிருந்த கைலியையும்,துண்டையும் துவைத்ததண்ணீர்வழிய பிழிந்து
கொண்டே வருகிற அவர் அதைகொடியில் போட்டுவிட்டு மாற்றாக வேறு கை லி யையும்,வேறு ஒரு துண்டையும் மேலில் போர்த்திவாறு டீயை ஆற்றிக்
கொண்டேகால் மேல்கால் போட்டவாறு அங்கிருக்கிற கல்லில் அமர்ந்து டீக்
குடித்தவாறே விடிகிற பொழுதை வரவேற்க ஆரம்பித்து விடுகிறார்.

டீக் குடித்து முடிந்தவுடன் அவருக்கென்றே வைத்திருக்கிற சின்னசைக்கிளில் ஏறி கடைக்குப் போக,தேவையானதைவாங்கி வர,அவரைப் போல் உள்ள அவரது நண்பர்களைப் பார்க்க என கிளம்பி விடுகிறார்.

வாழ்நாட்களின் நகர்தலில் சிறிதும் பிசகின்றி நடக்கிற இந்தசெயல்களுடன்
தான் அவரது காலை விடிகிறதுஅன்றாடம்,அவரும் நகர்த்திக் கொண்டிருக் கிறார் தனது நாட்களை மாதாந்திர பென்சனின் துணையுடன்/

மனைவியை இழந்த அவருடன் கணிணியில் பேசிக்கொள்கிறார்கள்.வெளி
நாட்டில் இருக்கிற பிள்ளைகளும்,பேரன்களும் மாதமொருமுறை/

4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தொடக்கிய விதமும் முடித்த விதமும் சிறப்பு...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுகளைக் காண தாமதம், பொறுத்துக்கொள்க. தனிமையை அவர் எதிர்கொள்ளும் விதம் மற்றவர்களுக்கு பாடமாக அமையும் என நம்புகிறேன். ஒரு வகையில் இது காலத்தின் கோலம் என்று கூறலாமா?

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் டாகடர் ஜம்புலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/